Skip to content
Home » ஜோதிடம் » About Rahu Ketu in Tamil

About Rahu Ketu in Tamil

About Rahu Ketu in Tamil – ஒருவருடைய ஜாதகத்தை ஆளக்கூடிய சக்திகள் படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள் மட்டும்தான்.

Rahu Ketu
Rahu Ketu

ராகு கேது என்றால் என்ன?

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமென்றால் ராகு கேது என்பவை பூமி சூரியனை சுற்றி வரும் வட்ட பாதையும் சந்திரன் பூமியை சுற்றி வரும் வட்ட பாதையும் வெட்டிக் கொள்ளும் இடமே ஆகும்.

ராகு-கேது பகவான்கள் நிழல் கிரகங்கள் கிடையாது அது நிழல் கதிர்கள் அதாவது சாயா கிரகங்கள்.

பரி பூரண சூரியகிரகணம் ராகுவால், பரி பூரண சந்திரகிரகணம் கேதுவால் நிகழ்கிறது

பரிபூரண அமாவாசை பரி பூரண பௌர்ணமி என்பது ராகு கேது பெயர்ச்சிக்கு முன்தினம் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகும்.

ராகு பகவான் கரு நாகப்பாம்பு, கேது பகவான் செம்பாம்பு, இவருடைய ஸ்லோகம் படிப்பது நல்லது.

ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே.அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

தெரிந்து கொள்க:- சர்ப்ப தோஷம் என்றால் என்ன? | சர்ப்ப தோஷம் திருமண பொருத்தம் | கால சர்ப்ப தோஷம்

ராகு கேது தோஷம் விளக்கம்? – Rahu Kethu Dosham in Tamil

நமது ஜாதகத்தில் ராகு – கேது தோஷம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பிறந்த நேரம், நாள், கிழமை, நட்சத்திர, கிரகங்களின் நிலைகளை ஆராய்ந்து ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் லக்னம் எனப்படுவதை குறிப்பிடும் “ல” என்கிற எழுத்து ஏதேனும் ஒரு கட்டத்தில் எழுதப்பட்டிருக்கும். இந்த லக்னம் தான் ஜாதகருக்கு முதல் வீடு ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 1ஆம் வீடு அல்லது லக்கினம் வீடு என்பதாகும்.

ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் லக்னம், 2, 7 , 8 ஆகிய வீடுகளில் ராகு அல்லது கேது கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு – கேது தோஷம் உண்டு என்று பொருள்.

அதேபோல சிலர் சந்திரன் 1ஆம் வீடு எனக் கொண்டு 2, 7, 8 ஆகிய வீடுகளில் ராகு அல்லது கேது கிரகம் இருக்கும் பட்சத்தில் ராகு கேது தோஷம் உள்ளது எனவும் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இது பொருத்தம் பார்க்கும்பொழுது மட்டும் பயன் படுத்துகிறார்கள். லக்கினம் கொண்டு கணக்கிடப்படுவது தான் பிரதானம்.

ராகு கேது திருமண பொருத்தம்(Rahu Ketu for Marriage)

ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு – கேது கிரகங்கள் இருந்து தோஷம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்கு இதே போன்ற அமைப்பினை கொண்ட ஆண் அல்லது பெண் ஜாதகத்தை வரனாக அமைக்க ராகு – கேது தோஷம் நிவர்த்தி உண்டாகிறது.

ராகு தோஷம் – Rahu Dosham

ராகு தோஷம் உடையவர்களை தான் இடியும் மின்னலும் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

ராகு கேது நம்முடைய விந்தணுக்கள் ஆகும் உண்மையிலேயே விந்தணுக்களின் உருவம் தலை மற்றும் வால் சேர்ந்த உருவமாகும்.தலை – ராகு, வால் – கேது

ராகு, வைரஸை உருவாக்கி பரப்பும் கூடிய வைரஸ்

அதுவே, கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ்.

ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல், மாந்திரீகம், செய்வினை,போன்ற கண்ணுக்கு தெறியாத விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம்.

பில்லி,சூனியம் ,ஏவல்,மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அமாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அமாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.

பரிபூரண அமாவாசையில் தான் திதி கொடுப்பது செய்வினை செய்வது பலிகொடுப்பது போன்றவைகளை செய்வார்கள்.

ராகு வழிபட வேண்டிய தெய்வங்கள்

ராகுவுக்கு அதிதேவதை காளி, துர்க்கை மற்றும் மனித உடல் தலை வேறு உள்ள தெய்வங்கள் எடுத்தக்காட்டாக நரசிம்மர், பிரத்யங்கரா தேவி.

கேது ஜோதிடம், ஆன்மீகத்திற்கு காரகத்துவம் மற்றும் யாகத்திற்கு அதிபதி. அதனால்தான் கோயில்களில் யாகம், ஹோமம் பரிகாரம்,கும்பாபிஷேகம், விசேஷங்கள் கேதுவின் நட்சத்திர நாட்களில் நடத்துகிறார்கள்.

தெரிந்து கொள்க:- சர்ப்ப தோஷம் என்றால் என்ன? | சர்ப்ப தோஷம் திருமண பொருத்தம் | கால சர்ப்ப தோஷம்

ராகு – சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தின் போது ராகு சூரியனை விழுங்கும் போது சூரிய ஒளி 9 கிரகத்தின் மீது விழாமல் போகிறது. இதனால் 9 கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் அந்த கதிர்வீச்சுகள் நிறுத்தப்படுகிறது.

ஒன்பது கிரகங்கள் தான் இந்த பூமியை கட்டுப்படுத்துகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட சில நேரங்களில் நமது பூமிக்கும் பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்திக்கும் தொடர்பு இல்லாமல் போகிறது.

அதனால்தான் சூரிய கிரகணம் அன்று அனைத்துக் கோயில்களும் மூடப்படுகின்றன.

சூரிய கிரணத் தன்றுதான் இந்த தீய செயல்களை செய்யககூடிய மந்திரவாதிகள் ,செய்வினை செய்பவர்கள் ,அசுரர்கள், நரபலி கொடுத்து தங்களின் சக்தியைப் பெருக்கிக்கொள்வார்கள்.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணத்தன்று தான் இந்த பூமியில் புதிய உயிரினங்கள் அல்லது உயிர்கள் புதியதாக ஜனனம் எடுக்கும்.

கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம். அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகைகள் பறிக்க செல்கிறார்கள்.

பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும்.அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள்.

ராகு நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான்.

ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது.

கேது தோஷம் – Ketu Dosham

ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் கேது இருந்து தோஷம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்கு இதே போன்ற அமைப்பினை கொண்ட ஆண் அல்லது பெண் ஜாதகத்தை வரனாக அமைக்க ராகு – கேது தோஷம் நிவர்த்தி உண்டாகிறது.

நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு. உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது.

கேது தான் முக்திக்கு அதிபதி. நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவரே கேது பகவான் தான்.

கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது.

கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது.

ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும்.

ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்வர்.

அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.

கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம்.

ராகு கேது காயத்ரி மந்திரம்

ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் ராகு, கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

ராகு காயத்ரி – Rahu Gayathri in Tamil

நாக த்வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது காயத்ரி – Ketu Gayathri in Tamil

அச்வ த்வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!

ராகு கேது கோயில் எங்கு உள்ளது? or ராகு கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்

Rahu Ketu Temples – திருப்பாம்பரம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம், குடந்தை, நாகூர் ஆகியன அனைத்தும் ராகு கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்

நம் உடலில் ஏழு சக்கரங்கள்

மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிப்பூரகம்
அனாஹதம்
விசுக்தி
ஆக்நீயா
சகஸ்ராரம்.

இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.

மூலாதாரம் மூலம் நட்சத்திரம்.
சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம்.
மணிப்பூரகம் மகம் நட்சத்திரம்.
அனாஹதம் சதயம் நட்சத்திரம்.
விசுக்தி அஸ்வினி நட்சத்திரம்.
ஆக்நீயா திருவாதிரை நட்சத்திரம்

இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது. இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு இதுவே.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர். முதல் நட்சத்திர மண்டலம் “அஸ்வினி” என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்”மகம்” நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் “மூலம்’ நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது.

இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்