Skip to content
Home » ஆன்மிகம் » நீர் கனவு பலன்கள்

நீர் கனவு பலன்கள்

நீர் கனவு பலன்கள்Water Kanavu Palangal in Tamil – நீர் பற்றிய கனவு கண்டால் என்ன பலன் என்று பதிவிட்டுள்ளோம். உங்கள் கனவில் அருவி, கடல், குளம், ஆறு, ஏரி, வெள்ளம் வந்தால், சுனாமி, கடல் அலைகளை கனவில் கண்டால் என்ன பலன் என்று மிகவும் தெளிவாக பதிவிட்டுள்ளோம் படித்து பயன் பெறுக.

நீர் கனவு பலன்கள்
நீர் கனவு பலன்கள்

நீர் கனவு பலன்கள்

கடலை கனவில் கண்டால் வசதி வாய்ப்புகள் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.

உங்கள் கனவில் வெள்ளம் வந்தால் ஏதோ தீமையான செயல் நடக்க இருப்பதை குறிப்பதாகும்.

வெள்ளம் பெருக்கடுத்து ஓடுவது போன்று கனவு கண்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்பதன் அறிகுறியாகும், எச்சரிக்கை தேவை.

வெள்ளம் குறைவது போல கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வரப்போகிறது என்று பொருள்.

தண்ணீர் நிரம்பி வழிவது போன்று கனவு கண்டால் நீண்டகாலம் தீராமல் இருந்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும்.

கனவில் தண்ணீர் வேகமாக நிரப்புவது போல கனவு கண்டால் மனதில் அடக்கி உள்ள விஷயத்தை நெருங்கியவரிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற அறிகுறியாகும்.

வீட்டிற்குள் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடுவது போன்று கனவில் கண்டால் பெருமளவில் உங்களுக்குள் அடக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகள் வெளிப்படும். அதாவது உங்களுடைய வீட்டை பற்றியோ, குழந்தை பருவம் பற்றியோ அல்லது உங்களின் பழைய நிகழ்வுகளில் அடையாளமாக கூட இருக்கலாம்.

நீங்கள் காணும் கனவில் கடல் மற்றும் கடல் அலைகள் வந்தால் நம்முடைய ஆழமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும் மற்றும் கடல் கனவில் வந்தால் சேமிப்பு, செல்வாக்கு உயரும்.

கடலில் பெரிய அலைகள் வருவது போல கனவில் வந்தால் வாழ்க்கையில் பிரச்சினையை சமாளிக்க வேண்டியதிருக்கும். எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.

கனவில் சுனாமி அளவிற்கு பேரலை வந்தால் மனதை பாதிக்க கூடிய விஷயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.

குளம் கனவில் வந்தால் கனவில் வறண்ட குளம் இருப்பது போன்று வந்தால் சேமிப்புகள் அனைத்தும் விரையம் ஆகும் என்று பொருள்.

குளங்களில் அதிகமாக தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் மிகவும் நல்லது. பெரியவர்களிடம் இருந்து ஆசியும், நிறைய பலனும் கிடைக்கும், சேமிப்பு உயரும். பிரச்சினைகள் தீரும்.

குளத்தில் தாமரை மலர் இருப்பது போல் கனவு கண்டால் கடன் சுமை தீர்ந்து அதிக பணவரவு வருவதற்கு வாய்ப்புள்ளது. தெய்வ அருள் கிட்டும். வியாபார முன்னேற்றம் ஏற்படும்.

குளத்தில் நமது கால் பகுதிகளை கழுவுவது போல் கனவு கண்டால் புதிய உற்சாகம் ஏற்படும். ஒளிமயமான எதிர்காலத்தினை நோக்கி செல்வீர்கள்.

நீர் கனவு பலன்கள்

குளத்தில் குளிப்பது போல் கனவு கண்டால் எடுத்த காரியத்தில் வெற்றிகள் உண்டாகும். கரிய சித்தி உண்டாகும்.

தண்ணீரில் தத்தளிப்பது அல்லது நீச்சல் அடிப்பது போல கனவு கண்டால் புதிதாக அறிமுகம் ஆனவர்களால் சிரமம் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் மன கஷ்டம் ஏற்பட்டு நீங்கும்.

அருவியில் தண்ணீர் கொட்டுவது போல் வந்தால் எதிர்ப்பாராத அளவிற்கு பணவரவு உண்டாகும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

தண்ணீரில் வீடு இருப்பது போல் கனவு கண்டால் செல்வ செழிப்பு தேடி வரும்.

கனவில் தண்ணீரில் மூழ்குவது போல் கண்டால் தங்களுடைய குழந்தை செல்வங்களால் சந்தோஷம் கிடைக்கும். எப்போதோ செய்த நன்மைக்கு பலன் இப்போது கிடைக்கும்.

நம் கனவில் செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் நன்மையே உங்களால் மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும். உங்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்