<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>aram seiya virumbu Archives | Blog</title>
	<atom:link href="https://www.tamizhdb.com/tag/aram-seiya-virumbu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link></link>
	<description>தமிழ் தகவல்கள், தொழிற்நுட்பம், இலக்கணம், இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம்</description>
	<lastBuildDate>Tue, 30 Apr 2024 12:57:00 +0000</lastBuildDate>
	<language>ta-IN</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://www.tamizhdb.com/wp-content/uploads/2017/11/cropped-tamil_logo_580x412-32x32.png</url>
	<title>aram seiya virumbu Archives | Blog</title>
	<link></link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆத்திச்சூடி விளக்கம்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/</link>
					<comments>https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Dec 2017 06:16:14 +0000</pubDate>
				<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<category><![CDATA[aram seiya virumbu]]></category>
		<category><![CDATA[ஊக்கமது கைவிடேல் பொருள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=660</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் &#124; ஔவையார் ஆத்திச்சூடி விளக்கம் &#8211; Avvaiyar Aathichudi in Tamil &#124; இந்த பதிவில் ஔவையார் எழுதிய ஆத்திசூடி வரிகள் பொருள் விளக்கம் மற்றும் ஆத்திச்சூடி தெளிவுரை பற்றி பார்ப்போம் &#124; Aathichudi in Tamil <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/" title="ஆத்திச்சூடி விளக்கம்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/">ஆத்திச்சூடி விளக்கம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<h3>ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் | ஔவையார் ஆத்திச்சூடி விளக்கம் &#8211; Avvaiyar Aathichudi in Tamil |</h3>
<p>இந்த பதிவில் <strong>ஔவையார்</strong> எழுதிய <strong>ஆத்திசூடி வரிகள் பொருள் விளக்கம்</strong> மற்றும் <strong>ஆத்திச்சூடி தெளிவுரை</strong> பற்றி பார்ப்போம் | <strong>Aathichudi in Tamil</strong> | <strong>Aathichudi Meaning in Tamil</strong> | <strong>ஆத்திச்சூடி விளக்கம் | ஔவையார் ஆத்திச்சூடி பாடல்கள்</strong></p>
<h3>ஆத்திச்சூடி விளக்கம் &#8211; உயிர் வருக்கம் &#8211; <strong>Aathichudi in Tamil</strong></h3>
<p>1. அறம் செய விரும்பு<br />
தருமம் செய்ய ஆசைப்படு.</p>
<p>2. ஆறுவது சினம்<br />
கோபம் தணிய வேண்டியதாகும்.</p>
<p>3. இயல்வது கரவேல்<br />
உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.</p>
<p>4. ஈவது விலக்கேல்<br />
தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே</p>
<p>5. உடையது விளம்பேல்<br />
உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.</p>
<p>6. ஊக்கமது கைவிடேல்<br />
முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.</p>
<p>7. எண் எழுத்து இகழேல்<br />
கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.</p>
<p>8. ஏற்பது இகழ்ச்சி<br />
யாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.</p>
<p>9. ஐயம் இட்டு உண்<br />
யாசிப்பவருக்கு(ஊனமுற்றோர்) கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.</p>
<p>10. ஒப்புரவு ஒழுகு<br />
உலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.</p>
<p>11. ஓதுவது ஒழியேல்<br />
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.</p>
<p>12. ஔவியம் பேசேல்<br />
ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.</p>
<p>13. அஃகம் சுருக்கேல்<br />
அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே.</p>
<h3>Aathichudi in Tamil &#8211; உயிர்மெய் வருக்கம்</h3>
<p>14. கண்டொன்று சொல்லேல்.<br />
பொய் சாட்சி சொல்லாதே.</p>
<p>15. ஙப் போல் வளை.<br />
&#8216;ங&#8217; என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க &#8216;ஙா&#8217; வரிசை எழுத்துக்களை தழுவுகிறதோ! அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.</p>
<p>16. சனி நீராடு.<br />
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு.</p>
<p>17. ஞயம்பட உரை.<br />
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.</p>
<p>18. இடம்பட வீடு எடேல்.<br />
தேவைக்கேற்ப வீட்டை கட்டிக்கொள்.</p>
<p>19. இணக்கம் அறிந்து இணங்கு.<br />
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்பு அவர் நல்ல குணங்கள் உள்ளவரா எனத்தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்.</p>
<p><a href="https://www.tamizhdb.com/calculate-marriage-matching-in-tamil/" target="_blank" rel="noopener">Marriage Porutham in Tamil</a> | <a href="https://www.tamizhdb.com/star-matching-table-for-marriage-in-tamil/" target="_blank" rel="noopener">Star Matching Table for Marriage in Tamil</a></p>
<p>20. தந்தை தாய்ப் பேண்.<br />
உன் தந்தையையும் தாயையும் இறுதிக்காலம் வரை அன்புடன் இருந்து காப்பாற்று.</p>
<p>21. நன்றி மறவேல்.<br />
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறந்து விடாதே.</p>
<p>22. பருவத்தே பயிர் செய்.<br />
ஒரு செயலை செய்யும்பொழுது அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.</p>
<p>23. மண் பறித்து உண்ணேல்.<br />
பிறர் நிலத்தை ஏமாற்றி கவர்ந்து அதன் மூலம் வாழாதே.</p>
<p>24. இயல்பு அலாதன செய்யேல்.<br />
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.</p>
<p>25. அரவம் ஆட்டேல்.<br />
பாம்புகளை பிடித்து விளையாடாதே.</p>
<p>26. இலவம் பஞ்சில் துயில்.<br />
&#8216;இலவம் பஞ்சு&#8217; எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு</p>
<p style="text-align: center;"><strong>புதிய பதிவு :-</strong> <a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0/" target="_blank" rel="noopener noreferrer"><strong>கொன்றை வேந்தன் விளக்கவுரை</strong></a></p>
<p>27. வஞ்சகம் பேசேல்.<br />
உண்மைக்கு புறம்பான கவர்ச்சிகரமான சொற்களை பேசாதே.</p>
<p>28. அழகு அலாதன செய்யேல்.<br />
இழிவான செயல்களை செய்யாதே.</p>
<p>29. இளமையில் கல்.<br />
இளம்பருவத்திலே கற்க வேண்டியவைகளை தவறாமல் கற்றுக்கொள்.</p>
<p>30. அறனை மறவேல்.<br />
தருமத்தை எப்பொழுதும் மனதில் நினைக்கவேண்டும்.</p>
<p>31. அனந்தல் ஆடேல்.<br />
மிகுதியாக தூங்காதே.</p>
<h4>ககர வருக்கம் &#8211; Aathichudi in Tamil</h4>
<p>32. கடிவது மற<br />
யாரையும் கோபத்தில் கடிந்து பேசாதே.</p>
<p>33. காப்பது விரதம்<br />
தான் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்.</p>
<p>34. கிழமை பட வாழ்<br />
பிறருக்கு நன்மை செய்து வாழ்.</p>
<p>35. கீழ்மை அகற்று<br />
இழிவான குணஞ் செயல்களை நீக்கு.</p>
<p>36. குணமது கைவிடேல்<br />
நன்மை தரக்கூடிய குணங்களை கைவிடாதே.</p>
<p>37. கூடிப் பிரியேல்<br />
நல்லவரோடு நட்பு செய்து பழகி பின் அவரை விட்டு பிரியாதே.</p>
<p>38. கெடுப்ப தொழி<br />
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.</p>
<p>39. கேள்வி முயல்<br />
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்.</p>
<p>40. கைவினை கரவேல்<br />
தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.</p>
<p>41. கொள்ளை விரும்பேல்<br />
பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே.</p>
<p>42. கோதாட்டு ஒழி<br />
குற்றமான விளையாட்டை விட்டு விடு.</p>
<p>43. கௌவை அகற்று<br />
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.</p>
<h3>Aathichudi in Tamil &#8211; சகர வருக்கம்</h3>
<p>44. சக்கர நெறி நில்<br />
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்.</p>
<p>45. சான்றோர் இனத்து இரு<br />
அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.</p>
<p>46. சித்திரம் பேசேல்<br />
பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே.</p>
<p>47. சீர்மை மறவேல்<br />
புகழுக்குக் காரணமான குணங்களை மறந்து விடாதே.</p>
<p>48. சுளிக்கச் சொல்லேல்<br />
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே.</p>
<p>49. சூது விரும்பேல்<br />
ஒருபொழுதும் சூதாட்டத்தை விரும்பாதே.</p>
<p>50. செய்வன திருந்தச் செய்<br />
செய்யும் செயல்களை தவறும் குறையும் இல்லாமல் செய்யவும்.</p>
<p>51. சேரிடமறிந்து சேர்<br />
நீ பழகுபவர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என ஆராய்ந்து பின்பு பழகு.</p>
<p>52. சையெனத் திரியேல்<br />
பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே</p>
<p>53. சொற்சோர்வு படேல்<br />
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே</p>
<p>54. சோம்பித் திரியேல்<br />
சோம்பேறியாகத் திரியாதே.</p>
<p><strong><a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae/" target="_blank" rel="noopener">திருமண பொருத்தம் விளக்கம்</a> | <a href="https://www.tamizhdb.com/star-matching-table-for-marriage-in-tamil/" target="_blank" rel="noopener">Star Matching Table for Marriage in Tamil</a> </strong></p>
<h3>Aathichudi in Tamil &#8211; தகர வருக்கம்</h3>
<p>55. தக்கோன் எனத் திரி<br />
பெரியோர்கள் உன்னைத் யோக்கியன், நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள்.</p>
<p>56. தானமது விரும்பு<br />
வேண்டுபவருக்கு தானம் செய்.</p>
<p>57. திருமாலுக்கு அடிமை செய்<br />
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்</p>
<p>58. தீவினை யகற்று<br />
பாவச் செயல்களை இருந்து விலகி இரு.</p>
<p>59. துன்பத்திற்கு இடங்கோடேல்<br />
முயற்சி செய்யும் பொழுது வரும் துன்பத்திற்காக அஞ்சி அதனை விட்டு விடாதே.</p>
<p>60. தூக்கி வினைசெய்<br />
உபாயம் அறிந்த பின் காரியத்தை தொடங்கு.</p>
<p>61. தெய்வம் இகழேல்<br />
கடவுளை பழித்து பேசாதே.</p>
<p>62. தேசத்தோடு ஒட்டி வாழ்<br />
நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் கூடி வாழ்.</p>
<p>63. தையல்சொல் கேளேல்<br />
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடக்காதே.</p>
<p>64. தொன்மை மறவேல்<br />
பழைமையை மறவாதிருக்க வேண்டும்.</p>
<p>65. தோற்பன தொடரேல்<br />
தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்த செயலை தொடங்காதே.</p>
<h3>Aathichudi in Tamil &#8211; நகர வருக்கம்</h3>
<p>66. நன்மை கடைப்பிடி<br />
நல்வினை செய்வதை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.</p>
<p>67. நாடு ஒப்பனை செய்<br />
நாட்டில்(சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.</p>
<p>68. நிலையிற் பிரியேல்<br />
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.</p>
<p>69. நீர்விளை யாடேல்<br />
வெள்ளபெருக்கில் நீந்தி விளையாடாதே.</p>
<p>70. நுண்மை நுகரேல்<br />
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.</p>
<p>71. நூல்பல கல்<br />
அறிவை வளர்க்கும் நூல்களைப் படி.</p>
<p>72. நெற்பயிர் விளை<br />
நெற்பயிரை விளையச் செய்.</p>
<p>73. நேர்பட ஒழுகு<br />
ஒழுக்கம் தவறாமல் நேர்மையான வழியில் வாழ்.</p>
<p>74. நைவினை நணுகேல்<br />
பிறர் வருந்தத் தரும் தீவினைகளைச் செய்யாதே.</p>
<p>75. நொய்ய உரையேல்<br />
அற்பமான வார்த்தைகளைப் பேசாதே.</p>
<p>76. நோய்க்கு இடம் கொடேல்<br />
உணவு மற்றும் உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.</p>
<h3>Aathichudi in Tamil &#8211; பகர வருக்கம்</h3>
<p>77. பழிப்பன பகரேல்<br />
பொய், கடுஞ்சொல், பயனில்லாத சொற்களை பேசாதே.</p>
<p>78. பாம்பொடு பழகேல்<br />
பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்களுடன் பழகாதே.</p>
<p>79. பிழைபடச் சொல்லேல்<br />
குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.</p>
<p>80. பீடு பெறநில்<br />
பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே இரு.</p>
<p>81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்<br />
நம்பியவர்களை ஆதரித்து வாழ்.</p>
<p>82. பூமி திருத்தியுண்<br />
நிலத்தை உழுது பயிர்செய்து உண்.</p>
<p>83. பெரியாரைத் துணைக்கொள்<br />
அறிவிலே சிறந்த சான்றோர்களை உனக்குத் துணையாக கொள்.</p>
<p>84. பேதைமை யகற்று<br />
அறியாமையைப் போக்கு</p>
<p>85. பையலோடு இணங்கேல்<br />
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.</p>
<p>86. பொருள்தனைப் போற்றிவாழ்<br />
பொருள்களை வீண் செலவு செய்யாமல் பாதுகாத்து வாழ்.</p>
<p>87. போர்த்தொழில் புரியேல்<br />
யாருடனும் கலகம் செய்யாதே.</p>
<h5>மகர வருக்கம்</h5>
<p>88. மனந்தடு மாறேல்<br />
எந்த சூழ்நிலையிலும் மனக்கலக்கம் அடையாதே</p>
<p>89. மாற்றானுக்கு இடம்கொடேல்<br />
பகைவன் உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.</p>
<p>90. மிகைபடச் சொல்லேல்<br />
சாதாரணமான விஷயத்தை உயர்ந்த வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.</p>
<p>91. மீதூண் விரும்பேல்<br />
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.</p>
<p>92. முனைமுகத்து நில்லேல்<br />
போர் முனையிலே நிற்காதே</p>
<p>93. மூர்க்கரோடு இணங்கேல்<br />
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.</p>
<p>94. மெல்லி நல்லாள் தோள்சேர்<br />
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.</p>
<p>95. மேன்மக்கள் சொற்கேள்<br />
நல்லொழுக்கம் உடைய சான்றோர்கள் சொல்வதைக் கேட்டு நட.</p>
<p>96. மைவிழியார் மனையகல்<br />
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.</p>
<p>97. மொழிவது அறமொழி<br />
சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்</p>
<p>98. மோகத்தை முனி<br />
வாழ்வில் நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை முறித்துவிடு.</p>
<h3>Aathichudi in Tamil &#8211; வகர வருக்கம்</h3>
<p>99. வல்லமை பேசேல்<br />
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.</p>
<p>100. வாதுமுற் கூறேல்<br />
பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதிடாதே.</p>
<p>101. வித்தை விரும்பு<br />
கல்வியாகிய நற்பொருளை விரும்பு.</p>
<p>102. வீடு பெறநில்<br />
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே நடந்து கொள்.</p>
<p>103. உத்தமனாய் இரு<br />
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.</p>
<p>104. ஊருடன் கூடிவாழ்<br />
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.</p>
<p>105. வெட்டெனப் பேசேல்<br />
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.</p>
<p>106. வேண்டி வினைசெயேல்<br />
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.</p>
<p>107. வைகறை துயில் எழு<br />
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.</p>
<p>108. ஒன்னாரைத் தேறேல்<br />
பகைவரை நம்பாதே.</p>
<p>109. ஓரஞ் சொல்லேல்<br />
எந்த வழக்கிலும் ஒரு பக்கம் மட்டும் பேசாமல் நடுநிலையுடன் பேசு.</p>
<ul>
<li>Video – <a href="https://www.youtube.com/watch?v=bitt-kSoZWc&amp;list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noopener">Learn Basic Astrology in Tamil</a></li>
<li>Read More :- <a href="https://www.tamizhdb.com/business-ideas-in-tamil/" target="_blank" rel="noopener">Business Ideas in Tamil</a> | <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae/" target="_blank" rel="noopener">திருமண பொருத்தம் விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/">ஆத்திச்சூடி விளக்கம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
