Skip to content
Home » ஆன்மிகம் » மீன் கனவு பலன்கள்

மீன் கனவு பலன்கள்

மீன் கனவு பலன்கள்  Fish Kanavu Palangal in Tamil – இந்த பதிவில் மீன் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்வோம். பொதுவாக, மீனை கனவில் காண்பது நல்ல பலன்களைத் தரும்.

மீன் கனவு பலன்கள்

மீனை கனவில் கண்டால் எதிரியின் பலம் குறையும் என்று பொருள்.

கனவில் மீன் பிடிப்பது போல வந்தால், பணம் சேரும் என்று அர்த்தம்.

மீன்கள் வலையில் சிக்கியது போல கனவு கண்டால், சேமிப்பு உயரும்.

மீன் வாங்குவது போல கண்டால், பணம் வரவு உண்டு என்று பொருள்.

கனவில் மீன் சாப்பிடுவது போல கனவு காண்பது, கனவு காண்பவரின் உடலில் எந்த பிரச்னையும் இல்லை ஆரோக்கியமாக உள்ளார் என்று அர்த்தம்.

மீன் கையில் பிடிபடுவதாக கனவு கண்டால் பொருள் சேர்க்கை அல்லது பொருள் வரவு உண்டாகும்.

மீன் நீந்துவதுபோல் கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.

மீன்கள் நீந்துவதை கனவில் கண்டால், நீங்கள் நினைத்த காரியங்களில் .வெற்றி அடையும். மேலும், கருத்தரிப்பை குறிக்கும். அதாவது, குழந்தைப்பேறு உருவாகும் என்று பொருள்.

மீன் கனவு பலன்கள்
மீன் கனவு பலன்கள்

சேற்று நீரில் மீன் நீந்துவது போல கனவில் கண்டால், அது வரவிருக்கும் ஏமாற்றத்தைக் குறிக்கும். கவனம் தேவை.

நல்ல நீரில் மீன் நீந்துவது போல கனவில் வந்தால், வரவிருக்கும் அதிர்ஷ்டத்தை குறிக்கும்.

கருவுற்ற மீனை கனவு காண்பது, வாழ்க்கையில் நீங்கள் அடைய உள்ள புதிய வளர்ச்சியை குறிக்கும்.

மீன்கள் கூட்டமாக செல்வது போலவோ கனவில் கண்டால், நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும் என்று பொருள்.

பெரிய மீனை பிடிப்பது போல் கண்டால் பொருள் வரவு உண்டாகும்.

நாம் வீசிய வலையில் அதிகமாக மீன்கள் சிக்கியிருப்பதாக கனவில் வந்தால், அன்பை குறிக்கும். உங்களுக்கு பிடித்தமானவரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள் என்று அர்த்தம்.

ஜெல்லி மீனை கனவில் கண்டால், சிக்கல்கள் உண்டாகும்.

மீன் முட்டையை கனவில் கண்டால், புதிய சிந்தனைகள் உருவாகும் என்று அர்த்தம்.

கனவில், நீங்கள் மீனை சுத்தம் செய்து, சமைப்பது போல கனவு கண்டால் பரம்பரை சொத்து விஷயத்தில் பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமாக தீர்வு ஏற்படும்.

பல்வேறு வகையான மீன்களை கனவில் பார்த்தால், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.

மீன் இறந்துவிட்டது போலவே கனவு கண்டால், நீங்கள் செய்யும் செயல்கள் மூலம் அவமானம் வந்து சேரலாம், கவனாக இருக்க வேண்டும்.

ஒரு மீன் தொட்டியை கனவில் கண்டால், உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையில் ஏற்பட போகும் அதிர்ஷ்டத்தை குறிக்கும்.

மீன்பிடிக்கும் தூண்டிலை கனவில் கண்டால், யாரையாவது நம்பி ஏமாற்றம் அடையலாம்.

சுறாமீன் கனவில் வந்தால், விருந்திற்கு செல்வோம் என்று பொருள்.

Read More

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்