சிந்தனை செல்லும் வழி
சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் –
Check Our Videos - GK & GT Videos for TNPSC Exam | Video for Learn Colors for Kids | Kids Videos | ஜோதிட தகவல்கள்
‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், மறவாதே வழுத்தியறியேன் கனவினிலும். எனக்கு உன் அருள் எப்படி கிடைக்கும்?’ என்று. ஆனால் பலர் இன்று. சிந்திப்பதே இல்லை. சிலர் குறுக்குவழியிலேயே சிந்தின்கின்றனர்.
அத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்று –
ஏணிமரத்தின் மீது ஏறி சுவரில் ஆணி அடிக்கிறான் ஒருவன். மற்றொருவன் கீழே நின்று ஏணிமரததைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
சற்றுநேரம் அதிகமாகவே, கீழே நிற்பவன் அவனை “ஆணி இறங்கவில்லையா? கான்கிரீட் சுவரா? – ” என்ன? என்று கேட்கவே,
“மண் சுவர்தான். விரைவில் அடித்து விடுகிறேன்.” என்று சொல்வி, மீண்டும் வேகமாகச் சுத்தியால் அடிக்க ஆரம்பித்தான்.
ஏணியைப் பிடித்துக்கொண்டிருந்தவன், நன்றாக மேலே பார்த்துவிட்டு “கொண்டையை சுவரில் வைத்துக் கூர்ப்பக்கமாக சுத்தியால் அடிக்கிறாயே” என்று கோபித்தான். அதற்கு அவன் சிந்தித்துவிட்டு சொன்னான். “என்மேல் தப்பில்லை, ஆணி கம்பெனிக்காரன் கூர் இருக்க வேண்டிய இடத்தில் கொண்டைலையும் கொண்டை இருக்கவேண்டிய இடத்தில் கூர்மையையும் சிந்திக்காமல் வைத்துவிட்டான், சுவற்றில் இது எப்படி இறங்கும்” என்றான்.
அதற்குக் கீழே இருப்பவன் சொன்னான் “ஆணிக் கம்பெனிக்காரன் மீதும் தப்பில்லை, இந்த ஆணி எதிர்ச் சுவரில் அடிக்கிற ஆணி – ” என்று கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு பின்பு நன்றாக சிந்தித்து போய்ச் “இந்த சுவருக்கான ஆணியை வாங்கிக்கொண்டு வா” என்று அனுப்பினான்.
எப்படி? குறுக்குவழிச் சிந்தனைகள் பலவற்றுக்கு இது ஒன்று போதுமானது.
குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்
பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்

