<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கல்யாணசுந்தரம் Archives</title>
	<atom:link href="https://www.tamizhdb.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://www.tamizhdb.com/category/கல்யாணசுந்தரம்/</link>
	<description>தமிழ் தகவல்கள், தொழிற்நுட்பம், இலக்கணம், இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம்</description>
	<lastBuildDate>Fri, 06 Sep 2024 01:50:01 +0000</lastBuildDate>
	<language>ta-IN</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://www.tamizhdb.com/wp-content/uploads/2017/11/cropped-tamil_logo_580x412-32x32.png</url>
	<title>கல்யாணசுந்தரம் Archives</title>
	<link>https://www.tamizhdb.com/category/கல்யாணசுந்தரம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிறுவர் சீர்திருத்தம் &#8211; கல்யாணசுந்தரம்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
					<comments>https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Dec 2017 12:31:01 +0000</pubDate>
				<category><![CDATA[கல்யாணசுந்தரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1192</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>சிறுவர் சீர்திருத்தம் வீணர்களின் சொல் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா (சின்னப்) நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா-நீ எண்ணிப் பாரடா சின்னப் ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்) ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ தரும் மகிழ்ச்சி <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/" title="சிறுவர் சீர்திருத்தம் &#8211; கல்யாணசுந்தரம்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/">சிறுவர் சீர்திருத்தம் &#8211; கல்யாணசுந்தரம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>சிறுவர் சீர்திருத்தம்</p>
<h3>வீணர்களின் சொல்</h3>
<p>சின்னப்பயலே சின்னப்பயலே<br />
சேதி கேளடா (சின்னப்)<br />
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா<br />
எண்ணிப் பாரடா-நீ<br />
எண்ணிப் பாரடா சின்னப்</p>
<p>ஆளும் வளரணும் அறிவும் வளரணும்<br />
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)<br />
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ<br />
தரும் மகிழ்ச்சி (ஆசை)</p>
<p>நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்<br />
காலம் தரும் பயிற்சி-உன்<br />
நரம்போடுதான் பின்னி வளரணும்<br />
தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப்</p>
<p>மனிதனாக வாழ்ந்திட வேணும்<br />
மனதில் வையடா-தம்பி<br />
மனதில் வையடா (மனிதனாக)<br />
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ<br />
வலது கையடா-நீ<br />
வலது கையடா (வளர்ந்து)</p>
<p>தனியுடமைக் கொடுமைகள் தீரத்<br />
தொண்டு செய்யடா-நீ<br />
தொண்டு செய்யடா! (தனி)<br />
தானா எல்லாம் மாறும் என்பது<br />
பழைய பொய்யடா-எல்லாம்<br />
பழைய பொய்யடா!</p>
<p>வேப்பமர உச்சியில் நின்னு<br />
பேயொன்னு ஆடுதுன்னு<br />
விளையாடப் போதும்போது<br />
சொல்லி வைப்பாங்க-உன்<br />
வீரத்தைக் கொழுந்திலேயே<br />
கிள்ளி வைப்பாங்க<br />
வேலையற்ற வீணர்களின்<br />
மூளையற்ற வார்த்தைகளை<br />
வேடிக்கையாகக் கூட<br />
நம்பி விடாதே-நீ<br />
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து<br />
வெம்பி விடாதே-நீ<br />
வெம்பி விடாதே!-சின்னப்</p>
<h3>நாளை உலகம் நல்லவர் கையில்!</h3>
<p>சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்<br />
சிந்திடும் மலரே ஆராரோ!<br />
வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே!<br />
ஆரிரரோ&#8230;.அன்பே ஆராரோ!</p>
<p>ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ?<br />
எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ?<br />
நாளை உலகம் நல்லோரின் கையில்,<br />
நாமும் அதில் உய்வோம் உண்மையில்,<br />
மாடி மனை வேண்டாம் கோடி செல்வம் வேண்டாம்<br />
வளரும் பிறையே நீ போதும் (வண்ண)</p>
<p>பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ?<br />
பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால்தான் தூக்கமோ?<br />
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்<br />
தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்<br />
குப்பைதனில் வாழும் குண்டுமணிச் சரமே!<br />
குங்குமச் சிமிழே ஆராரோ&#8230;. (வண்ண)</p>
<h3>காலம் மாறும்</h3>
<p>அழாதே பாப்பா அழாதே!<br />
அழாதே பாப்பா அழாதே!<br />
அம்மா இருந்தால் பால் தருவாங்க!<br />
அனாதை அழுதா யார் வருவாங்க? (அழாதே)</p>
<p>என் தாயுமில்லை உன் தாயுமில்லை<br />
என் செய்வேன் கண்ணே ஆராரோ!-உன்னை<br />
அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை<br />
அன்பை என் கண்ணே ஆராரோ!</p>
<p>என்ன நினைந்தே நீ ஏங்கி அழுதாயோ<br />
இன்பத்தேனே ஆராரோ!<br />
பேசாத நீதி நமக்காகப் பேசும்<br />
கலங்காதே செல்லப் பாப்பா! (அழாதே)</p>
<p>மாறாத காலம் உனக்காக மாறும்<br />
வருந்தாதே செல்லப் பாப்பா!<br />
தாலாட்டும் மாதா தலைசாய்த்த பின்னே<br />
துணையேது சின்னப் பாப்பா<br />
தாங்காத துன்பம் தனில்வாடும் தந்தை<br />
மனம்நோகும் முன்னே தூங்கம்மா-அவர்<br />
பெருந்தூக்கம் தூங்கும் வேதாவைப் பார்த்தே<br />
வருவார் என்கண்ணே தூங்கம்மா!</p>
<h3>அடக்கம் வீரமும்!</h3>
<p>பெண்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா</p>
<p>சிறுவர்கள்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா<br />
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா</p>
<p>பெண்: ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்<br />
பேரென்ன?&#8230;சொல்லு!</p>
<p>சிறுவர்கள்: வள்ளுவன்!</p>
<p>பெண்: ஈனா ஈயன்னா எதையும் வெல்லும்<br />
பொருளென்ன?&#8230;</p>
<h3>சிறுவர்கள்: அன்பு!</h3>
<p>பெண்: ஊனா ஊவன்னா உலக உத்தமன்<br />
பெயரென்ன?&#8230;சொல்லு!</p>
<p>சிறுவர்கள்: காந்தித் தாத்தா!</p>
<p>பெண்: ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன்<br />
இறைவனாகும்</p>
<p>சிறுவர்கள்: ஆனா ஆவன்னா</p>
<p>பெண்: அன்பாய்ப் பழகும்<br />
கொம்பை அசைக்கும்<br />
அம்மான்னு கத்தும் அது என்ன?&#8230;</p>
<p>சிறுவர்கள்: மாடு!</p>
<p>பெண்: சொன்னதைச் சொல்லும்<br />
கனிகளைத் தின்னும்<br />
சோலையிலே வாழும் அது என்ன?&#8230;</p>
<p>சிறுவர்கள்: கிளி!&#8230;</p>
<p>பெண்: கருப்பாய் இருக்கும்<br />
குரல்தான் இனிக்கும்<br />
பறக்கும் பறவை அது என்ன?&#8230;</p>
<p>சிறுவன்: காக்கா!&#8230;</p>
<p>சிறுமி: இல்லை,குயில்!&#8230;</p>
<p>சிறுவர்கள்: ஆனா ஆவன்னா&#8230;</p>
<p>பெண்: அன்பும் அறமும்<br />
அடக்கமும் பொறுமையும்<br />
பண்பும் கொண்டவர் பெண்கள்! (அன்பும்)</p>
<p>பெண்: ஆளும் திறமையும்<br />
வீரமும் கடமையும்<br />
பெருமையும் கொண்டவர் ஆண்கள்!<br />
(ஆனா ஆவன்னா)</p>
<h3>நாட்டைக் கெடுத்தவர்</h3>
<p>தூங்காதே தம்பி<br />
தூங்காதே-நீயும்<br />
சோம்பேறி என்ற பெயர்<br />
வாங்காதே! (தூங்)</p>
<p>நீ-தாங்கிய உடையும்<br />
ஆயுதமும்-பல<br />
சரித்திரக் கதை சொல்லும்<br />
சிறைக்கதவும்,<br />
சக்தியிருந்தால்<br />
உன்னைக்கண்டு சிரிக்கும்<br />
சத்திரந்தான் உனக்கு<br />
இடம் கொடுக்கும் (தூங்)</p>
<p>நல்ல பொழுதையெல்லாம்<br />
தூங்கிக் கெடுத்தவர்கள்<br />
நாட்டைக் கெடுத்ததுடன்<br />
தானுங்கெட்டார்; சிலர்<br />
அல்லும் பகலும்<br />
தெருக்கல்லா யிருந்துவிட்டு<br />
அதிர்ஷடமில்லையென்று<br />
அலட்டிக் கொண்டார்<br />
விழித்துக் கொண்டோரெல்லாம்<br />
பிழைத்துக்கொண்டார்-உன்போல்<br />
குறட்டை விட்டோரெல்லாம்<br />
கோட்டைவிட்டார்! (தூங்)</p>
<p>போர்ப் படைதனில் தூங்கியவன்<br />
வெற்றியிழந்தான்-உயர்<br />
பள்ளியில் தூங்கியவன்<br />
கல்வியழந்தான்!<br />
கடைதனில் தூங்கியவன்<br />
முதல் இழந்தான்-கொண்ட<br />
கடமையில் தூங்கியவன்<br />
புகழ் இழந்தான்-இன்னும்<br />
பொறுப்புள்ள மனிதரின்<br />
தூக்கத்தினால்-பல<br />
பொன்னான வேலையெல்லாம்<br />
தூங்குதப்பா! (தூங்)</p>
<h3>கொஞ்சும் குரல்!</h3>
<p>குழந்தை வளர்வது அன்பிலே-நல்ல<br />
குணங்கள் அமைவது பண்பிலே(குழந்தை)</p>
<p>ஆடிகடந்திடும் ஆசையிலே-அது<br />
ஓடித் தவழ்வது மண்ணிலே!<br />
ஆகாயநிலவின் அசைந்தாடும் மலரின்<br />
அழகையும் காண்பது கண்ணிலே-பெரும்<br />
ஆனந்தம் அடைவது பண்ணிலே! (குழந்தை)</p>
<p>கொஞ்சும் குரலும்,பிஞ்சு விரலும்<br />
குளறிப் பேசும் நிலையும் மாறி<br />
அஞ்சும் மனமும் நாணமும் வந்து<br />
ஆடையணிந்திடும் அறிவும் வந்து<br />
நாளும் நகர்ந்ததுமே ஓடவே-கல்வி<br />
ஏடும் நகர்ந்திடும் கூடவே! (குழந்தை)<br />
காலத் தாமரை போலத் தோன்றும்<br />
நிறமாகியே<br />
வானத் தாரகை நாணத் தோன்றும்<br />
முகமாகியே<br />
வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும்<br />
வடிவாகியே<br />
வண்ணத் தங்கம் மங்கத் திகழும்<br />
வயதாகியே<br />
அறிவாகியே ஒளியாகியே தௌிவாகியே! (குழந்தை)</p>
<h3>இதய ஒளி!</h3>
<p>அன்புத் திருமணியே<br />
அகமலரே!அருள் மணமே!<br />
அறமே போற்றி!</p>
<p>புண்பட்டு உழலுகின்ற<br />
புவிதிருத்த அவதரித்த<br />
பொருளே போற்றி!</p>
<p>கண்பெற்றும் பார்வை பெறா<br />
வம்பர்க்கும் வாழ்வளித்த<br />
வாழ்வே போற்றி!</p>
<p>இன்புற்றிட மாந்தர்<br />
இதயம் ஒளியாக எழுந்த<br />
புத்தமுதே போற்றி!</p>
<h3>உயர்ந்த நினைவு</h3>
<p>அமுதமே என் அருமைக் கனியே<br />
ஆசை பொங்கும் கண்ணே<br />
அன்பு தவழும் பொன்னே<br />
தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)</p>
<p>கொடியிலாடும் மலரும் நாணும்<br />
கலையின் வெள்ளமே&#8230;ஓ&#8230;.<br />
மடியிலாடி மழலைபேசி மணக்கும்<br />
மதுரத் தேனே<br />
மனதைக் கவரும் பொன்னே<br />
தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)</p>
<p>அழகு வானின் நிலவை ஓடித்<br />
தழுவ வேண்டுமோ&#8230;ஓ&#8230;<br />
உலகம் தூங்கும் இரவில் நீ<br />
உறங்கிடாததும் ஏனோ?<br />
உயரும் நினைவு தானோ?<br />
தூங்கடா செல்வமே தூங்கடா (அமுதமே)</p>
<h3>பெண்ணரசு!</h3>
<p>செங்கோல் நிலைக்கவே<br />
செல்வம் செழிக்கவே<br />
சிந்தையெல்லாம் மகிழவே,<br />
மங்கையர் குலக்கொடி<br />
வந்தே பிறந்தனள்<br />
வளர்நீதி தழைத் தோங்கவே!</p>
<p>மகுடம் காக்கவந்த<br />
மகள் வாழி-குல<br />
மகள் வாழி-ஒளி<br />
மங்காத வெண்குடைப்<br />
புகழ் வாழி!-அன்பு<br />
நிழல் வாழி! (மகுடம்)</p>
<p>அகிலம் போற்றும்<br />
தமிழறம் வாழி!<br />
அள்ளி வழங்கும்<br />
மணிக்கரம் வாழி!<br />
அன்பு நிறைந்திடும்<br />
மனம் வாழி!-கதிர்<br />
ஆடி விளைந்திடும்<br />
நிலம் வாழி!-நீர்<br />
வளம் வாழி!</p>
<p>ஆளப் பிறந்தது பெண்ணரசு-அது<br />
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்!<br />
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்-நன்றி<br />
கலந்திட கும்மி பாடிடுவோம்!</p>
<p>துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்-அதைக்<br />
சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்!<br />
செல்லக் குமாரி தெரிசனம் காணவே<br />
தேடித் திரியுது கண்களெல்லாம்!</p>
<p>கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த<br />
சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்<br />
சிந்துகின்றாளிவள் விழியாலே!<br />
எத்தனை நாள் பொறுத்து பத்தினியீன்றெடுத்த<br />
முத்திரைத் தங்கம் இனி முறைபோலே-நலம்<br />
பெற்றிடவளர்வாள் பிறைபோலே!</p>
<h3>உன்னை நம்பு!</h3>
<p>இந்த மாநிலத்தைப் பாராய் மகனே<br />
உந்தன்-வாழ்க்கைதனை உணர்வாய் மகனே-இளம்<br />
மனதில் வலிமைதனை ஏற்றடா-முக<br />
வாட்டமதை உழைப்பால் மாற்றடா! (இந்த மாநில)</p>
<p>துயர்தனைக் கண்டே பயந்து விடாதே<br />
சோர்வை வென்றாலே துன்பமில்லை<br />
உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்<br />
உதவி செய்வார் யாருமில்லை (இந்த மாநில)<br />
பேதத்தைப் பேசி நேரத்தை விழுங்கும்</p>
<p>பித்தருமுண்டு-அவர்<br />
பக்தருமுண்டு<br />
லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும்<br />
நண்பருமுண்டு-வெறும்<br />
வம்பருமுண்டு (இந்த மாநில)</p>
<h3>நல்லவனாக</h3>
<p>உன்னைக்கண்டு நானாட<br />
என்னைக்கண்டு நீயாட<br />
உல்லாசம் பொங்கும்<br />
இன்பத் தீபாவளி<br />
ஊரெங்கும் மகிழ்ந்து<br />
ஒன்றாக கலந்து<br />
உறவாடும் நேரமடா-ஆ&#8230;<br />
உறவாடும் நேரமடா</p>
<p>கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா<br />
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா<br />
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்<br />
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?<br />
வல்லமை சேர, நல்லவனாக,<br />
வளர்ந்தால் போதுமடா &#8211; ஆ&#8230;<br />
வளர்ந்தாலே போதுமடா</p>
<p>சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பு<br />
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!<br />
முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்த சிரிப்பு?<br />
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு!<br />
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்<br />
வேறென்ன வேணுமடா-ஆ&#8230;<br />
வேறென்ன வேணுமடா (உன்னைக்)</p>
<h3>சிறுவரிடம் திறமை</h3>
<p>திருடாதே! பாப்பா திருடாதே!<br />
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே<br />
திறமை இருக்கு மறந்துவிடாதே</p>
<p>சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு<br />
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ<br />
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது<br />
திரும்பவும் வராமே பார்த்துக்கோ (திரு)</p>
<p>திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்<br />
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்<br />
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்<br />
தடுத்துக் கொண்டே இருக்குது<br />
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்<br />
திருட்டை ஒழிக்க முடியாது (திரு)</p>
<p>கொடுக்கிற காலம் நெருங்குவதால்-இனி<br />
எடுக்கிற அவசியம் இருக்காது<br />
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்<br />
பதுக்கிற வேலையும் இருக்காது<br />
ஒதுக்கிற வேலையும் இருக்காது<br />
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா<br />
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்<br />
கீழும் மேலும் புரளாது! (திரு)</p>
<h3>துன்பம் வெல்லும் கல்வி!</h3>
<p>ஏட்டில் படித்ததோடு<br />
இருந்து விடாதே!-நீ<br />
ஏன்படித்தோம் என்பதையும்<br />
மறந்துவிடாதே (ஏட்டில்)</p>
<p>நாட்டின் நெறிதவறி<br />
நடந்துவிடாதே-நம் (நாட்டின்)<br />
நல்லவர்கள் தூற்றும்படி<br />
வளர்ந்துவிடாதே! நீ (ஏட்டில்)</p>
<p>மூத்தோர்சொல் வார்த்தைகளை<br />
மீறக்கூடாது-பண்பு<br />
முறைகளிலும் மொழிதனிலும்<br />
மாறக்கூடாது<br />
மாற்றார் கைப்பொருளை நம்பி<br />
வாழக்கூடாது-தன்<br />
மானமில்லாக் கோழையுடன்<br />
சேரக்கூடாது! நீ<br />
துன்பத்தை வெல்லும் கல்வி<br />
கற்றிடவேணும்<br />
சோம்பலைக் கொல்லும் திறன்<br />
பெற்றிடவேணும்<br />
வம்புசெய்யும் குணமிருந்தால்<br />
விட்டிடவேணும்-அறிவு<br />
வளர்ச்சியிலே வான்முகட்டைத்<br />
தொட்டிடவேணும்! நீ (ஏட்டில்)</p>
<p>வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்<br />
பெருமைவர<br />
மேதைகள் சொன்னதுபோல்<br />
விளங்கிடவேணும்<br />
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த<br />
மண்ணின் புகழும்<br />
வற்றாமல் உன்னோடு<br />
வளர்ந்திடவேணும்! நீ (ஏட்டில்)</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/">சிறுவர் சீர்திருத்தம் &#8211; கல்யாணசுந்தரம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தெய்வம் தேடுதல் &#8211; கல்யாணசுந்தரம்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Dec 2017 16:49:13 +0000</pubDate>
				<category><![CDATA[கல்யாணசுந்தரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1162</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>சேவை ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்) பெண் : ஹே மாதா! என் தாயே! உன் பாதம் நம்பினேன் அம்மா! சத்தியம் லட்சியமாய்ச் சேவை செய்யவே <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/" title="தெய்வம் தேடுதல் &#8211; கல்யாணசுந்தரம்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/">தெய்வம் தேடுதல் &#8211; கல்யாணசுந்தரம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<h3 style="text-align: center;">சேவை</h3>
<p>ஆண் : அறம் காத்த தேவியே!<br />
குலம் காத்த தேவியே!<br />
அறிவின் உருவமான ஜோதியே<br />
கண் பார்த்தருள்வாயே!<br />
அன்னையே!அன்னையே! (அறம்)</p>
<p>பெண் : ஹே மாதா! என் தாயே!<br />
உன் பாதம் நம்பினேன் அம்மா!<br />
சத்தியம் லட்சியமாய்ச்<br />
சேவை செய்யவே<br />
பராசக்தியே நீ வரம் தா!</p>
<p>ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம்<br />
ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்<br />
நம் மனதில் உறுதியாகவே<br />
மலிந்த கொடுமை நீங்கவே-இம்<br />
மனித வாழ்வில் உயர்வு காணவே<br />
நீ வாழ்த்திடுவாயே தேவியே! தேவியே!</p>
<p>பெண் : ஹே!பவானி லோகமாதா!<br />
ஏழைகளின் வாழ்வில் சுகம்தா<br />
சத்தியமே லட்சியமாய்ச்<br />
சேவை செய்யவே<br />
பராசக்தியே நீ வரம் தா!</p>
<h3 style="text-align: center;">காதல் மாத்திரை</h3>
<p>சிங்கார வேலவனே! சிவகாமி தன் மகனே!<br />
தினைப்புனத்தில் குறவர் வீட்டிலே<br />
திருட்டுத்தனமா புகுந்தவனே சண்முகனே &#8211; ரொம்ப<br />
சிறுசிலே வெண்ணெய் திருடித் தின்னவன் மருமகனே!</p>
<p>பச்சை மயில் வாகனனே<br />
பாடுங்குறி சொல்லிடவா?<br />
உச்சிமலை விட்டிறங்கி<br />
உலகத்தைக் கண்டிடவா?</p>
<p>காசியாத்திரை போகையிலே-ஒரு<br />
காதல் மாத்திரை தின்னதுண்டா?<br />
சோசியர் மகன் சொக்கலிங்கம் &#8211; ஒங்க<br />
சொப்பனத்தில் வந்து சொன்னதுண்டா?</p>
<p>ஆசை வீட்டிலே விளக்கு வைக்கற<br />
அழகுக் கன்னியைக் கண்டதுண்டா?<br />
பேச நினைச்சு ராவும் பகலா<br />
பித்த மயக்கம் கொண்டதுண்டா? &#8211; ஐயாவே அந்த<br />
உத்தமி உனக்குப் பத்தினியாவா மெய்யாவே<br />
ஒருத்தர் நிலைமை இப்படியிருக்க<br />
ஒங்க நிலைமையும் ஒண்ணுதானா?&#8230;ஒரு<br />
கருத்த கன்னியின் பெருத்த மேனியில்<br />
கண்ணைப் பதிச்சதும் உண்மைதானா?<br />
அருத்தம் புரிஞ்சு-அவளும் &#8211; வாழைக்<br />
குருத்துபோல வாடிப்போனா<br />
தரத்துக்கேத்த தங்கரதம் &#8211; அவ<br />
சம்மதிப்பா நீங்க தேடிப்போனா</p>
<p>சரிதானா? &#8211; ஒரு<br />
ஜாடைக்கு என்னைப்போல்<br />
தடிச்ச உடம்பு<br />
அதுதானா?</p>
<h3 style="text-align: center;">விடுதலை</h3>
<p>உள்ளும் புறமாகி<br />
ஒளியாகி-ஞான<br />
வௌியாகி நின்ற உமையே!</p>
<p>துள்ளும் கலைகளாகித்<br />
துளியாகிக் கடலாகித்<br />
தௌிவாகி நின்ற திருவே!</p>
<p>அல்லும் பகலுமாகி<br />
அறமாகித் தரமாகி<br />
வளமாகி வந்த வடிவே!<br />
அனுதினமும் உனது மலரடி<br />
இணையில் இணையுமெனை<br />
ஆண்டருள்வாய் அம்மையே&#8230;!</p>
<p>கையிலே சூலமும்<br />
கண்ணிலே கருணையும்<br />
கனிவாயில் அன்பு நகையும்</p>
<p>கொய்யாத மலர்முகமும்<br />
குலுங்கு நவமணி அழகுங்<br />
கொண்ட தாயே!</p>
<p>மை போன்ற இருட்டிலே<br />
வையகமும் மாந்தரும்<br />
மயங்கும் வேளை</p>
<p>மெய்யிலே அறிவெனும்<br />
விளக்கேற்றி வைத்து நீ<br />
விடுதலை வழங்குவாயே&#8230;!</p>
<h3 style="text-align: center;">கணவனுக்குச் சேவை</h3>
<p>ஓ&#8230;.மாதா!பவானி!<br />
மனம் நிறை சங்கரி!<br />
உனை நம்பிய பேதைக்கு<br />
அமங்கலமா அம்மா&#8230;தேவி&#8230;.</p>
<p>சகலமும் நீயெனத் துவங்கிய வாழ்வினில்<br />
சகுன பேதமா?..இதுதான் உனது வேதமா? மங்கல<br />
இசை இன்னும் ஓயவுமில்லை<br />
மணவறை ஆடை மாற்றவுமில்லை<br />
மஞ்சள் அரிசி மண்ணில் சிந்தவுமில்லை<br />
வந்த பேரின்பம் வைகைச் சுழல்தானோ?<br />
வஞ்சம் ஏனோ&#8230;ஓ-மாதா (சகலமும்)</p>
<p>கணவன் துணையே நிலையான செல்வம்!<br />
கணவன் உயிரே மனையாளின் தெய்வம்!<br />
கணவன் சேவையைப் பறிப்பதிலும் எனைப்<br />
பலிகொள்ளலாமே&#8230;மாதா..தேவி&#8230;மாதா!</p>
<h3 style="text-align: center;">உயிர்</h3>
<p>கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா<br />
கழுகுமலை பழனிமலை<br />
கால்நடையாய்ப் போக வேணும்<br />
எங்கந்தா, எம்முருகா-என்வேலா<br />
எங்குமரா-ஆ-ஆ<br />
சுப்பிரமணியா-ஆறுமுகா-நீ<br />
கண்திறந்து பார்த்திடய்யா<br />
எட்டுஜாண் குச்சிக்குள்ளே&#8230;கந்தையா<br />
எத்தனை நாளிருப்பேன்</p>
<p>எட்டுஜாண் குச்சிக்குள்ளே-கந்தையா<br />
எத்தனை நாளிருப்பேன்-ஒரு<br />
மச்சுவீடு கட்டித் தாருங்காணும்-உச்சி<br />
மலையின் மேலோனே-ஒரு (மச்சு வீடு)</p>
<p>சட்டியில் சேர்ந்ததெல்லாம்-கந்தா உன்<br />
சன்னதி சேர்த்திடுவேன் (சட்டியில்)</p>
<p>மொட்டை ஆண்டி ஒன்னை<br />
முழுசாவே நம்புறேன்<br />
மோட்சம் தந்திடப்பா-அட (மொட்டை)</p>
<p>தீராத வினைகளெல்லாம்<br />
தீர்த்து வைப்பார் கோவிந்தம்<br />
மாறாத மனசையெல்லாம்<br />
மாத்தி வைப்பார் கோவிந்தம்!<br />
பட்டை நாமம் கண்டால்<br />
பசி தீர்ப்பார் கோவிந்தம்-உன்<br />
கட்டை கடைந்தேறக்<br />
கைகொடுப்பார் கோவிந்தம்!</p>
<p>கோவிந்தம் கோவிந்தம்<br />
கொடுத்தா புண்ணியம் கோவிந்தம்!<br />
ரகுராமா ரகுராமா<br />
நடுத்தெருவிலே என்னை விடலாமா?</p>
<p>அடப்பாவிகளே பாவிகளே<br />
பார்த்துட்டு சும்மா போறீங்களே!<br />
கோவிந்தம் கோவிந்தம்<br />
கோவப்படாத கோவிந்தம்!</p>
<p>மானாகி,மயிலாகி,மானாகி,மயிலாகி<br />
நானாகி,நீயாகி,வடிவாகி வந்த வடிவே-ஏ-ஏ<br />
பெண்ணாகி,ஆணாகி,பேச்சாகி<br />
மூச்சாகி-அடேயப்பா<br />
பெண்ணாகி ,ஆணாகி,பேச்சாகி,மூச்சாகி<br />
கண்ணாலே கொல்லும் கண்ணே-கண்ணே கண்ணே<br />
கண்ணே கண்ணே கண்ணே<br />
உடம்பை நம்பாதே-கண்ணே<br />
உடம்பை நம்பாதே (உடம்பை)</p>
<p>உயிர் பிரிந்த பின்னே-இது<br />
ஒன்றுக்கும் உதவாத மண்ணே<br />
உடம்பை நம்பாதே-கண்ணே<br />
உடம்பை நம்பாதே</p>
<h3 style="text-align: center;">எங்கும் இன்பம்</h3>
<p>கங்கை அணிந்தவா!<br />
கண்டோர் தொழும் விலாசா!<br />
சதங்கை ஆடும் பாதவினோதா<br />
லிங்கேஸ்வரா-நின்தாள் துணை நீதா<br />
தில்லையம்பல நடராஜா!<br />
செழுமைநாதனே பரமேசா!<br />
அல்லல் தீர்த்தாண்டவா-வாவா<br />
அமிழ்தானவா&#8230;.(தில்லை)</p>
<p>எங்கும் இன்பம் விளங்கவே<br />
அருள் உமாபதி<br />
எளிமை அகல வரந்தா-வாவா<br />
வளம்-பொங்கவா(தில்லை)</p>
<p>பலவித நாடும் கலை ஏடும்<br />
பணிவுடன் உனையே துதிபாடும்<br />
கலையலங்கார பாண்டிய ராணி நேசா<br />
மலையின் வாசா<br />
மங்கா மதியானவா&#8230;(தில்லை)</p>
<h3 style="text-align: center;">கடவுள் எங்கே</h3>
<p>பார்த்தாயா மானிடனின் லீலையை-தேவா<br />
பார்த்தாயா மானிடனின் லீலையை-தேவா<br />
நிலையான உலகத்தையும்<br />
நேரான பழக்கத்தையும்<br />
தலைகீழாய்ப் புரட்டிவிடும்<br />
தாறுமாறு வேலையை (பார்த்தாயா)<br />
பக்த ஜனங்கள் கவனமெல்லாம்<br />
தினமும் கிடைக்கும் சுண்டலிலே&#8230;ஹா&#8230;ஹா (பக்த)</p>
<p>பசியும் சுண்டல் ருசியும் போனால்<br />
பக்தியில்லை பஜனையில்லை<br />
சுத்தமான போலிகளின்<br />
சோம்பேறி வேஷத்திலே! (சுத்த)</p>
<p>தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில்<br />
நடந்து வரும் மோசங்களை<br />
ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்<br />
ஆண்டவனின் சேவையா?<br />
ஆலயத்தைத் தரிசிக்க<br />
அலங்காரம் தேவையா?<br />
ஆளை ஆளு இடிக்கறதும்<br />
அடிதடியும் ஏனையா?</p>
<p>அன்பர்கண்ணு அங்கே மொறைக்குது<br />
கும்பிடு மட்டும் இங்கே நடக்குது (பார்)<br />
விண்ணும் மண்ணும் நீயானாய்<br />
வெயிலும் மழையும் நீயானாய்<br />
விளங்கும் அகில உலகமிது<br />
நீயில்லாத இடம் ஏது? ஹா&#8230;ஹா&#8230;ஹா&#8230;(விண்)</p>
<p>காசு தந்தால்தான் உன்னைக்<br />
காணும்வழி காட்டுவதாய்<br />
கதவு போட்டு பூட்டி வைத்துக்<br />
கட்டாயம் பண்ணுவதைப் (பார்)</p>
<h3 style="text-align: center;">ஆளை விழுங்கும் காலம்</h3>
<p>ஓங்கார ரூபிநீ<br />
ஆங்கார மோகினி<br />
உக்ரமா காளி நீயே<br />
ரீங்கார நாதம்<br />
நீஸ்ருங்கார மாதுநீ என்<br />
நெஞ்சூரில் வாழும் தாயே!</p>
<p>அம்பிகையே முத்து மாரியம்மா-உன்னை<br />
நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்)</p>
<p>ஆளை விழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா<br />
ஏழை எங்கள் நிலைமையைத்தான்<br />
எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா!(அம்)</p>
<p>சமயபுரத்து மகமாயி சகல உலக மாகாளி<br />
கன்னபுரத்து மகமாயி காஞ்சிபுரத்து காமாட்சி<br />
குறைகள் தீரக் கொடுமைகள் மாற<br />
கருணைக்கண்ணால் பாருமம்மா!<br />
கும்பிடுபோடும் ஏழை எங்கள்<br />
குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்)</p>
<p>இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு-அது<br />
எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?<br />
பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது<br />
பணம் அதைக் கண்டு ஒதுங்கி நிக்குது<br />
துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது<br />
சூழ்நிலையும் அதுக்கு ரொம்பத் துணையாகுது<br />
சூதுக்காரர் தொட்டிலிலே<br />
காதும் கண்ணும் கெட்டு-நல்ல<br />
நீதியது குழந்தை போல உறங்குதம்மா-அதை<br />
நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா-காசி விசலாட்சி</p>
<p>கன்யா குறிச்சி,வடிவழகி,பேச்சி,<br />
சடச்சி,பெரியாட்சி<br />
காட்சி கொடுக்கும் மீனாட்சி!<br />
தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு உண்மை<br />
ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா-இன்று<br />
பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்<br />
பசியும் பிணியும் பந்தயம் போடுது!<br />
கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது<br />
தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா<br />
தேவைக்கேற்ற வகையில் உன்னை<br />
போற்றுகிறோம் தூற்றுகிறோம்!<br />
தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா-உன்<br />
திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!</p>
<p>அக்கினிக்காளி பத்திரக்காளி அந்தரக்காளி<br />
உதிரக்காளி<br />
நடனக்காளி சுடலைக்காளீ!<br />
குறைகள் தீரக் கொடுமைகள் மாற<br />
கருணைக் கண்ணால் பாருமம்மா!<br />
கும்பிடுபோடும் ஏழை மக்கள்<br />
குடும்பம் வாழ வேணுமம்மா!<br />
நெடியசூலி பெரும்பிடாரீ (அம்பிகையே)</p>
<h3 style="text-align: center;">நீயே துணை!</h3>
<p>அம்மா துளசி உண்மையின் அரசி<br />
அனைத்தும் உனதருளம்மா (அம்மா)</p>
<p>அகிலமும் நீயே ஆதியும் நீயே<br />
ஆண்டருள்வாயே அன்பெனும் தாயே<br />
நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே<br />
நினைவிலும் கனவிலும் நீயே துணை (அம்மா)</p>
<p>மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க<br />
தேன் மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச<br />
(மானமும்)</p>
<p>மங்கல நாணும் மஞ்சளும் வாழ<br />
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ<br />
வழிபுரிவாய் ஜோதி நீயே துணை! (அம்மா)</p>
<h3 style="text-align: center;">மாசற்ற அன்பு</h3>
<p>பாசத்தால் எனையீன்ற<br />
அன்னை தந்தை<br />
பதை பதைத்து நிற்கின்றார்<br />
மகனைக் காண</p>
<p>பேசத்தான் வார்த்தையில்லாக்<br />
கற்பு மங்கை<br />
பிடியென்றால் தன்னுயிரைக்<br />
கணவன் வாழ</p>
<p>மாசற்ற அன்புக்கு<br />
மரணம் உண்டோ?<br />
மதிகெட்டு வந்தாயோ<br />
வஞ்சகப் பாம்பே!</p>
<p>வாழத்தான் வேண்டும்<br />
நான் கடமைக்காக<br />
மனமிருந்தால் ஓடிவிடு<br />
மாயப் பாம்பே! மாயப் பாம்பே!</p>
<h3 style="text-align: center;">பெண் மனசு</h3>
<p>ஜிலுஜிலுக்கும் பச்சைமலை,<br />
தென்றல் பொறந்தமலை<br />
தென்பொதிகை எங்கள்மலை சாமியோ சாமி<br />
தேக்கு மரம்,பாக்கு மரம்-எங்கள்<br />
தென்னை மரம்,புன்னை மரம்-எங்க<br />
வாழ்க்கை யெல்லாம் காட்டுக்குள்ளே<br />
ஏஞ்சாமி யோசாமி!-நாங்க<br />
வந்ததில்லே நாட்டுக்குள்ளே</p>
<p>சிட்டுக் குருவியிவ,சிங்கினிக் குறத்திமவ,<br />
சித்திரைப் பதுமை தானுங்க-பொண்ணு மனசு<br />
முத்திரைப் பசும் பொன்னுங்க<br />
தையன்னத் தையன்னத்தானா<br />
தையான தயன்னத்தான<br />
தங்தோம் தன்னானக் கந்தையா</p>
<p>உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா<br />
வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி<br />
வேலன் பேரு சொல்லி வில்லை எடுப்பா<br />
மீறி வரும் புலியை வீரத்தினால் அடக்கி<br />
ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா<br />
தையத் தையத் தையத் தந்தின்னத்<br />
தம்தின்னத் தைய<br />
திக்கெல்லாம் சுத்தி வருவா-மச்சானைத்தேடி<br />
தென்றலைத்தூது விடுவா<br />
தையன்னத் தையன்னத்தான்<br />
தையான தயன்னத் தானத்<br />
தந்தோம் தன்னானக் கந்தையா!</p>
<p>உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா<br />
மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி<br />
மயங்கியோட வச்சு மயில் பிடிப்பா!<br />
மதுரக் கவிபோலக் கோவை யிதழ் காட்டி<br />
வண்ணம் பாட வைச்சுக் குயில் பிடிப்பா!</p>
<p>பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்<br />
பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!<br />
ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்<br />
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்!<br />
(சிட்டுக்)</p>
<p>சிங்கினி சிங்கினி சிங்கினி<br />
திறமையுள்ளவன் எடுத்துக்கோ<br />
டங்கினி மங்கினி டங்கினி மங்கினி<br />
ரகசியத்தைப் புரிஞ்சுக்க! (சிட்டுக்)</p>
<h3 style="text-align: center;">ஞானம்!</h3>
<p>தேவி மனம் போலே<br />
சேவை புரிந்தாலே<br />
தேவை நிறைவேறும்! (தேவிமனம்)</p>
<p>பாவ வினை தீரும்<br />
யோக நிலையாலே<br />
தேவ மொழியாலே<br />
மாயா வழிகாணும்<br />
ஞான மருள்வாயே! (தேவிமனம்)</p>
<p>வானில் உலாவும் வண்ண நிலாவும்<br />
நாணம் கொள்ளும் நங்கையாள்<br />
ஆடல் விநோத ஆனந்த கீத<br />
பாடம் சொல்லும் மங்கையாள்!<br />
அழகு வரும் நேரம்<br />
அன்னை அதிகாரம்<br />
முழுதும் அவள் பாரம்<br />
மோகம் வெகு தூரம் (தேவி மனம்)</p>
<h3 style="text-align: center;">நோட்டம்!</h3>
<p>ஆண் : ஆனைமுகனே ஆதி முதலானவனே<br />
பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனே<br />
மோனைப் பொருளே<br />
மூத்தவனே கணேசா கணேசா!<br />
ஏனென்று கேளுமையா-இந்த<br />
ஏழை முகம் பாருமையா</p>
<p>குழு : புள்ளையொரு கோவிலுக்குப்<br />
பொழுதிருக்க வந்திருக்கும்<br />
புள்ளை யாரு-இந்தப்<br />
பிள்ளை யாரு?</p>
<p>பெண் : புள்ளையாருக்கு கோவிலுக்குப்<br />
பொழுதிருக்க வந்திருக்கும்<br />
புள்ளை யாரு-இந்தப்<br />
பிள்ளை யாரு?</p>
<p>பெண் : புள்ளையாரு கோவிலுக்குப்<br />
பொழுதிருக்க வந்திருக்கும்<br />
புள்ளை யாரு-இந்தப்<br />
பிள்ளை யாரு?<br />
வள்ளியம்மை நேசத்திலே<br />
வனவேடன் வேஷத்திலே<br />
வாட்டங்கொண்ட வேலனுக்கு<br />
உதவி செஞ்சாரு-யானை<br />
உருவில் வந்தாரு-இந்தப்<br />
வாதங் கொண்ட மாப்பிளைக்கு<br />
என்னடி செய்வாரு? பெண்ணுக்கு<br />
எங்கடி போவாரு?</p>
<p>ஆண் : ஆஹா&#8230;குலுக்கி மினுக்கிக்கிட்டு<br />
குடங்களையும் தூக்கிக்கிட்டு<br />
தளுக்கு நடை போட்டுகிட்டு<br />
ஜாடையிலே பார்த்துக்கிட்டு<br />
கொளத்தங்கரை ஓரத்திலே-அட<br />
எங்கப்பா கணேசா!<br />
மயக்கம் வரும் நேரத்திலே<br />
கூட்டமா வந்திருக்கும் இவங்க<br />
நோட்டமென்ன சொல்லுமப்பா?-இவங்க<br />
நோட்டமென்ன சொல்லுமப்பா?</p>
<p>குழு : ஓகோ!</p>
<p>பெண் : தனக்கொருத்தி யில்லாமே<br />
தனிச்சிருக்கும் சாமியிடம்<br />
எனக்கொருத்தி வேணுமின்னு<br />
கேக்க வந்தாரோ?<br />
ஏங்கி ஏங்கி எதைப்<br />
பார்க்க வந்தாரோ?</p>
<p>ஆண் : ஏய்..போக்கிரிக் குட்டிகளா<br />
தண்ணி தூக்கப் போறதுபோல்<br />
கண்ணிபோட வந்திருக்கும்<br />
பொண்ணு யாரு?-இவ<br />
புருஷன் யாரு?-அந்தக்<br />
கள்ளி யாரு?<br />
வேப்பெண்ணையைப் பூசிகிட்டு<br />
வெறுங்கையாலே கிண்டி விட்டு<br />
வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம்-காக்கா<br />
கூடுகட்டப் பார்க்குதுடி ருக்குமணி ருக்குமணி!</p>
<p>குழு : ஓஹோ</p>
<p>பெண் : கட்டழகைப் பாருங்கடி<br />
காலைப் புடிச்சு வாருங்கடி!</p>
<p>குழு : (கட்டழகை)</p>
<p>ஆண் : ஏய்&#8230;ஒய்யாரப் பெண்டுகளா<br />
ஒடம்பைத் துளைக்கும் வண்டுகளா!</p>
<p>குழு : நொண்டிக்கை நொண்டிக்கை<br />
ஊளை மூக்கு ஊளை மூக்கு</p>
<p>ஆண் : கோண மூஞ்சி கோண மூஞ்சி<br />
பூனைமுழி பூனைமுழி!</p>
<p>குழு : முட்டிக் காலு சட்டித் தலை!<br />
ஆண் : சொத்தப் பல்லு பட்டி வாயி!</p>
<p>குழு : நீதான்<br />
ஆண் : நீங்கதான்</p>
<p>குழு : புடிங்கடி<br />
ஆண் : நில்லுங்கடி&#8230;டூர்&#8230;.</p>
<h3 style="text-align: center;">ஒரே ரத்தம்</h3>
<p>ஊருக்கெல்லாம் ஒரே சாமி<br />
ஒரே சாமி ஒரே நீதி<br />
ஒரே நீதி ஒரே ஜாதி<br />
கேளடி கண்ணாத்தா!</p>
<p>மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து<br />
ஒரேகாத்து ஒரே தண்ணி<br />
ஒரே வானம் ஒரே பூமி<br />
ஆமடி பொன்னாத்தா! (ஊருக்)</p>
<p>எல்லோருக்கும் உலகம் ஒண்ணு<br />
இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு<br />
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு<br />
நானும் ஒண்ணே தானே<br />
யாரு மேலே கீறினாலும்<br />
ரத்தம் ஒண்ணு தானே<br />
ஆகமொத்தம் பிறந்ததெல்லாம்<br />
பத்தாம் மாதம் தானே (ஆக)</p>
<p>உயிருகெல்லாம் ஒரேபாதை<br />
ஒரேபாதை ஒரே வாசல்<br />
ஒரே கூடு ஒரே ஆவி<br />
பாரடி கண்ணாத்தா! (உயிருக்)</p>
<p>பாடுபட்டோர் கொஞ்சமில்லை<br />
பலன் வெளைஞ்சா பஞ்சமில்லே<br />
ஆடும் மாடும் நாமும் வாழ<br />
அருள் புரிவாளே-அம்மா<br />
அருள் புரிவாளே<br />
அங்காளம்மன் கோவிலுக்குப்<br />
பொங்க வைக்க வேணும்<br />
அன்னையவள் எங்களையும்<br />
பொங்க வைக்க வேணும் (அங்கா)</p>
<p>ஆளுக் கெல்லாம் ஒரே கோயில்<br />
ஒரே கோயில் ஒரே பூசை<br />
ஒரே ஞாயம் ஒரே தீர்ப்பு!<br />
கேளடி கண்ணாத்தா! (ஊருக்)</p>
<h3 style="text-align: center;">ஏங்கும் ஏழை</h3>
<p>கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே<br />
காசு போன இடம் தெரியல்லே-என்<br />
காதலி பாப்பா காரணம் கேப்பா<br />
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே<br />
ஏழைக்குக் காலம் சரியில்லே</p>
<p>மாசம் முப்பது நாளும் ஒளைச்சு<br />
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு<br />
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்<br />
கணக்கு நோட்டோட நிக்குறான்-வந்து<br />
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே)</p>
<p>சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா<br />
பட்டினியால் பாடுபட்டா<br />
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது<br />
கெட்டிக்காரன் பொட்டியிலே-அது<br />
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே)</p>
<p>விதவிதமாய்த் துணிகள் இருக்கு<br />
விலையைக் கேட்டா நடுக்கம் வருது<br />
வகைவகையா நகைகள் இருக்கு<br />
மடியைப் பார்த்தா மயக்கம் வருது<br />
எதைஎதையோ வாங்கணுமின்னு<br />
எண்ணமிருக்கு வழியில்லே-இதை<br />
எண்ணாமலிருக்கவும் முடியல்லே (கையிலே)</p>
<p>கண்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்<br />
பொண்ணுக்கு துணையா ஆணைப் படைச்சான்<br />
ஒண்ணுக்கு பத்தா செல்வத்தைப் படைச்சான்<br />
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்<br />
என்னைப் போலே பலரையும் படைச்சு-அண்ணே<br />
என்னைப் போலே பலரையும் படைச்சு<br />
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்<br />
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே)</p>
<p style="text-align: center;"><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<p><strong>மேலும் காண்க</strong></p>
<ul>
<li><strong>Read More:</strong>
<ul>
<li><a title="திருக்குறள் குடியியல்" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" target="_blank" rel="noopener">திருக்குறள் குடியியல்</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%b7%e0%af%80%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-108-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d/" target="_blank" rel="noopener" aria-label="“ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்” (Edit)">ஷீரடி சாய் பாபாவின் 108 போற்றிகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
</ul>
</li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/">தெய்வம் தேடுதல் &#8211; கல்யாணசுந்தரம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
