<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழ் இலக்கணம் Archives</title>
	<atom:link href="https://www.tamizhdb.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://www.tamizhdb.com/category/தமிழ்-இலக்கணம்/</link>
	<description>தமிழ் தகவல்கள், தொழிற்நுட்பம், இலக்கணம், இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம்</description>
	<lastBuildDate>Fri, 06 Sep 2024 06:27:16 +0000</lastBuildDate>
	<language>ta-IN</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://www.tamizhdb.com/wp-content/uploads/2017/11/cropped-tamil_logo_580x412-32x32.png</url>
	<title>தமிழ் இலக்கணம் Archives</title>
	<link>https://www.tamizhdb.com/category/தமிழ்-இலக்கணம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வியங்கோள் வினைமுற்று</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Sep 2021 11:09:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33518</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன? வியங்கோள் பொருட்கள், வியங்கோள் வினைமுற்று விகுதிகள், எதிர்மறை வியங்கோள், ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்று வேறுபாடு ஆகியவற்றை பார்ப்போம். வியங்கோள் என்றால் ஏவுதல் அல்லது கட்டளையிடுதல் ஆகும். வியங்கோள் வினைமுற்று தமிழ் இலக்கண <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" title="வியங்கோள் வினைமுற்று">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/">வியங்கோள் வினைமுற்று</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன? <strong>வியங்கோள் பொருட்கள், வியங்கோள் வினைமுற்று விகுதிகள், எதிர்மறை வியங்கோள், ஏவல் மற்றும் வியங்கோள் வினைமுற்று வேறுபாடு</strong> ஆகியவற்றை பார்ப்போம்.</p>
<p>வியங்கோள் என்றால் ஏவுதல் அல்லது கட்டளையிடுதல் ஆகும். வியங்கோள் வினைமுற்று தமிழ் இலக்கண இலக்கியத்தில் பழங்காலம் முதல் இன்று வரை வழக்கில் இருந்து வருகிறது. இது எந்த பொருள்களில் வரும், அதனுடைய விகுதிகள் யாவை என்பனவற்றை பார்ப்போம்.</p>
<p><strong>வியங்கோள் வினைமுற்று &#8211; க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.</strong></p>
<p>வியங்கோளாவது, <strong>இருதிணையைம்பாண்</strong> மூன்று இடங்களுக்கும் பொதுவாகிய ஏவல்.</p>
<p>ககரவிகுதி &#8211; வாழ்க<br />
இயவிகுதி &#8211; வாழிய<br />
அகரவிகுதி &#8211; வர<br />
அல்விகுதி &#8211; ஒம்பல் உண்க<br />
உண்ணிய<br />
உண்ணியர்<br />
உண்ண<br />
எனல் யான்,யாம்<br />
நீ, நீர்<br />
அவன்,<br />
அவள், அவர்,<br />
அது, அவை</p>
<h4>வாழிய என்பது, ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.</h4>
<p>வா ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க<br />
ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ என்க</p>
<p>சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன், நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.</p>
<h3>வியங்கோள் பொருள்கள்</h3>
<p>வியங்கோள் வினை பெரும்பாலும் நான்கு பொருள்களில் பயன்படுத்தப்பெறுகிறது.<br />
1. வாழ்த்தல்<br />
2. வைதல்<br />
3. வேண்டல்<br />
4. விதித்தல் ஆகியவையாம்.</p>
<p>வெல்க, வாழ்க-வாழ்த்தல் பொருள்<br />
வீழ்க, ஒழிக-வைதல் பொருள்<br />
வருக, உண்க-விதித்தல் பொருள்<br />
அருள்க, கருணைபுரிக-வேண்டல் பொருள்</p>
<p>இவற்றை முன் குறிப்பிட்டவாறு வாழ்க நான், வாழ்க நீ, வாழ்க அவன் என்பன போன்று ஐம்பால் மூவிடத்திற்கும் பயன்படுத்தலாம்.</p>
<h3>வியங்கோள் வினைமுற்று விகுதிகள்</h3>
<p>க, ய என்கிற இரு உயிர்மெய் எழுத்துகளும் ரகர ஒற்றை இறுதியில் பெற்ற இய, இயர் என்பன போன்ற விகுதிகளும் வியங்கோளில் மிகுதியும் வரும்.</p>
<p>வருக, வாழிய, வாழியர் என்பன அதற்குச் சான்றுகள்.</p>
<h3>எதிர்மறை வியங்கோள்</h3>
<p>உடன்பாட்டுப் பொருளில் வியங்கோள் வருவது போன்று எதிர்மறைப் பொருளிலும் இது கையாளப் பெறுவதுண்டு.</p>
<p>வாரற்க,கூறற்க,செல்லற்க<br />
வாரல்,செல்லல்,பகரேல்</p>
<p>என்பன போன்று இச்சொற்கள் அமையும்.</p>
<p>இந்நிலையில் ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால் குழப்பமும், மயக்கமும் ஏற்படும்.</p>
<h3>ஏவல் &#8211; வியங்கோள் வேறுபாடுகள்</h3>
<p><strong>ஏவல் </strong></p>
<p>கட்டளைப் பொருளில் மட்டும் வரும்.</p>
<p>முன்னிலைக்கு மட்டும் உரியது</p>
<p>ஒருமை, பன்மை வேறுபாடுகள் உண்டு.</p>
<p><strong>வியங்கோள்</strong></p>
<p>வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல், என்னும் பொருள்களில் வரும்.</p>
<p>தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடங்களுக்கும் உரியது.</p>
<p>ஒருமை, பன்மை வேறுபாடுகள் இல்லை</p>
<p><strong>Read More</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/" target="_blank" rel="noopener">ஆத்திச்சூடி விளக்கம்</a></li>
<li>Video &#8211; <a href="https://www.youtube.com/playlist?list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noreferrer noopener">Learn Basic Astrology</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/">வியங்கோள் வினைமுற்று</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Sep 2021 08:17:57 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33472</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தமிழ் இலக்கணத்தில் முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று மற்றும் பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று பற்றி தெரிந்து கொள்வோம். முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘நீ இச்செயலைச் செய்வாயாக’ என ஏவினால், அது ஏவலை <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/" title="முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/">முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தமிழ் இலக்கணத்தில் <strong>முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று</strong> மற்றும் <strong>பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று</strong> பற்றி தெரிந்து கொள்வோம்.</p>
<h3>முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று</h3>
<p>முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘<strong>நீ இச்செயலைச் செய்வாயாக</strong>’ என ஏவினால், அது ஏவலை வெளிப்படுத்தும் எனவே இந்த சொல்லுக்கு ஏவல் வினை என்று பெயர்.</p>
<p>ஏவல் வினை தெரிநிலையில் மட்டும் உண்டு. குறிப்புவினையில் இல்லை. எனவே, ‘<strong>ஏவல்</strong>’ என்பது ஒரு வினைப் பகுதியானது விகுதி பெற்றோ, பெறாமலோ அமையும் சொல் எனலாம்.</p>
<p>பெரும்பாலும் ஏவல் வினைமுற்றுகள் ‘ஆய்’ விகுதி பெற்று, இலக்கிய வழக்கில் வருகின்றன.</p>
<p>வாராய்=வா<br />
சொல்லாய்=சொல்<br />
பாடாய்=பாடு<br />
என்பன போல அமையும். முன்னிலை ஒருமை விகுதியாகிய ஆய் என்பதைப் பெறாமல் வா, சொல், உண் என்பன போலப் பகுதி மாத்திரமே நிற்கும் வினைச் சொற்களும் ஏவல் ஒருமை வினைமுற்றுகளேயாகும். பேச்சு வழக்கில் ஏவல் ஒருமைச் சொற்கள் பெரும்பகுதி விகுதி இல்லாமல் வருவதையே காணலாம்.</p>
<p>இவ்வாறன்றி <strong>ஆய், இ, அல், ஏல், ஆல்</strong> முதலிய விகுதிகளைப் பெற்றும் ஏவல் ஒருமை வினைமுற்றுச் சொற்கள் வருவதுண்டு.</p>
<p>வாராய் &#8211; (வருவாய்) &#8211; ஆய் விகுதி<br />
சேறி &#8211; (செல்லுதி = செல்) &#8211; இ விகுதி</p>
<p>வாரல் &#8211; (வரவேண்டாம்) &#8211; அல் விகுதிஎதிர்மறைப் பொருளில் அமைந்தன<br />
திறவேல் (திறக்க வேண்டாம்) &#8211; ஏல் விகுதி<br />
அழால் (அழ வேண்டாம்) &#8211; ஆல் விகுதி<br />
ஏவல் வினை எதிர்காலத்துக்கு உரியது</p>
<h3>பகுதி மட்டும் வரும் ஏவல் வினைமுற்று</h3>
<p>விகுதி இல்லாமல் தெரிநிலை வினைப்பகுதி மட்டும் வந்து ஏவல் வினைமுற்றுகள் அமைவது உண்டு. பெரும்பாலும் இக்காலப் பேச்சு வழக்கில் இவ்வாறுதான் ஏவல் வினை முற்று அமைகிறது.</p>
<p>முன்னிலை ஒருமை ஏவலில் பொதுவாக <strong>வா, போ, இரு, உண், பார்</strong> என்பன போன்ற வினைப்பகுதிகளைத்தான் பெரும்பாலும் பேசுகிறோம். ‘நீ வா’ என்பதற்குப் பதிலாக ‘வா’ என்று மட்டும் எதிரில் இருப்பவரை நோக்கிக் கூறும் பொழுது ‘நீ’ என்னும் எழுவாய் தோன்றா எழுவாயாக மறைந்திருக்கிறது. அதாவது கேட்பவரால் ‘நீ’ என்னும் சொல் தானாக உணரப்படுகிறது.</p>
<p>நன்னூல் பதவியலில் கூறப்படும் பகுபத உறுப்புகள் பற்றிய செய்திகளில் <strong>‘நட, வா, மடி, சீ, விடு, கூ</strong>’ என்று தொடங்கும் நூற்பாவில் ‘செய்’ என்னும் பொது ஏவல் வாய்பாட்டில் அமைந்த வினைப் பகாப்பதங்கள் அடங்கும்.</p>
<p><strong>வா, போ</strong> போன்ற ஏவல் சொற்களில் விகுதி இல்லை என்றாலும், முன்னிலை ஏவல் விகுதி சேர்ந்து கெட்டிருப்பதாகவே கொள்வர்.</p>
<p><strong>தெரிந்து கொள்க</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/" target="_blank" rel="noopener">முன்னிலை ஒருமை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கண நூல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/" target="_blank" rel="noopener">ஆத்திச்சூடி விளக்கம்</a></li>
<li>Video &#8211; <a href="https://www.youtube.com/playlist?list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noreferrer noopener">Learn Basic Astrology</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/">முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Sep 2021 15:45:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33459</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்றால் என்ன? &#8211; முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்களில் காலத்தை வெளிப்படையாக அறிவிக்கும் சொற்களைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் என்கிறோம். காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை குறிப்பு வினைமுற்றுகள் தெரிநிலை வினைமுற்று வந்தாய் என்பது இறந்தகாலம் காட்டுகிறது. வருகிறாய் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/" title="தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/">தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று</strong> என்றால் என்ன? &#8211; முன்னிலை ஒருமை வினைமுற்றுச் சொற்களில் காலத்தை வெளிப்படையாக அறிவிக்கும் சொற்களைத் <strong>தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் என்கிறோம். </strong>காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை <strong>குறிப்பு வினைமுற்றுகள்</strong></p>
<h3>தெரிநிலை வினைமுற்று</h3>
<p>வந்தாய் என்பது இறந்தகாலம் காட்டுகிறது.<br />
வருகிறாய் என்பது நிகழ்காலம் காட்டுகிறது.<br />
வருவாய் என்பது எதிர்காலம் காட்டுகிறது.</p>
<p>இச்சொற்களில் ‘<strong>வா</strong>’ என்னும் வினைப்பகுதிக்கும் ‘<strong>ஆய்</strong>’ என்னும் முன்னிலை ஒருமை விகுதிக்கும் இடையில் காலம் காட்டும் இடைநிலைகள் உள்ளன. முறையே <strong>த், கிறு, வ்</strong> என்பன மூன்று காலங்களையும் உணர்த்துகின்றன.</p>
<p>முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று விகுதிகளாக<strong> இ, ஐ, ஆய்</strong> என்பன உள்ளன. இவற்றுள் ஆய் என்னும் விகுதியே இக்காலத்தில் பெருவழக்காக உள்ளது.</p>
<p>நீ படித்தாய் ஓடினாய்<br />
நீ நடந்தாய் உழுதாய்<br />
நீ உண்டாய் சொன்னாய்<br />
நீ சென்றாய் வந்தாய்</p>
<p>முதலிய சொற்களில் எல்லாம் ‘ஆய்’ விகுதி இருப்பதை அறிக. இவற்றைப் போல, பழங்காலத்தில் இகர விகுதியும் பயன்பட்டுள்ளது. ஒரு சான்று:</p>
<p>சென்றி என்பது இறந்தகாலம் உணர்த்தும் வினைமுற்று. இதற்குச் சென்றாய் என்று பொருள்.</p>
<p>செல்லாநின்றி என்பது நிகழ்காலம் உணர்த்துகிறது. ‘<strong>செல்</strong>’ என்னும் பகுதியோடு ஆநின்று என்னும் நிகழ்கால இடைநிலையும் ‘<strong>இ</strong>’கர விகுதியும் சேர்ந்துள்ளது. எனவே, இச்சொல் செல்கிறாய் என்னும் பொருளுடையதாகும்.</p>
<p>சேறி என்னும் தெரிநிலை வினைமுற்று ‘<strong>செல்வாய்</strong>’ என்னும் பொருளுடையது. இது எதிர்காலம் உணர்த்துவது. சென்றி, சொல்லாநின்றி, சேறி ஆகிய தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள் இக்காலத்தில் வழக்கில் இல்லை. ஆதலால் இவற்றின் பொருள்களை நினைவிற்கொள்ள வேண்டும். இகர விகுதியைப் போல் ‘<strong>ஐ</strong>’கார விகுதியும் முன்னிலையில் வரும்.</p>
<p>உண்டனை என்பது இதற்குச் சான்று. இது உண்டாய் என்னும் பொருளுடையது. இதுபோல் நிகழ்காலம் குறிப்பதாக இவ்விகுதி உண்கின்றனை என்று வருவதும் காண்க.</p>
<p>இதுவரை கூறியவற்றால் <strong>ஐ, ஆய், இ</strong> என்னும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்களில் வருகின்றன என்பது தெளிவாகும்.</p>
<h3>குறிப்பு வினைமுற்று</h3>
<p>காலத்தைக் குறிப்பாக உணர்த்துபவை குறிப்பு வினைமுற்றுகள்<strong> ஐ, ஆய், இ</strong> எனும் மூன்று விகுதிகளும் முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்களிலும் விகுதிகளாக வருகின்றன.</p>
<p>நீ நல்லாய் &#8211; ஆய் விகுதி<br />
நீ நல்லை &#8211; ஐ விகுதி<br />
நீ அருளி &#8211; இ விகுதி</p>
<p>இவை முன்னிலை<br />
ஒருமையில் ஆண்பால் ஒருமை, பெண்பால் ஒருமை, அஃறிணை ஒன்றன்பால் ஆகிய மூன்றையும் குறிக்கும்.</p>
<p>‘நல்லை’ என்னும் சொல் முன்னிலையில் இருக்கும் ஆண் ஒருவரையோ, பெண் ஒருவரையோ, அல்லது அஃறிணைப் பொருள் ஒன்றையோ குறித்துப் பேசுவதாக அமையும். நீ நல்ல இயல்பை உடையாய் எனும் பொருள் தருவதாக ‘நல்லை’ என்னும் சொல் குறிப்பு வினையில் பயன்படுகிறது. ‘அருளி’ என்பது ‘அருள் உடையவன் நீ’ என்று பொருள்படும்.</p>
<p>ஓர் ஆணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.<br />
ஒரு பெண்ணைப் பார்த்தும் ‘நல்லாய்’ எனக் கூறலாம்.<br />
ஒரு நாய் போன்ற அஃறிணை உயிரைப் பார்த்தும் இவ்வாறு கூறலாம்.<br />
குறிப்பு வினை இம் மூன்றற்கும் உரியது.</p>
<p>மேற்கண்டவற்றால் தெரிநிலை வினை, குறிப்பு வினை எனும் இரண்டிற்கும் முன்னிலை ஒருமைக்குரிய விகுதிகளாக ஐ, ஆய், இ எனும் மூன்றும் வருகின்றன என்பது விளங்கும். இவற்றுள் ஆய் விகுதி இன்றைய வழக்கில் உள்ளது என்பதும், ஐ, இ ஆகிய விகுதிகள் முற்கால வழக்குகள் என்பதும் நினைவிற்கு உரியன.</p>
<p><strong>தெரிந்து கொள்க</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/" target="_blank" rel="noopener">முன்னிலை ஒருமை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கண நூல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li>Video &#8211; <a href="https://www.youtube.com/playlist?list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noreferrer noopener">Learn Basic Astrology</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/">தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னிலை ஒருமை வினைமுற்று</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 06:49:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33452</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>முன்னிலை ஒருமை வினைமுற்று &#8211; ஒரு செய்தியை யாரோடு பேசுகிறோமோ அவரை ‘முன்னிலை’ என்னும் சொல்லால் கூறுகிறோம். அல்லது ‘முன்னிலை’ என்னும் சொல் தமிழ் இலக்கணத்தில் கேட்பவரைக் குறிக்கும் ஒரு கலைச்சொல் எனலாம். மூவிடப் பெயர்களைக் கீழ்வருமாறு எளிமையாக நினைவுபடுத்திக் கொள்ளலாம். <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/" title="முன்னிலை ஒருமை வினைமுற்று">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/">முன்னிலை ஒருமை வினைமுற்று</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p class="rtext"><strong>முன்னிலை ஒருமை வினைமுற்று</strong> &#8211; ஒரு செய்தியை யாரோடு பேசுகிறோமோ அவரை ‘<strong>முன்னிலை</strong>’ என்னும் சொல்லால் கூறுகிறோம். அல்லது ‘<strong>முன்னிலை</strong>’ என்னும் சொல் தமிழ் இலக்கணத்தில் கேட்பவரைக் குறிக்கும் ஒரு கலைச்சொல் எனலாம். மூவிடப் பெயர்களைக் கீழ்வருமாறு எளிமையாக நினைவுபடுத்திக் கொள்ளலாம்.</p>
<blockquote><p>தன்மை எனும் சொல் பேசுபவரைக் குறிக்கும்.<br />
முன்னிலை எனும் சொல் கேட்பவரைக் குறிக்கும்.<br />
படர்க்கை எனும் சொல் பேசப்படுபவரைக் குறிக்கும்.</p></blockquote>
<p class="rtext"><strong>முன்னிலை வினைமுற்று</strong> என்பது ஒரு தொடரில் பயனிலையாக வருவதாகும்.</p>
<blockquote><p>நீ <b>வந்தாய்</b><br />
நீ <b>உண்கிறாய்</b><br />
நீ <b>செல்வாய்</b></p></blockquote>
<p class="rtext">எனும் தொடர்களில் உள்ள வினைமுற்றுச் சொற்கள் <strong>முன்னிலை வினைமுற்றுகள்</strong> ஆகும்.</p>
<p class="rtext">முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் கீழ்க்காணும் விளக்கங்களைத் தருவனவாக அமையும். செயல் (வினை), காலம், இடம், எண் ஆகியன குறித்து அச்சொல் அறிவிக்கும் என்பதை ஓர் எடுத்துக்காட்டின் வழிக் காண்போம்.</p>
<p class="rtext"><b>வந்தாய்</b> என்னும் முன்னிலை வினைமுற்றுச் சொல் வருதல் ஆகிய செயலையும் இறந்த காலத்தையும் முன்னிலையில் ஒருவரையும் சுட்டுகிறது.</p>
<p class="rtext">முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் தன்மை வினைமுற்றுச் சொற்களைப் போன்றே திணை, பால் ஆகியவற்றைத் தெரிவிப்பதில்லை.</p>
<p class="rtext">‘<strong>வந்தாய்</strong>’ என்னும் சொல் எதிரில் உள்ள ஒருவரை மட்டும் குறிக்கிறதே தவிர அவர் உயர்திணையா அல்லது அஃறிணையா என்பதையோ, அவர் ஆணா அல்லது பெண்ணா என்பதையோ தெரிவிப்பதில்லை. எதிரில் உள்ள ஒரு மனிதரைப் பார்த்தும் ‘வந்தாய்’ எனப் பேசலாம்.</p>
<p class="rtext">எதிரில் உள்ள அஃறிணைப் பொருளாகிய ஒன்றனைப் பார்த்தும் பேசலாம். சான்றாக ஒரு நாயைப் பார்த்தும், ‘நீ இவ்வளவு நேரம் எங்கே போய் இருந்தாய்? எப்பொழுது இங்கு வந்தாய்?&#8217; என்பன போலப் பேசலாம். அதே போல வந்தீர் என்னும் முன்னிலை வினைமுற்று உயர்திணையைக் குறிக்கவும் வரலாம்; அஃறிணையைக் குறிக்கவும் வரலாம். ஆகவே, முன்னிலை வினைமுற்றுச் சொற்கள் திணை, பால் உணர்த்தாமல் ஒருமை, பன்மை என்பவற்றுள் ஒன்றை மட்டும் உணர்த்தும் என்பதை அறிய வேண்டும்.</p>
<p><strong><em>&#8211; முனைவர்.மா.சற்குணம்</em></strong></p>
<p><strong>தெரிந்து கொள்க</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கண நூல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li>Video &#8211; <a href="https://www.youtube.com/playlist?list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noreferrer noopener">Learn Basic Astrology</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/">முன்னிலை ஒருமை வினைமுற்று</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயர்திணை அஃறிணை என்றால் என்ன?</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%83%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 06:42:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33450</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>உயர்திணை அஃறிணை என்றால் என்ன? திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். இங்கே இனம் என்ற பொருளில் திணை என்னும் சொல் இடம்பெறுகிறது. உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும். இந்தத் திணையைத் தமிழ் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%83%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/" title="உயர்திணை அஃறிணை என்றால் என்ன?">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%83%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/">உயர்திணை அஃறிணை என்றால் என்ன?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>உயர்திணை அஃறிணை என்றால் என்ன?</strong> திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். இங்கே இனம் என்ற பொருளில் திணை என்னும் சொல் இடம்பெறுகிறது. உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும். இந்தத் திணையைத் தமிழ் இலக்கண நூலார் இரண்டு வகையாகப் பகுத்துள்ளனர். அவை வருமாறு:</p>
<p>1) உயர்திணை<br />
2) அஃறிணை</p>
<h3>உயர்திணை</h3>
<p>பகுத்தறிவு கொண்ட மக்களையும் தேவரையும் நரகரையும் குறிப்பது உயர்திணை எனப்படும்.</p>
<p><strong>(எ.கா)</strong> அறிவன், முருகன்</p>
<p>இதில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் என்னும் சொல் உலக மக்களைக் குறிக்கும்.</p>
<p>தேவர் என்னும் சொல் கடவுளரைக் குறிக்கும்.</p>
<p>நரகர் என்னும் சொல் நரகத்தில் வாழ்கிறவர்களைக் குறிக்கும் என்று கூறுவார்கள்.</p>
<p>தேவர், நரகர் என்று குறிப்பிடப்படுபவர்கள் இந்த உலகில் வாழவில்லை என்றாலும் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்களும் உயர்திணை என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.</p>
<h3>அஃறிணை</h3>
<p>மக்கள், தேவர், நரகர் அல்லாத உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும்.</p>
<p>(எ.கா) புலி, கடல்</p>
<p>அஃறிணை என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் ஆறு அறிவில் குறைந்தவை ஆகும். இதில் ஊர்வன, பறப்பன, உயிர் இல்லாதவை அனைத்தும் அடங்கும். இவற்றைக் குறிப்பதற்கு உரிய அஃறிணை என்னும் சொல் அல் + திணை என்னும் சொற்களின் சேர்ந்த வடிவம் ஆகும். உயர்ந்த இனம் அல்லாதவை என்பது இதன் பொருள்.</p>
<p>மக்கள், தேவர், நரகர் என்று உயர்திணையில் குறிப்பிடப்பட்டோரில் உயிர் இல்லாத உடலும் (பிணம்) அஃறிணை என்றே குறிக்கப்படும்.</p>
<p>மக்கள் தேவர் நரகர் உயர்திணை<br />
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை</p>
<p>மக்களும் தேவரும் நரகரும் உயர்திணை எனப்படுவர். இவர்கள் தவிர ஏனைய உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும்.</p>
<h3>திணைப் பொதுப்பெயர்</h3>
<p>உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வரும் பெயர் திணைப் பொதுப்பெயர் எனப்படும்.</p>
<p>சாத்தன், கொற்றன், சூரியன், சந்திரன் முதலான பெயர்கள் உயர்திணையிலும் அஃறிணையிலும் உள்ள ஆண்பாலுக்குப் பொதுவாய் வரும்.</p>
<p>சாத்தி, கொற்றி முதலான பெயர்கள் உயர்திணையிலும் அஃறிணையிலும் உள்ள பெண்பாலுக்குப் பொதுவாய் வரும்.</p>
<p><strong>(எ.கா)</strong></p>
<p>அவன் சாத்தன்<br />
அது சாத்தன்<br />
அவள் சாத்தி<br />
அது சாத்தி</p>
<p>தாய், தந்தை என்னும் முறைப்பெயர்களும், தன்மை, முன்னிலை இடப்பெயர்களும், தான், தாம் ஆகிய படர்க்கை இடப்பெயர்களும், மூவிடத்துக்கும் பொதுவான &#8216;எல்லாம்&#8217; எனும்பெயரும் இருதிணைகளுக்கும் பொதுவாய் வருவன ஆகும்.</p>
<p>தந்தை இவன்<br />
தந்தை இவ் எருது<br />
தாய் இவள்<br />
தாய் இப்பசு</p>
<p>தந்தை, தாய் என்னும் முறைப்பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன.</p>
<p>நான் கோவன்<br />
யான் கோவன்<br />
நான் பூதம்<br />
யான் பூதம்<br />
நாம் மக்கள்<br />
யாம் மக்கள்<br />
நாம் பூதங்கள்<br />
யாம் பூதங்கள்</p>
<p>நான், நாம், யான், யாம் என்னும் தன்மை இடப்பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன.</p>
<p>நீ பாவை<br />
நீ பூதம்<br />
நீர் மக்கள்<br />
நீர் பூதங்கள்<br />
நீவிர் மக்கள்<br />
நீவிர் பூதங்கள்<br />
நீயிர் மக்கள்<br />
நீயிர் பூதங்கள்<br />
எல்லீர் மக்கள்<br />
எல்லீர் பூதங்கள்</p>
<p>நீ, நீர், நீவிர், நீயிர், எல்லீர் என்னும் முன்னிலை இடப்பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன.</p>
<p>அவன் தான்<br />
அது தான்<br />
அவர் தாம்<br />
அவை தாம்<br />
அவர் எல்லாம்<br />
அவை எல்லாம்<br />
நாங்கள் எல்லாம்<br />
நீங்கள் எல்லாம்</p>
<p>தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் வந்துள்ளன.</p>
<p>எல்லாம் எனும்பெயர் மூவிடத்துக்கும் பொதுவாய் வந்துள்ளது.</p>
<p><strong>தெரிந்து கொள்க</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கண நூல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li>Video &#8211; <a href="https://www.youtube.com/playlist?list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noreferrer noopener">Learn Basic Astrology</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85%e0%ae%83%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/">உயர்திணை அஃறிணை என்றால் என்ன?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எட்டுத்தொகை நூல்கள் யாவை?</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 04:35:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33446</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>எட்டுத்தொகை நூல்கள் யாவை? &#8211; தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவைகளை பார்ப்போம். அகம் சார்ந்த நூல்கள்  1. நற்றிணை 2. குறுந்தொகை <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88/" title="எட்டுத்தொகை நூல்கள் யாவை?">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88/">எட்டுத்தொகை நூல்கள் யாவை?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>எட்டுத்தொகை நூல்கள் யாவை?</strong> &#8211; தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவைகளை பார்ப்போம்.</p>
<figure id="attachment_34703" aria-describedby="caption-attachment-34703" style="width: 350px" class="wp-caption aligncenter"><img fetchpriority="high" decoding="async" class="size-full wp-image-34703" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/09/எட்டுத்தொகை-நூல்கள்.jpg" alt="எட்டுத்தொகை நூல்கள்" width="350" height="200" srcset="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/09/எட்டுத்தொகை-நூல்கள்.jpg 350w, https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/09/எட்டுத்தொகை-நூல்கள்-300x171.jpg 300w" sizes="(max-width: 350px) 100vw, 350px" /><figcaption id="caption-attachment-34703" class="wp-caption-text">எட்டுத்தொகை நூல்கள்</figcaption></figure>
<p><strong>அகம் சார்ந்த நூல்கள் </strong></p>
<p>1. நற்றிணை<br />
2. குறுந்தொகை<br />
3. அகநானூறு<br />
4. ஐங்குறுநூறு<br />
5. கலித்தொகை<br />
என்ற ஐந்துமாகும்.</p>
<p><strong>புறம் சார்ந்த நூல்கள் </strong></p>
<p>1. புறநானூறு<br />
2. பதிற்றுப்பத்து<br />
என்ற இரண்டுமாகும்.</p>
<p><strong>அகமும் புறமும் சார்ந்த நூல்</strong></p>
<p>1. பரிபாடல்</p>
<p>இனி ஒவ்வொரு <strong>எட்டுத்தொகை நூல்களின்</strong> அமைப்பும் சிறப்பும் பற்றி விரிவாக காண்போம்.</p>
<h3>நற்றிணை</h3>
<p>அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல் மிகச் சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவினதான 400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில் உள்ளன. இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். இதில் 110, 379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டும் 13 அடிகள் கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.</p>
<h3>குறுந்தொகை</h3>
<p>குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல் குறுந்தொகை ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. இதனை இயற்றியோர் 205 புலவர்கள். இதற்குக் கடவுள் வாழ்த்தொன்று உண்டு. இதன் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.</p>
<p>இது முருகவேள் வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை. இதற்குப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் எழுதிய உரைகள் கிடைக்கவில்லை. இதன் 235 பாடல்கள் பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.</p>
<h3>ஐங்குறுநூறு</h3>
<p>இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர்.</p>
<p>ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு. கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும்.</p>
<h3>அகநானூறு</h3>
<p>இது 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ வணக்கப் பாடலாகும். இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு.</p>
<p>இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை பவளம் (121-300) நித்திலக்கோவை (301 &#8211; 400) என்று மூன்று தொகுதிகளாக உள்ளது. தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது.</p>
<p>பாட்டின் எண் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இவை கோக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.</p>
<h3>கலித்தொகை</h3>
<p>கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது.</p>
<p>பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.</p>
<p>பாலை &#8211; பாலை பாடிய பெருங்கடுங்கோ<br />
குறிஞ்சி &#8211; கபிலர்<br />
மருதம் &#8211; மருதன் இளநாகனார்<br />
முல்லை &#8211; சோழன் நல்லுருத்திரன்<br />
நெய்தல் &#8211; நல்லந்துவனார்</p>
<p>நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.</p>
<h3>புறநானூறு</h3>
<p>புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும் அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர் வரும் செய்யுள்களில் சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.</p>
<p>அது சிவ வணக்கமாகும். இதற்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு. இதனை இயற்றியோர் 157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. (16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.</p>
<h3>பதிற்றுப் பத்து</h3>
<p>பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.</p>
<p>இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.</p>
<h3>பரிபாடல்</h3>
<p>எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.</p>
<p>&#8211; பேரா.அ.தட்சிணாமூர்த்தி</p>
<p><strong>தெரிந்து கொள்க </strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கண நூல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88/">எட்டுத்தொகை நூல்கள் யாவை?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பத்துப்பாட்டு நூல்கள் யாவை?</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Sep 2021 04:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33444</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>பத்துப்பாட்டு நூல்கள் &#8211; திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு நூல்கள் என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு. பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் எவை எவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்று <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be/" title="பத்துப்பாட்டு நூல்கள் யாவை?">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be/">பத்துப்பாட்டு நூல்கள் யாவை?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>பத்துப்பாட்டு நூல்கள்</strong> &#8211; திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே <strong>பத்துப்பாட்டு நூல்கள்</strong> என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.</p>
<p>பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் எவை எவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்று உண்டு. அது பின்வருமாறு:-</p>
<p><strong>முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை</strong><br />
<strong>பெருகு வளமதுரைக் காஞ்சி &#8211; மருஇனிய</strong><br />
<strong>கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்</strong><br />
<strong>பாலை கடாத்தொடும் பத்து.</strong></p>
<p>இவ்வெண்பாவின் படி,</p>
<h3><strong>பத்துப்பாட்டு</strong> நூல்கள்</h3>
<p>1. திருமுருகாற்றுப் படை<br />
2. பொருநராற்றுப் படை<br />
3. சிறுபாணாற்றுப் படை<br />
4. பெரும்பாணாற்றுப் படை<br />
5. முல்லைப்பாட்டு<br />
6. மதுரைக் காஞ்சி<br />
7. நெடுநல்வாடை<br />
8. குறிஞ்சிப் பாட்டு<br />
9. பட்டினப்பாலை<br />
10. மலைபடுகடாம், என்பனவாகும்.</p>
<p>பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. <strong>கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய</strong> <strong>பன்னிரு பாட்டியல்</strong> என்னும்<a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener"> இலக்கண நூல்</a> பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று.</p>
<p>கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.</p>
<p>பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு 103 அடிகளைக் கொண்டது. மிக நீண்டது 782 அடிகளைக் கொண்டது. இனி, பத்துப்பாட்டிலுள்ள நூல்களின் வகைப்பாட்டையும் ஒவ்வொரு வகையிலும் உள்ள செய்யுட்களின் தனித் தனியான சிறப்புகளையும் காணலாம்.</p>
<h3>நூல்களின் வகைப்பாடு</h3>
<p>பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே <strong>அகம், புறம்</strong> என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.</p>
<p><strong>முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை</strong> என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.</p>
<p><strong>திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, பொருநராற்றுப் படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி</strong> ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இவ்வாறனுள்ளும் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.</p>
<p>&#8211; பேரா.அ.தட்சிணாமூர்த்தி</p>
<p><strong>தெரிந்து கொள்க </strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கண நூல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be/">பத்துப்பாட்டு நூல்கள் யாவை?</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் இலக்கண நூல்கள்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 11:29:19 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33436</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தமிழ் இலக்கண நூல்கள் &#8211; தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள் உள்ளன. முக்கியமான இலக்கண நூல்களை பற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை காண்போம். தமிழ் இலக்கண நூல்கள் ஆசிரியர் காலம் இலக்கண வகை தொல்காப்பியம் தொல்காப்பியர் கி.மு.4ஆம் நூற். எழுத்து, <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" title="தமிழ் இலக்கண நூல்கள்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">தமிழ் இலக்கண நூல்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>தமிழ் இலக்கண நூல்கள்</strong> &#8211; தமிழில் நாற்பதுக்கும் மேற்பட்ட <strong>இலக்கண நூல்கள்</strong> உள்ளன. முக்கியமான இலக்கண நூல்களை பற்றில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை காண்போம்.</p>
<table border="0" width="530" cellspacing="1" cellpadding="5">
<tbody>
<tr>
<td class="td3"><strong>தமிழ் இலக்கண நூல்கள்</strong></td>
<td class="td3"><strong>ஆசிரியர்</strong></td>
<td class="td3"><strong>காலம்</strong></td>
<td class="td3"><strong>இலக்கண வகை</strong></td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">தொல்காப்பியம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">தொல்காப்பியர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">கி.மு.4ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">எழுத்து, சொல், பொருள்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">நன்னூல்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">பவணந்தி முனிவர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">13ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">எழுத்து, சொல்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">நேமிநாதம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">குணவீர பண்டிதர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">12ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">எழுத்து, சொல்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">இறையனார் களவியல்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">&#8212;</td>
<td class="rtext" bgcolor="#ffffff">7ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அகப்பொருள்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">நம்பியகப் பொருள்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">நாற்கவிராசநம்பி</td>
<td class="rtext" bgcolor="#ffffff">13ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அகப்பொருள்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">மாறனகப் பொருள்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">குருகைப்பெருமாள் கவிராயர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">16ஆம்நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அகப்பொருள்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">புறப்பொருள் வெண்பாமாலை</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐயனாரிதனார்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">9ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">புறப்பொருள்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">யாப்பருங்கலம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அமி<span lang="ta">ர்</span>தசாகரர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">10ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">யாப்பு</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">யாப்பருங்கலக் காரிகை</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அமி<span lang="ta">ர்</span>தசாகரர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">10ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">யாப்பு</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">தண்டியலங்காரம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">தண்டி</td>
<td class="rtext" bgcolor="#ffffff">12ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அணி</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">மாறன் அலங்காரம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">குருகைப்பெருமாள் கவிராயர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">16ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">அணி</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">வீரசோழியம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">புத்தமித்திரர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">11ஆம் நூற்,</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐந்திலக்கணம்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">இலக்கண விளக்கம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">வைத்தியநாத தேசிகர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">17ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐந்திலக்கணம்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">தொன்னூல் விளக்கம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">வீரமாமுனிவர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">18ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐந்திலக்கணம்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">சுவாமிநாதம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">சுவாமி கவிராயர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">18ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐந்திலக்கணம்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">அறுவகை இலக்கணம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">தண்டபாணி சுவாமிகள்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">19ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐந்திலக்கணம்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">முத்துவீரியம்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">முத்துவீர உபாத்தியாயர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">19ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">ஐந்திலக்கணம்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">பன்னிரு பாட்டியல்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">&#8212;</td>
<td class="rtext" bgcolor="#ffffff">10ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">பாட்டியல்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">வெண்பாப் பாட்டியல்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">குணவீர பண்டிதர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">12ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">பாட்டியல்</td>
</tr>
<tr>
<td class="rtext" bgcolor="#ffffff">இலக்கண விளக்கப் பாட்டியல்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">தியாகராச தேசிகர்</td>
<td class="rtext" bgcolor="#ffffff">17ஆம் நூற்.</td>
<td class="rtext" bgcolor="#ffffff">பாட்டியல்</td>
</tr>
</tbody>
</table>
<p><strong>தெரிந்து கொள்க:-</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/" target="_blank" rel="noopener">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">தமிழ் இலக்கண நூல்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் இலக்கணத்தின் வகைகள்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 11:14:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33434</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தமிழ் இலக்கணத்தின் வகைகள் &#8211; இந்த பதிவில் தமிழ் இலக்கணம் என்றால் என்ன? மற்றும் தமிழ் இலக்கணத்தின் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம். தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, 1) எழுத்து 2) சொல் 3) பொருள் 4) யாப்பு <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/" title="தமிழ் இலக்கணத்தின் வகைகள்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>தமிழ் இலக்கணத்தின் வகைகள்</strong> &#8211; இந்த பதிவில் தமிழ் இலக்கணம் என்றால் என்ன? மற்றும் தமிழ் இலக்கணத்தின் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.</p>
<h4>தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,</h4>
<p>1) எழுத்து<br />
2) சொல்<br />
3) பொருள்<br />
4) யாப்பு<br />
5) அணி ஆகியவை ஆகும்</p>
<p>இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும்.</p>
<p>யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது. பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது. பிள்ளைத்தமிழ், உலா, தூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது.</p>
<h3>தமிழ் இலக்கணத்தின் வகைகள் &#8211; அணி இலக்கணம்</h3>
<p>அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமை, உருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது. இந்தப் பாடத்தில் எழுத்து, சொல் ஆகிய இலக்கணங்களின் அமைப்பும், வரும் பாடத்தில் பொருள், யாப்பு, அணி, பாட்டியல் இலக்கணங்களின் அமைப்பும் அறிமுகம் செய்யப்படும்.</p>
<h3>எழுத்து இலக்கணம்</h3>
<p>எழுத்து இலக்கணத்தில், எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன.</p>
<h3>சந்தி இலக்கணம்</h3>
<p>சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும்.</p>
<h3>சொல் இலக்கணம்</h3>
<p>சொல் இலக்கணத்தில், சொல்லின் வகைகளான பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியனவும் திணை, பால், எண், இடம், காலம் முதலியனவும் தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்), வேற்றுமை ஆகியனவும் சொல்லப்பட்டிருக்கும்.</p>
<h3>பொருள் இலக்கணம்</h3>
<p>பொருள் இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் ஆகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம் ஆகும். பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம் ஆகும்.</p>
<p>ஓர் தலைவனும் தலைவியும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது. போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன.</p>
<h3>யாப்பு இலக்கணம்</h3>
<p>தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளில் இயற்றப் பட்டவையே. செய்யுள்களின் அமைப்பு, ஓசை, பாக்களின் வகைகள் முதலியவற்றைச் சொல்லுவதே யாப்பு இலக்கணம் ஆகும்.</p>
<h3>பாட்டியல் இலக்கணம்</h3>
<p>சங்க காலத்திற்குப்பின் பக்தி இலக்கியக் காலத்திலும் அதற்குப் பின்பும் பல வகைச் சிற்றிலக்கிய வடிவங்கள் தோன்றின. தூது, உலா, அந்தாதி, மாலை, பிள்ளைத்தமிழ் முதலியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். இவற்றுக்கு இலக்கணம் சொல்லுவது பாட்டியல் இலக்கணம் ஆகும்.</p>
<h3>அணி இலக்கணம்</h3>
<p>தமிழ் இலக்கணத்தின் வகைகள் &#8211; இலக்கியங்களில் அழகுக்காகவும் பொருள் விளங்குவதற்காகவும் உவமைகளைப் பயன்படுத்துவது கவிஞர்களின் இயல்பு. அவ்வாறு இடம்பெறும் உவமை, உருவகம் முதலியவற்றுக்கு அணி என்று பெயரிட்டு அவற்றின் இலக்கணத்தைச் சொல்லுவது அணி இலக்கணம் ஆகும்.</p>
<p><strong>தெரிந்து கொள்க </strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/">தமிழ் இலக்கணத்தின் வகைகள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உவம உருபு இடைச்சொற்கள்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 12:57:08 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் இலக்கணம்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33311</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>உவம உருபு இடைச்சொற்கள் &#8211; உவம உருபு இடைச்சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம். இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" title="உவம உருபு இடைச்சொற்கள்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">உவம உருபு இடைச்சொற்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>உவம உருபு இடைச்சொற்கள்</strong> &#8211; உவம உருபு இடைச்சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம்.</p>
<p>இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ, மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் வொற்கள்.</p>
<p>அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக் குறிப்புக்கள் அவைகளிலே, அ என்னு முதனிலையே இடைச்சொல் அன்ன என்பதில் னகரமெய் சாரியை: அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமும் சாரியை.</p>
<p><strong>உவம உருபு இடைச்சொற்கள் &#8211; தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்</strong></p>
<p>பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.</p>
<p>ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.</p>
<p>தேற்றம் உண்டே கடவுள், இங்கே உண்டென்பதற்கு<br />
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்<br />
தருதலாற் றேற்றம்.</p>
<p>வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்<br />
என்னும் பொருளைத் தருமிடத்து வினா<br />
எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்<br />
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.<br />
பிரிநிலை அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி<br />
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.</p>
<p>எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்<br />
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.</p>
<p>இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.</p>
<p>ஈற்றசை ’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே<br />
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு<br />
நிற்றலால் ஈற்றசை.</p>
<p>ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.</p>
<p>சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வு சிறப்ப ஒரு பொருளினது இழிவைச் சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.</p>
<p><strong>(உதாரணம்)</strong></p>
<p>ஒழியிசை படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று<br />
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்<br />
தருவதால் ஒழியிசை</p>
<p>வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என<br />
வினாப் பொருளைத் தருதலால் வினா.<br />
உயர்வு சிறப்பு ஒஓ பெரியன்.</p>
<p>இங்கே ஒருவனது பெருமையாகிய<br />
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு<br />
இழிவு சிறப்பு ஒஓ கொடியன். இங்கே ஒருவனது<br />
கொடுமையாகிய இழிவின் மிகுதியை<br />
விளக்குதலால் இழிவு சிறப்பு</p>
<p>எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்<br />
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை<br />
தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று<br />
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை.</p>
<p>கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு.</p>
<p>கழிவிரக்கம் &#8211; கழிந்ததற்கிரங்குதல்<br />
பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை</p>
<p>அசை நிலை காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.</p>
<h4>உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.</h4>
<p>எச்சம், இறந்தது தழீஇய எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.</p>
<p><strong>உதாரணம்</strong>.</p>
<p>எதிர்மறை களவு செய்யினும் பொய்கூறலை யொழிக.<br />
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத்<br />
தருதலால் எதிர்மறை</p>
<p>உணர்வு சிறப்பு குறவருமருளுங்குன்றம். இங்கே குன்றியுனுயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுச் சிறப்பு.</p>
<p>இழிவு சிறப்பு புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் ஐயம்.</p>
<p>ஐயம் அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணியாமையை உணர்தலால் ஐயம்.<br />
எச்சம் சாத்தனும் வந்தான். இங்கே கொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத்தந்தால் இறந்தது தழீஇயவெச்சம். இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத்தந்தால் எதிரது தழீஇயவெச்சம்.</p>
<p>முற்று எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத் தருதலால் முற்று.<br />
எண் இராவும் பகலும். இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண்;.</p>
<p>தெரிநிலை ஆணுமன்று, பெண்ணுமன்று. இங்கே இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் றெரிநிலை<br />
ஆக்கம் பாலுமாயிற்று. இங்கெ அதுவே மருதுமாயிற்று என்னும் பொருளைத்தருவதால் ஆக்கம்.</p>
<h4>எதிர்மறை வினை அடுத்து வருமிடத்து முற்றும்மை எச்ச உம்மை ஆகும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong><br />
எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார்.</p>
<p>இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படதலால், எச்ச உம்மை ஆயிற்று.</p>
<h4>எச்ச உம்மையால் தழுவப்படம் பொருட்சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச உம்மையோடு கூடிய சொல்லிற்கு முதலிலே சொல்லப்படும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong><br />
சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான்.<br />
இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்</p>
<h4>என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழுபொருளிலும் வரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong><br />
வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத.<br />
பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே பெயரோடியைந்நது.<br />
எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே என்ணோ டியைந்தது.</p>
<p>பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது.<br />
குறிப்பு பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது.<br />
இசை பொம்மென வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது.<br />
உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான். இங்கே உவமையோ டியைந்தது.</p>
<p>என்று என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக்கொள்க</p>
<h4>மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப் பொருளில் வரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong><br />
நிலலென்ற நீரென்றா தீயென்றா<br />
நிலலென்னா நீரெனாத் தீயெனா<br />
நிலனொடு நீரொடு தீயொடு</p>
<h4>பெயர்ச்சொல் என்னும், எண்ணிடைச் சொற்கள் ஏழினுள்ளும் ஏ, என்றா, எனா, என்னு மூன்றும், தொகைச் சொற் பெற்று வரும். உம், என்று, என, ஒடு, என்னு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்.</h4>
<p>பெயர்ச் சொவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப வருவது.</p>
<p><strong>(உதாரணம்)</strong></p>
<p>செவ்வெண் சாத்தன் கொற்ற னிருவரும் வந்தார்.<br />
ஏகாரவெண் சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார்.<br />
என்றாவெண் சாத்தனென்றா கொற்றனென்றா விருவரும் வந்தார்.<br />
எனாவெண் சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும் வந்தார்.<br />
உம்மையென் சாத்தனுங் கொற்றனு மிருவரும் வந்தார்.<br />
என்றெண் சாத்தனென்று கொற்றனெனன் றிருவருளர்.<br />
எனவென் சாத்தனெனக் கொற்றனெனன விருவருளர்.<br />
ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர்.<br />
உம்மையெண் சாத்தனுங் கொற்றனும்; வந்தார்.<br />
என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்றளவறு காயமென் றாகிய வுலகம்.<br />
எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு காயமென் வாகிய உலகம்.<br />
ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு காயமொடாகிய வுலகம்.</p>
<h4>என்று, என, ஒடு என்னும் இம் மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருட்டோறு நிற்றலேயன்றி ஒரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப் பொருடோறும் பொருந்தும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>என்றெண் வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். இங்கே என்றென்பது வினையென்று பகை யென்று என நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.</p>
<p>எனவெண் பகைபாவ மச்சம் பழியென நான்கு &#8211; மிகவாவா மில்லிறப்பான் கண். இங்கே என என்பது, பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது..</p>
<p>ஒடுவெண் பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து &#8211; மிருடீர வெண்ணிச் செயல். இங்கே ஒடுவென்பது பொருளோடு கருவி யோடு காலத்தோடு வினையோடு இடனொடு என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.</p>
<h4>வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து ஏற்பன வாகிய எண்ணிடைச் சொல் விரியப் பெறும், தொகாப்பெற்றும், ஒரிடத்து நின்று பிரிந்து கூடப் பெற்றும் வரும். அவை தொகை பெறுதலில்லை.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>உம்மையெண் &#8211; கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான்<br />
என்றென் &#8211; உண்ணவென் றுடுக்கவென்று வந்தான்<br />
எனவெண் &#8211; உண்ணவென வுடுக்கவென வந்தான்<br />
செவ்வென் &#8211; கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான்<br />
பிரிந்து கூடு மென் &#8211; உண்ண வுடுக்கவென்று வநதான்</p>
<h4>அ, இ, உ, என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப்பொருளையும் தரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong><br />
அக்கொற்றான், இக் கொற்றான், உக்கொற்றான்<br />
எக்கொற்றன், கொற்றனா, யாவன்</p>
<h4>கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையும் தரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>ஐயம் இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இற்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால் ஐயம்.</p>
<p>அசைநிலை கற்றதனா லாய பயனென்கொல். இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை</p>
<h4>மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.</h4>
<p>இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாகிய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய பிறிது.</p>
<p><strong>(உ-ம்)</strong></p>
<p>வினைமுற்று மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது. இஙங்கே கருதிய வினையாவது நல்வினையை வினைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலை வினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே விரையாதறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது.</p>
<p>பிறிது ஊளிற் பெருவலியாவுள மற்றொன்று, இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது.<br />
அதற்கினமாகிய பிநிதாவது ஊழல்லதொன்றென்பது மற்றென்றது இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால் பிறிதென்னும் பொருளில் வந்தது.</p>
<p>அசை நிலை மற்றென்னையாள்க. இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தபப்பட்டு நிற்றலால் அசை நிலை</p>
<h4>மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசை நிலையுமாகிய ஐந்து பொருளையும் தலுஷரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>ஒழியிசை கூரியதோர் வாண்மன் இங்கே இரும்பை அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை</p>
<p>ஆக்கம் பண்டு காடுமன் இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கர் பொருளைத் தருதலால் ஆக்கம்</p>
<p>கழிவு சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு.</p>
<p>மிகுதி எந்தை யெமக்கருளுமன இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருலைத் தருதலால் மிகுதி</p>
<p>அசைநிலை அதுமற் கொண்கன்றேரே. இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.</p>
<h4>கொன் என்னும் இடைச்சொல், அச்சமும், பயனிலையும், காலமும், பெருமையும் ஆகிய நான்கு பொருளையும் தரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>அச்சம் கொன்வாளி இங்கே அஞ்சும் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம்.<br />
பயனின்மை கொன்னே கழிந்தன் றிளமை இங்கே பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை.</p>
<p>காலம் கொன்வரல் வடை இங்கே காதலர் நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம்<br />
பெருமை கொன்னுர் துஞ்சினும் இங்கே பெரிய வூருறங்கினும் என்னும் பொருனைத் தருதலாற் பெருமை</p>
<h4>அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத்தரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>ஆங்கு வருமே &#8211; சேயிழை யந்திற் கொழுநற் காணிய இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால் ஆங்கு.</p>
<p>அசை நிலை அந்திற் கழலினன் கச்சினன் இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.</p>
<h4>மன்ற என்னும் இடைச்சொல், தெளிவுப் பொருளைத் தரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>தெளிவு இரத.தலி னின்னாது மன்ற இங்கே தலையாக என்னும் பொருளைத் தருதலாற் றெளிவு.</p>
<h4>அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன் கௌ; என்னும் பொருளிலும், எரையசைப் பொருளிலும் வரும்.</h4>
<p>உரையசை &#8211; கட்டுரைக்கண் வரும் அசை நிலை<br />
ஒன்று சொல்வேன் கேள் &#8211; அம்ம வாழி ’’தோழி“<br />
உரையசை &#8211; ’’ அது மற்றம்ம’’</p>
<h4>ஆங்க என்னும் இடைச் சொல், உரையசைப் பொருளில் வரும்.</h4>
<p>உதாரணம்.<br />
உரையசை &#8211; ’’ஆங்கத்திறனல்ல யாங்கழற’’</p>
<h4>ஆர் என்னும் இடைச் சொல், உயர்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.</h4>
<p>உயர்த்தற்பொருட்டு வரும் போது ஒரமைச் சொல்லீற்றில் வரும். அசை நிலையாகும் போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும் வரும்.</p>
<p><strong>(உதாரணம்)</strong></p>
<p>உயர்தற் பொருள் தொல்காப்பபியனார் வந்தார். தந்நையார் வந்தார்.<br />
அசை நிலை பெயரினாகிய தொகையுமா ருளவே. இங்கே ஆர் அசை நிலையாக உம்மை முன் வந்தது. எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. இங்கே ஆர் அசைநிலையாக உம்ம{ற்று வினைமுன் வந்தது.</p>
<h4>தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>இடப்பன்மை &#8211; சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம்<br />
தொழிற்பயில்வு &#8211; படிக்குந் தொறு மறிவு வளறும்</p>
<p>தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.</p>
<h4>இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.</h4>
<p><strong>உதாரணம்</strong>.</p>
<p>காலவெல்லை &#8211; இனி வருவேன்<br />
இடவெல்லை &#8211; இனியெம்மூர்</p>
<h4>முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும்.</h4>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>காலம் &#8211; முன் பிறந்தான். பின் பிறந்தான்<br />
இடம் &#8211; முன்னிருந்தான், பின்னிருந்தான்</p>
<p>முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம்.<br />
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.<br />
விகாரப்பட்டும் வழங்கும்.</p>
<h4>வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.</h4>
<p>உதாரணம்.<br />
வளா விருந்தான், சும்மா வந்தான்</p>
<h4>ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.</h4>
<p>விகப்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.</p>
<p><strong>உதாரணம்.</strong></p>
<p>ஆவது &#8211; தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா<br />
ஆதல் &#8211; சோறாதல் கூழாதல் கொடு<br />
ஆயினும் &#8211; வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன்<br />
தான் &#8211; பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா</p>
<p>அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.</p>
<p>சீ, சீசீ, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.</p>
<p>கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.</p>
<p>ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன, அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.</p>
<p>குறிப்பின் வரும் இடைச்சொற்கள்</p>
<h4>அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.</h4>
<p>துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச்சொற்களாம்.</p>
<p>பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற் போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.</p>
<h3>இசைநிறை</h3>
<p>ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச் சொற்களாம்.</p>
<p><strong>அசைநிலை</strong></p>
<p>மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல்லாம்.</p>
<p>மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச் சொற்களாம்.</p>
<p>யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.</p>
<p><strong>Read More</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/" target="_blank" rel="noopener">தன்மை வினைமுற்று</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/" target="_blank" rel="noopener">முற்று வினை என்றால் என்ன</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">இடவேற்றுமை பெயர்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81/" target="_blank" rel="noopener">வேற்றுமை உருபு</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/">உவம உருபு இடைச்சொற்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
