பணம் கனவு பலன்கள் – Money Kanavu Palangal in Tamil – பணம் நம் அன்றாட வாழ்க்கையில் வாங்குவதும் கொடுப்பதுமாக தினசரி புழக்கத்தில் உள்ளது. ஆதலால் பணம் சம்பந்தப்பட்ட கனவுகள் நிறைய பேருக்கு வருவது நிச்சயம். பொதுவாக நாம் காணும் கனவுகள் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் இந்த பகுதியில் உங்கள் பணத்தை கனவில் கண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்

வானவில்லை கனவில் கண்டால் பணம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும்.
நாவல் பழத்தை கனவில் கண்டால் பணம் சேரும், அந்தஸ்து உயரும்.
அக்கினியை கனவில் கண்டால் செல்வம் சேரும்.
ஏலக்காய் சாப்பிடுவது போல் கனவில் வந்தால் பணம் சேரும்.
நம் கனவில் ஒருவர் ஏழ்மை நிலையை அடைந்தது போல கனவு கண்டால், கனவில் வந்த நபருக்கு திரண்ட செல்வம் சேரும்.
பணத்தை ஒருவரிடமிருந்து வாங்குவதாக கனவு கண்டால் நெருக்கடி சூழல் உண்டாக வாய்ப்பு உள்ளது, சுற்றியுள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உங்களிடமிருந்து பணம் திருடு போவதாக கனவு கண்டால் வீண் விரையம் உண்டாகும்(சுப விரையமாக மாற்றிக்கொள்ளுங்கள்). நீங்கள் கடன் கொடுத்தால் பணமும் திரும்ப வருவது சந்தேகம்.
உங்களுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என தெரியாமல் இருந்தால் நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவதையும் ஜாமீன் சாட்சி கையெழுத்து போடுவதையும் தவிர்க்கலாம்.
பணத்தை கொடுப்பது போல் கனவு கண்டால் முதலீடு செய்வீர்கள், தன லாபம் உண்டாகும், கடன் பிரச்சினை தீரும்.
ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை எண்ணிப் பார்ப்பது போல கனவு கண்டால், நீங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவழிக்கிறீர்கள் என்று பொருள், கவனம் தேவை.
- More – All kanavu palangal in Tamil | நாய் கனவு பலன்கள் | பாம்பு கனவு பலன்கள் | மாடு கனவு பலன்கள் | திருமண கனவு பலன்கள்
- Video – திருமண கனவு பலன்கள் | எந்த கனவுகள் கண்டால் உங்களுக்கு பணம் கிடைக்க போகிறது என்று அர்த்தம்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்