பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம் – நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வைகையச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாதல் ஒருவைக நடனம் நடக்கிறது. மலையாளத்தில் புராணக் கதைகளைக்கொண்ட கதகளி நடத்துகிறார்கள்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
நடனத்தில் இரண்டு பிதவுகளுண்டு
ஆண்மையும், உக்கிரமும், வரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும். பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரசபாவைனயுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்ய நடனமாகும். தாண்டவம், ஆண்மை; லாஸ்யம், பெண்மை இரண்டும் சிவபார்வதி நடனமாகி, அர்த்தநாரீசருள் அடங்கியுள்ளான. பரதநாட்டியத்தின் நிறைவான கலையெழில் நமது தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகிறது. தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி வட்டாரங்களில், பரதநாட்டியம் இன்றும் சிறப்பாக பயில்விக்கப்படுகின்றது.
பரதநாட்டியம் சாஸ்திர
பரதர் இக்கைலையை நாட்டியம், நிருத்தியம், நிருத்தம் என மூன்று கூறாகப் பிரிக்கிறார்.
(1) நாட்டியம், நாடகத்திற் பயனாவது; கதைப்பொருளுடன் இணைந்து ரசாபி நயத்தை கொண்டது.
(2) ரசம், குணப்பண்புகைளப்பற்றி அபிநயித்தல் நிருத்தியம் ஆகும்.
(3) நிருத்தம், தாளலயத்தை முதன்மையாகக் கொண்டது வரிக்கூத்து.
இவற்றில் காதலும் கலைச்சுவையும் சேர்ந்து சுகுமாரமாக நடிக்கும் லாஸ்ய நடனமும், எழுச்சியுள்ள வீரம் விளங்க ஆண்கள் நடிக்கும் தாண்டவமும் சேரும்.
தாண்டவம், ஏழுவைகயாகும்
இன்பத்தைக் காட்டும் ஆனந்தத் தாண்டவம், மாலையில் ஆடும் சந்தியா தாண்டவம், சிவனும் உமையும் ஆடும் உமா தாண்டவம், சிவகௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஸம்ஹார தாண்டவம். ஆங்கிகம், வாசிகம், ஆஹாரியம் சாத்விகம் என்று நடனம் நான்கு வைகயாம்.
உடல், முகம், உறுப்புக்கைளப் பொருளுக்கேற்ப அசைத்தல், ஆங்கிகமாகும். தலை, மார்பு, கை, கால், பக்கம், இடுப்பு இவை அங்கங்கள். தோள்பட்டை, புஜம், புறங்கை, முன்கை, முதுகு, வயிறு, தொடை, குதிகால், கணுக்கால் இவை பிரத்யங்கங்கள் அல்லது துணையுறுப்புகள்.
கண் இமை, விழி, கருவிழி, கண்மணி, புருவம், போட்டு, மூக்கு, கன்னம், உதடுகள் ஆகியவை உபாங்கங்கள். இவையனைத்தையும் பண்ணொத்தசைத்தல், சரீர ஆங்கிகமாகும்.
முகத்தசைகளை பாவத்திற்கேற்றபடி அசைத்தல், முகஜமாகும். உடலை அசைத்தாடல் சேஷ்டிதமாகும். இவையெல்லாம் ஆங்கிக நடனமாகும். வாசிகம் ஆடும்போது வாயால் பாடல், பேசுவதுபோல் உதட்டை அசைத்தல் முதலியனவாம். ஆடையணிகள், பூச்சுகள், அலங்காரங்கள், வேதங்கள் எல்லாம் ஆஹாரியமாகும்..
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்