அம்மா கவிதைகள்
அம்மா கவிதைகள் – Amma Kavithai in Tamil: மனதை தொடும் என்றும் அம்மா பற்றிய பாசக்கவிதைகள்
அம்மா கவிதைகள் – Amma Kavithai

அம்மா கவிதைகள்
மூன்றெழுத்தில் கவிதை
சொல்லச் சொன்னால்
முதலில் சொல்வேன்
அம்மா! என்று.

Amma Pasam Kavithai in Tamil
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை
வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது

அம்மா கவிதைகள்
வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை!
அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்

Amma Kavithai Tamil Lyrics
நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முகம்
அம்மா
இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்
எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை

Amma Kavithai in Tamil
ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு
கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது
உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே
ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது.
அம்மா
எந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்!
Read More – அம்மா பற்றிய பொன்மொழிகள்
அம்மா கவிதைகள் – Amma Tamil Quotes
என் அம்மாவின் கருவறையே நான் மீண்டும் மரணித்து பிறக்க விரும்பும் கருவறை.
இறைவன் இல்லை என்று சொன்னால் அது பொய் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இறைவன் இருக்கிறான் அம்மாவின் வடிவில்.

Amma Kavithai in Tamil
தாய் என்னும் தீபம் இந்த உலகில் சுடர் விட்டு எரிவதால் தான் பாசம் எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.
கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தன் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.
எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று சீக்கிரம் சாப்பிட்டு விடு இல்லை என்றால் நிலா வந்து திருடி கொள்ளும்.
சோர்ந்து போய் வந்தாலும் சரி நான் தோற்றுப் போய் வந்தாலும் சரி என்றுமே எனக்கு ஆதரவுகரமாக என் அம்மா என் அருகிலே.
வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன என் அம்மாவின் முகத்தை பார்த்ததும் அவள் தரும் ஆறுதலால் மீண்டும் இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள் வலிமை பிறந்து விடுகிறது
யார் சொன்னது என் காதலி தான் என்னை முதலில் காதலித்தது என்று நான் பிறக்கும் போதே என் முகம் கூட பார்க்காமல் என் அன்னை என்னை நேசிக்க தொடங்கி விட்டாள்.
அன்பு, அரவணைப்பு, பாசம், பரிவு, பொறுமை, பொறுப்பு, நிதானம், கருணை, கடமை, காதல், நேசம், தன்னலம் இன்மை, தியாகம் என அனைத்து நல்ல ஒழுக்கங்களும் நிரம்பி வழியும் நடமாடும் கடவுளே என்னுடைய அம்மா.
தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கற்பிக்க பட்டு விடுகிறது அம்மா என்னும் மூன்று எழுத்து.
காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்.
Read More – அம்மா பற்றிய பொன்மொழிகள்
எதையும் கட்டளையிட்டு செய்ய சொல்பவன் தான் “அப்பா” தன் கருணை மொழியில் உணர்த்தி பாசமுடன் எதையும் செய்ய சொல்பவளே அம்மா.
எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும், உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும், உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும், நான் இருக்கும் வரை என்றுமே நீ வேண்டும் என் தாயே.
எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள் அனைத்தையும் தன்னுடைய மனக்கணக்கில். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
உன்னை பத்து மாதம் முகம் கூட தெரியாமல் நேசித்த உன் தாயை மட்டும் சோதித்து விடாதே.
இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்துமே உன் காலுக்கு அடியில் உன் அன்னையின் அன்பை தவிர.
கல்லை சிற்பம் செய்து அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து பூஜை செய்யும் காணாத இறைவனை நம்பி வாழும் நாம் அனைவருமே நமக்காகவே உயிர் வாழும் உயிருள்ள கடவுளான “அம்மா” வை மறந்து தான் போகிறோம்.
தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி மெய் எழுத்துக்களில் இடையாகி உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி முற்று பெற்று வரும் பெயர் கொண்ட அற்புத பிறவி அம்மா.
Read More ;- Amma Quotes in Tamil | Thirumana Porutham | 10 Jathagam Porutham
Video: அம்மா கவிதைகள்