Skip to content
Home » ஆன்மிகம் » இரத்தம் கனவு பலன்கள்

இரத்தம் கனவு பலன்கள்

Kanavu Palangal BloodBlood Kanavu Palangal in Tamil – நாம் இரத்தம் கனவு பலன்கள் என்கிற பதிவில் இரத்தம் வருவது போல கனவு கண்டால் என்ன நடக்கும் மற்றும் ரத்தம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.

இரத்தம் கனவு பலன்கள்
இரத்தம் கனவு பலன்கள்

நமக்கு அடிபட்டு இரத்தம் வருவது போல கனவு கண்டால் காரியத்தடை உண்டாகும்.

மற்றவருக்கு அடிபட்டு ரத்தம் வரும்பொழுது நாம் மருந்து கொடுத்து சிகிச்சை செய்வது போல கனவு வந்தால் மிகவும் நல்லது, உங்களுடைய அந்தஸ்து உயரும்.

அதே போல, அடிபட்டு ரத்தம் வருபவர் நம்மீது கோபம் கொள்ளுதல் அல்லது நம்மை தாக்க முற்படுத்தல் போல கனவு வந்தால் நல்லதல்ல. எதிரிகள் திட்டம் தீட்டுகிறார்கள் என அர்த்தம். எச்சரிக்கை தேவை.

கைகளில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

தலையில் அடிபட்டு ரத்தம் வருவது போல் கனவு கண்டால் செய்யும் காரியங்களில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கி பொருட்சேர்க்கை உண்டாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வருவது போல கனவு கண்டால் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அனுசரித்து செல்ல வேண்டும்.

பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு வந்தால் செல்வம் பெருகும், திருமணம் தடை நீங்கும்.

உங்கள் உடலில் இருந்து இரத்தம் வருவது போல கனவு கண்டால், உங்களுக்கு பேரும், புகழும், கிடைக்கப்போகிறது என்று பொருள்.

நிறைய ஆட்களுக்கு அடிபட்டு இரத்தம் வருவது போல கனவு கண்டால் நமக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை குறிக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். விநாயகருக்கு சிதறு காய் உடைத்து வர தீமை அகலும்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

More – All kanavu palangal in Tamil | நாய் கனவு பலன்கள் | பாம்பு கனவு பலன்கள் | மாடு கனவு பலன்கள் | திருமண கனவு பலன்கள்

Video – திருமண கனவு பலன்கள் | ரத்தம் தொடர்பான கனவுகள் வந்தால் என்ன பலன்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்