<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாரதியார் Archives</title>
	<atom:link href="https://www.tamizhdb.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://www.tamizhdb.com/category/பாரதியார்/</link>
	<description>தமிழ் தகவல்கள், தொழிற்நுட்பம், இலக்கணம், இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம்</description>
	<lastBuildDate>Fri, 06 Sep 2024 09:14:54 +0000</lastBuildDate>
	<language>ta-IN</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://www.tamizhdb.com/wp-content/uploads/2017/11/cropped-tamil_logo_580x412-32x32.png</url>
	<title>பாரதியார் Archives</title>
	<link>https://www.tamizhdb.com/category/பாரதியார்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாரதியார் கவிதைகள் சூரியன்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 06:46:51 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33081</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் பாரதியார் கவிதைகள் சூரியன் என்ற தலைப்பில் &#8216;சூரிய தரிசனம்&#8216; &#8216;ஞாயிறு வணக்கம்&#8216; மற்றும் &#8216;ஞான பாநு&#8216; போன்ற பாரதியார் பாடல்கள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதியுமாறு அமைந்திருக்கும். சூரிய தரிசனம் ராகம் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/" title="பாரதியார் கவிதைகள் சூரியன்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/">பாரதியார் கவிதைகள் சூரியன்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் <strong>பாரதியார் கவிதைகள் சூரியன்</strong> என்ற தலைப்பில் &#8216;<strong>சூரிய தரிசனம்</strong>&#8216; &#8216;<strong>ஞாயிறு வணக்கம்</strong>&#8216; மற்றும் &#8216;<strong>ஞான பாநு</strong>&#8216; போன்ற <strong>பாரதியார் பாடல்கள்</strong> தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதியுமாறு அமைந்திருக்கும்.</p>
<figure id="attachment_33082" aria-describedby="caption-attachment-33082" style="width: 293px" class="wp-caption aligncenter"><img fetchpriority="high" decoding="async" class="size-full wp-image-33082" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-கவிதைகள்-சூரியன்.jpg" alt="பாரதியார் கவிதைகள் சூரியன்" width="293" height="300" /><figcaption id="caption-attachment-33082" class="wp-caption-text">பாரதியார் கவிதைகள் சூரியன்</figcaption></figure>
<h3>சூரிய தரிசனம்</h3>
<p><strong>ராகம் &#8211; பூபாளம்</strong></p>
<p>சுருதி யின்கண் முனிவரும் பின்னே<br />
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்<br />
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்<br />
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;<br />
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!<br />
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!<br />
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;<br />
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.</p>
<p>வேதம் பாடிய சோதியைக் கண்டு<br />
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;<br />
நாத வார்கட லின்னொலி யோடு<br />
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;<br />
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே<br />
கடுகியோடும் கதிரினம் பாடி<br />
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்<br />
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.</p>
<h3>ஞாயிறு வணக்கம் &#8211; பாரதியார் கவிதைகள் சூரியன்</h3>
<p>கடலின்மீது கதிர்களை வீசிக்<br />
கடுகி வான்மிசை ஏறுதி யையா!<br />
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு<br />
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்.<br />
உடல் பரந்த கடலுந் தன்னுள்ளே<br />
ஒவ்வொரு நுண்டுளி யும்வழி யாகச்<br />
சுடரும் நின்றன் வடிவையுட் கொண்டே<br />
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.</p>
<p>என்ற னுள்ளங் கடலினைப் போலே<br />
எந்த நேரமும் நின்னடிக் கீழே<br />
நின்று தன்னகத் தொவ்வோர் அணுவும்<br />
நின்றன் ஜோதி நிறைந்தது வாகி<br />
நன்று வாழ்ந்திட செய்குவை யையா!<br />
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!<br />
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்<br />
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!</p>
<p>காதல் கொண்டனை போலும் மண்மீதே,<br />
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!<br />
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்<br />
மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை;<br />
சோதி கண்டு முகத்தில் இவட்கே<br />
தோன்று கின்ற புதுநகை யென்னே!<br />
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே<br />
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன்.</p>
<h3>ஞான பாநு</h3>
<p>திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்<br />
மருவுபல் கலையின் சோதி வல்லமை யென்ப வெல்லாம்,<br />
வருவது ஞானத் தாலே வையக முழுவதும் எங்கள்<br />
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு.</p>
<p>கவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,<br />
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,<br />
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்,<br />
நவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள்.</p>
<p>அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்<br />
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்,<br />
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்<br />
இனத்திலே, கூடிவாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம்.</p>
<p>பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும், ஆங்கே<br />
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்<br />
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்<br />
நண்ணிடும் ஞானபாநு அதனை நாம் நன்கு போற்றின்.</p>
<ul>
<li><strong>Read More:-</strong> <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/">பாரதியார் கவிதைகள் சூரியன்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் கண்ணம்மா கவிதைகள்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 06:35:17 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33077</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் பாரதியார் கண்ணம்மா கவிதைகள் என்ற தலைப்பில் &#8216; பாரதியார் கண்ணம்மா பாடல்கள்&#8216; மற்றும் &#8216;கண்ணம்மாவின் காதல் &#8216; &#8216;கண்ணம்மாவின் நினைப்பு&#8216; போன்ற கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதியுமாறு அமைந்திருக்கும். கண்ணம்மாவின் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/" title="பாரதியார் கண்ணம்மா கவிதைகள்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/">பாரதியார் கண்ணம்மா கவிதைகள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் <strong>பாரதியார் கண்ணம்மா கவிதைகள்</strong> என்ற தலைப்பில் &#8216; <strong>பாரதியார் கண்ணம்மா பாடல்கள்</strong>&#8216; மற்றும் &#8216;<strong>கண்ணம்மாவின் காதல்</strong> &#8216; &#8216;<strong>கண்ணம்மாவின் நினைப்பு</strong>&#8216; போன்ற கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதியுமாறு அமைந்திருக்கும்.</p>
<figure id="attachment_33078" aria-describedby="caption-attachment-33078" style="width: 200px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-33078" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-கண்ணம்மா-கவிதைகள்.jpg" alt="பாரதியார் கண்ணம்மா கவிதைகள் " width="200" height="261" /><figcaption id="caption-attachment-33078" class="wp-caption-text">பாரதியார் கண்ணம்மா கவிதைகள்</figcaption></figure>
<h3>கண்ணம்மாவின் காதல்</h3>
<p>காற்று வெளியிடைக் கண்ணம்மா, &#8211; நின்றன்<br />
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் &#8211; அமு<br />
தூற்றினை யொத்த இதழ்களும் &#8211; நில<br />
வூறித் ததும்பும் விழிகளும் &#8211; பத்து<br />
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் &#8211; இந்த<br />
வையத்தில் யானுள்ள மட்டிலும் &#8211; எனை<br />
வேற்று நினைவின்றித் தேற்றியே &#8211; இங்கோர்<br />
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)</p>
<p>நீயென தின்னுயிர் கண்ணம்மா! &#8211; எந்த<br />
நேரமும் நின்றனைப் போற்றுவேன் &#8211; துயர்<br />
போயின, போயின துன்பங்கள் நினைப்<br />
பொன்னெனக் கொண்ட பொழுதிலே &#8211; என்றன்<br />
வாயினி லேயமு தூறுதே &#8211; கண்ணம்<br />
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே &#8211; உயிர்த்<br />
தீயினி லேவளர் சோதியே &#8211; என்றன்<br />
சிந்தனையே, என்றன் சித்தமே! &#8211; இந்தக் (காற்று)</p>
<h3>கண்ணம்மாவின் நினைப்பு</h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி &#8211; கண்ணம்மா!<br />
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்<br />
பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)</p>
<p>மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்<br />
பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)</p>
<p>யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்<br />
மேவு மே &#8211; இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)</p>
<h3>மனப்பீடம் &#8211; பாரதியார் கண்ணம்மா கவிதைகள்</h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>பீடத்தி லேறிக் கொண்டாள் &#8211; மனப்<br />
பீடத்தி லேறிக் கொண்டான்.</p>
<p>நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்<br />
கேடற்ற தென்று கண்டுகூடக் கருதுமொளி<br />
மாடத்தி லேறி ஞானக் கூடத்தில் விளையாடி<br />
ஓடத்தி ரிந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்<br />
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்<br />
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற்றதை யமரர்<br />
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமை செய்து<br />
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)</p>
<p>கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?<br />
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்கா தனத்தே<br />
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?<br />
எண்ணத் திதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!<br />
பெண்ணி லரசியிவள் பெரிய எழி லுடையாள்<br />
கண்ணுள் மணியெனக்குக் காத லிரதியிவள்<br />
பண்ணி லினிய சுவைபரந்த மொழியினாள்<br />
உண்ணு மிதழமுத ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி)</p>
<h3>கண்ணம்மாவின் எழில்</h3>
<p><strong>ராகம் &#8211; செஞ்சுருட்டி தாளம் &#8211; ரூபகம்</strong></p>
<p><strong>பல்லவி</strong></p>
<p>எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப்பூ,<br />
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப்பூ!<br />
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப்பூ,<br />
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூரியன்.</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்,<br />
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்,<br />
திங்களை மூடிய பாம்பினைப் போலே<br />
செறிகுழல், இவள் நாசி எட் பூ. (எங்கள்)</p>
<p>மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று,<br />
மதுர வாய் அமிர்தம், இத ழமிர்தம்,<br />
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை,<br />
சாய வரம்பை, சதுர் அயிராணி. (எங்கள்)</p>
<p>இங்கித நாத நிலைய மிருசெவி<br />
சங்கு நிகர்த்த கண்டம் அமுர்த சங்கம்,<br />
மங்களக் கைகள் மஹா சக்தி வாசம்!<br />
வயி றாலிலை, இடை அமிர்த வீடு. (எங்கள்)</p>
<p>சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்,<br />
தாமரை யிருந்தாள் லக்ஷ்மீ பீடம்!<br />
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்<br />
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம். (எங்கள்)</p>
<ul>
<li><strong>Read More:-</strong> <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/">பாரதியார் கண்ணம்மா கவிதைகள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் பாடல்கள் முருகன்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 06:16:49 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33071</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் முருகன் என்ற தலைப்பில் &#8216;முருகன் பாட்டு&#8216; மற்றும் &#8216;வள்ளி பாட்டு&#8216; மற்றும் முருகன் பற்றிய கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/" title="பாரதியார் பாடல்கள் முருகன்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/">பாரதியார் பாடல்கள் முருகன்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் <strong>பாரதியார் பாடல்கள் முருகன்</strong> என்ற தலைப்பில் &#8216;<strong>முருகன் பாட்டு</strong>&#8216; மற்றும் &#8216;<strong>வள்ளி பாட்டு</strong>&#8216; மற்றும் <strong>முருகன் பற்றிய கவிதைகள்</strong> தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.</p>
<figure id="attachment_33072" aria-describedby="caption-attachment-33072" style="width: 400px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-33072" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-முருகன்.jpg" alt="பாரதியார் பாடல்கள் முருகன்" width="400" height="261" srcset="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-முருகன்.jpg 400w, https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-முருகன்-300x196.jpg 300w" sizes="(max-width: 400px) 100vw, 400px" /><figcaption id="caption-attachment-33072" class="wp-caption-text">பாரதியார் பாடல்கள் முருகன்</figcaption></figure>
<h3>முருகன் பாட்டு</h3>
<p><strong>ராகம் -நாட்டைக் குறிஞ்சி தாளம் &#8211; ஆதி</strong></p>
<p><strong>பல்லவி</strong></p>
<h4>முருகா! முருகா! முருகா!</h4>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>வருவாய் மயில் மீதினிலே<br />
வடிவே லுடனே வருவாய்!<br />
தருவாய் நலமும் தகவும் புகழும்<br />
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)</p>
<p>அடியார் பலரிங் குளரே,<br />
அவரை விடுவித் தருள்வாய்!<br />
முடியா மறையின் முடிவே! அசுரர்<br />
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)</p>
<p>சுருதிப் பொருளே, வருக!<br />
துணிவே, கனலே, வருக!<br />
சுருதிக் கருதிக் கவலைப் படுவார்<br />
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)</p>
<p>அமரா வதிவாழ் வுறவே<br />
அருள்வாய்! சரணம்! சரணம்!<br />
குமரா பிணியா வையுமே சிதறக்<br />
குமுறும் சுடர்வே லவனே சரணம்! (முருகா)</p>
<p>அறிவா கியகோ யிலிலே<br />
அருளா கியதாய் மடிமேல்<br />
பொறிவே லுடனே வளர்வாய்! அடியார்<br />
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய்! (முருகா)</p>
<p>குருவே! பரமன் மகனே!<br />
குகையில் வளருங் கனலே!<br />
தருவாய் தொழிலும் பயனும் அமரர்<br />
சமரா திபனே! சரணம்! சரணம்! (முருகா)</p>
<h3>வேலன் பாட்டு &#8211; பாரதியார் பாடல்கள் முருகன்</h3>
<p><strong>ராகம் &#8211; புன்னாகவராளி தாளம் &#8211; திஸ்ர ஏகம்</strong></p>
<p>வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை<br />
வேலவா! &#8211; அங்கோ<br />
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி<br />
யானது வேலவா!<br />
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு<br />
வள்ளியைக் &#8211; கண்டு<br />
சொக்கி மரமென நின்றனை<br />
தென்மலைக் காட்டிலே<br />
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட<br />
பாதகன் &#8211; சிங்கன்<br />
கண்ணிரண் டாயிரங் காக்கைக்<br />
கிரையிட்ட வேலவா!<br />
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்<br />
வள்ளியை &#8211; ஒரு<br />
பார்ப்பனக் கோலம் தரித்துக்<br />
கரந்தொட்ட வேலவா!</p>
<p>வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்<br />
கடலினை &#8211; உடல்வெம்பி மறுகிக் கருகிப்<br />
புகைய வெருட்டினாய்.<br />
கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்<br />
செல்வத்தை &#8211; என்றும்<br />
கேடற்ற வாழ்வினை, இன்ப<br />
விளக்கை மருவினாய்.<br />
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு<br />
குலைத்தவன் &#8211; பானு<br />
கோபன் தலைபத்துக் கோடி<br />
துணுக்குறக் கோபித்தாய்<br />
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன்<br />
மானைப்போல் &#8211; தினைத்<br />
தோட்டத்தி லேயொரு பெண்ணை<br />
மணங்கொண்ட வேலவா!</p>
<p>ஆறு சுடர்முகங் கண்டு விழிக்கின்ப<br />
மாகுதே, &#8211; கையில்<br />
அஞ்ச லெனுங்குறி கண்டு<br />
மகிழ்ச்சியுண் டாகுதே.<br />
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி<br />
யாவையும் © இங்கு<br />
நீங்கி அடியரை நித்தமுங்<br />
காத்திடும் வேலவா!</p>
<p>கூறு படப்பல கோடி யவுணரின்<br />
கூட்டத்தைக் &#8211; கண்டு<br />
கொக்கரித் தண்டங் குலுஙக<br />
நகைத்திடுஞ் சேவலாய்<br />
மாறு படப்பல வேறு வடிவொடு<br />
தோன்றுவாள் &#8211; எங்கள்<br />
வைரவி பெற்ற பெருங்கன<br />
லே, வடி வேலவா!</p>
<h3>கிளி விடு தூது &#8211; பாரதியார் பாடல்கள் முருகன்</h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>சொல்ல வல்லாயோ? &#8211; கிளியே!<br />
சொல்ல நீ வல்லாயோ?</p>
<p><strong>அனுபல்லவி</strong></p>
<p>வல்ல வேல்முரு கன்தனை -இங்கு<br />
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>தில்லை யம்பலத்தே &#8211; நடனம்<br />
செய்யும் அமரர்பிரான் -அவன்<br />
செல்வத் திருமகனை &#8211; இங்கு வந்து<br />
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)</p>
<p>அல்லிக் குளத்தருகே &#8211; ஒருநாள்<br />
அந்திப் பொழுதினிலே &#8211; அங்கோர்<br />
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை<br />
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)</p>
<p>பாலை வனத்திடையே &#8211; தனைக் கைப்<br />
பற்றி நடக்கையிலே &#8211; தன் கை<br />
வேலின் மிசையாணை &#8211; வைத்துச் சொன்ன<br />
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)</p>
<h3>முருகன் பாட்டு</h3>
<p>வீரத் திருவிழிப் பார்வையும் &#8211; வெற்றி<br />
வேலும் மயிலும்என் முன்னின்றே &#8211; எந்த<br />
நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை<br />
நீலி பராசக்தி தண்ணருட் &#8211; கரை<br />
ஓரத்திலே புணை கூடுதே! &#8211; கந்தன்<br />
ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை<br />
வாரத் திலேவிளை யாடுவான் -என்றும்<br />
வானவர் துன்பத்தைச் சாடுவான்.</p>
<p>வேடர் கனியை விரும்பியே- தவ<br />
வேடம் புனைந்து திரிகுவான்- தமிழ்<br />
நாடு பெரும்புகழ் சேரவே -முனி<br />
நாதனுக் கிம்மொழி கூறுவான்- சுரர்<br />
பாடு விடிந்து மகிழ்ந்திட &#8211; இருட்<br />
பார மலைகளைச் சீறுவான்-மறை<br />
யேடு தரித்த முதல்வனும் &#8211; குரு<br />
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.</p>
<p>தேவர் மகளை மணந்திடத் -தெற்குத்<br />
தீவில சுரனை மாய்த்திட்டான், &#8211; மக்கள்<br />
யாவருக் குந்தலை யாயினான், &#8211; மறை<br />
அர்த்த முணர்ந்துநல் வாயினன், &#8211; தமிழ்ப்<br />
பாவலர்க் கின்னருள் செய்குவான், &#8211; இந்தப்<br />
பாரில் அறமழை பெய்குவான், -நெஞ்சின்<br />
ஆவ லறிந்தருள் கூட்டுவான், &#8211; நித்தம்<br />
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.</p>
<p>தீவளர்த் தேபழ வேதியர் &#8211; நின்றன்<br />
சேவகத் தின்புகழ் காட்டினார், &#8211; ஒளி<br />
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார், &#8211; நின்றன்<br />
மேன்மையி னாலறம் நாட்டினார், &#8211; ஜய!<br />
நீவள ருங்குரு வெற்பிலே &#8211; வந்து<br />
நின்றுநின் சேவகம் பாடுவோம் &#8211; வரம்<br />
ஈவள் பராசக்தி யன்னை தான் &#8211; உங்கள்<br />
இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)</p>
<h3>எமக்கு வேலை &#8211; பாரதியார் பாடல்கள் முருகன்</h3>
<p>தோகைமேல் உலவுங் கந்தன்<br />
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி<br />
வாகையே சுமக்கும் வேலை<br />
வணங்குவது எமக்கு வேலை.</p>
<h3>வள்ளிப்பாட்டு &#8211; 1</h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ<br />
குறவள்ளீ, சிறு கள்ளி!</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>(இந்த) நேரத்தி லேமலை வாரத்தி லேநதி<br />
யோரத்தி லேயுனைக் கூடி -நின்றன்<br />
வீரத் தமிழ்ச் சொல்லின் சாரத்தி லேமனம்<br />
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி &#8211; குழல்<br />
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை<br />
யோரத்திலே அன்பு சூடி &#8211; நெஞ்சம்<br />
ஆரத் தழுவி அமர நிலை பெற்றதன்<br />
பயனை யின்று காண்பேன். (எந்த நேரமும்)</p>
<p>வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி<br />
விரிந்து மொழிவது கண்டாய் &#8211; ஒளிக்<br />
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்<br />
குறிப்பிணி லேயொன்று பட்டு &#8211; நின்றன்<br />
பிள்ளைக் கிளிமென் குதலியி லேமனம்<br />
பின்ன மறச் செல்லவிட்டு &#8211; அடி<br />
தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வ மே! . நினைச்<br />
சேர விரும்பினன் கண்டாய். (எந்த நேரமும்)</p>
<p>வட்டங்க ளிட்டுங் குளமக லாத<br />
மணங்ப்பெருந் தெப்பத்தைப் போல &#8211; நினை<br />
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்து நின்<br />
மேனி தனைவிட லின்றி &#8211; அடி<br />
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை<br />
இரவியைப் போன்ற முகத்தாய்! &#8211; முத்தம்<br />
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்<br />
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்த நேரமும்)</p>
<h3>வள்ளிப் பாட்டு &#8211; 2</h3>
<p><strong>ராகம் -கரஹரப்ரியை தாளம்-ஆதி</strong></p>
<p><strong>பல்லவி</strong></p>
<p>உனையே மயல் கொண்டேன் -வள்ளீ!<br />
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! (உனையே)</p>
<p><strong>சரணம்</strong></p>
<p>எனை யாள்வாய், வள்ளீ! வள்ளீ<br />
இளமயி லே! என் இதயமலர் வாழ்வே!<br />
கனியே! சுவையுறு தேனே<br />
கலவியி லேஅமு தனையாய், &#8211; (கலவியிலே)<br />
தனியே, ஞான விழியாய்! &#8211; நிலவினில்<br />
நினமருவி, வள்ளீ, வள்ளீ!<br />
நீயா கிடவே வந்தேன். (உனையே)</p>
<h3>இறைவா! இறைவா!</h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>எத்தனை கோடி இன்பம் வைத்தாய் &#8211; எங்கள்<br />
இறைவா! இறைவா! இறைவா! (ஓ &#8211; எத்தனை)</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு<br />
சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.<br />
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய<br />
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)</p>
<p>முக்தியென் றொருநிலை சமைத்தாய் &#8211; அங்கு<br />
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்<br />
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் &#8211; எங்கள<br />
பரமா! பரமா! பரமா! (ஓ &#8211; எத்தனை)</p>
<ul>
<li><strong>Read More:-</strong> <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/">பாரதியார் பாடல்கள் முருகன்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் பராசக்தி பாடல்கள்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 05:58:28 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33067</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் பாரதியார் பராசக்தி பாடல்கள் பற்றிய பாரதியார் பராசக்தி கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்த பதிவில் உள்ள தலைப்புக்கள் :  1. <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/" title="பாரதியார் பராசக்தி பாடல்கள்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/">பாரதியார் பராசக்தி பாடல்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் <strong>பாரதியார் பராசக்தி பாடல்கள்</strong> பற்றிய <strong>பாரதியார் பராசக்தி கவிதைகள் </strong>தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.</p>
<figure id="attachment_33068" aria-describedby="caption-attachment-33068" style="width: 231px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-33068" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பராசக்தி-பாடல்கள்.jpg" alt="பாரதியார் பராசக்தி பாடல்கள்" width="231" height="300" /><figcaption id="caption-attachment-33068" class="wp-caption-text">பாரதியார் பராசக்தி பாடல்கள்</figcaption></figure>
<p><strong>இந்த பதிவில் உள்ள தலைப்புக்கள் :  1. பராசக்தி போற்றி |  2. சிவசக்தி | 3. காணி நிலம் வேண்டும் | 4. நல்லதோர் வீணை | 5. மஹாசக்திக்கு விண்ணப்பம் | 6. அன்னையை வேண்டுதல் |  7. பூலோக குமாரி | 8. மஹா சக்தி வெண்பா | 9. ஓம் சக்தி | 10. பராசக்தி | 11. சக்திக் கூத்து | 12. சக்தி | 13. வையம் முழுதும் | 14. சக்தி விளக்கம் | 15. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் | 16. சக்தி திருப்புகழ் | 17. சிவசக்தி புகழ் | 18. பேதை நெஞ்சே | 19. மஹாசக்தி</strong></p>
<h3>பாரதியார் பராசக்தி போற்றி</h3>
<p><strong>அகவல்</strong></p>
<p>போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!<br />
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்!<br />
கனியிலே சுவையும், காற்றிலே இயக்கமும்<br />
கலந்தாற் போலநீ, அனைத்திலும் கலந்தாய்,<br />
உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி!</p>
<p>அன்னை போற்றி! அமுதமே போற்றி!<br />
புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்<br />
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,<br />
உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே<br />
நானெனும் பொருளாய் நானையே பெருக்கித்</p>
<p>தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,<br />
கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்,<br />
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,<br />
யானென தின்றி யிருக்குநல் யோகியர்<br />
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,</p>
<p>செய்கையாய் ஊக்கமாய், சித்தமாய் அறிவாய்<br />
நின்றிடும் தாயே, நித்தமும் போற்றி!<br />
இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி!<br />
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!<br />
அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி!</p>
<p>சக்தி, போற்றி! தாயே, போற்றி!<br />
முக்தி, போற்றி! மோனமே, போற்றி!<br />
சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!</p>
<h3>சிவசக்தி &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>இயற்கை யென்றுரைப்பார் &#8211; சிலர்<br />
இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,<br />
செயற்கையின் சக்தியென்பார் &#8211; உயிர்த்<br />
தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்,<br />
வியப்புறு தாய்நினக்கே &#8211; இங்கு<br />
வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்<br />
நயப்படு மதுவுண்டே? &#8211; சிவ<br />
நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.</p>
<p>அன்புறு சோதியென்பார் &#8211; சிலர்<br />
ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்,<br />
இன்பமென் றுரைத்திடுவார் &#8211; சிலர்<br />
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்,<br />
புன்பலி கொண்டுவந்தோம் &#8211; அருள்<br />
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்<br />
மின்படு சிவசக்தி &#8211; எங்கள்<br />
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.</p>
<p>உண்மையில் அமுதாவாய் &#8211; புண்கள்<br />
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்,<br />
வண்மைகொள் உயிர்ச்சுடராய் &#8211; இங்கு<br />
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்,<br />
ஒண்மையும் ஊக்கமுந்தான் &#8211; என்றும்<br />
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்<br />
அண்மையில் என்றும் நின்றே &#8211; எம்மை<br />
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.</p>
<p>தெளிவுறும் அறிவினை நாம் &#8211; கொண்டு<br />
சேர்த்தனம், நினக்கது சோமரசம்,<br />
ஒளியுறும் உயிர்ச்செடியில் &#8211; இதை<br />
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்,<br />
களியுறக் குடித்திடுவாய் &#8211; நின்றன்<br />
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்,<br />
குளிர்சுவைப் பாட்டிசைத்தே &#8211; சுரர்<br />
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.</p>
<p>அச்சமும் துயரும் என்றே &#8211; இரண்டு<br />
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்,<br />
துச்சமிங் கிவர்படைகள் &#8211; பல<br />
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,<br />
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்<br />
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,<br />
பிச்சையிங் கெமக்களித்தாய் &#8211; ஒரு<br />
பெருநகர் உடலெனும் பெயரினதாம்.</p>
<p>கோடிமண் டபந்திகழும் &#8211; திறற்<br />
கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்<br />
நாடிநின் றிடர்புரிவார் &#8211; உயிர்<br />
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்,<br />
சாடுபல் குண்டுகளால் &#8211; ஒளி<br />
சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்<br />
பாடிநின் றுனைப்புகழ்வோம் &#8211; எங்கள்<br />
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.</p>
<p>நின்னருள் வேண்டுகின்றோம் &#8211; எங்கள்<br />
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே,<br />
பொன்னவிர் கோயில்களும் &#8211; எங்கள்<br />
பொற்புடை மாதரும் மதலையரும்,<br />
அன்னநல் லணிவயல்கள் &#8211; எங்கள்<br />
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,<br />
இன்னவை காத்திடவே &#8211; அன்னை<br />
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.</p>
<p>எம்முயி ராசைகளும் &#8211; எங்கள்<br />
இசைகளும் செயல்களும் துணிவுகளும்<br />
செம்மையுற் றிடஅருள்வாய் &#8211; நின்றன்<br />
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.<br />
மும்மையின் உடைமைகளும் &#8211; திரு<br />
முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,<br />
அம்மைநற் சிவசக்தி &#8211; எமை<br />
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.</p>
<h3>காணி நிலம் வேண்டும்</h3>
<p>காணி நிலம் வேண்டும் &#8211; பராசக்தி<br />
காணி நிலம் வேண்டும், &#8211; அங்கு<br />
தூணில் அழகியதாய் &#8211; நன்மாடங்கள்<br />
துய்ய நிறத்தினதாய் &#8211; அந்தக்<br />
காணி நிலத்தினிடையே &#8211; ஓர்மாளிகை<br />
கட்டித் தரவேண்டும் &#8211; அங்கு<br />
கேணியருகினிலே &#8211; தென்னைமரம்<br />
கீற்று மிளநீரும்.</p>
<p>பத்துப் பன்னிரண்டு &#8211; தென்னைமரம்<br />
பக்கத்திலே வேணும் &#8211; நல்ல<br />
முத்துச் சுடர்போலே &#8211; நிலாவொளி<br />
முன்பு வரவேணும், அங்கு<br />
கத்துங் குயிலோசை &#8211; சற்றே வந்து<br />
காதிற் படவேணும், &#8211; என்றன்<br />
சித்தம் மகிழ்ந்திடவே &#8211; நன்றாயிளந்<br />
தென்றல் வரவேணும்.</p>
<p>பாட்டுக் கலந்திடவே &#8211; அங்கேயொரு<br />
பத்தினிப் பெண்வேணும் &#8211; எங்கள்<br />
கூட்டுக் களியினிலே &#8211; கவிதைகள்<br />
கொண்டுதர வேணும் &#8211; அந்தக்<br />
காட்டு வெளியினிலே &#8211; அம்மா! நின்றன்<br />
காவலுற வேணும், &#8211; என்றன்<br />
பாட்டுத் திறத்தாலே &#8211; இவ்வையத்தைப்<br />
பாலித்திட வேணும்.</p>
<h3>நல்லதோர் வீணை &#8211; <strong>பாரதியார் பராசக்தி கவிதைகள் </strong></h3>
<p>நல்லதோர் வீணை செய்தே &#8211; அதை<br />
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?<br />
சொல்லடி சிவசக்தி &#8211; எனைச்<br />
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.<br />
வல்லமை தாராயோ, &#8211; இந்த<br />
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?<br />
சொல்லடி, சிவசக்தி &#8211; நிலச்<br />
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?</p>
<p>விசையுறு பந்தினைப்போல் &#8211; உள்ளம்<br />
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,<br />
நசையறு மனங்கேட்டேன் &#8211; நித்தம்<br />
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,<br />
தசையினைத் தீசுடினும் &#8211; சிவ<br />
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,<br />
அசைவறு மதிகேட்டேன் &#8211; இவை<br />
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?</p>
<h3>மஹாசக்திக்கு விண்ணப்பம்</h3>
<p>மோகத்தைக் கொன்றுவிடு &#8211; அல்லா லென்றன்<br />
மூச்சை நிறுத்திவிடு,<br />
தேகத்தைச் சாய்த்துவிடு &#8211; அல்லா லதில்<br />
சிந்தனை மாய்த்துவிடு,<br />
யோகத் திருத்திவிடு &#8211; அல்லாலென்றன்<br />
ஊனைச் சிதைத்துவிடு,<br />
ஏகத் திருந்துலகம் &#8211; இங்குள்ள<br />
யாவையும் செய்பவளே!</p>
<p>பந்தத்தை நீக்கிவிடு &#8211; அல்லா லுயிர்ப்<br />
பாரத்தைப் போக்கிவிடு,<br />
சிந்தை தெளிவாக்கு &#8211; அல்லா லிதைச்<br />
செத்த உடலாக்கு,<br />
இந்தப் பதர்களையே &#8211; நெல்லா மென<br />
எண்ணி இருப்பேனோ?<br />
எந்தப் பொருளிலுமே &#8211; உள்ளே நின்று<br />
இயங்கி யிருப்பவளே!</p>
<p>உள்ளம் குளிராதோ? பொய்யாணவ<br />
ஊனம் ஒழியாதோ?<br />
கள்ளம் உருகாதோ? &#8211; அம்மா! பக்திக்<br />
கண்ணீர் பெருகாதோ?<br />
வெள்ளக் கருணையிலே &#8211; இந்நாய் சிறு<br />
வேட்கை தவிராதோ?<br />
விள்ளற் கரியவளே &#8211; அனைத்திலும்<br />
மேவி யிருப்பவளே!</p>
<h3>அன்னையை வேண்டுதல்</h3>
<p>எண்ணிய முடிதல் வேண்டும்,<br />
நல்லவே எண்ணல் வேண்டும்,<br />
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,<br />
தெளிந்த நல்லறிவு வேண்டும்,<br />
பண்ணிய பாவமெல்லாம்<br />
பரிதிமுன் பனியே போலே,<br />
நண்ணிய நின்முன் இங்கு<br />
நசித்திட வேண்டும் அன்னாய்!</p>
<h3>பூலோக குமாரி &#8211; <strong>பாரதியார் பராசக்தி கவிதைகள் </strong></h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>பூலோக குமாரி ஹே அம்ருத நாரி!</p>
<p><strong>அனுபல்லவி</strong></p>
<p>ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே<br />
கால பய குடாரி காம வாரி, கன லதா ரூப கர்வ திமிராரே.</p>
<p><strong>சரணம்</strong></p>
<p>பாலே ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே,<br />
நீல ரத்ன மய நேக்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே<br />
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ, நிரந்தரே நிகில, லோகேசாநி<br />
நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி, நிஜம் மாம் குருஹே மன்மத ராணி.</p>
<h3>மஹா சக்தி வெண்பா</h3>
<p>தன்னை மறந்து சகல உலகினையும்<br />
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி &#8211; அன்னை<br />
அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்<br />
துவளா திருத்தல் சுகம்.</p>
<p>நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,<br />
அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, &#8211; தஞ்சமென்றே<br />
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை<br />
ஐயமறப் பற்றல் அறிவு.</p>
<p>வையகத்துக் கில்லை! மனமே! நினைக்குநலஞ்<br />
செய்யக் கருதியிவை செப்புவேன் &#8211; பொய்யில்லை<br />
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற<br />
சொல்லால் அழியும் துயர்.</p>
<p>எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்<br />
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர்<br />
சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு<br />
பக்தியுடன் வாழும் படிக்கு.</p>
<h3>ஓம் சக்தி &#8211; <strong>பாரதியார் பராசக்தி கவிதைகள் </strong></h3>
<p>நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்<br />
நிறைந்த சுடர்மணிப் பூண்.<br />
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்<br />
பார்வைக்கு நேர் பெருந்தீ.<br />
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி<br />
வையக மாந்த ரெல்லாம்,<br />
தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி<br />
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.</p>
<p>நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி<br />
நலத்தை நமக்கிழைப் பாள்,<br />
அல்லது நீங்கும் என்றே யுலகேழும்<br />
அறைந்திடுவாய் முரசே!<br />
சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு<br />
சொல்லு மவர் தமையே!<br />
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்<br />
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.</p>
<p>நம்புவ தேவழி யென்ற மறைதன்னை<br />
நாமின்று நம்பி விட்டோம்<br />
கும்பிட்டெந் நேரமும் சக்தி யென் றாலுனைக்<br />
கும்பிடுவேன் மனமே!<br />
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்<br />
அச்சமில் லாதபடி<br />
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்<br />
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.</p>
<p>பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,<br />
போற்றி உனக்கிசைத் தோம்,<br />
அன்னை பராசக்தி என்றுரைத் தோம், தளை<br />
அத்தனையுங் களைந்தோம்,<br />
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன<br />
மே தொழில் வேறில்லை, காண்,<br />
இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி<br />
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.</p>
<p>வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு<br />
ளாக விளங்கிடு வாய்!<br />
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு<br />
விண்ணப்பஞ் செய்திடுவேன்,<br />
எள்ளத் தனைபொழுதும் பயனின்றி<br />
இரா தென்றன் நாவினிலே<br />
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி<br />
வேல், சக்தி வேல், சக்தி வேல்!</p>
<h3>பராசக்தி &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்,<br />
காவி யம்பல நீண்டன கட்டென்பார்,<br />
விதவி தப்படு மக்களின் சித்திரம்<br />
மேவி நாடகச் செய்யுளை வேவென்பார்,<br />
இதயமோ எனிற் காலையும் மாலையும்<br />
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,<br />
எதையும் வேண்டில தன்னை பராசக்தி<br />
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.</p>
<p>நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்<br />
நையப் பாடன் றொரு தெய்வங் கூறுமே,<br />
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்<br />
கொண்டு வையம் முழுதும் பயனுறப்<br />
பாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம்,<br />
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்<br />
ஊட்டி எங்கும் உவகை பெருகிட<br />
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.</p>
<p>நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்<br />
நானி லத்தவர் மேனிலை எய்தவும்<br />
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்<br />
பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்Y<br />
முட்டும் அன்புக் கனலொடு வாணியை<br />
முன்னு கின்ற பொழிதி லெலாங்குரல்<br />
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்<br />
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.</p>
<p>மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்<br />
வானி ருண்டு கரும்புயல் கூடியே<br />
இழையு மின்னல் சரேலென்று பாயவும்<br />
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்<br />
உழைய லாம்இடையின் றிஇவ் வானநீர்<br />
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்<br />
&#8220;மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்!<br />
வாழ்க தாய்!&#8221; என்று பாடுமென் வாணியே.</p>
<p>சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்<br />
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்,<br />
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்<br />
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்,<br />
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்<br />
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,<br />
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்<br />
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!</p>
<h3>சக்திக் கூத்து &#8211; <strong>பாரதியார் பராசக்தி கவிதைகள் </strong></h3>
<p><strong>ராகம் &#8211; பியாக்</strong></p>
<p><strong>பல்லவி</strong></p>
<p>தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? &#8211; சிவ<br />
சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் &#8211; அவள்<br />
அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்<br />
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே<br />
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)</p>
<p>புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்<br />
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்<br />
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே &#8211; அது<br />
குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)</p>
<p>மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர &#8211; உன்<br />
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர<br />
சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்<br />
சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்)</p>
<h3>சக்தி &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>துன்ப மங்லாத நிலையே சக்தி,<br />
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி,<br />
அன்பு கனிந்த கனிவே சக்தி,<br />
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி,<br />
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,<br />
எண்ணத் திருக்கும் எரியே சக்தி,<br />
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,<br />
முக்தி நிலையின் முடிவே சக்தி.</p>
<p>சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,<br />
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி,<br />
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,<br />
தெயவத்தை எண்ணும் நினைவே சக்தி,<br />
பாம்பை அடிக்கும் படையே சக்தி,<br />
பாட்டினில் வந்த களியே சக்தி,<br />
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்<br />
சங்கரன் அன்புத் தழலே சக்தி.</p>
<p>வாழ்வு பெருக்கும் மதியே சக்தி,<br />
மாநிலங் காக்கும் மதியே சக்தி,<br />
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,<br />
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,<br />
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,<br />
விண்ணை யளக்கும் விரிவே சக்தி,<br />
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,<br />
உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.</p>
<h3>வையம் முழுதும்</h3>
<p><strong>கண்ணிகள்</strong></p>
<p>வையம் முழுதும் படைத்தளிக் கின்ற<br />
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்,<br />
செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி<br />
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே.</p>
<p>பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்<br />
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்,<br />
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை<br />
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே.</p>
<p>வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை<br />
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்,<br />
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை<br />
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே.</p>
<p>உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்<br />
தோங்கிடும் சக்தியை ஓது கின்றோம்,<br />
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்<br />
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே.</p>
<p>சித்தத்தி லே நின்று சேர்வ துணரும்<br />
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்,<br />
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்<br />
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே.</p>
<p>மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்<br />
வையமிசை நித்தம் பாடு கின்றோம்,<br />
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்<br />
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.</p>
<p>ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி<br />
ஓம்சக்தி என்றுரை செய்திடு வோம்,<br />
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்<br />
ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார்.</p>
<h3>சக்தி விளக்கம் &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் &#8211; அதை<br />
அன்னை எனப்பணிதல் ஆக்கம்,<br />
சூதில்லை காணுமிந்த நாட்டீர்! &#8211; மற்றத்<br />
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம்.</p>
<p>மூலப் பழம்பொருளின் நாட்டம் &#8211; இந்த<br />
மூன்று புவியுமதன் ஆட்டம்!<br />
காலப் பெருங்களத்தின் மீதே &#8211; எங்கள்<br />
காளி நடமுலகக் கூட்டம்.</p>
<p>காலை இளவெயிலின் காட்சி &#8211; அவள்<br />
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி,<br />
நீல விசும்பினிடை இரவில் &#8211; சுடர்<br />
நேமி யனைத்துமவள் ஆட்சி.</p>
<p>நாரண னென்று பழவேதம் &#8211; சொல்லும்<br />
நாயகன் சக்திதிருப் பாதம்,<br />
சேரத் தவம் புரிந்து பெறுவார் &#8211; இங்கு<br />
செல்வம் அறிவு சிவபோதம்.</p>
<p>ஆதி சிவனுடைய சக்தி &#8211; எங்கள்<br />
அன்னை யருள் பெறுதல் முக்தி,<br />
மீதி உயிரிருக்கும்போதே &#8211; அதை<br />
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.</p>
<p>பண்டை விதியுடைய தேவி &#8211; வெள்ளைப்<br />
பாரதி யன்னையருள் மேவி<br />
கண்ட பொருள் விளக்கும் நூல்கள் &#8211; பல<br />
கற்றலில் லாதவனோர் பாவி.</p>
<p>மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று &#8211; அந்த<br />
மூலப் பொருள் ஒளியின் குன்று<br />
நேர்த்தி திகழும் அந்த ஒளியை &#8211; எந்த<br />
நேரமும் போற்று சக்தி என்று.</p>
<h3>சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்</h3>
<p><strong>ராகம் &#8211; பூபாளம் தாளம் &#8211; சதுஸ்ர ஏகம்</strong></p>
<p>கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு &#8211; அது<br />
சாதனைகள் யாவினையுங் கூடும் &#8211; கையைச்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.</p>
<p>கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு &#8211; அது<br />
சக்தி வழியதனைக் காணும் &#8211; கண்ணைச்<br />
சக்தி தனக்கே கருவி யாக்கு &#8211; அது<br />
சத்தியமும் நல்லருளும் பூணும்.</p>
<p>செவி, சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; சிவ<br />
சக்தி சொலும் மொழியது கேட்கும் &#8211; செவி<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்திதிருப் பாடலினை வேட்கும்.</p>
<p>வாய், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; சிவ<br />
சக்தி புகழினையது முழங்கும் &#8211; வாய்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தி நெறி யாவினையும் வழங்கும்.</p>
<p>சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் &#8211; அதச்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; சிவ<br />
சக்தி தங்ருச் சுவையினை நுகரும் &#8211; சிவ<br />
சக்தி தாக்கே எமது நாக்கு.</p>
<p>மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; சிவ<br />
சக்தி தருந் திறனதி லேரும் &#8211; மெய்யைச்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சாதலற்ற வழியினை தேறும்.</p>
<p>கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சந்ததமும் நல்லமுதைப் பாடும் &#8211; கண்டம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தியுடன் என்றும் உறவாடும்.</p>
<p>தோள், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
தாரணியும் மேலுலகுந் தாங்கும் &#8211; தோள்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தி பெற்று மேருவென ஓங்கும்.</p>
<p>நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தியுற நித்தம் விரிவாகும் &#8211; நெஞ்சம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அதைத்<br />
தாக்க வரும் வாளொதுங்கிப் போகும்.</p>
<p>சிவ, சக்தி தனக்கே எமது வயிறு &#8211; அது<br />
சாம்பரையும் நல்லவுண வாகும் &#8211; சிவ<br />
சக்தி தனக்கே எமது வயிறு &#8211; அது<br />
சக்தி பெற உடலினைக் காக்கும்.</p>
<p>இடை, சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; நல்ல<br />
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் &#8211; இடை<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; நின்றன்<br />
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும்.</p>
<p>கால், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சாடியெழு கடலையுந் தாவும் &#8211; கால்<br />
சக்தி தனக்கே கருவி யாக்கு &#8211; அது<br />
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவி யாக்கு &#8211; அதில்<br />
சாத்துவீகத் தன்மையங்னைச் சூடும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அதங்ல்<br />
சாரும் நல்ல உறுதங்யும் சீரும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தி சக்தி சக்தியென்று பேசும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அதங்ல்<br />
சார்ந்தங்ருக்கும் நல்லுறவும் தேசும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தி சக்தி யென்று குதித் தாடும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அது<br />
சந்தமும் சக்திதனைச் சூழும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; அதில்<br />
சாவுபெறும் தீவினையும் ஊழும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; எதைத்<br />
தான் விரும்பி னாலும்வந்து சாரும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; உடல்<br />
தன்னிலுயர் சக்திவந்து சேரும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; இந்தத்<br />
தாரணியில் நூறுவய தாகும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; உன்னைச்<br />
சாரவந்த நோயழிந்து போகும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; தோள்<br />
சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; எங்கும்<br />
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; சிவ<br />
சக்தி நடையாவும் நன்கு பழகும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; முகம்<br />
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; உயர்<br />
சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் &#8211; மனம்<br />
சக்தி தனக்கே கருவியாக்கு &#8211; நல்ல<br />
சத்திய விளக்கு நித்தம் எரியும்.</p>
<p>சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; நல்ல<br />
தாளவகை சந்தவகை காட்டும் &#8211; சித்தம்<br />
சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அதில்<br />
சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும்.</p>
<p>சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு &#8211; அறு<br />
சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் &#8211; சித்தம்<br />
சக்தி தனக்கே உரிமை யாக்கு<br />
சக்திபுகழ் திக்கனைக்கும் நிறுத்தும்.</p>
<p>மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சக்தி சக்தி என்று குழலூதும் &#8211; சித்தம்<br />
சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அதில்<br />
சார்வதில்லை அச்சமுடன் சூதும்.</p>
<p>சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சக்தி யென்று வீணைதனில் பேசும் &#8211; சித்தம்<br />
சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சக்திபரி மளமிங்கு வீசும்.</p>
<p>சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் &#8211; சித்தம்<br />
சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும்.</p>
<p>சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சக்திவந்து கோட்டை கட்டி வாழும் &#8211; சித்தம்<br />
சக்தி தனக்கே உரிமையாக்கு &#8211; அது<br />
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அங்கு<br />
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சாரவருந் தீமைகளை விலக்கும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சக்தியுறை விடங்களை நாடும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அதில்<br />
தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அதில்<br />
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அதில்<br />
சக்தியொளி நித்தமுநின் றிலகும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அதில்<br />
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அதில்<br />
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு.</p>
<p>மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
தாரணியில் அன்புநிலை நாட்டும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
சக்திதிரு வருளினைச் சேர்க்கும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
சத்தியநல் லிரவியைக் காட்டும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அதில்<br />
சாரவரும் புயல்களை வாட்டும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
சக்திவிர தத்தை யென்றும் பூணும் &#8211; மதி<br />
சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் &#8211; சிவ<br />
சக்திதரும் இன்பமும்நல் லூணும்.</p>
<p>மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; தெளி<br />
தந்தமுதம் பொய்கையென ஒளிரும் &#8211; மதி<br />
சக்தி தனக்கே அடிமையாக்கு &#8211; அது<br />
சந்ததமும் இன்பமுற மிளிரும்.</p>
<p>அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
தன்னையொரு சக்தியென்று தேரும் &#8211; அகம்<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
தாமதமும் ஆணவமும் தீரும்.</p>
<p>அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
தன்னையவள் கோயிலென்று காணும் &#8211; அகம்<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும்.</p>
<p>அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சக்தியெனும் கடலிலோர் திவலை &#8211; அகம்<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; சிவ<br />
சக்தி யுண்டு நமக்கில்லை கவலை.</p>
<p>அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அதில்<br />
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் &#8211; அகம்<br />
சக்தி தனக்கே உடைமையாக்கு &#8211; அது<br />
சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும்.</p>
<p>சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு &#8211; சிவ<br />
சக்திசக்தி யென்று குதித்தாடு &#8211; சிவ<br />
சக்தி என்றும் வாழி! என்றுபாடு &#8211; சிவ<br />
சக்திசக்தி என்றுவிளை யாடு.</p>
<h3>சக்தி திருப்புகழ்</h3>
<p>சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது,<br />
சக்திசக்தி சக்தீ என்பார் &#8211; சாகார் என்றே நின்றோது.</p>
<p>சக்திசக்தி என்றே வாழ்தல் &#8211; சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!<br />
சக்திசக்தி என்றீ ராகில் &#8211; சாகா உண்மை சேர்ந்தீரே!</p>
<p>சக்திசக்தி என்றால் சக்தி &#8211; தானே சேரும் கண்டீரே!<br />
சக்திசக்தி என்றால் வெற்றி &#8211; தானே நேரும் கண்டீரே!</p>
<p>சக்திசக்தி என்றே செய்தால் &#8211; தானே செய்கை நேராகும்,<br />
சக்திசக்தி என்றால் அஃது -தானே முத்தி வேராகும்.</p>
<p>சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ?<br />
சக்திசக்தி சக்தீ யென்றே &#8211; தாளங்கொட்டிப் பாடோமோ?</p>
<p>சக்திசக்தி என்றால் துன்பம் &#8211; தானே தீரும் கண்டீரே!<br />
சக்திசக்தி என்றால் இன்பம் &#8211; தானே சேரும் கண்டீரே!</p>
<p>சக்திசக்தி என்றால் செல்வம் &#8211; தானே ஊறும் கண்டீரோ?<br />
சக்திசக்தி என்றால் கல்வி &#8211; தானே தேறும் கண்டீரோ?</p>
<p>சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!<br />
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ!</p>
<p>சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும்,<br />
சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும்.</p>
<h3> சிவசக்தி புகழ் &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>ராகம் &#8211; தன்யாசி தாளம் &#8211; சதுஸ்ர ஏகம்</p>
<p>ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு &#8211; கெட்ட<br />
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு ,<br />
சக்திசக்தி சக்தியென்று சொல்லி &#8211; அவள்<br />
சந்நிதியி லேதொழுது நில்லு.</p>
<p>ஓம், சக்திமிசை பாடல்பல பாடு &#8211; ஓம்<br />
சக்திசக்தி என்று தாளம் போடு.<br />
சக்திதருஞ் செய்கைநிலந் தனிலே &#8211; சிவ<br />
சக்திவெறி கொண்டுகளித் தாடு.</p>
<p>ஓம், சக்திதனையே சரணங் கொள்ளு &#8211; என்றும்<br />
சாவினுக்கோ ரச்சமில்லை தள்ளு.<br />
சக்திபுக ழாமமுதை அள்ளு &#8211; மது<br />
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளு.</p>
<p>ஓம் சக்திசெய்யும் புதுமைகள் பேசு &#8211; நல்ல<br />
சக்தியற்ற பேடிகளை ஏசு.<br />
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி &#8211; அவள்<br />
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.</p>
<p>ஓம் சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை &#8211; இதைச்<br />
சார்ந்து நிற்ப தேநமக்கொ ருய்கை,<br />
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை &#8211; அதில்<br />
தன்னமுத மாரிநித்தம் பெய்கை.</p>
<p>ஓம் சக்திசக்தி சக்தியென்று நாட்டு &#8211; சிவ<br />
சக்தியருள் பூமிதனில் காட்டு,<br />
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார் &#8211; புவிச்<br />
சாதிகளெல் லமதனைக் கேட்டு.</p>
<p>ஓம் சக்திசக்தி சக்தியென்று முழங்கு &#8211; அவள்<br />
தந்திரமெல் லாமுலகில் வழங்கு.<br />
சக்தியருள் கூடிவிடு மாயின் உயிர்<br />
சந்ததமும் வாழுநல்ல கிழங்கு.</p>
<p>ஓம் சக்திசெய்யுந் தொழில்கலை எண்ணு &#8211; நித்தம்<br />
சக்தியுள்ள தொழில்பல பண்ணு,<br />
சக்திகளை யேஇழந்துவிட்டால் &#8211; இங்கு<br />
சாவினையும் நோவினையும் உண்ணு.</p>
<p>ஓம் சக்தியரு ளாலுலகில் ஏறு &#8211; ஒரு<br />
சங்கடம்வந் தாலிரண்டு கூறு,<br />
சக்திசில சோதனைகள் செய்தால் &#8211; அவள்<br />
தண்ணருளென் றேமனது தேறு.</p>
<p>ஓம் சக்திதுணை என்றுநம்பி வாழ்த்து &#8211; சிவ<br />
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து,<br />
சக்தியும் சிறப்பும்மி கப்பெறுவாய் &#8211; சிவ<br />
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து!</p>
<h3>பேதை நெஞ்சே &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!<br />
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை,<br />
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோமில்லை,<br />
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை,<br />
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே<br />
வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!<br />
பின்னையொரு கவலையுமிங்கில்லை, நாளும்<br />
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்!</p>
<p>நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,<br />
நினைத்தப் பயன் காண்பதவள் செய்கை யன்றோ?<br />
மனமார உண்மையினைப் புரட்ட லாமோ?<br />
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?<br />
எனையாளும் மாதேவி, வீரர் தேவி<br />
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத்தேவி,<br />
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி<br />
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே!</p>
<p>சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்,<br />
சங்கர னென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,<br />
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி<br />
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி,<br />
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,<br />
பசிபிணிக ளிலாமற் காக்கச் சொல்லி<br />
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,<br />
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே!</p>
<p>செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்,<br />
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,<br />
கல்வியிலே மதியினை நீ தொடுக்க னொன் றில்லை,<br />
கருணையினாaல் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,<br />
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,<br />
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே<br />
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்<br />
நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!</p>
<p>பாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்!<br />
பயனின்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!<br />
கேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை,<br />
கேடில்லை, தெய்வமுண்டு வெற்றியுண்டு,<br />
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,<br />
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,<br />
நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்,<br />
நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!</p>
<h3>மஹாசக்தி &#8211; பாரதியார் பராசக்தி பாடல்கள்</h3>
<p>சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,<br />
சரண மென்று புகுந்து கொண்டேன்,<br />
இந்திரி யங்களை வென்று விட்டேன்,<br />
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.</p>
<p>பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,<br />
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,<br />
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,<br />
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.</p>
<p>மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,<br />
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்,<br />
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,<br />
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.</p>
<ul>
<li><strong>Read More:-</strong> <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/">பாரதியார் பராசக்தி பாடல்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் பாடல்கள் காளி</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 05:06:25 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33063</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் காளி என்ற தலைப்பில் &#8216;காளி பாடல்கள்&#8216; மற்றும் &#8216;காளி ஸ்தோத்திரம்&#8216; மற்றும் காளி அம்மன் பற்றிய கவிதை தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/" title="பாரதியார் பாடல்கள் காளி">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/">பாரதியார் பாடல்கள் காளி</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் <strong>பாரதியார் பாடல்கள் காளி</strong> என்ற தலைப்பில் &#8216;<strong>காளி பாடல்கள்</strong>&#8216; மற்றும் &#8216;<strong>காளி ஸ்தோத்திரம்</strong>&#8216; மற்றும் காளி அம்மன் பற்றிய கவிதை தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.</p>
<figure id="attachment_33064" aria-describedby="caption-attachment-33064" style="width: 245px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-33064" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-காளி.jpg" alt="பாரதியார் பாடல்கள் காளி" width="245" height="300" /><figcaption id="caption-attachment-33064" class="wp-caption-text">பாரதியார் பாடல்கள் காளி</figcaption></figure>
<h3>நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினி)</h3>
<p>உஜ்ஜயினீ நித்ய கல்யாணி!<br />
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)</p>
<p>உஜ்ஜய காரண சங்கர தேவீ<br />
உமாஸரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)</p>
<p>வாழி புனைந்து மஹேசுவர தேவன்<br />
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)</p>
<p>சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,<br />
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)</p>
<h3>காளிப்பாட்டு</h3>
<p>யாதுமாகி நின்றாய் &#8211; காளி! எங்கும் நீநி றைந்தாய்,<br />
தீது நன்மை யெல்லாம் &#8211; காளி! தெய்வ லீலை யன்றோ?<br />
பூத மைந்தும் ஆனாய் &#8211; காளி! பொறிக ளைந்தும் ஆனாய்<br />
போத மாகி நின்றாய் &#8211; காளி! பொறியை விஞ்சி நின்றாய்.</p>
<p>இன்பமாகி விட்டாய் &#8211; காளி! என்னுளே புகுந்தாய்?<br />
பின்பு நின்னை யல்லால் &#8211; காளி! பிறிது நானும் உண்டோ?<br />
அன்ப ளித்து விட்டாய் &#8211; காளி! ஆண்மை தந்துவிட்டாய்,<br />
துன்பம் நீக்கி விட்டாய் &#8211; காளி! தொல்லை போக்கிவிட்டாய்.</p>
<h3>காளி ஸ்தோத்திரம்</h3>
<p>யாது மாகி நின்றய் &#8211; காளி! எங்கும் நீநி றைந்தாய்,<br />
தீது நன்மை யெல்லாம் &#8211; நின்றன் செயல்க ளன்றி யில்லை.<br />
போதும் இங்கு மாந்தர் &#8211; வாழும் &#8211; பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!<br />
ஆதி சக்தி, தாயே! &#8211; என்மீது &#8211; அருள் புரிந்து காப்பாய்.</p>
<p>எந்த நாளும் நின்மேல் &#8211; தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;<br />
கந்தனைப்ப யந்தாய் &#8211; தாயே! கருணை வெள்ளமானாய்<br />
மந்த மாரு தத்தில் &#8211; வானில் &#8211; மலையி னுச்சி மீதில்<br />
சிந்தை யெங்கு செல்லும் &#8211; அங்குன் &#8211; செம்மை தோன்றும் அன்றே!</p>
<p>கர்ம யோகமென்றே &#8211; உலகில் &#8211; காக்கு மென்னும் வேதம்,<br />
தர்ம நீதி சிறிதும் &#8211; இங்கே &#8211; தவற லென்ப தின்றி,<br />
மர்ம மான பொருளாம் &#8211; நின்றன் &#8211; மலர டிக்கண் நெஞ்சம்,<br />
செம்மை யுற்று நாளும் &#8211; சேர்ந்தே &#8211; தேசு கூட வேண்டும்.</p>
<p>என்ற னுள்ள வெளியில் &#8211; ஞானத் &#8211; திரவி யேற வேண்டும்,<br />
குன்ற மொத்த தோளும் &#8211; மேருக் &#8211; கோல மொத்த வடிவும்,<br />
நன்றை நாடு மனமும் &#8211; நீயெந் &#8211; நாளு மீதல் வேண்டும்,<br />
ஒன்றை விட்டு மற்றோர் &#8211; உழலும் நெஞ்சம் வேண்டா.</p>
<p>வான கத்தி னொளியைக் &#8211; கண்டே &#8211; மனம கிழ்ச்சி பொங்கி,<br />
யானெ தற்கும் அஞ்சேன் &#8211; ஆகி &#8211; எந்த நாளும் வாழ்வேன்,<br />
ஞான மொத்த தம்மா! &#8211; உவமை நானு ரைகொ ணாதாம்.<br />
வான கத்தி னொளியின் &#8211; அழகை வாழ்த்து மாறி யாதோ?</p>
<p>ஞாயி றென்ற கோளம் &#8211; தருமோர் &#8211; நல்ல பேரொ ளிக்கே<br />
தேய மீதோர் உவமை &#8211; எவரே &#8211; தேடி யோத வல்லார்?<br />
வாயி னிக்கும் அம்மா! &#8211; அழகாம் &#8211; மதியின் இன்ப ஒளியை<br />
நேயமோ டுரைத்தால் &#8211; அங்கே &#8211; நெஞ்சி ளக்க மெய்தும்.</p>
<p>காளி மீது நெஞ்சம் என்றும் &#8211; கலந்து நிற்க வேண்டும்,<br />
வேளை யொத்த விறலும் &#8211; பாரில் &#8211; வெந்த ரேத்து புகழும்,<br />
யாளி யொத்த வலியும் &#8211; என்றும் &#8211; இன்பம் நிற்கும் மனமும்,<br />
வாழி யீதல் வேண்டும் அன்னாய் &#8211; வாழ்க நின்றன் அருளே!</p>
<h3>காளிக்குச் சமர்ப்பணம்</h3>
<p>இந்த மெய்யும் கரணமும் பொறியும்<br />
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்,<br />
வந்தனம், அடி பேரருள் அன்னாய்,<br />
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!</p>
<p>சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்<br />
திருவ ருட்கெனை அர்ப்பணஞ் செய்தேன்<br />
வந்தி ருந்து பலபய னாகும்<br />
வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!</p>
<h3>ஹே காளீ! (காளி தருவாள்) &#8211; பாரதியார் பாடல்கள் காளி</h3>
<p>எண்ணி லாத பொருட்குவை தானும்,<br />
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே<br />
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும்<br />
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்,<br />
தண்ணி லாவின் அமைதியும் அருளும்,<br />
தருவள் இன்றென தன்னை யென் காளி,<br />
மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,<br />
வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன்.</p>
<p>தானம் வேள்வி தவங்கல்வி யாவும்<br />
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,<br />
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,<br />
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,<br />
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை<br />
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,<br />
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்,<br />
நான்வி ரும்பிய காளி தருவாள்.</p>
<h3>மஹா காளியின் புகழ்</h3>
<p>காவடிச் சிந்துராகம் &#8211; ஆனந்த பைரவி தாளம் &#8211; ஆதி</p>
<p>காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது<br />
காளிசக்தி யென்றபெயர் கொண்டு &#8211; ரீங்<br />
காரமிட் டுலவுமொரு வண்டு &#8211; தழல்<br />
காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்<br />
கால்களா றுடைய தெனக் கண்டு &#8211; மறை<br />
காணுமுனி வோருரைத்தார் பண்டு.<br />
மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி<br />
விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் &#8211; இந்த<br />
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம் &#8211; பழ<br />
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த<br />
வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் &#8211; ஆக<br />
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.</p>
<p>அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்<br />
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை &#8211; இதை<br />
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை &#8211; அவள்<br />
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்<br />
அறிவுமவள் மேனியிலோர் சைகை &#8211; அவள்<br />
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.<br />
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்<br />
இஃதெலா மவள்புரியும் மாயை &#8211; அவள்<br />
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை &#8211; எனில்<br />
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்<br />
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை &#8211; எரித்து<br />
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் &#8211; பேயை.</p>
<p>ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்<br />
அங்குமிங்கு மெங்குமுள வாகும் &#8211; ஒன்றே<br />
யாகினா லுலகனைத்தும் சாகும் &#8211; அவை<br />
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை<br />
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த<br />
அறிவு தான் பரமஞான மாகும்.<br />
நீதியா மரசுசெய்வார் நிதிகள்பல கோடி துய்ப்பர்<br />
நீண்டகாலம் வாழ்வர் தரைமீது &#8211; எந்த<br />
நெறியுமெய்து வர்நினைத்த போது &#8211; அந்த<br />
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத<br />
நீழலடைந் தார்ர்கில்லையோர் தீது &#8211; என்று<br />
நேர்மைவேதம் சொல்லும் வழியிது.</p>
<h3>யோக சக்தி &#8211; பாரதியார் பாடல்கள் காளி</h3>
<p><strong>வரங் கேட்டல்</strong></p>
<p>விண்ணும் மண்ணும் தனியாளும் &#8211; எங்கள்<br />
வீரை சக்தி நினதருளே &#8211; என்றன்<br />
கண்ணும் கருத்தும் எனக்கொண்டு &#8211; அன்பு<br />
கசிந்து கசிந்து கசிந்துருகி &#8211; நான்<br />
பண்ணும் பூசனை கள்எல்லாம் &#8211; வெறும்<br />
பாலை வனத்தில் இட்ட நீரோ, &#8211; உனக்<br />
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ? &#8211; அறி<br />
வில்லா தகிலம் அளிப்பாயோ?</p>
<p>நீயே சரணமென்று கூவி &#8211; என்றன்<br />
நெஞ்சிற் பேருறுதி கொண்டு &#8211; அடி<br />
தாயே! எனக்கு மிக நிதியும் -அறந்<br />
தன்னைக் காக்கு மொருதிறனும் &#8211; தரு<br />
வாயே என்றுபணிந் தேத்திப் &#8211; பல<br />
வாறா நினது புகழ்பாடி &#8211; வாய்<br />
ஓயே னாவதுண ராயோ? &#8211; நின<br />
துண்மை தவறுவதோ அழகோ?</p>
<p>காளீ வலியசா முண்டி &#8211; ஓங்<br />
காரத் தலைவியென் னிராணி &#8211; பல<br />
நாளிங் கெனையலைக்க லாமோ, &#8211; உள்ளம்<br />
நாடும் பொருளடைதற் கன்றோ? &#8211; மலர்த்<br />
தாளில் விழுந்தபயங் கேட்டேன் &#8211; அது<br />
தாரா யெனிலுயிரைத் தீராய் &#8211; துன்பம்<br />
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு<br />
நீலியென் னியல்பறி யாயோ?</p>
<p>தேடிச் சோறுநிதந் தின்று &#8211; பல<br />
சின்னஞ் சிறுகதைகள் பேசி &#8211; மனம்<br />
வாடித் துன்பமிக உழன்று &#8211; பிறர்<br />
வாடப் பலசெயல்கள் செய்து &#8211; நரை<br />
கூடிக் கிழப்பருவ மெய்தி &#8211; கொடுங்<br />
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் &#8211; பல<br />
வேடிக்கை மனிதரைப் போலே &#8211; நான்<br />
வீழ்வே னென்று நினைத் தாயோ?</p>
<p>நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் &#8211; அவை<br />
நேரே இன்றெனக்குத் தருவாய்? &#8211; என்றன்<br />
முன்னைத் தீயவினைப் பயன்கள் &#8211; இன்னும்<br />
மூளா தழிந்திடுதல் வேண்டும் &#8211; இனி<br />
என்னைப் புதியவுயி ராக்கி &#8211; எனக்<br />
கேதுங் கவலையறச் செய்து &#8211; மதி<br />
தன்னை மிகத்தெளிவு செய்து &#8211; என்றும்<br />
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்</p>
<p>தோளை வலியுடைய தாக்கி &#8211; உடற்<br />
சோர்வும் பிணிபலவும் போக்கி &#8211; அரி<br />
வாளைக் கொண்டுபிளந் தாலும் &#8211; கட்டு<br />
மாறா வுடலுறுதி தந்து &#8211; சுடர்<br />
நாளைக் கண்டதோர் மலர்போல் &#8211; ஒளி<br />
நண்ணித் திகழுமுகந் தந்து &#8211; மத<br />
வேளை வெல்லுமுறைகூறித் &#8211; தவ<br />
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.</p>
<p>எண்ணுங் காரியங்க ளெல்லாம் &#8211; வெற்றி<br />
யேறப் புரிந்தருளல் வேண்டும் &#8211; தொழில்<br />
பண்ணப் பெருநிதியம் வேண்டும் &#8211; அதில்<br />
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் &#8211; சுவை<br />
நண்ணும் பாட்டினொடு தாளம் &#8211; மிக<br />
நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் &#8211; பல<br />
பண்ணிற் கோடிவகை இன்பம் &#8211; நான்<br />
பாடத் திறனடைதல் வேண்டும்.</p>
<p>கல்லை வயிரமணி யாக்கல் &#8211; செம்பைக்<br />
கட்டித் தங்கமெனச் செய்தல் &#8211; வெறும்<br />
புல்லை நெல்லெனப் புரிதல் &#8211; பன்றிப்<br />
போத்தைச் சிங்கவே றாக்கல் &#8211; மண்ணை<br />
வெல்லத் தினிப்புவரச் செய்தல் &#8211; என<br />
விந்தை தோன்றிட இந்நாட்டை &#8211; நான்<br />
தொல்லை தீர்த்துயர்வு கல்வி &#8211; வெற்றி<br />
சூழும் வீரமறி வாண்மை.</p>
<p>கூடுந் திரவியத்தின் குவைகள் &#8211; திறல்<br />
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் &#8211; இவை<br />
நாடும் படிக்குவினை செய்து &#8211; இந்த<br />
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் &#8211; கலி<br />
சாடுந் திறனெனக்குத் தருவாய் &#8211; அடி<br />
தாயே! உனக்கரிய துண்டோ? &#8211; மதி<br />
மூடும் பொய்மையிரு ளெல்லாம் &#8211; எனை<br />
முற்றும் விட்டகல வேண்டும்.</p>
<p>ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் &#8211; புலை<br />
அச்சம் போயொழிதல் வேண்டும் &#8211; பல<br />
பையச் சொல்லுவதிங் கென்னே! &#8211; முன்னைப்<br />
பார்த்தன் கண்ணனிவர் நேரா &#8211; எனை<br />
உய்யக் கொண்டருள வேண்டும் &#8211; அடி<br />
உன்னைக் கோடிமுறை தொழுதேன் &#8211; இனி<br />
வையத் தலைமையெனக் கருள்வாய் &#8211; அன்னை<br />
வாழி! நின்ன தருள் வாழி!</p>
<p>ஓம் காளி! வலிய சாமுண்டீ!<br />
ஓங்காரத் தலைவி! என் இராணி!</p>
<h3>மஹாசக்தி பஞ்சகம் &#8211; பாரதியார் பாடல்கள் காளி</h3>
<p>கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,<br />
காளி நீ காத்தருள் செய்யே,<br />
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,<br />
மாரவெம் பேயினை அஞ்சேன்,<br />
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்<br />
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்,<br />
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,<br />
தாயெனைக் காத்தலுன் கடனே.</p>
<p>எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,<br />
யாவுமாம் நின்றனைப் போற்றி<br />
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்<br />
மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்<br />
கண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்<br />
காலுமே அமைதியி லிருப்பேன்,<br />
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்<br />
தாயுனைச் சரண்புகுந் தேனால்.</p>
<p>நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்<br />
நினைப்பினும், நெறியிலா மாக்கள்<br />
மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்<br />
மயங்கினே அவையினி மதியேன்,<br />
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்<br />
சிந்தையிற் குலவிடு திறத்தாள்,<br />
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்<br />
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.</p>
<p>ஐயமுந் திகைப்புந் தொலைந்தன, ஆங்கே<br />
அச்சமுந் தொலைந்தது, சினமும்<br />
பொய்யுமென றினைய புன்மைக ளெல்லாம்<br />
போயின உறுதிநான் கண்டேன்.<br />
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்<br />
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்<br />
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்<br />
துணையெனத் தொடர்ந்து கொண்டே.</p>
<p>தவத்தினை எளிதாப் புரிந்தனள், போகத்<br />
தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்,<br />
சிவத்தினை , இனிதாப் புரிந்தனள், மூடச்<br />
சித்தமும் தெளிவுறச் செய்தாள்,<br />
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்<br />
பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்,<br />
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,<br />
அநந்தமா வாழ்க யிங்கவளே!</p>
<h3>மஹா சக்தி வாழ்த்து</h3>
<p>விண்டு ரைக்க அறிய அரியதாய்<br />
விரிந்த வான் வெளியென &#8211; நின்றனை,<br />
அண்ட கோடிகள்வானில் அமைத்தனை,<br />
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை,<br />
மண்ட லத்தை அணுவணு வாக்கினால்,<br />
வருவ தெத்தனை அத்தனை யோசனை,<br />
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,<br />
கோலமே! நினைக் காளியென் றேத்துவேன்.</p>
<p>நாடு காக்கும் அரசன் தனையந்த<br />
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,<br />
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்<br />
பண்ணும் அப்பன் இவனென் றறிந்திடும்,<br />
கோடி யண்டம் இயக்கி யளிக்கும்நின்<br />
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?<br />
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்<br />
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்கவே!</p>
<p>பரிதியென்னும் பொருளிடை யேய்ந்தனை,<br />
பரவும்வெய்ய கதிரெனக் காய்ந்தனை,<br />
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,<br />
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை,<br />
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,<br />
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை,<br />
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,<br />
வெல்க காளி யெனதம்மை வெல்கவே.</p>
<p>வாயு வாகி வெளியை அளந்தனை,<br />
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,<br />
தேயு வாகி ஒளியருள் செய்குவை,<br />
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை,<br />
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே<br />
பாரிலுள்ள தொழில்கள் இயற்றுவை,<br />
சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன<br />
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.</p>
<p>நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,<br />
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை<br />
இதலத்தின் மீது மலையும் நதிகளும்<br />
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை,<br />
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்<br />
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை!<br />
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய், அன்னே!<br />
போற்றி! போற்றி! நினதருள் போற்றியே!</p>
<p>சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்<br />
செய்த கர்மபயனெனப் பல்கினை,<br />
தத்து கின்ற திரையுஞ் சுழிகளும்<br />
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்<br />
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி<br />
சூழ்ந்த பாகமும் கட்டவெந் நீருமென்று<br />
ஒத்த நீர்க்கடல் போலப் பலவகை<br />
உள்ளமென்னும் கடலில் அமைந்தனை.</p>
<h3>ஊழிக்கூத்து &#8211; பாரதியார் பாடல்கள் காளி</h3>
<p>வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட &#8211; வெறும்<br />
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் &#8211; பாட்டின்<br />
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் &#8211; களித்<br />
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!<br />
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை<br />
நாடச் செய்தாய் என்னை!</p>
<p>ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் &#8211; பின்னர்<br />
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக &#8211; அங்கே<br />
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் &#8211; தோடே<br />
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!<br />
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை<br />
நாடச் செய்தாய் என்னை!</p>
<p>பாழாய் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் &#8211; சலனம்<br />
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய &#8211; அங்கே<br />
ஊழாம் பேய்தான் ஓஹோஹோ வென் றலைய &#8211; வெறித்<br />
துறுமித் திரிவாய் செருவெங் கூத்தே புரிவாய்!<br />
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை<br />
நாடச் செய்தாய் என்னை!</p>
<p>சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் &#8211; சட்டச்<br />
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி &#8211; அங்கே<br />
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் &#8211; தானே<br />
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்<br />
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை<br />
நாடச் செய்தாய் என்னை!</p>
<p>காலத் தொடுநிர் மூலம் படிமூ வுலகும் &#8211; அங்கே<br />
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் &#8211; சிவன்<br />
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் &#8211; கையைக்<br />
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!<br />
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை<br />
நாடச் செய்தாய் என்னை!</p>
<h3>வெற்றி</h3>
<p>எடுத்த காரியம் யாவினும் வெற்றி,<br />
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே<br />
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி<br />
வேண்டி னேனுக் கருளினன் காளி,<br />
தடுத்து நிற்பது தெய்வத மேனும்<br />
சாரு மானுட வாயினும் அஃதைப்<br />
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,<br />
பாரில் வெற்றி எனக்குறு மாறே.</p>
<p>எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,<br />
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,<br />
கண்ணு மாருயி ரும்மென நின்றாள்<br />
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்,<br />
மண்ணும் காற்றும் புனலும் அனலும்<br />
வானும் வந்து வணங்கிநில் லாவோ?<br />
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?<br />
வெல்க காளி பதங்களென் பார்க்கே.</p>
<ul>
<li><strong>Read More:-</strong> <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/">பாரதியார் பாடல்கள் காளி</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் பாடல்கள் கண்ணன்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Aug 2021 04:35:50 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33058</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் மகாகவி பாரதியார் பாடல்கள் கண்ணன் என்ற தலைப்பில் ராமர் மற்றும் கண்ணன், கோவிந்தன் பற்றிய பாடல்களின் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். கண்ணன் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9/" title="பாரதியார் பாடல்கள் கண்ணன்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9/">பாரதியார் பாடல்கள் கண்ணன்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>இந்த பதிவில் <strong>மகாகவி பாரதியார் பாடல்கள் கண்ணன்</strong> என்ற தலைப்பில் ராமர் மற்றும் கண்ணன், கோவிந்தன் பற்றிய பாடல்களின் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.</p>
<figure id="attachment_33059" aria-describedby="caption-attachment-33059" style="width: 300px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-33059" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-கண்ணன்.jpg" alt="பாரதியார் பாடல்கள் கண்ணன்" width="300" height="182" /><figcaption id="caption-attachment-33059" class="wp-caption-text">பாரதியார் பாடல்கள் கண்ணன்</figcaption></figure>
<h3><strong>கண்ணன் பற்றிய </strong><strong>பாரதியார்</strong> பாடல்கள்<strong> </strong></h3>
<h4><strong>சாகா</strong> வரம்</h4>
<p><strong>பல்லவி</strong></p>
<p>சாகவர மருள்வாய், ராமா!<br />
சதுர்மறை நாதா! சரோஜ பாதா!</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>ஆகாசந் தீகால் நீர்மண்<br />
அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,<br />
ஏகாமிர்த மாகிய நின்தாள்<br />
இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா)</p>
<p>வாகார்தோள் வீரா, தீரா<br />
மன்மத ரூபா, வானவர் பூபா,<br />
பாகார்மொழி சீதையின் மென்றோள்<br />
பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா)</p>
<p>நித்யா, நிர்மலா, ராமா<br />
நிஷ்க ளங்கா, சர்வா, சர்வா தாரா,<br />
சத்யா, சநாதநா, ராமா,<br />
சரணம், சரணம், சரண முதாரா! (சாகா)</p>
<h3>கோவிந்தன் பாட்டு</h3>
<p>கண்ணிரண்டும் இமையால் செந்நிறத்து<br />
மெல்லி தழ்ப்பூங் கமலத் தெய்வப்<br />
பெண்ணிரண்டு விழிகளையும் நோக்கிடுவாய்<br />
கோவிந்தா! பேணி னோர்க்கு</p>
<p>நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்<br />
சராசரத்து நாதா! நாளும்<br />
எண்ணிரண்டு கோடியினும், மிகப்பலவாம்<br />
வீண்கவலை எளிய னேற்கே.</p>
<p>எளியனேன் யானெனலை எப்போது<br />
போக்கிடுவாய், இறைவனே! இவ்<br />
வளியிலே பறவையிலே மரத்தினிலே<br />
முகிலினிலே வரம்பில் வான</p>
<p>வெளியிலே கடலிடையே மண்ணகத்தே<br />
வீதியிலே வீட்டி லெல்லாம்<br />
களியிலே கோவிந்தா! நினைக்கண்டு<br />
நின்னொடுநான் கலப்ப தென்றோ?</p>
<p>என்கண்ணை மறந்துனிரு கண்களையே<br />
என்னகத்தில் இசைத்துக் கொண்டு<br />
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே<br />
நான்கண்டு நிறைவு கொண்டு</p>
<p>வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதற்<br />
பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற்<br />
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா<br />
எனக்கமுதம் புகட்டு வாயே.</p>
<h3>கண்ணனை வேண்டுதல்</h3>
<p>வேத வானில் விளங்கி அறஞ்செய்மின்<br />
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்<br />
தீத கற்றுமின் என்று திசையெலாம்<br />
மோத நித்தம் இடித்து முழங்கியே</p>
<p>உண்ணுஞ் சாதிக் குற்றமும் சாவுமே<br />
நண்ணு றாவனம் நன்கு புரந்திடும்<br />
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்<br />
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே.</p>
<p>எங்க ளாரிய பூமியெனும் பயிர்<br />
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்<br />
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்<br />
செங்க ணாயநின் பதமலர் சிந்திப்பாம்.</p>
<p>வீரர் தெய்வதம் கர்மவிளக்கு, நற்<br />
பார தர்செய் தவத்தின் பயனெனும்<br />
தார விர்ந்த தடம்புயப் பார்த்தனோர்<br />
கார ணமெனக் கொண்டு கடவுள்நீ.</p>
<p>நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே<br />
மன்னுபாரத மாண்குலம் யாவிற்கும்<br />
உன்னுங் காலை உயர்துணை யாகவே<br />
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.</p>
<p>ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்<br />
உய்ய நின்மொழி பற்றி யொழுகியே,<br />
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்<br />
செய்யும் செய்கையி னின்னருள் சேர்ப்பையால்.</p>
<p>ஒப்பிலாத உயர்வொடு கல்வியும்<br />
எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்,<br />
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்<br />
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.</p>
<p>மற்று நீயிந்த வாழ்வு மறுப்பையேல்<br />
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்ந்தருள்<br />
கொற்றவா! நின் குவலய மீதினில்<br />
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.</p>
<p>நின்றன் மாமர பில்வந்து நீசராய்ப்<br />
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்,<br />
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்<br />
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.</p>
<h3>வருவாய் கண்ணா</h3>
<p><strong>பல்லவி</strong></p>
<p>வருவாய், வருவாய், வருவாய் &#8211; கண்ணா!<br />
வருவாய், வருவாய், வருவாய்!</p>
<p><strong>சரணங்கள்</strong></p>
<p>உருவாய் அறிவில் ஒளிர்யாய் &#8211; கண்ணா!<br />
உயிரின் னமுதாய்ப் பொழிவய் &#8211; கண்ணா!<br />
கருவாய் என்னுள் வளர்வாய் &#8211; கண்ணா!<br />
கமலத் திருவோ டிணைவாய் &#8211; கண்ணா! (வருவாய்)</p>
<p>இணைவாய் எனதா வியிலே &#8211; கண்ணா!<br />
இதயத் தினிலே யமர்வாய் &#8211; கண்ணா!<br />
கணைவா யசுரர் தலைகள் &#8211; சிதறக்<br />
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)</p>
<p>எழுவாய் கடல்மீ தினிலே &#8211; எழுமோர்<br />
இரவிக் கிணையா உளமீ தினிலே<br />
தொழுவேன் சிவனாம் நினையே &#8211; கண்ணா!<br />
துணையே, அமரர் தொழுவா னவனே! (வருவாய்)</p>
<h3>கண்ண பெருமானே</h3>
<p>காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ</p>
<p>காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே &#8211; நீ<br />
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே &#8211; நீ</p>
<p>ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே &#8211; நீ<br />
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே நீ</p>
<p><strong>வேறு</strong><br />
போற்றி! போற்றி! போற்றி! போற்றி!<br />
கண்ண பெருமானே! நின்<br />
பொன்னடி போற்றி நின்றேன்,<br />
கண்ண பெருமானே!</p>
<h3>நந்த லாலா</h3>
<p>ராகம் &#8211; யதுகுல காம்போதி தாளம் &#8211; ஆதி</p>
<p>காக்கைச் சிறகினிலே நந்த லாலா! &#8211; நின்றன்<br />
கரியநிறந் தோன்று தையே, நந்த லாலா!</p>
<p>பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! &#8211; நின்றன்<br />
பச்சை நிறந் தோன்று தையே, நந்த லாலா!</p>
<p>கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா! &#8211; நின்றன்<br />
கீத மிசைக்குதடா, நந்த லாலா!</p>
<p>தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! &#8211; நின்னைத்<br />
தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா!</p>
<h3>கண்ணன் பிறந்தான்</h3>
<p>கண்ணன் பிறந்தான் &#8211; எங்கள்<br />
கண்ணன் பிறந்தான் &#8211; இந்தக்<br />
காற்றை யெட்டுத் திசையிலுங் கூறிடும்<br />
திண்ண முடையான் &#8211; மணி<br />
வண்ண முடையான் &#8211; உயிர்<br />
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்<br />
புண்ணை யொழிப்பீர் &#8211; இந்தப்<br />
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை<br />
எண்ணிடைக் கொள்வீர் &#8211; நன்கு<br />
கண்ணை விழிப்பீர் &#8211; இனி<br />
ஏதுங் குறைவில்லை, வேதம் துணையுண்டு (கண்ணன்)</p>
<p>அக்கினி வந்தான் &#8211; அவன்<br />
திக்கை வளைத்தான் &#8211; புவி<br />
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்<br />
துக்கங் கெடுத்தான் &#8211; சுரர்<br />
ஒக்கலும் வந்தார் &#8211; சுடர்ச்<br />
சூரியன், இந்திரன், வாயு, மருத்துக்கள்,<br />
மிக்க திரளாய் &#8211; சுரர்,<br />
இக்கணந் தன்னில் &#8211; இங்கு<br />
மேவி நிறைந்தனர், பாவி யசுரர்கள்<br />
பொக்கென வீழ்ந்தார் &#8211; உயிர்<br />
கக்கி முடித்தார் &#8211; கடல்<br />
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)</p>
<p>சங்கரன் வந்தான், &#8211; இங்கு<br />
மங்கல மென்றான் &#8211; நல்ல<br />
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்,<br />
பங்க மொன் றில்லை &#8211; ஒளி<br />
மங்குவதில்லை, &#8211; இந்தப்<br />
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று,<br />
கங்கையும் வந்தாள் &#8211; கலை<br />
மங்கையும் வந்தாள், &#8211; இன்பக்<br />
காளி பராசக்தி அன்புடனெய்தினள்,<br />
செங்கம லத்தாள் &#8211; எழில்<br />
பொங்கு முகத்தாள் &#8211; திருத்<br />
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)</p>
<h3>கண்ணன் திருவடி</h3>
<p>கண்ணன் திருவடி, எண்ணுக மனமே<br />
திண்ணம் அழியா, வண்ணந் தருமே</p>
<p>தருமே நிதியும், பெருமை புகழும்<br />
கருமா மேனிப் பெருமா னிங்கே.</p>
<p>இங்கே யமரர் சங்கந் தோன்றும்<br />
மங்கும் தீமை, பொங்கும் நலமே</p>
<p>நலமே நாடிற் புலவீர் பாடீர்,<br />
நிலமா மகளின், தலைவன் புகழே.</p>
<p>புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்<br />
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே</p>
<p>தீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை<br />
ஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே.</p>
<p>தவறா துணர்வீர், புவியீர் மாலும்<br />
சிவனும் வானோர், எவரும் ஒன்றே.</p>
<p>ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி<br />
என்றுந் திகழும், குன்றா வொளியே.</p>
<h3>வேய்ங்குழல் &#8211; <strong>பாரதியார் பாடல்கள் கண்ணன்</strong></h3>
<p>ராகம் &#8211; ஹிந்துஸ்தான் தோடி<br />
தாளம் &#8211; ஏகதாளம்</p>
<p>எங்கிருந்து வருகு வதோ? &#8211; ஒலி<br />
யாவர் செய்கு வதோ? &#8211; அடி தோழி!</p>
<p>குன்றி னின்றும் வருகுவதோ? &#8211; மரக்<br />
கொம்பி னின்றும் வருகுவதோ? &#8211; வெளி<br />
மன்றி னின்று வருகுவதோ? &#8211; என்றன்<br />
மதி மருண்டிடச் செய்குதடி! &#8211; இஃது, (எங்கிருந்து)</p>
<p>அலையொ லித்திடும் தெய்வ &#8211; யமுனை<br />
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ? &#8211; அன்றி<br />
இலையொ லிக்கும் பொழிலிடை நின்றும்<br />
எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து)</p>
<p>காட்டி னின்றும் வருகுவதோ? &#8211; நிலாக்<br />
காற்றைக் கொண்டு தருகுவதோ? &#8211; வெளி<br />
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?<br />
நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து)</p>
<p>பறவை யேதுமொன் றுள்ளதுவோ? &#8211; இங்ஙன்<br />
பாடுமோ அமுதக்கனற் பாட்டு?<br />
மறைவினின்றுங் கின்னர ராதியர்<br />
வாத்தியத்தினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து)</p>
<p>கண்ண னூதிடும் வேய்ங்குழல் தானடீ!<br />
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,<br />
பண்ணன் றாமடி பாவையர் வாடப்<br />
பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து)</p>
<p><strong>Read More:-</strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li>Video – <a href="https://www.youtube.com/watch?v=bitt-kSoZWc&amp;list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noopener">Learn Basic Astrology in Tamil</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9/">பாரதியார் பாடல்கள் கண்ணன்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் பாடல்கள் குழந்தை</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 05:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<category><![CDATA[bharathiyar songs for children]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33037</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>பாரதியார் பாடல்கள் குழந்தை &#8211; இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் குழந்தை என்கிற தலைப்பில் பாப்பா பாட்டு பாடல் வரிகள் பார்ப்போம் பாப்பாப் பாட்டு ஓடி விளையாடு பாப்பா! &#8211; நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடிவிளையாடு பாப்பா! &#8211; ஒரு <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" title="பாரதியார் பாடல்கள் குழந்தை">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/">பாரதியார் பாடல்கள் குழந்தை</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>பாரதியார் பாடல்கள் குழந்தை</strong> &#8211; இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் குழந்தை என்கிற தலைப்பில் பாப்பா பாட்டு பாடல் வரிகள் பார்ப்போம்</p>
<figure id="attachment_33040" aria-describedby="caption-attachment-33040" style="width: 300px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-33040" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-குழந்தை.jpg" alt="பாரதியார் பாடல்கள் குழந்தை " width="300" height="225" /><figcaption id="caption-attachment-33040" class="wp-caption-text">பாரதியார் பாடல்கள் குழந்தை</figcaption></figure>
<h3>பாப்பாப் பாட்டு</h3>
<p>ஓடி விளையாடு பாப்பா! &#8211; நீ<br />
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!<br />
கூடிவிளையாடு பாப்பா! &#8211; ஒரு<br />
குழைந்தையை வையாதே பாப்பா!. 1</p>
<p>சின்னஞ் சிறுகுருவி போலே &#8211; நீ<br />
திரிந்து பறந்துவா பாப்பா!<br />
வன்னப் பறவைகளைக் கண்டு &#8211; நீ<br />
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2</p>
<p>கொத்தித் திரியுமந்தக் கோழி &#8211; அதைக்<br />
கூட்டி விளையாடு பாப்பா!<br />
எத்தித் திருடுமந்தக் காக்காய் &#8211; அதற்கு<br />
இரக்கப் படவேணும் பாப்பா! 3</p>
<p>பாலைப் பொழிந்து தரும், பாப்பா! &#8211; அந்தப்<br />
பசுமிக நல்லதடி பாப்பா!<br />
வாலைக் குழைத்துவரும் நாய்தான் &#8211; அது<br />
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4</p>
<p>வண்டி இழுக்கும் நல்ல குதிரை, &#8211; நெல்லு<br />
வயலில் உழுதுவரும் மாடு,<br />
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, &#8211; இவை<br />
ஆதரிக்க வேணுமடி பாப்பா! 5</p>
<p>காலை எழுந்தவுடன் படிப்பு &#8211; பின்பு<br />
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு<br />
மாலை முழுதும் விளையாட்டு &#8211; என்று<br />
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6</p>
<p>பொய்சொல்லக் கூடாது பாப்பா! &#8211; என்றும்<br />
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!<br />
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! &#8211; ஒரு<br />
தீங்குவர மாட்டாது பாப்பா! 7</p>
<p>பாதகஞ் செய்பவரைக் கண்டால் &#8211; நாம்<br />
பயங்கொள்ள லாகாது பாப்பா!<br />
மோதி மிதித்துவிடு பாப்பா! &#8211; அவர்<br />
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 8</p>
<p>துன்பம் நெருங்கிவந்த போதும் &#8211; நாம்<br />
சோர்ந்துவிட லாகாது பாப்பா!<br />
அன்பு மிகுந்த தெய்வ முண்டு &#8211; துன்பம்<br />
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9</p>
<p>சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! &#8211; தாய்<br />
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!<br />
தேம்பி யழுங்குழந்தை நொண்டி &#8211; நீ<br />
திடங்கொண்டு போராடு பாப்பா! 10</p>
<p>தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற &#8211; எங்கள்<br />
தாயென்று கும்பிடடி பாப்பா!<br />
அமிழ்தில் இனியதடி பாப்பா! &#8211; நம்<br />
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11</p>
<p>சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே &#8211; அதைத்<br />
தொழுது படித்திடடி பாப்பா!<br />
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் &#8211; அதைத்<br />
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12</p>
<p>வடக்கில் இமயமலை பாப்பா! &#8211; தெற்கில்<br />
வாழும் குமரிமுனை பாப்பா!<br />
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் &#8211; இதன்<br />
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13</p>
<p>வேத முடையதிந்த நாடு &#8211; நல்ல<br />
வீரர் பிறந்த திந்த நாடு<br />
சேதமில் லாதஹிந்துஸ் தானம் &#8211; இதைத்<br />
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14</p>
<p>சாதிகள் இல்லையடி பாப்பா! &#8211; குலத்<br />
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!<br />
நீதி,உயர்ந்தமதி,கல்வி &#8211; அன்பு<br />
நிறைய உடையவர்கள் மேலோர். 15</p>
<p>உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் &#8211; தெய்வம்<br />
உண்மையென்று தானறிதல் வேணும்<br />
வயிர முடைய நெஞ்சு வேணும் &#8211; இது<br />
வாழும் முறைமையடி பாப்பா! 16</p>
<ul>
<li>Read More:- <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bharathiyar Quotes in Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/">பாரதியார் பாடல்கள் குழந்தை</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் பாடல்கள் பெண்கள்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 05:19:15 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<category><![CDATA[bharathiyar songs for women]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=33032</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>பாரதியார் பாடல்கள் பெண்கள் (Bharathiyar Songs for Women) &#8211; இந்த பதிவில் மகாகவி பாரதியார் பாடல்கள் பெண்கள் என்ற தலைப்பில் பெண் விடுதலை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கும் எதிராக மகாகவியின் முழக்கமிட்ட தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" title="பாரதியார் பாடல்கள் பெண்கள்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>பாரதியார் பாடல்கள் பெண்கள் (Bharathiyar Songs for Women)</strong> &#8211; இந்த பதிவில் மகாகவி பாரதியார் பாடல்கள் பெண்கள் என்ற தலைப்பில் பெண் விடுதலை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கும் எதிராக மகாகவியின் முழக்கமிட்ட தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பெண்ணடிமையை எதிர்த்து போராட வைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.</p>
<figure id="attachment_33033" aria-describedby="caption-attachment-33033" style="width: 400px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="wp-image-33033 size-full" title="பாரதியார் பாடல்கள் பெண்கள்" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-பெண்கள்.jpg" alt="பாரதியார் பாடல்கள் பெண்கள்" width="400" height="267" srcset="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-பெண்கள்.jpg 400w, https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/பாரதியார்-பாடல்கள்-பெண்கள்-300x200.jpg 300w" sizes="(max-width: 400px) 100vw, 400px" /><figcaption id="caption-attachment-33033" class="wp-caption-text">பாரதியார் பாடல்கள் பெண்கள்</figcaption></figure>
<h3>பாப்பாப் பாட்டு</h3>
<p>ஓடி விளையாடு பாப்பா! &#8211; நீ<br />
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!<br />
கூடிவிளையாடு பாப்பா! &#8211; ஒரு<br />
குழைந்தையை வையாதே பாப்பா!. 1</p>
<p>சின்னஞ் சிறுகுருவி போலே &#8211; நீ<br />
திரிந்து பறந்துவா பாப்பா!<br />
வன்னப் பறவைகளைக் கண்டு &#8211; நீ<br />
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2</p>
<p>கொத்தித் திரியுமந்தக் கோழி &#8211; அதைக்<br />
கூட்டி விளையாடு பாப்பா!<br />
எத்தித் திருடுமந்தக் காக்காய் &#8211; அதற்கு<br />
இரக்கப் படவேணும் பாப்பா! 3</p>
<p>பாலைப் பொழிந்து தரும், பாப்பா! &#8211; அந்தப்<br />
பசுமிக நல்லதடி பாப்பா!<br />
வாலைக் குழைத்துவரும் நாய்தான் &#8211; அது<br />
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4</p>
<p>வண்டி இழுக்கும் நல்ல குதிரை, &#8211; நெல்லு<br />
வயலில் உழுதுவரும் மாடு,<br />
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, &#8211; இவை<br />
ஆதரிக்க வேணுமடி பாப்பா! 5</p>
<p>காலை எழுந்தவுடன் படிப்பு &#8211; பின்பு<br />
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு<br />
மாலை முழுதும் விளையாட்டு &#8211; என்று<br />
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6</p>
<p>பொய்சொல்லக் கூடாது பாப்பா! &#8211; என்றும்<br />
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!<br />
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! &#8211; ஒரு<br />
தீங்குவர மாட்டாது பாப்பா! 7</p>
<p>பாதகஞ் செய்பவரைக் கண்டால் &#8211; நாம்<br />
பயங்கொள்ள லாகாது பாப்பா!<br />
மோதி மிதித்துவிடு பாப்பா! &#8211; அவர்<br />
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 8</p>
<p>துன்பம் நெருங்கிவந்த போதும் &#8211; நாம்<br />
சோர்ந்துவிட லாகாது பாப்பா!<br />
அன்பு மிகுந்த தெய்வ முண்டு &#8211; துன்பம்<br />
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9</p>
<p>சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! &#8211; தாய்<br />
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!<br />
தேம்பி யழுங்குழந்தை நொண்டி &#8211; நீ<br />
திடங்கொண்டு போராடு பாப்பா! 10</p>
<p>தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற &#8211; எங்கள்<br />
தாயென்று கும்பிடடி பாப்பா!<br />
அமிழ்தில் இனியதடி பாப்பா! &#8211; நம்<br />
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11</p>
<p>சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே &#8211; அதைத்<br />
தொழுது படித்திடடி பாப்பா!<br />
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் &#8211; அதைத்<br />
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12</p>
<p>வடக்கில் இமயமலை பாப்பா! &#8211; தெற்கில்<br />
வாழும் குமரிமுனை பாப்பா!<br />
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் &#8211; இதன்<br />
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13</p>
<p>வேத முடையதிந்த நாடு &#8211; நல்ல<br />
வீரர் பிறந்த திந்த நாடு<br />
சேதமில் லாதஹிந்துஸ் தானம் &#8211; இதைத்<br />
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14</p>
<p>சாதிகள் இல்லையடி பாப்பா! &#8211; குலத்<br />
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!<br />
நீதி,உயர்ந்தமதி,கல்வி &#8211; அன்பு<br />
நிறைய உடையவர்கள் மேலோர். 15</p>
<p>உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் &#8211; தெய்வம்<br />
உண்மையென்று தானறிதல் வேணும்<br />
வயிர முடைய நெஞ்சு வேணும் &#8211; இது<br />
வாழும் முறைமையடி பாப்பா! 16</p>
<p>Read More:- <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></p>
<h3>புதுமைப் பெண்</h3>
<p>போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்<br />
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்<br />
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்<br />
செய்ய தாமரைத் தேமலர் போலோளி<br />
தோற்றி நின்றனை பாரத நாடைலே;<br />
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை<br />
சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்<br />
சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1</p>
<p>மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்<br />
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்<br />
நாதந் தானது நாரதர் வீணையோ?<br />
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?<br />
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே<br />
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?<br />
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?<br />
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 2</p>
<p>அறிவு கொண்ட மனித வுயிர்களை<br />
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;<br />
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்<br />
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,<br />
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்<br />
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;<br />
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்<br />
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3</p>
<p>ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்<br />
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்<br />
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்<br />
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;<br />
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;<br />
ஞான நல்லறம் வீர சுதந்திரம்<br />
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;<br />
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 4</p>
<p>நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;<br />
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்<br />
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்<br />
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;<br />
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;<br />
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்<br />
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;<br />
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 5</p>
<p>புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்<br />
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்<br />
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்<br />
தன்னி லேபொது வான் வழக்கமாம்;<br />
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்<br />
மாத வப்பெரி யோருட னொப்புற்றே<br />
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய<br />
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6</p>
<p>நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,<br />
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,<br />
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்<br />
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;<br />
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்<br />
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை<br />
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்<br />
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ! 7</p>
<p>உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,<br />
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,<br />
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்<br />
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே<br />
திலக வாணுத லார்நங்கள் பாரத<br />
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;<br />
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை<br />
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 8</p>
<p>சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;<br />
சவுரி யங்கள் பலபல செய்வராம்;<br />
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;<br />
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;<br />
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்<br />
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;<br />
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;<br />
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ! 9</p>
<p>போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்<br />
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!<br />
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து<br />
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே<br />
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்<br />
அருளி நாலொரு கன்னிகை யாகியே<br />
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்<br />
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம். 10</p>
<p>Read More:- <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></p>
<h3>பெண்மை &#8211; <strong>பாரதியார் பாடல்கள் பெண்கள்</strong></h3>
<p>பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!<br />
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!<br />
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன<br />
தாயின் பெயரும் சதியென்ற நாமமும். 1</p>
<p>அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.<br />
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;<br />
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!<br />
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம். 2</p>
<p>வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!<br />
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;<br />
கலிய ழிப்பது பெண்க ளறமடா!<br />
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். 3</p>
<p>பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்<br />
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!<br />
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே<br />
காத லின்பத்தைக் காத்திடு வோமடா. 4</p>
<p>சக்தி யென்ற மதுவையுண் போமடா!<br />
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,<br />
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்<br />
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம். 5</p>
<p>உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;<br />
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;<br />
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!<br />
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே. 6</p>
<p>&#8216;போற்றி தாய்&#8217; என்று தோழ் கொட்டி யாடுவீர்<br />
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;<br />
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்<br />
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7</p>
<p>&#8216;போற்றி தாய்&#8217; என்று தாளங்கள் கொட்டடா!<br />
&#8216;போற்றி தாய்&#8217;என்று பொற்குழ லூதடா!<br />
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்<br />
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே. 8</p>
<p>அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்<br />
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;<br />
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்<br />
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9</p>
<p>Read More:- <a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></p>
<h3>பெண்கள் விடுதலைக் கும்பி</h3>
<p><strong>காப்பு</strong></p>
<p>பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்<br />
பேசிக் களிப்பொடு நாம்பாடக்<br />
கண்களி லேயொளி போல வுயிரில்<br />
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.</p>
<p>1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும்<br />
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!<br />
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின<br />
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)</p>
<p>2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்<br />
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;<br />
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற<br />
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)</p>
<p>3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்<br />
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,<br />
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை<br />
வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி)</p>
<p>4. நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த<br />
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?<br />
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை<br />
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)</p>
<p>5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு<br />
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;<br />
வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்<br />
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)</p>
<p>6. பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்<br />
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;<br />
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்<br />
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)</p>
<p>7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்<br />
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!<br />
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்<br />
சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி)</p>
<p>8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்<br />
காரியம் யாவினும் கைகொடுத்து,<br />
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்<br />
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி)</p>
<h3>பெண் விடுதலை</h3>
<p>விடுதலைக்கு மகளிரெல் லோரும்<br />
வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ<br />
திடம னத்தின் மதுக்கிண்ண மீது<br />
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.<br />
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்<br />
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;<br />
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.<br />
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1</p>
<p>திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;<br />
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;<br />
குறைவி லாது முழுநிகர் நம்மைக்<br />
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்<br />
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்<br />
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;<br />
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;<br />
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. 2</p>
<p>விடியு நல்லொளி காணுதி நின்றே,<br />
மேவு நாக ரிகம்புதி தொன்றே;<br />
கொடியர் நம்மை அடிமைகள் என்றே<br />
கொண்டு,தாம்முதல் என்றன ரன்றே.<br />
அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே,<br />
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே<br />
கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்<br />
காரிகைக் கணத்தீர்,துணி வுற்றே. 3</p>
<p><strong>Read More:</strong></p>
<ul>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%af%88/" target="_blank" rel="noopener" aria-label="“பாரதியாரின் பகவத் கீதை” (Edit)">பாரதியாரின் பகவத் கீதை</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener" aria-label="“ஞான பாடல்கள் பாரதியார்” (Edit)">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">அம்மா கவிதைகள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li>Video – <a href="https://youtu.be/IZK7zRI_xNQ" target="_blank" rel="noopener sponsored">அம்மா பற்றிய வரிகள்</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/pnuMrJr4pfY" target="_blank" rel="noopener">அடிப்படை ஜோதிடம் கற்க</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/category/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/" target="_blank" rel="noopener">தமிழ் பழமொழிகள்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>Bharathiyar Quotes in Tamil</title>
		<link>https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Aug 2021 06:59:09 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.tamizhdb.com/?p=32910</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>Bharathiyar Quotes in Tamil &#124; பாரதியார் மேற்கோள் வரிகள் &#124; Bharathiyar Famous Lines &#8211; இந்த பதிவில் மகாகவி பாரதியார் கூறிய சிறந்த வரிகளின் தொகுப்பை காணலாம். 1. கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" title="Bharathiyar Quotes in Tamil">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/">Bharathiyar Quotes in Tamil</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>Bharathiyar Quotes in Tamil</strong> | பாரதியார் மேற்கோள் வரிகள் | <strong>Bharathiyar Famous Lines</strong> &#8211; இந்த பதிவில் மகாகவி பாரதியார் கூறிய சிறந்த வரிகளின் தொகுப்பை காணலாம்.</p>
<figure id="attachment_32911" aria-describedby="caption-attachment-32911" style="width: 293px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="wp-image-32911 size-full" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2021/08/Bharathiar-Quotes-in-Tamil.jpg" alt="Bharathiyar Quotes in Tamil" width="293" height="300" /><figcaption id="caption-attachment-32911" class="wp-caption-text">Bharathiyar Quotes in Tamil</figcaption></figure>
<p>1. கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.</p>
<p>2. பெற்றோர் தேடிய பணத்தில் வாழ்பவனை விட, தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.</p>
<p>3. வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவான்.</p>
<p>4. பிச்சை ஏற்பவன் மான அவமானத்தை விட்டு விடுகிறான்.</p>
<p>5. உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.</p>
<p>6. மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.</p>
<p>7. வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத் தொடங்கி விடும்.</p>
<p>8. புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.</p>
<p>9. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.</p>
<p>10. அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுபட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.</p>
<p>11. ஒருவரது உள்ளத்தில் நேர்மையும்,உண்மையும் இருக்கிறதா என்பதை அவரது பேச்சைக் கொண்டே கணித்து விடலாம்.</p>
<p>12. நான் என்ற சொல்லுக்கு &#8216;சுயலாபம்&#8217; என்று பொருள். அதை நீக்கி விட்டால் மனித சமுதாயம் எல்லையற்ற தெய்வீக நிலையை அடையும்.</p>
<p>13. மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.</p>
<p><strong>Read More:- </strong><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாரதியார் பாடல்கள்</a> | <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/" target="_blank" rel="noopener">பாரதியார் தேசிய பாடல்கள்</a></p>
<p>14. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.</p>
<p>15. எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.</p>
<p>16. பயம், சந்தேகம், சோம்பல் முதலிய குணங்களை அடியோடு விட்டு விடுங்கள்.</p>
<p>17. திருமணமான பெண்ணைக் கணவர் சுதந்திரமுள்ளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.</p>
<p>18. தீமையில் இருந்து தடுத்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.</p>
<p>19. கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.</p>
<p>20. உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல.</p>
<h3>Bharathiyar Quotes in Tamil &#8211; பாரதியார் மேற்கோள் வரிகள்</h3>
<p>21. தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.</p>
<p>22. துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.</p>
<p>23. தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்.</p>
<p>24. வீட்டிலும்,வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.</p>
<p>25. கல்வி அளிப்பதோடு குழந்தைகளின் உடல்நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.</p>
<p>26. பிறருக்கு உதவி செய்வது நல்லது. அதிலும் ஏழைக்குழந்தையின் கல்விக்கு உதவுவது மிகவும் நல்லது.</p>
<p>27. உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருந்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.</p>
<p><strong>Read More:- </strong><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாரதியார் பாடல்கள்</a> | <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/" target="_blank" rel="noopener">பாரதியார் தேசிய பாடல்கள்</a></p>
<p>28. உள்ளத்தில் கர்வம் நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்.</p>
<p>29. சென்றதை சிந்திப்பதை விட, இனிமேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.</p>
<p>30. தன்னை விட பலவீனமானவனுக்கு அநியாயம் செய்தால் தப்பில்லை என்று ஒருவன் நினைக்கும் வரை கலியுகம் இருக்கும்.</p>
<h3>Bharathiyar Short Quotes in Tamil</h3>
<p>31. மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.</p>
<p>32. நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.</p>
<p>33. கண்ணைத் திறந்து குழியில் விழுவது போல, மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல் தவிக்கிறான்.</p>
<p>34. பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.</p>
<p>35. தெளிந்த அறிவும்,இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.</p>
<p>36. மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.</p>
<p>37. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.</p>
<p>38. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.</p>
<p>39. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.</p>
<p>40. கடமையைச் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பவனைக் காண்பது நமக்கு தீமையையே உண்டாக்கும்.</p>
<p>41. கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விட கேவலமானவன்.</p>
<p>42. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.</p>
<p>43. பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.</p>
<p>44. மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.</p>
<p>45. அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால்<br />
தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.</p>
<p>46. எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.</p>
<p>47. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.</p>
<p>48. எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.</p>
<p>49. பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.</p>
<p>50. உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.</p>
<h3>Confidence Bharathiyar Quotes</h3>
<p>51. பொய்யான நடிப்பையும், முகஸ்துதியாக பேசுவதையும் பொருட்படுத்தக் கூடாது. ஆனால், இப்படிப்பட்டவர்களையே தலையில் தூக்கி வைத்து உலகம் கொண்டாடுகிறது.</p>
<p>52. சோம்பலை புறக்கணியுங்கள். உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.</p>
<p>53. உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.</p>
<p>54. உழைப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.</p>
<p>55. குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.</p>
<p>56. தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என்னும் இரு அர்த்தம் உண்டு.</p>
<p>57. ஒரு மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாக மாறி விடும்.</p>
<p>58. மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.</p>
<p>59. எல்லா சாஸ்திரமும் ஒரே உண்மையை போதித்தாலும், எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.</p>
<p><strong>Read More:- </strong><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாரதியார் பாடல்கள்</a> | <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf/" target="_blank" rel="noopener">பாரதியார் தேசிய பாடல்கள்</a></p>
<p>60. எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்காவிட்டால், அதனை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமாகாது.</p>
<p>61. மூலைக்கு மூலை உடற்பயிற்சி சாலை அமைத்தால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.</p>
<p>62. உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.</p>
<p>63. சுயநலத்தை விடு. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.</p>
<p>64. நடைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை ஞானம் என்று சொல்வது பிழை.</p>
<p>65. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.</p>
<p>66. செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.</p>
<p>67. பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.</p>
<p>68. தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.</p>
<p>69. தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.</p>
<p>70. குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.</p>
<h3>Bharathiyar Famous Lines</h3>
<p>71. அன்பு ஒன்றினால் மட்டுமே உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்ற முடியும்.</p>
<p>72. மனிதன் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்களில் மிக முக்கியமானது பொறுமை.</p>
<p>73. கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.</p>
<p>74. துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.</p>
<p>75. ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.</p>
<p>76. அன்பு ஒன்றே உலகத்திலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்றும் வலிமை படைத்தது.</p>
<p>77. கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.</p>
<p>78. தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.</p>
<p>79. அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.</p>
<p>80. ஆலம் விழுது போல, பிள்ளைகள் பெற்றோரை தாங்கிப் பிடிக்க வேண்டும்.</p>
<p>81. யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.</p>
<p>82. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், பெரியவர்களிடம் மட்டுமே இருக்கும்.</p>
<p>83. தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பயனுள்ளதை செய்வதே உழைப்பு.</p>
<p>84. ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. நடைமுறைக்கு வராத கருத்தை, அறிவு என்று சொல்லக்கூடாது.</p>
<p>85. நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும்.</p>
<p>86. எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே.</p>
<p>87. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது.</p>
<p>88. காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.</p>
<p>89. இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக் கொள்ள புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை.</p>
<p>90. ஜாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம். நீதிநெறி தவறாத நல்லவர்களே உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்.</p>
<p><strong>Read More:- </strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Read More:- </strong><a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">Amma kavithai in Tamil</a> | <a href="https://www.tamizhdb.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">Amma Quotes in Tamil</a></li>
<li><strong>Video:</strong> <a href="https://youtu.be/IZK7zRI_xNQ" target="_blank" rel="noopener sponsored">அம்மா பற்றிய வரிகள்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/">Bharathiyar Quotes in Tamil</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Sep 2020 09:35:22 +0000</pubDate>
				<category><![CDATA[பாரதியார்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=2043</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம் &#124; புதிய ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் &#124; Bharathiar Puthiya Aathichudi 1 அச்சம் தவிர் பயம் கொள்ளாதே 2 ஆண்மை தவறேல் மனவலிமை இழக்காதே 3 இளைத்தல் இகழ்ச்சி பின் வாங்குதல் இகழ்வதற்கு <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/" title="பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/">பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம் | புதிய ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் | Bharathiar Puthiya Aathichudi</p>
<figure id="attachment_31982" aria-describedby="caption-attachment-31982" style="width: 200px" class="wp-caption aligncenter"><img decoding="async" class="size-full wp-image-31982" src="https://www.tamizhdb.com/wp-content/uploads/2020/09/பாரதியார்-புதிய-ஆத்திச்சூடி-பொருள்-விளக்கம்.jpg" alt="பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்" width="200" height="261" /><figcaption id="caption-attachment-31982" class="wp-caption-text">பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்</figcaption></figure>
<p>1 அச்சம் தவிர்<br />
பயம் கொள்ளாதே</p>
<p>2 ஆண்மை தவறேல்<br />
மனவலிமை இழக்காதே</p>
<p>3 இளைத்தல் இகழ்ச்சி<br />
பின் வாங்குதல் இகழ்வதற்கு உரியது</p>
<p>4 ஈகை திறன்<br />
பிறர்க்கு கொடுத்தலை மனதில் கொள்</p>
<p>5 உடலினை உறுதி செய்<br />
உடம்பை திடமாக வைத்துக் கொள்.</p>
<p>6 ஊண்மிக விரும்பு<br />
உணவு உண்ண விருப்பம் கொள்.</p>
<p><strong>Read More:</strong> <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் கவிதைகள் பாடல்கள்</a> | <a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bhrathiyar Quotes in Tamil</a></p>
<p>7 எண்ணுவது உயர்வு<br />
எண்ணம் உயர்வாக இருக்கவேண்டும்</p>
<p>8 ஏறு போல் நட<br />
நிமிர்ந்து செல்</p>
<p>9 ஐம்பொறி ஆட்சி கொள்<br />
ஐம் புலனையும் அடக்கி ஆள்.</p>
<p>10 ஒற்றுமை வலியமாம்<br />
ஒற்றுமையே வலிமையாகும்.</p>
<p>11 ஓய்தல் ஒழி<br />
சோர்வுகளை நீக்கு</p>
<p>12 ஔடதம் குறை<br />
மருந்தை குறை</p>
<p>13 கற்ற தொழுகு<br />
வாழ்க்கையில் கற்றதைப் பின்பற்று</p>
<p>14 காலம் அழியேல்<br />
காலத்தை வீணாக்காதே.</p>
<p>15 கிளைபல தாங்கேல்<br />
எவ்வகைப் பிரிவையும் சகிக்காதே.</p>
<p><strong>Download:</strong> <a href="https://www.tamizhdb.com/wp-content/uploads/2020/10/Bharathiar-puthiya-aathichudi-with-meaning-in-tamil-pdf.pdf" target="_blank" rel="noopener noreferrer">Bharathiar puthiya aathichudi with meaning in tamil pdf</a></p>
<p>16 கீழோர்க்கு அஞ்சேல்<br />
கீழான எண்ணம் கொண்டவரிடம் பயம் கொள்ளாதே</p>
<p>17 குன்றேன நிமிர்ந்து நில்<br />
மலைக்குன்று போல் நிமிர்ந்து நில்</p>
<p>18 கூடித் தொழில் செய்<br />
நல்லவர்களுடன் கூடித் தொழில் செய்க</p>
<p>19 கெடுப்பது சோர்வு<br />
பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு</p>
<p>20 கேட்டிலும் துணிந்து நில்<br />
வறுமையிலும் தைரியமாக இரு</p>
<p>21 கைத்தொழில் போற்று<br />
கைத்தொழிலை விரும்பு</p>
<p>22 கொடுமையை எதிர்த்து நில்<br />
தீமை தரும் எந்த செயலையும் எதிர்த்து நில்</p>
<p>23 கோல்கைக் கொண்டு வாழ்<br />
பார பட்சம் கொண்டு இருக்காதே</p>
<p>24 கவ்வியதை விடேல்<br />
நல்லனவற்றை(செயல், சிந்தனை, சொல்) விட்டு விடாதே</p>
<p><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d/" target="_blank" rel="noopener">Jathagam Porutham in Tamil</a> | <a href="https://www.tamizhdb.com/star-matching-table-for-marriage-tamil/" target="_blank" rel="noopener">Star Matching Table for Marriage in Tamil</a> | <a href="https://www.star-astrological-zodiac.com/star-matching-table-for-marriage/" target="_blank" rel="noopener">Star Matching Table</a> in English</p>
<p>25 சரித்திர தேர்ச்சி கொள்<br />
நாட்டின் சரித்திரத்தை தெரிந்து கொள்</p>
<p>26 சாவதற்கு அஞ்சேல்<br />
மரணத்திற்கு அஞ்சாதே</p>
<p>27 சிதையா நெஞ்சுகொள்<br />
உறுதியான நெஞ்சம் கொண்டிரு</p>
<p>28 சீறுவோர்ச் சீறு<br />
மற்ற உயிர்களை துன்புறுத்துவோரைப் எதிர்த்து கோபம் கொள்</p>
<p>29 சுமையினுக்கு இளைத்திடேல்<br />
பொறுப்பினைக் கண்டு பயம் கொள்ளாதே</p>
<p>30 சூரரைப் போற்று<br />
திறமையானவரை மதித்து போற்று<br />
<ins class="adsbygoogle" style="display: block; text-align: center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-7429414083307866" data-ad-slot="7843100268"></ins></p>
<p>31 செய்வது துணிந்து செய்<br />
ஒரு நல்ல செயலை செய்ய பயப்படாதே</p>
<p>32 சேர்க்கை அழியேல்<br />
நல்ல சேர்க்கையை அழித்துவிடாதே</p>
<p>33 சைகையிற் பொருள் உணர்<br />
சைகையில் உணர்த்தும் விசயத்தை தெரிந்து கொள்</p>
<p>34 சொல்வது தெளிந்து சொல்<br />
சொல்லவந்ததை குழப்பாமல் தெளிவாக எடுத்துச் சொல்</p>
<p>35 சோதிடம் தனை இகழ்<br />
நிமித்த சாஸ்திரத்தை இகழ்.</p>
<p>36 சௌரியந் தவறேல்<br />
வீரத்தை விட்டு விடாதே.</p>
<p>37 ஞமிலி போல் வாழேல்<br />
அடிமையாக வாழாதே</p>
<p>38 ஞாயிறு போற்று<br />
சூரியனை துதி செய்</p>
<p>39 ஞிமிரென இன்புறு<br />
நல்ல கொள்கைகளுடன் நிமிர்ந்து வாழ்<ins class="adsbygoogle" style="display: block; text-align: center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-7429414083307866" data-ad-slot="7843100268"></ins></p>
<p><strong><a href="https://www.tamizhdb.com/marriage-thirumana-porutham-in-tamil/" target="_blank" rel="noopener">Thirumana Porutham in Tamil</a></strong></p>
<p>40 ஞெகிழ்வத தருளின்<br />
மனமகிழ்ந்து உதவி செய்</p>
<p>41 ஞேயங் காத்தல் செய்<br />
அறியப்படும் உண்மைகளை பத்திரப்படுத்து</p>
<p>42 தன்மை இழவேல்<br />
உன் இயல்பான நல்ல குணங்களை குறைத்துக் கொள்ளாதே</p>
<p>43 தாழ்ந்து நடவேல்<br />
யாருக்கும் தாழ்ந்து போகாதே.</p>
<p>44 திருவினை வென்று வாழ்<br />
எதனையும் எதிர் பார்க்காமல் உதவி செய்து அதன் மூலம் வரும் பெரும் பலனை பெற்று வாழ்க</p>
<p>45 தீயோர்க்கு அஞ்சேல்<br />
தீய குணம் உடையவர்களிடம் அச்சம் கொள்ளாதே</p>
<p>46 துன்பம் மறந்திடு<br />
துன்பங்களை மறந்து வாழ்</p>
<p>47 தூற்றுதல் ஒழி<br />
ஒருவரையும் பழிக்காதே</p>
<p>48 தெய்வம் நீ என்று உணர்<br />
உன்னிடமும் தெய்வ குணங்கள் உண்டு என்று உணர்ந்து வாழ்</p>
<p><strong>Download:</strong> <a href="https://www.tamizhdb.com/wp-content/uploads/2020/10/Bharathiar-puthiya-aathichudi-with-meaning-in-tamil-pdf.pdf" target="_blank" rel="noopener noreferrer">Bharathiar puthiya aathichudi with meaning in tamil pdf</a></p>
<p>49 தேசத்தைக் காத்தல் செய்<br />
தேச பற்றுடன் இரு</p>
<p>50 தையலை உயர்வு செய்<br />
பெண்களை மதித்து கௌரப்படுத்து</p>
<p>51 தொன்மைக்கு அஞ்சேல்<br />
பழமையானமூட நம்பிக்கைகளைக் கண்டு பயந்து கொள்ளாதே</p>
<p>52 தோல்வியிற் கலங்கேல்<br />
தோல்வியை கண்டு கலக்கம் கொள்ளாதே</p>
<p>53 தவத்தினை நிதம் புரி<br />
நல்ல பழக்க வழக்கங்களை தினமும் பின்பற்று</p>
<p>54 நன்று கருது<br />
நல்லனவற்றை எண்ணம் கொள்</p>
<p>55 நாளெல்லாம் வினை செய்<br />
தினமும் நல்ல செயல்களை செய்து பழகு</p>
<p>56 நினைப்பது முடியும்<br />
மனதில் நினைத்தது நிறைவேறும்</p>
<p><a href="https://www.tamizhdb.com/calculate-marriage-matching-in-tamil/" target="_blank" rel="noopener">Marriage Porutham in Tamil</a> | <a href="https://www.tamizhdb.com/star-matching-table-for-marriage-tamil/" target="_blank" rel="noopener">Star Matching Table for Marriage in Tamil</a></p>
<p>57 நீதி நூல் பயில்<br />
நீதி நூல் படித்து, நியாயம் ஒழுக்கத்தோடு, மற்றவர்க்கு நல்ல வழிகாட்டியாகவும் இரு.</p>
<p>58 நுனி அளவு செல்<br />
எதனையும் கூர்ந்து பார்த்து வாழ கற்றுக்கொள்</p>
<p>59 நூலினை பகுத்துணர்<br />
படிக்கும் நூல்களை ஆராய்ந்து அறிந்து கொள்.</p>
<p>60 நெற்றி சுருக்கிடேல்<br />
தேவையில்லாத எரிச்சலும் கோபமும் கொள்ளாதே</p>
<p>61 நேர்படப் பேசு<br />
எதையும் சுற்றி வளைத்து பேசாமல், நேரடியாகப் பேசு</p>
<p>62 நையப் புடை<br />
தீய செயல்களையும், எண்ணங்களையும் அடித்து நொறுக்கு.</p>
<p>63 நொந்தது சாகும்<br />
மனச் சோர்வு கொண்டால் பாதிப்பு கொல்லும்</p>
<p>64 நோற்பது கைவிடேல்<br />
விரதங்கள் பின்பற்றுவதை கை விடேல்<br />
<ins class="adsbygoogle" style="display: block; text-align: center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-7429414083307866" data-ad-slot="8973657022"></ins></p>
<p>65 பணத்தினைப் பெருக்கு<br />
பணத்தினை சேகரித்து வேண்டுவோர்க்கு உதவி செய்</p>
<p>66 பாட்டினில் அன்புசெய்<br />
இசையே உலக மொழியாம். பாடல்களினால் பக்தியும் அன்பு செய்</p>
<p>67 பிணத்தினைப் போற்றேல்<br />
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத்தவர்களை, துதி செய்யாதே.</p>
<p>68 பீழைக்கு இடம் கொடேல்<br />
துன்பத்திற்கு இடம் கொடுக்காதே</p>
<p>69 புதியன விரும்பு<br />
புதிய நன்மை தரும் மாற்றங்களை விரும்பு</p>
<p><strong>Read More:</strong> <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் கவிதைகள் பாடல்கள்</a> | <a href="https://www.tamizhdb.com/bharathiyar-quotes-in-tamil/" target="_blank" rel="noopener">Bhrathiyar Quotes in Tamil</a></p>
<p>70 பூமி இழந்திடேல்<br />
நம் சொந்த நாட்டை இழந்து, அடிமையாக இராதே</p>
<p>71 பெரிதினும் பெரிது கேள்<br />
நமது நல்ல எண்ணங்களை கொண்டு இறைவனிடம் அந்த பேரின்பச் சொத்தை கேள்.</p>
<p>72 பேய்களுக்கு அஞ்சேல்<br />
பேய் போல் கொடூர குணம் உள்ள மனிதர்களுக்கு அஞ்சாதே</p>
<p>73 பொய்ம்மை இகழ்<br />
வேஷம் போடும் பொய்யான மனிதர்களை, நிந்தை செய்.</p>
<p>74 போர்த்தொழில் பழகு<br />
தற்காப்பு தெரிந்து கொள்</p>
<p>75 மந்திரம் வலிமை<br />
நல்ல எண்ணங்களுடன் திரும்ப திரும்ப நாம் கூறும் வார்த்தைகளால் அச்செயல் வலிமை பெரும்.<br />
இங்கு மந்திரம் என்பது நல்ல எண்ணத்துடன் நாம் கூறும் நல் வார்த்தைகள் ஆகும்.</p>
<p>76 மானம் போற்று<br />
எந்த காரணதிற்காகவும், தன்மானத்தை இழந்து விடாதே</p>
<p>77 மிடிமையில் அழிந்திடேல்<br />
உன் வாழ்க்கையை வறுமையையும் துன்பத்தையும் எண்ணி இழந்து விடாதே</p>
<p>78 மீளுமாறு உணர்ந்து கொள்<br />
மனச் சோர்வினால் அமிழ்ந்து போகாமல், மீண்டு வா</p>
<p>79 முனையிலே முகத்து நில்<br />
துணிவோடு முன்னே இரு</p>
<p>80 மூப்பினுக்கு இடம் கொடேல்<br />
தம்மிலும் பெரியோரிடம் பணிவுடன் நடந்து கொள்</p>
<p><a href="http://www.tamizhdb.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%af%88/" target="_blank" rel="noopener noreferrer"><strong>ஓளவையார் ஆத்திச்சூடி விளக்கம்</strong></a></p>
<p>81 மெல்லத் தெரிந்து சொல்<br />
ஒரு விஷயத்தை ஆராய்ந்து தெரிந்து பேசு</p>
<p>82 மேழி போற்று<br />
விவசாயத்தை மதித்து வாழ்</p>
<p>83 மொய்ம்புறத் தவம் செய்<br />
மனவலிமையோடு இருக்க பழகு</p>
<p>84 மோனம் போற்று<br />
இடம் அறிந்து மௌனம் கடைபிடி</p>
<p>85 மௌட்டியந் தனைக் கொல்<br />
உன் அறிவால் அறியாமையை ஒழி</p>
<p>86 யவனர் போல் முயற்சி கொள்<br />
ஊக்கத்துடன் முயற்சி செய்</p>
<p>87 யாவரையும் மதித்து வாழ்<br />
எல்லா உயிரினிடத்தும் அன்பும் மதிப்போடும் வாழ்க</p>
<p>88 யௌவனம் காத்தல் செய்.<br />
எப்போதும் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இரு</p>
<p>89 ரஸத்திலே தேர்ச்சிகொள்<br />
மனக்கிளர்ச்சியில் இருந்து தெளிவடைந்து கொள்</p>
<p>90 ராஜஸம் பயில்<br />
அதிகமாக பிடித்த செயலை பயின்று தேர்ச்சி கொள்</p>
<p>91 ரீதி தவறேல்<br />
நிலை தவறாமல் வாழ்</p>
<p>92 ருசி பல வென்று உணர்<br />
ஐம்புலன்களின் அடக்கி வெல்க</p>
<p>93 ரூபம் செம்மை செய்<br />
உன்னுடைய உண்மையான நல்ல குணங்களை இன்னும் உயர்வாக இருக்க செம்மை படுத்திக் கொள்</p>
<p>94 ரேகையில் கனி கொள்<br />
நியாயமான முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போடுபவர் கோவம் கொள்</p>
<p>95 ரோதனம் தவிர்<br />
அழுகையை நீக்கு</p>
<p>96 ரௌத்ரம் பழகு<br />
கோவத்தை அடக்கி ஆள். நல்ல விஷயங்களுக்காக கோபம் கொள்</p>
<p>97 லவம் பல வெள்ளமாம்<br />
சிறுதுளி பெருவெள்ளம்</p>
<p>98 லாவகம் பயிற்சி செய்<br />
பழக்கமே தேர்ச்சியை கொடுக்கும்</p>
<p>99 லீலை இவ்வுலகு<br />
உலகம் ஒரு விளையாட்டு களம்</p>
<p>100 (உ)லுத்தரை இகழ்<br />
உலோபி &#8212; கருமியை கடிந்து இகழ்</p>
<p>101 (உ)லோகநூல் கற்றுணர்<br />
உலகில் அனைத்து மொழிகளிலும் உள்ள நல்ல நூல்களை கற்று அறிந்து கொள்</p>
<p>102 லௌகிகம் ஆற்று<br />
உலக நியதிகளையும் கடமைகளையும் பின்பற்று</p>
<p>103 வருவதை மகிழ்ந்துண்<br />
கிடைத்ததை ஏற்றுக் கொள்</p>
<p>104 வான நூல் பயிற்சி கொள்<br />
ஆகாய கோள்களைப் பற்றி தெரிந்து கொள் (வானவியல் சாஸ்திரம் தெரிந்து கொள்)</p>
<p>105 விதையினைத் தெரிந்து இடு<br />
விதையினை, அதன் பருவ காலங்களுக்கு ஏற்ப பயிரிடு</p>
<p>106 வீரியம் பெருக்கு<br />
வலிமை மற்றும் வீரத்தைப் பெருக்கு.</p>
<p>107 வெடிப்புறப் பேசு<br />
ஒளிவு மறைவு இல்லாமல் தைரியமாக பேசு</p>
<p>108 வேதம் புதுமை செய்<br />
புதிய நல்ல நெறிகளை உருவாக்கு</p>
<p>109 வையத் தலைமை கொள்<br />
உலகத்தோர் போற்றும் படி வாழ்க</p>
<p>110 வௌவுதல் நீக்கு<br />
மற்றவரின் பொருளுக்கு ஆசைப் படாதே</p>
<p><strong>Read More:- </strong></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் குழந்தை</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/" target="_blank" rel="noopener">ஞான பாடல்கள் பாரதியார்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95/" target="_blank" rel="noopener">பாரதியார் பாடல்கள் பெண்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/">பாரதியார் விடுதலை பாடல்கள்</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/" target="_blank" rel="noopener">பாரதியார் தமிழ் பற்றிய பாடல்கள்</a></li>
<li><strong>Read More:- </strong><a href="https://www.tamizhdb.com/amma-kavithai-in-tamil/" target="_blank" rel="noopener">Amma kavithai in Tamil</a> | <a href="https://www.tamizhdb.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/" target="_blank" rel="noopener">Amma Quotes in Tamil</a></li>
<li>Video – <a href="https://www.youtube.com/watch?v=bitt-kSoZWc&amp;list=PLZRilIHQzEIYEe2_yiUFc1t189uzySHVr" target="_blank" rel="noopener">Learn Basic Astrology in Tamil</a></li>
</ul>
<p><strong>குறிப்பு:</strong> <em> இங்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சில வலைத்தளங்களில் இருந்தும் மற்றும் என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளேன். இது துல்லியமாக சரியான தகவலா என்று என்னால் கூற இயலாது, என்னால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன். ஏதேனும் தவறு இருப்பினும் தொடர்பு கொள்க. நான் பதிவினை மாற்றி விடுகிறேன்.</em></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/">பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
