வாழ்விடம்
வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மலையின் அடிவார உட்புரைகள், குகைகள், பாறை புழைகளில் தங்கி தங்கள் இனத்தை பெருக்கி வந்தனர்.
உணவு பொருள்களை சேர்த்து வைக்க வேண்டி உள்ளதாலும், சமுதாய குடும்ப அமைப்பில் வாழ்ந்ததாலும் தங்களுக்கென்று இருப்பிடமாக மரக்கிளைகள், கொடிகள், தழைகள், பாறைகள், குன்றுகள் ஆகியவற்றில் தங்கினார்கள்.
தமிழக கற்கால மனிதன் சான்று
தமிழகத்தில் கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான சான்று செங்கற்பட்டு மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும், புதுக்கோட்டை கோனாட்டில் உள்ள குன்றுகளிலும், பாறை பள்ள தடங்களிலும் இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டெடுக்க பட்டுள்ளன.
நீலகிரி மலைத்தொடரில் வாழும் பழங்குடி தமிழர் மக்களான தொதுவர், இருளர், குறும்பர் ஆகியோர் இன்றும் கொம்புகளால் கட்டப்பட்ட கூண்டுகளில் வாழ்ந்து வருவதும், அதற்கு ‘கொம்பை’ (குடிசை) என்று குறிப்பதும் தமிழர் பழங்கால மக்கள் மரபினர் என்பதற்கு சான்று ஆகும்.
கொம்பை அமைப்பு
கூம்பாக வடிவில் கூரை அமைப்பினை கொண்ட அமைப்பு கொம்பை என்றும் குடிசை என்றும் குறிப்பிடப்பட்டது. அவை முறையே குடிசை, கொட்டகை, வட்டகை, இருப்பு குடும்பு மற்றும் தலைக்கட்டு என்றும் கூறுவர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானில மக்களும் தங்கள் சூழலுக்கேற்ப வாழ்விடங்களை அமைத்துக்கொள்வர்.
மேலும் காண்க
Read More:
- திருக்குறள் குடியியல்
- ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்
- குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil
- சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil
- பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்
- Video: அடிப்படை ஜோதிடம் கற்க
- Business Ideas in Tamil
- Video: அம்மா பற்றிய வரிகள்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
Nice Message