Skip to content

விருச்சிக ராசி பொது பலன்கள்(Viruchigam Rasi Palan) – விருச்சிக ராசி காரர்களுக்கு கம்பீரமான தோற்றம் இருக்கும். அவர்கள் பார்க்க அமைதியாக இருப்பார்கள். ஆனால் கோபம் வரும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் திடீரென்று வார்த்தையை விட்டுவிடுவார்கள். தாயின் மீது பாசம் அதிகம். மற்றவர்களுக்கு அதிக உதவிகளைச் செய்ய தேடிச் செல்வார்கள்.

Viruchigam Rasi Palan

விருச்சிக ராசி நட்சத்திரங்கள் – விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
விருச்சிக ராசி தேதிகள் – அக்டோபர் 24 முதல் நவம்பர் 21 வரை
உறுப்பு – நீர் ராசி
தரம் – ஸ்திர ராசி
அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு, மஞ்சள், ஸ்கார்லெட்
அதிர்ஷ்ட நாள் – செவ்வாய், வியாழன்
அதிபதி – செவ்வாய்

Scorpio Sign in Tamil

விருச்சிக ராசி பண்புகள்

விருச்சிக ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். அவர்களுக்கு கோபம் அதிகமாக இருக்கும். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பார்கள். அவர்கள் சேமிப்புக்கு கவனம் செலுத்த வேண்டும்.

Viruchigam Rasi Palan
Viruchigam Rasi Palan

செவ்வாய் கிரகத்தில் ஆதிக்கம் செலுத்தும் விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் உங்களை தாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டு வெற்றியும் பெறுவீர்கள். நீங்கள் எந்த செயலையும் பிடிவாதமாக செய்வீர்கள்.

நீங்கள் பதுங்கியிருந்து பாயும் புலி போன்றவர். பூமிக்குரிய செவ்வாய் உங்கள் இராசி அதிபதியாக இருப்பதால் சொத்து எப்போதும் உங்கள் பெயரில் சிறிய அளவிலாவது இருக்கும்.

சிலருக்கு இரும்புச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம். பலருக்கு உயர் இரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்களைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் பணப்புழக்கம் மற்றும் சேமிப்புகள் உயரும்.

உங்கள் மனைவி கலைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருப்பார். அவர் உங்களை மிகவும் விரும்புகிறார், உங்களை ஒரு நண்பரைப் போலவே நடத்துகிறார்.

நீங்கள் நான்கு நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாட்கள் வசதியாக இருக்க விரும்புவீர்கள். உங்களுக்கு பயணம் செய்ய பிடிக்கும் ஆதலால், அதற்கு அதிக பணம் செலவிடுவார்கள்.

விருச்சிக ராசி குணங்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே குறும்புத்தனம் மிக்கவர்கள். எவ்வளவு பெரிய சிரமமாக இருந்தாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பார்கள்.

பார்க்க அப்பாவி முகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர் தனது உடைமைகளை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுத்தர மாட்டார்கள். அவர்களின் வார்த்தைகள் புத்திசாலித்தனமாக இருக்கும். அவர்களுடன் பேசுவதும், அவர்களை வெல்வதும் கடினம்.

இவர்கள் சமூக சேவைகளிலும் தொண்டு செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். இளமையில் கடினமான வாழ்க்கை இருந்தபோதிலும், அவர்கள் நடுத்தர வயதில் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

விருச்சிக ராசி திருமண வாழ்க்கை

வாழ்க்கை துணையைப் பொறுத்தவரை நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். அவர்கள் நல்ல வசதி, வாய்ப்புகள் மற்றும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்ற வாழ்க்கைத் துணையுடன் சிறப்பாக வாழ்வார்கள்.

அவர்களின் விருப்பு வெறுப்புகள் வாழ்க்கைத் துணையுடன் பொருந்தி இருக்கும். தேவைக்கேற்ப செலவுகளைச் செய்வதன் மூலம் அவர்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வார்கள். யாருக்கும் சிரமங்கள் ஏற்படாதபடி திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

திருமணம் வரை பெற்றோரின் ஆதரவோடும், திருமணத்திற்குப் பிறகு தனியாக வாழ வேண்டிய அவசியம் ஏற்படும்.

விருச்சிக ராசி பொருளாதார நிலை

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு, வசதிக்கு ஏற்ப செல்வம் சேரும். அவர்களுக்கு பணப் பற்றாக்குறை அல்லது பண நெருக்கடி ஏற்படாது.

ஏதாவது ஒரு வகையில் அவர்கள் கையில் பணம் சேர்ந்து கொண்டிருக்கும். பூர்வீக சொத்துகளை விற்பது மூலம் செல்வம் சேரும்.

அவர்கள் இளமைப் பருவத்தில் போராட்ட வாழ்க்கையாக இருக்கும், ஆனால் நடுத்தர வயதில் நன்றாக சம்பாதிக்கிறார்கள் மற்றும் வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிட போதுமான அளவு சேமிப்பார்கள். வீடு சொந்தமாக இருந்தாலும் அது பழையதாகவோ அல்லது மற்றவர்களின் சொத்தாகவோ இருக்கும்.

ஆனால் சரியான வயதில், அவர்களுக்கு வீடு, நிலம், வண்டி, வாகன வசதிகள் கிடைத்து ஆடம்பரமாக வாழ்வார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும்.

விருச்சிக ராசி குழந்தை பாக்கியம்

விருச்சிக ராசி குழந்தை பாக்கியம் – விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குழந்தைகளுக்கு பெரும்பாலும் நிறைய தெய்வீக அருளைக் பெற்றுள்ளனர். அவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் பாக்கியம். குழந்தைகள் சமூகத்தில் நன்மைகளையும் மதிப்பையும் புகழையும் பெற்று வாழ்வார்கள்.

வேலை

சிறு வயதிலிருந்தே மக்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்களுக்கு அயராது உழைக்கிறார்கள். சோம்பேறித்தனம் அற்றவர் என்பதால் அவர்கள் எந்த வேலைகளிலும் சாதிப்பார்கள்.

அரசு வேலைகளில் அல்லது அரசியல் துறைகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் வாசனை திரவியங்கள், தேன் மற்றும் கோதுமை ஆகியவற்றை வாங்கி விநியோகிக்கலாம்.

மருத்துவ அறிஞராகவும், வேதியியல் துறையில் புகழ்பெற்றவராகவும் இருப்பார்கள். எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அனைவரும் இவர்களுடைய பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்