<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கலை மற்றும் கலாச்சாரம் Archives</title>
	<atom:link href="https://www.tamizhdb.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://www.tamizhdb.com/category/கலை-மற்றும்-கலாச்சாரம்/</link>
	<description>தமிழ் தகவல்கள், தொழிற்நுட்பம், இலக்கணம், இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம்</description>
	<lastBuildDate>Fri, 06 Sep 2024 01:35:13 +0000</lastBuildDate>
	<language>ta-IN</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://www.tamizhdb.com/wp-content/uploads/2017/11/cropped-tamil_logo_580x412-32x32.png</url>
	<title>கலை மற்றும் கலாச்சாரம் Archives</title>
	<link>https://www.tamizhdb.com/category/கலை-மற்றும்-கலாச்சாரம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>திருக்குறள் குடியியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Dec 2019 03:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1225</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் குடியியல் குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் குடியியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் குடியியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் குடியியல்</p>
<h3 style="text-align: center;">குடிமை</h3>
<p><strong>குறள் 951:</strong></p>
<p>இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்<br />
செப்பமும் நாணும் ஒருங்கு.</p>
<p>நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.</p>
<p><strong>குறள் 952:</strong></p>
<p>ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்<br />
இழுக்கார் குடிப்பிறந் தார்.</p>
<p>உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.</p>
<p><strong>குறள் 953:</strong></p>
<p>நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்<br />
வகையென்ப வாய்மைக் குடிக்கு.</p>
<p>உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.</p>
<p><strong>குறள் 954:</strong></p>
<p>அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்<br />
குன்றுவ செய்தல் இலர்.</p>
<p>பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.</p>
<p><strong>குறள் 955:</strong></p>
<p>வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி<br />
பண்பில் தலைப்பிரிதல் இன்று.</p>
<p>தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.</p>
<p><strong>குறள் 956:</strong></p>
<p>சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற<br />
குலம்பற்றி வாழ்தும்என் பார்.</p>
<p>மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.</p>
<p><strong>குறள் 957:</strong></p>
<p>குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்<br />
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.</p>
<p>உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.</p>
<p><strong>குறள் 958:</strong></p>
<p>நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்<br />
குலத்தின்கண் ஐயப் படும்.</p>
<p>ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.</p>
<p><strong>குறள் 959:</strong></p>
<p>நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்<br />
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.</p>
<p>இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.</p>
<p><strong>குறள் 960:</strong></p>
<p>நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்<br />
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.</p>
<p>ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.</p>
<h5>மானம்</h5>
<p><strong>குறள் 961:</strong></p>
<p>இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்<br />
குன்ற வருப விடல்.</p>
<p>இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விடவேண்டும்.</p>
<p><strong>குறள் 962:</strong></p>
<p>சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு<br />
பேராண்மை வேண்டு பவர்.</p>
<p>புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.</p>
<p><strong>குறள் 963:</strong></p>
<p>பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய<br />
சுருக்கத்து வேண்டும் உயர்வு.</p>
<p>செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.</p>
<p><strong>குறள் 964:</strong></p>
<p>தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்<br />
நிலையின் இழிந்தக் கடை.</p>
<p>மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.</p>
<p><strong>குறள் 965:</strong></p>
<p>குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ<br />
குன்றி அனைய செயின்.</p>
<p>மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.</p>
<p><strong>குறள் 966:</strong></p>
<p>புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று<br />
இகழ்வார்பின் சென்று நிலை.</p>
<p>மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?</p>
<p><strong>குறள் 967:</strong></p>
<p>ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே<br />
கெட்டான் எனப்படுதல் நன்று.</p>
<p>மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.</p>
<p><strong>குறள் 968:</strong></p>
<p>மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை<br />
பீடழிய வந்த இடத்து.</p>
<p>ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?</p>
<p><strong>குறள் 969:</strong></p>
<p>மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்<br />
உயிர்நீப்பர் மானம் வரின்.</p>
<p>தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.</p>
<p><strong>குறள் 970:</strong></p>
<p>இளிவரின் வாழாத மானம் உடையார்<br />
ஒளிதொழுது ஏத்தும் உலகு.</p>
<p>தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.</p>
<h3 style="text-align: center;">பெருமை</h3>
<p><strong>குறள் 971:</strong></p>
<p>ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு<br />
அஃதிறந்து வாழ்தும் எனல்.</p>
<p>ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.</p>
<p><strong>குறள் 972:</strong></p>
<p>பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா<br />
செய்தொழில் வேற்றுமை யான்.</p>
<p>எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.</p>
<p><strong>குறள் 973:</strong></p>
<p>மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்<br />
கீழல்லார் கீழல் லவர்.</p>
<p>மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.</p>
<p><strong>குறள் 974:</strong></p>
<p>ஒருமை மகளிரே போலப் பெருமையும்<br />
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.</p>
<p>ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.</p>
<p><strong>குறள் 975:</strong></p>
<p>பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்<br />
அருமை உடைய செயல்.</p>
<p>பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.</p>
<p><strong>குறள் 976:</strong></p>
<p>சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்<br />
பேணிக் கொள் வேம் என்னும்<br />
நோக்கு.</p>
<p>பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.</p>
<p><strong>குறள் 977:</strong></p>
<p>இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்<br />
சீரல் லவர்கண் படின்.</p>
<p>சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்.</p>
<p><strong>குறள் 978:</strong></p>
<p>பணியுமாம் என்றும் பெருமை சிறுமை<br />
அணியுமாம் தன்னை வியந்து.</p>
<p>பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.</p>
<p><strong>குறள் 979:</strong></p>
<p>பெருமை பெருமிதம் இன்மை சிறுமை<br />
பெருமிதம் ஊர்ந்து விடல்.</p>
<p>பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ்தல்: சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.</p>
<p><strong>குறள் 980:</strong></p>
<p>அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்<br />
குற்றமே கூறி விடும்.</p>
<p>பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.</p>
<h3 style="text-align: center;">சான்றாண்மை</h3>
<p><strong>குறள் 981:</strong></p>
<p>கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து<br />
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.</p>
<p>கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 982:</strong></p>
<p>குணநலம் சான்றோர் நலனே பிறநலம்<br />
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.</p>
<p>சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.</p>
<p><strong>குறள் 983:</strong></p>
<p>அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு<br />
ஐந்துசால் ஊன்றிய தூண்.</p>
<p>அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.</p>
<p><strong>குறள் 984:</strong></p>
<p>கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை<br />
சொல்லா நலத்தது சால்பு.</p>
<p>தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.</p>
<p><strong>குறள் 985:</strong></p>
<p>ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்<br />
மாற்றாரை மாற்றும் படை.</p>
<p>ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.</p>
<p><strong>குறள் 986:</strong></p>
<p>சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி<br />
துலையல்லார் கண்ணும் கொளல்.</p>
<p>சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.</p>
<p><strong>குறள் 987:</strong></p>
<p>இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்<br />
என்ன பயத்ததோ சால்பு.</p>
<p>துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?</p>
<p><strong>குறள் 988:</strong></p>
<p>இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்<br />
திண்மைஉண் டாகப் பெறின்.</p>
<p>சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.</p>
<p><strong>குறள் 989:</strong></p>
<p>ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு<br />
ஆழி எனப்படு வார்.</p>
<p>சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப் படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.</p>
<p><strong>குறள் 990:</strong></p>
<p>சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்<br />
தாங்காது மன்னோ பொறை.</p>
<p>சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.</p>
<h3 style="text-align: center;">பண்புடைமை</h3>
<p><strong>குறள் 991:</strong></p>
<p>எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்<br />
பண்புடைமை என்னும் வழக்கு.</p>
<p>பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செல்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 992:</strong></p>
<p>அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்<br />
பண்புடைமை என்னும் வழக்கு.</p>
<p>அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.</p>
<p><strong>குறள் 993:</strong></p>
<p>உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க<br />
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.</p>
<p>உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.</p>
<p><strong>குறள் 994:</strong></p>
<p>நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்<br />
பண்புபா ராட்டும் உலகு.</p>
<p>நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன் பட வாழும் பெரியோரின் நல்ல பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.</p>
<p><strong>குறள் 995:</strong></p>
<p>நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்<br />
பண்புள பாடறிவார் மாட்டு.</p>
<p>ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன.</p>
<p><strong>குறள் 996:</strong></p>
<p>பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்<br />
மண்புக்கு மாய்வது மன்.</p>
<p>பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.</p>
<p><strong>குறள் 997:</strong></p>
<p>அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்<br />
மக்கட்பண்பு இல்லா தவர்.</p>
<p>மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.</p>
<p><strong>குறள் 998:</strong></p>
<p>நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்<br />
பண்பாற்றார் ஆதல் கடை.</p>
<p>நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.</p>
<p><strong>குறள் 999:</strong></p>
<p>நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்<br />
பகலும்பாற் பட்டன்று இருள்.</p>
<p>பிறரோடு கலந்து பழகி மகிழ முடியதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.</p>
<p><strong>குறள் 1000:</strong></p>
<p>பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்<br />
கலந்தீமை யால்திரிந் தற்று.</p>
<p>பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.</p>
<h3 style="text-align: center;">நன்றியில்செல்வம்</h3>
<p><strong>குறள் 1001:</strong></p>
<p>வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்<br />
செத்தான் செயக்கிடந்தது இல்.</p>
<p>ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.</p>
<p><strong>குறள் 1002:</strong></p>
<p>பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்<br />
மருளானாம் மாணாப் பிறப்பு.</p>
<p>பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கும் ஒன்றும் கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.</p>
<p><strong>குறள் 1003:</strong></p>
<p>ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்<br />
தோற்றம் நிலக்குப் பொறை.</p>
<p>சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.</p>
<p><strong>குறள் 1004:</strong></p>
<p>எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்<br />
நச்சப் படாஅ தவன்.</p>
<p>பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?</p>
<p><strong>குறள் 1005:</strong></p>
<p>கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய<br />
கோடியுண் டாயினும் இல்.</p>
<p>பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.</p>
<p><strong>குறள் 1006:</strong></p>
<p>ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று<br />
ஈதல் இயல்பிலா தான்.</p>
<p>தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.</p>
<p><strong>குறள் 1007:</strong></p>
<p>அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்<br />
பெற்றாள் தமியள்மூத் தற்று.</p>
<p>பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.</p>
<p><strong>குறள் 1008:</strong></p>
<p>நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்<br />
நச்சு மரம்பழுத் தற்று.</p>
<p>பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.</p>
<p><strong>குறள் 1009:</strong></p>
<p>அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய<br />
ஒண்பொருள் கொள்வார் பிறர்.</p>
<p>பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.</p>
<p><strong>குறள் 1010:</strong></p>
<p>சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி<br />
வறங்கூர்ந் தனையது உடைத்து.</p>
<p>புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.</p>
<h5>நாணுடைமை</h5>
<p><strong>குறள் 1011:</strong></p>
<p>கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்<br />
நல்லவர் நாணுப் பிற.</p>
<p>தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும்; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.</p>
<p><strong>குறள் 1012:</strong></p>
<p>ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல<br />
நாணுடைமை மாந்தர் சிறப்பு.</p>
<p>உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.</p>
<p><strong>குறள் 1013:</strong></p>
<p>ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்<br />
நன்மை குறித்தது சால்பு.</p>
<p>எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை; சால்பு என்பது, நாணம் என்று சொல்லபடும் நல்ல தன்மையை இருப்பிடமாகக் கொண்டது.</p>
<p><strong>குறள் 1014:</strong></p>
<p>அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்<br />
பிணிஅன்றோ பீடு நடை.</p>
<p>சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ? அந்த அணிகலம் இல்லையானால், பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ?</p>
<p><strong>குறள் 1015:</strong></p>
<p>பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு<br />
உறைபதி என்னும் உலகு.</p>
<p>பிறர்க்கு வரும் பழிக்காகவும் தமக்கு வரும் பழிக்காவும் நாணுகின்றவர், நாணத்திற்கு உறைவிடமானவர் என்று உலகம் சொல்லும்.</p>
<p><strong>குறள் 1016:</strong></p>
<p>நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்<br />
பேணலர் மேலா யவர்.</p>
<p>நாணமாகிய வேலியைத் தமக்குக் காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்.</p>
<p><strong>குறள் 1017:</strong></p>
<p>நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்<br />
நாண்துறவார் நாணாள் பவர்.</p>
<p>நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார்.</p>
<p><strong>குறள் 1018:</strong></p>
<p>பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்<br />
அறம்நாணத் தக்கது உடைத்து.</p>
<p>ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.</p>
<p><strong>குறள் 1019:</strong></p>
<p>குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்<br />
நாணின்மை நின்றக் கடை.</p>
<p>ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.</p>
<p><strong>குறள் 1020:</strong></p>
<p>நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை<br />
நாணால் உயிர்மருட்டி அற்று.</p>
<p>மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல் மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.</p>
<h3 style="text-align: center;">குடிசெயல்வகை</h3>
<p><strong>குறள் 1021:</strong></p>
<p>கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்<br />
பெருமையின் பீடுடையது இல்.</p>
<p>குடிப்பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.</p>
<p><strong>குறள் 1022:</strong></p>
<p>ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்<br />
நீள்வினையால் நீளும் குடி.</p>
<p>முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.</p>
<p><strong>குறள் 1023:</strong></p>
<p>குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்<br />
மடிதற்றுத் தான்முந் துறும்.</p>
<p>என் குடியை உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்.</p>
<p><strong>குறள் 1024:</strong></p>
<p>சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்<br />
தாழாது உஞற்று பவர்க்கு.</p>
<p>தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு அவர் ஆராயாமலே அச்செயல் தானே நிறைவேறும்.</p>
<p><strong>குறள் 1025:</strong></p>
<p>குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்<br />
சுற்றமாச் சுற்றும் உலகு.</p>
<p>குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.</p>
<p><strong>குறள் 1026:</strong></p>
<p>நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த<br />
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.</p>
<p>ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கிக் கொள்வதாகும்.</p>
<p><strong>குறள் 1027:</strong></p>
<p>அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்<br />
ஆற்றுவார் மேற்றே பொறை.</p>
<p>போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.</p>
<p><strong>குறள் 1028:</strong></p>
<p>குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து<br />
மானங் கருதக் கெடும்.</p>
<p>குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரியகாலம் என்று ஒன்று இல்லை. சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமை கெடும்.</p>
<p><strong>குறள் 1029:</strong></p>
<p>இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்<br />
குற்ற மறைப்பான் உடம்பு.</p>
<p>தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?</p>
<p><strong>குறள் 1030:</strong></p>
<p>இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்<br />
நல்லாள் இலாத குடி.</p>
<p>துன்பம் வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.</p>
<h3 style="text-align: center;">உழவு</h3>
<p><strong>குறள் 1031:</strong></p>
<p>சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்<br />
உழந்தும் உழவே தலை.</p>
<p>உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.</p>
<p><strong>குறள் 1032:</strong></p>
<p>உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது<br />
எழுவாரை எல்லாம் பொறுத்து.</p>
<p>உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.</p>
<p><strong>குறள் 1033:</strong></p>
<p>உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்<br />
தொழுதுண்டு பின்செல் பவர்.</p>
<p>உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.</p>
<p><strong>குறள் 1034:</strong></p>
<p>பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்<br />
அலகுடை நீழ லவர்.</p>
<p>நெல்வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடைநிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.</p>
<p><strong>குறள் 1035:</strong></p>
<p>இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது<br />
கைசெய்தூண் மாலை யவர்.</p>
<p>கையால் தொழில்செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர் பிறரிடம்சென்று இரக்கமாட்டார்; தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.</p>
<p><strong>குறள் 1036:</strong></p>
<p>உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்<br />
விட்டேம்என் பார்க்கும் நிலை.</p>
<p>உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.</p>
<p><strong>குறள் 1037:</strong></p>
<p>தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்<br />
வேண்டாது சாலப் படும்.</p>
<p>ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்.</p>
<p><strong>குறள் 1038:</strong></p>
<p>ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்<br />
நீரினும் நன்றதன் காப்பு.</p>
<p>ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.</p>
<p><strong>குறள் 1039:</strong></p>
<p>செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து<br />
இல்லாளின் ஊடி விடும்.</p>
<p>நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்.</p>
<p><strong>குறள் 1040:</strong></p>
<p>இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்<br />
நிலமென்னும் நல்லாள் நகும்.</p>
<p>எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.</p>
<h3 style="text-align: center;">நல்குரவு</h3>
<p><strong>குறள் 1041:</strong></p>
<p>இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்<br />
இன்மையே இன்னா தது.</p>
<p>வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.</p>
<p><strong>குறள் 1042:</strong></p>
<p>இன்மை எனவொரு பாவி மறுமையும்<br />
இம்மையும் இன்றி வரும்.</p>
<p>வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.</p>
<p><strong>குறள் 1043:</strong></p>
<p>தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக<br />
நல்குரவு என்னும் நசை.</p>
<p>வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.</p>
<p><strong>குறள் 1044:</strong></p>
<p>இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த<br />
சொற்பிறக்கும் சோர்வு தரும்.</p>
<p>வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.</p>
<p><strong>குறள் 1045:</strong></p>
<p>நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்<br />
துன்பங்கள் சென்று படும்.</p>
<p>வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.</p>
<p><strong>குறள் 1046:</strong></p>
<p>நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்<br />
சொற்பொருள் சோர்வு படும்.</p>
<p>நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.</p>
<p><strong>குறள் 1047:</strong></p>
<p>அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்<br />
பிறன்போல நோக்கப் படும்.</p>
<p>அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.</p>
<p><strong>குறள் 1048:</strong></p>
<p>இன்றும் வருவது கொல்லோ நெருநலும்<br />
கொன்றது போலும் நிரப்பு.</p>
<p>நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).</p>
<p><strong>குறள் 1049:</strong></p>
<p>நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்<br />
யாதொன்றும் கண்பாடு அரிது.</p>
<p>ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும்; ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.</p>
<p><strong>குறள் 1050:</strong></p>
<p>துப்புர வில்லார் துவரத் துறவாமை<br />
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.</p>
<p>நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.</p>
<h3 style="text-align: center;">இரவு</h3>
<p><strong>குறள் 1051:</strong></p>
<p>இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்<br />
அவர்பழி தம்பழி அன்று.</p>
<p>இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்க வேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று.</p>
<p><strong>குறள் 1052:</strong></p>
<p>இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை<br />
துன்பம் உறாஅ வரின்.</p>
<p>இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.</p>
<p><strong>குறள் 1053:</strong></p>
<p>கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று<br />
இரப்புமோ ரேஎர் உடைத்து.</p>
<p>ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.</p>
<p><strong>குறள் 1054:</strong></p>
<p>இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்<br />
கனவிலும் தேற்றாதார் மாட்டு.</p>
<p>உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.</p>
<p><strong>குறள் 1055:</strong></p>
<p>கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று<br />
இரப்பவர் மேற்கொள் வது.</p>
<p>ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.</p>
<p><strong>குறள் 1056:</strong></p>
<p>கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை<br />
எல்லாம் ஒருங்கு கெடும்.</p>
<p>உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்.</p>
<p><strong>குறள் 1057:</strong></p>
<p>இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்<br />
உள்ளுள் உவப்பது உடைத்து.</p>
<p>இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.</p>
<p><strong>குறள் 1058:</strong></p>
<p>இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்<br />
மரப்பாவை சென்றுவந் தற்று.</p>
<p>இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.</p>
<p><strong>குறள் 1059:</strong></p>
<p>ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்<br />
மேவார் இலாஅக் கடை.</p>
<p>பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?</p>
<p><strong>குறள் 1060:</strong></p>
<p>இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை<br />
தானேயும் சாலும் கரி.</p>
<p>இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும்; அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.</p>
<h3 style="text-align: center;">இரவச்சம்</h3>
<p><strong>குறள் 1061:</strong></p>
<p>கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்<br />
இரவாமை கோடி உறும்.</p>
<p>உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது.</p>
<p><strong>குறள் 1062:</strong></p>
<p>இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து<br />
கெடுக உலகியற்றி யான்.</p>
<p>உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக!</p>
<p><strong>குறள் 1063:</strong></p>
<p>இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்<br />
வன்மையின் வன்பாட்ட தில்.</p>
<p>வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.</p>
<p><strong>குறள் 1064:</strong></p>
<p>இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்<br />
காலும் இரவொல்லாச் சால்பு.</p>
<p>வாழ வழி இல்லாத போதும் இரந்துகேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும்.</p>
<p><strong>குறள் 1065:</strong></p>
<p>தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது<br />
உண்ணலின் ஊங்கினிய தில்.</p>
<p>தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.</p>
<p><strong>குறள் 1066:</strong></p>
<p>ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு<br />
இரவின் இளிவந்த தில்.</p>
<p>பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.</p>
<p><strong>குறள் 1067:</strong></p>
<p>இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்<br />
கரப்பார் இரவன்மின் என்று.</p>
<p>இரந்து கேட்பதானால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்கவேண்டாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.</p>
<p><strong>குறள் 1068:</strong></p>
<p>இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்<br />
பார்தாக்கப் பக்கு விடும்.</p>
<p>இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்துவிடும்.</p>
<p><strong>குறள் 1069:</strong></p>
<p>இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள<br />
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</p>
<p>இரத்தலின் கொடுமையை நினைந்தால் உள்ளம் கரைந்து உருகும்; உள்ளதை ஒளிக்கும் கொடுமையை நினைந்தால், உருகுமளவும் இல்லாமல் அழியும்.</p>
<p><strong>குறள் 1070:</strong></p>
<p>கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்<br />
சொல்லாடப் போஒம் உயிர்.</p>
<p>இரப்பவர்`இல்லை&#8217; என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே; உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ?</p>
<h3 style="text-align: center;">கயமை</h3>
<p><strong>குறள் 1071:</strong></p>
<p>மக்களே போல்வர் கயவர் அவரன்ன<br />
ஒப்பாரி யாங்கண்ட தில்.</p>
<p>மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.</p>
<p><strong>குறள் 1072:</strong></p>
<p>நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்<br />
நெஞ்சத்து அவலம் இலர்.</p>
<p>நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.</p>
<p><strong>குறள் 1073:</strong></p>
<p>தேவர் அனையர் கயவர் அவருந்தாம்<br />
மேவன செய்தொழுக லான்.</p>
<p>கயவரும் தேவரைப் போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.</p>
<p><strong>குறள் 1074:</strong></p>
<p>அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்<br />
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.</p>
<p>கீழ்மக்கள் தமக்குக் கீழ்ப்பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரைவிடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.</p>
<p><strong>குறள் 1075:</strong></p>
<p>அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்<br />
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.</p>
<p>கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில், அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.</p>
<p><strong>குறள் 1076:</strong></p>
<p>அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட<br />
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.</p>
<p>கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர்.</p>
<p><strong>குறள் 1077:</strong></p>
<p>ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்<br />
கூன்கையர் அல்லா தவர்க்கு.</p>
<p>கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதறமாட்டார்.</p>
<p><strong>குறள் 1078:</strong></p>
<p>சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்<br />
கொல்லப் பயன்படும் கீழ்.</p>
<p>அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.</p>
<p><strong>குறள் 1079:</strong></p>
<p>உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்<br />
வடுக்காண வற்றாகும் கீழ்.</p>
<p>கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர்மேல் பொறாமைகொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.</p>
<p><strong>குறள் 1080:</strong></p>
<p>எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்<br />
விற்றற்கு உரியர் விரைந்து.</p>
<p>கயவர் எதற்கு உரியவர்? ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காகத் தம்மைப் பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் குடியியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் கற்பியல் பகுதி 2</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Nov 2018 01:42:38 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1416</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>நெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? குறள் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/" title="திருக்குறள் கற்பியல் பகுதி 2">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/">திருக்குறள் கற்பியல் பகுதி 2</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<h3 style="text-align: center;">நெஞ்சொடுகிளத்தல்</h3>
<p>திருக்குறள் கற்பியல்</p>
<p><strong>குறள் 1241:</strong></p>
<p>நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்<br />
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.</p>
<p>நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?</p>
<p><strong>குறள் 1242:</strong></p>
<p>காதல் அவரிலர் ஆகநீ நோவது<br />
பேதைமை வாழியென் நெஞ்சு.</p>
<p>என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.</p>
<p><strong>குறள் 1243:</strong></p>
<p>இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்<br />
பைதல்நோய் செய்தார்கண் இல்.</p>
<p>நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.</p>
<p><strong>குறள் 1244:</strong></p>
<p>கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்<br />
தின்னும் அவர்க்காணல் உற்று.</p>
<p>நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.</p>
<p><strong>குறள் 1245:</strong></p>
<p>செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்<br />
உற்றால் உறாஅ தவர்.</p>
<p>நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?</p>
<p><strong>குறள் 1246:</strong></p>
<p>கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்<br />
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.</p>
<p>என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.</p>
<p><strong>குறள் 1247:</strong></p>
<p>காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே<br />
யானோ பொறேன்இவ் விரண்டு.</p>
<p>நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.</p>
<p><strong>குறள் 1248:</strong></p>
<p>பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்<br />
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.</p>
<p>என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.</p>
<p><strong>குறள் 1249:</strong></p>
<p>உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ<br />
யாருழைச் சேறியென் நெஞ்சு.</p>
<p>என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?</p>
<p><strong>குறள் 1250:</strong></p>
<p>துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா<br />
இன்னும் இழத்தும் கவின்.</p>
<p>நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.</p>
<h3 style="text-align: center;">நிறையழிதல்</h3>
<p><strong>குறள் 1251:</strong></p>
<p>காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்<br />
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.</p>
<p>நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.</p>
<p><strong>குறள் 1252:</strong></p>
<p>காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை<br />
யாமத்தும் ஆளும் தொழில்.</p>
<p>காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.</p>
<p><strong>குறள் 1253:</strong></p>
<p>மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்<br />
தும்மல்போல் தோன்றி விடும்.</p>
<p>யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.</p>
<p><strong>குறள் 1254:</strong></p>
<p>நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்<br />
மறையிறந்து மன்று படும்.</p>
<p>யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.</p>
<p><strong>குறள் 1255:</strong></p>
<p>செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்<br />
உற்றார் அறிவதொன்று அன்று.</p>
<p>தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.</p>
<p><strong>குறள் 1256:</strong></p>
<p>செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ<br />
எற்றென்னை உற்ற துயர்.</p>
<p>வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!.</p>
<p><strong>குறள் 1257:</strong></p>
<p>நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்<br />
பேணியார் பெட்ப செயின்.</p>
<p>நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.</p>
<p><strong>குறள் 1258:</strong></p>
<p>பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்<br />
பெண்மை உடைக்கும் படை.</p>
<p>நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?</p>
<p><strong>குறள் 1259:</strong></p>
<p>புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்<br />
கலத்தல் உறுவது கண்டு.</p>
<p>ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.</p>
<p><strong>குறள் 1260:</strong></p>
<p>நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ<br />
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.</p>
<p>கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?</p>
<h3 style="text-align: center;">அவர்வயின்விதும்பல்</h3>
<p><strong>குறள் 1261:</strong></p>
<p>வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற<br />
நாளொற்றித் தேய்ந்த விரல்.</p>
<p>என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.</p>
<p><strong>குறள் 1262:</strong></p>
<p>இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்<br />
கலங்கழியும் காரிகை நீத்து.</p>
<p>தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.</p>
<p><strong>குறள் 1263:</strong></p>
<p>உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்<br />
வரல்நசைஇ இன்னும் உளேன்.</p>
<p>வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.</p>
<p><strong>குறள் 1264:</strong></p>
<p>கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்<br />
கோடுகொ டேறுமென் நெஞ்சு.</p>
<p>முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.</p>
<p><strong>குறள் 1265:</strong></p>
<p>காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்<br />
நீங்கும்என் மென்தோள் பசப்பு.</p>
<p>என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.</p>
<p><strong>குறள் 1266:</strong></p>
<p>வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்<br />
பைதல்நோய் எல்லாம் கெட.</p>
<p>என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.</p>
<p><strong>குறள் 1267:</strong></p>
<p>புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்<br />
கண்அன்ன கேளிர் விரன்.</p>
<p>என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?</p>
<p><strong>குறள் 1268:</strong></p>
<p>வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து<br />
மாலை அயர்கம் விருந்து.</p>
<p>அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.</p>
<p><strong>குறள் 1269:</strong></p>
<p>ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்<br />
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.</p>
<p>தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.</p>
<p><strong>குறள் 1270:</strong></p>
<p>பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்<br />
உள்ளம் உடைந்துக்கக் கால்.</p>
<p>துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?</p>
<h3 style="text-align: center;">குறிப்பறிவுறுத்தல்</h3>
<p><strong>குறள் 1271:</strong></p>
<p>கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்<br />
உரைக்கல் உறுவதொன் றுண்டு.</p>
<p>நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.</p>
<p><strong>குறள் 1272:</strong></p>
<p>கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்<br />
பெண்நிறைந்த நீர்மை பெரிது.</p>
<p>கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.</p>
<p><strong>குறள் 1273:</strong></p>
<p>மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை<br />
அணியில் திகழ்வதொன்று உண்டு.</p>
<p>( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.</p>
<p><strong>குறள் 1274:</strong></p>
<p>முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை<br />
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.</p>
<p>அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.</p>
<p><strong>குறள் 1275:</strong></p>
<p>செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்<br />
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.</p>
<p>காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.</p>
<p><strong>குறள் 1276:</strong></p>
<p>பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி<br />
அன்பின்மை சூழ்வ துடைத்து.</p>
<p>பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.</p>
<p><strong>குறள் 1277:</strong></p>
<p>தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்<br />
முன்னம் உணர்ந்த வளை.</p>
<p>குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!.</p>
<p><strong>குறள் 1278:</strong></p>
<p>நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்<br />
எழுநாளேம் மேனி பசந்து.</p>
<p>எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.</p>
<p><strong>குறள் 1279:</strong></p>
<p>தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி<br />
அஃதாண் டவள்செய் தது.</p>
<p>தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.</p>
<p><strong>குறள் 1280:</strong></p>
<p>பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்<br />
காமநோய் சொல்லி இரவு.</p>
<p>கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.</p>
<h3 style="text-align: center;">புணர்ச்சிவிதும்பல்</h3>
<p><strong>குறள் 1281:</strong></p>
<p>உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்<br />
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.</p>
<p>நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.</p>
<p><strong>குறள் 1282:</strong></p>
<p>தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்<br />
காமம் நிறைய வரின்.</p>
<p>காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 1283:</strong></p>
<p>பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்<br />
காணா தமையல கண்.</p>
<p>என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.</p>
<p><strong>குறள் 1284:</strong></p>
<p>ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து<br />
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.</p>
<p>தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.</p>
<p><strong>குறள் 1285:</strong></p>
<p>எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்<br />
பழிகாணேன் கண்ட இடத்து.</p>
<p>மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.</p>
<p><strong>குறள் 1286:</strong></p>
<p>காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்<br />
காணேன் தவறல் லவை.</p>
<p>காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.</p>
<p><strong>குறள் 1287:</strong></p>
<p>உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்<br />
பொய்த்தல் அறிந்தென் புலந்து.</p>
<p>வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?</p>
<p><strong>குறள் 1288:</strong></p>
<p>இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்<br />
கள்ளற்றே கள்வநின் மார்பு.</p>
<p>கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.</p>
<p><strong>குறள் 1289:</strong></p>
<p>மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்<br />
செவ்வி தலைப்படு வார்.</p>
<p>காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.</p>
<p><strong>குறள் 1290:</strong></p>
<p>கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்<br />
என்னினும் தான்விதுப் புற்று.</p>
<p>கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.</p>
<h3 style="text-align: center;">நெஞ்சொடுபுலத்தல்</h3>
<p><strong>குறள் 1291:</strong></p>
<p>அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே<br />
நீஎமக்கு ஆகா தது.</p>
<p>நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?</p>
<p><strong>குறள் 1292:</strong></p>
<p>உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்<br />
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.</p>
<p>என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.</p>
<p><strong>குறள் 1293:</strong></p>
<p>கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ<br />
பெட்டாங்கு அவர்பின் செலல்.</p>
<p>நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?</p>
<p><strong>குறள் 1294:</strong></p>
<p>இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே<br />
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.</p>
<p>நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?</p>
<p><strong>குறள் 1295:</strong></p>
<p>பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்<br />
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.</p>
<p>( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.</p>
<p><strong>குறள் 1296:</strong></p>
<p>தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்<br />
தினிய இருந்ததென் நெஞ்சு.</p>
<p>காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.</p>
<p><strong>குறள் 1297:</strong></p>
<p>நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்<br />
மாணா மடநெஞ்சிற் பட்டு.</p>
<p>காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.</p>
<p><strong>குறள் 1298:</strong></p>
<p>எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்<br />
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.</p>
<p>உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.</p>
<p><strong>குறள் 1299:</strong></p>
<p>துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய<br />
நெஞ்சந் துணையல் வழி.</p>
<p>ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?</p>
<p><strong>குறள் 1300:</strong></p>
<p>தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய<br />
நெஞ்சம் தமரல் வழி.</p>
<p>ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.</p>
<h3 style="text-align: center;">புலவி</h3>
<p><strong>குறள் 1301:</strong></p>
<p>புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்<br />
அல்லல்நோய் காண்கம் சிறிது.</p>
<p>( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.</p>
<p><strong>குறள் 1302:</strong></p>
<p>உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது<br />
மிக்கற்றால் நீள விடல்.</p>
<p>உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.</p>
<p><strong>குறள் 1303:</strong></p>
<p>அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்<br />
புலந்தாரைப் புல்லா விடல்.</p>
<p>தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.</p>
<p><strong>குறள் 1304:</strong></p>
<p>ஊடி யவரை உணராமை வாடிய<br />
வள்ளி முதலரிந் தற்று.</p>
<p>பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.</p>
<p><strong>குறள் 1305:</strong></p>
<p>நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை<br />
பூஅன்ன கண்ணார் அகத்து.</p>
<p>நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.</p>
<p><strong>குறள் 1306:</strong></p>
<p>துனியும் புலவியும் இல்லாயின் காமம்<br />
கனியும் கருக்காயும் அற்று.</p>
<p>பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.</p>
<p><strong>குறள் 1307:</strong></p>
<p>ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது<br />
நீடுவ தன்றுகொல் என்று.</p>
<p>கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.</p>
<p><strong>குறள் 1308:</strong></p>
<p>நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்<br />
காதலர் இல்லா வழி.</p>
<p>நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?</p>
<p><strong>குறள் 1309:</strong></p>
<p>நீரும் நிழலது இனிதே புலவியும்<br />
வீழுநர் கண்ணே இனிது.</p>
<p>நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.</p>
<p><strong>குறள் 1310:</strong></p>
<p>ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்<br />
கூடுவேம் என்பது அவா.</p>
<p>ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.</p>
<h3 style="text-align: center;">புலவி நுணுக்கம்</h3>
<p><strong>குறள் 1311:</strong></p>
<p>பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்<br />
நண்ணேன் பரத்தநின் மார்பு.</p>
<p>பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.</p>
<p><strong>குறள் 1312:</strong></p>
<p>ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை<br />
நீடுவாழ் கென்பாக் கறிந்து.</p>
<p>காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.</p>
<p><strong>குறள் 1313:</strong></p>
<p>கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்<br />
காட்டிய சூடினீர் என்று.</p>
<p>கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.</p>
<p><strong>குறள் 1314:</strong></p>
<p>யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்<br />
யாரினும் யாரினும் என்று.</p>
<p>யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட&#8230;? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.</p>
<p><strong>குறள் 1315:</strong></p>
<p>இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்<br />
கண்நிறை நீர்கொண் டனள்.</p>
<p>இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.</p>
<p><strong>குறள் 1316:</strong></p>
<p>உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்<br />
புல்லாள் புலத்தக் கனள்.</p>
<p>நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.</p>
<p><strong>குறள் 1317:</strong></p>
<p>வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்<br />
யாருள்ளித் தும்மினீர் என்று.</p>
<p>யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?</p>
<p><strong>குறள் 1318:</strong></p>
<p>தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்<br />
எம்மை மறைத்திரோ என்று.</p>
<p>அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.</p>
<p><strong>குறள் 1319:</strong></p>
<p>தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்<br />
இந்நீரர் ஆகுதிர் என்று.</p>
<p>ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.</p>
<p><strong>குறள் 1320:</strong></p>
<p>நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்<br />
யாருள்ளி நோக்கினீர் என்று.</p>
<p>அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.</p>
<h3 style="text-align: center;">ஊடலுவகை</h3>
<p><strong>குறள் 1321:</strong></p>
<p>இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்<br />
வல்லது அவர்அளிக்கு மாறு.</p>
<p>அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.</p>
<p><strong>குறள் 1322:</strong></p>
<p>ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி<br />
வாடினும் பாடு பெறும்.</p>
<p>ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.</p>
<p><strong>குறள் 1323:</strong></p>
<p>புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு<br />
நீரியைந் தன்னார் அகத்து.</p>
<p>நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?</p>
<p><strong>குறள் 1324:</strong></p>
<p>புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்<br />
உள்ளம் உடைக்கும் படை.</p>
<p>காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.</p>
<p><strong>குறள் 1325:</strong></p>
<p>தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்<br />
அகறலின் ஆங்கொன் றுடைத்து.</p>
<p>தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.</p>
<p><strong>குறள் 1326:</strong></p>
<p>உணலினும் உண்டது அறல்இனிது காமம்<br />
புணர்தலின் ஊடல் இனிது.</p>
<p>உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.</p>
<p><strong>குறள் 1327:</strong></p>
<p>ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்<br />
கூடலிற் காணப் படும்.</p>
<p>ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.</p>
<p><strong>குறள் 1328:</strong></p>
<p>ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்<br />
கூடலில் தோன்றிய உப்பு.</p>
<p>நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?</p>
<p><strong>குறள் 1329:</strong></p>
<p>ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப<br />
நீடுக மன்னோ இரா.</p>
<p>காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.</p>
<p><strong>குறள் 1330:</strong></p>
<p>ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்<br />
கூடி முயங்கப் பெறின்.</p>
<p>காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.</p>
<p style="text-align: right;"><em>திருக்குறள் முற்றும்</em></p>
<p style="text-align: center;"><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/">திருக்குறள் கற்பியல் பகுதி 2</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Oct 2018 07:19:01 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1825</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம் &#8211; நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வைகையச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாதல் ஒருவைக நடனம் நடக்கிறது. <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" title="பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/">பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p><strong>பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</strong> &#8211; நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வைகையச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாதல் ஒருவைக நடனம் நடக்கிறது. மலையாளத்தில் புராணக் கதைகளைக்கொண்ட கதகளி நடத்துகிறார்கள்.</p>
<h4>நடனத்தில் இரண்டு பிதவுகளுண்டு</h4>
<p>ஆண்மையும், உக்கிரமும், வரமும் கொண்டு அங்கங்களை அசைத்து, பாட்டின் பொருளுக்கேற்றபடி ஆடுவது தாண்டவமாகும். பிரத்யங்கம் உபாங்கம் அனைத்தையும் நளினமாக ரசபாவைனயுடன் அபிநயித்து ஆடுவது லாஸ்ய நடனமாகும். தாண்டவம், ஆண்மை; லாஸ்யம், பெண்மை இரண்டும் சிவபார்வதி நடனமாகி, அர்த்தநாரீசருள் அடங்கியுள்ளான. பரதநாட்டியத்தின் நிறைவான கலையெழில் நமது தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகிறது. தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருச்சி வட்டாரங்களில், பரதநாட்டியம் இன்றும் சிறப்பாக பயில்விக்கப்படுகின்றது.</p>
<h4>பரதநாட்டியம் சாஸ்திர</h4>
<p>பரதர் இக்கைலையை நாட்டியம், நிருத்தியம், நிருத்தம் என மூன்று கூறாகப் பிரிக்கிறார்.</p>
<p>(1) நாட்டியம், நாடகத்திற் பயனாவது; கதைப்பொருளுடன் இணைந்து ரசாபி நயத்தை கொண்டது.</p>
<p>(2) ரசம், குணப்பண்புகைளப்பற்றி அபிநயித்தல் நிருத்தியம் ஆகும்.</p>
<p>(3) நிருத்தம், தாளலயத்தை முதன்மையாகக் கொண்டது வரிக்கூத்து.<br />
இவற்றில் காதலும் கலைச்சுவையும் சேர்ந்து சுகுமாரமாக நடிக்கும் லாஸ்ய நடனமும், எழுச்சியுள்ள வீரம் விளங்க ஆண்கள் நடிக்கும் தாண்டவமும் சேரும்.</p>
<h4>தாண்டவம், ஏழுவைகயாகும்</h4>
<p>இன்பத்தைக் காட்டும் ஆனந்தத் தாண்டவம், மாலையில் ஆடும் சந்தியா தாண்டவம், சிவனும் உமையும் ஆடும் உமா தாண்டவம், சிவகௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், ஸம்ஹார தாண்டவம். ஆங்கிகம், வாசிகம், <strong>ஆஹாரியம் சாத்விகம்</strong> என்று நடனம் நான்கு வைகயாம்.</p>
<p>உடல், முகம், உறுப்புக்கைளப் பொருளுக்கேற்ப அசைத்தல், ஆங்கிகமாகும். தலை, மார்பு, கை, கால், பக்கம், இடுப்பு இவை அங்கங்கள். தோள்பட்டை, புஜம், புறங்கை, முன்கை, முதுகு, வயிறு, தொடை, குதிகால், கணுக்கால் இவை <strong>பிரத்யங்கங்கள்</strong> அல்லது துணையுறுப்புகள்.</p>
<p>கண் இமை, விழி, கருவிழி, கண்மணி, புருவம், போட்டு, மூக்கு, கன்னம், உதடுகள் ஆகியவை உபாங்கங்கள். இவையனைத்தையும் பண்ணொத்தசைத்தல், <strong>சரீர ஆங்கிகமாகும்</strong>.</p>
<p>முகத்தசைகளை பாவத்திற்கேற்றபடி அசைத்தல், முகஜமாகும். உடலை அசைத்தாடல் சேஷ்டிதமாகும். இவையெல்லாம் ஆங்கிக நடனமாகும். வாசிகம் ஆடும்போது வாயால் பாடல், பேசுவதுபோல் உதட்டை அசைத்தல் முதலியனவாம். ஆடையணிகள், பூச்சுகள், அலங்காரங்கள், வேதங்கள் எல்லாம் ஆஹாரியமாகும்..</p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/">பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் களவியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
					<comments>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Dec 2017 06:53:51 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1255</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தகையணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் களவியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் களவியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<h3 style="text-align: center;">தகையணங்குறுத்தல்</h3>
<p><strong>குறள் 1081:</strong></p>
<p>அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை<br />
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.</p>
<p>தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.</p>
<p><strong>குறள் 1082:</strong></p>
<p>நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு<br />
தானைக்கொண் டன்ன துடைத்து.</p>
<p>நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.</p>
<p><strong>குறள் 1083:</strong></p>
<p>பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்<br />
பெண்டகையால் பேரமர்க் கட்டு.</p>
<p>எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.</p>
<p><strong>குறள் 1084:</strong></p>
<p>கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்<br />
பேதைக்கு அமர்த்தன கண்.</p>
<p>பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.</p>
<p><strong>குறள் 1085:</strong></p>
<p>கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்<br />
நோக்கமிம் மூன்றும் உடைத்து.</p>
<p>எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.</p>
<p><strong>குறள் 1086:</strong></p>
<p>கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்<br />
செய்யல மன்இவள் கண்.</p>
<p>வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.</p>
<p><strong>குறள் 1087:</strong></p>
<p>கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்<br />
படாஅ முலைமேல் துகில்.</p>
<p>மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.</p>
<p><strong>குறள் 1088:</strong></p>
<p>ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்<br />
நண்ணாரும் உட்குமென் பீடு.</p>
<p>போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!.</p>
<p><strong>குறள் 1089:</strong></p>
<p>பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு<br />
அணியெவனோ ஏதில தந்து.</p>
<p>பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?</p>
<p><strong>குறள் 1090:</strong></p>
<p>உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்<br />
கண்டார் மகிழ்செய்தல் இன்று.</p>
<p>கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.</p>
<h3 style="text-align: center;">குறிப்பறிதல்</h3>
<p><strong>குறள் 1091:</strong></p>
<p>இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு<br />
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.</p>
<p>இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.</p>
<p><strong>குறள் 1092:</strong></p>
<p>கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்<br />
செம்பாகம் அன்று பெரிது.</p>
<p>கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.</p>
<p><strong>குறள் 1093:</strong></p>
<p>நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்<br />
யாப்பினுள் அட்டிய நீர்.</p>
<p>என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.</p>
<p><strong>குறள் 1094:</strong></p>
<p>யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்<br />
தான்நோக்கி மெல்ல நகும்.</p>
<p>யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.</p>
<p><strong>குறள் 1095:</strong></p>
<p>குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்<br />
சிறக்கணித்தாள் போல நகும்.</p>
<p>என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.</p>
<p><strong>குறள் 1096:</strong></p>
<p>உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்<br />
ஒல்லை உணரப் படும்.</p>
<p>புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.</p>
<p><strong>குறள் 1097:</strong></p>
<p>செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்<br />
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.</p>
<p>பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.</p>
<p><strong>குறள் 1098:</strong></p>
<p>அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்<br />
பசையினள் பைய நகும்.</p>
<p>யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.</p>
<p><strong>குறள் 1099:</strong></p>
<p>ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்<br />
காதலார் கண்ணே உள.</p>
<p>புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.</p>
<p><strong>குறள் 1100:</strong></p>
<p>கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்<br />
என்ன பயனும் இல.</p>
<p>கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.</p>
<h3 style="text-align: center;">புணர்ச்சிமகிழ்தல்</h3>
<p><strong>குறள் 1101:</strong></p>
<p>கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்<br />
ஒண்தொடி கண்ணே உள.</p>
<p>கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.</p>
<p><strong>குறள் 1102:</strong></p>
<p>பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை<br />
தன்நோய்க்குத் தானே மருந்து.</p>
<p>நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.</p>
<p><strong>குறள் 1103:</strong></p>
<p>தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்<br />
தாமரைக் கண்ணான் உலகு.</p>
<p>தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?</p>
<p><strong>குறள் 1104:</strong></p>
<p>நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்<br />
தீயாண்டுப் பெற்றாள் இவள்.</p>
<p>நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.</p>
<p><strong>குறள் 1105:</strong></p>
<p>வேட்ட பொழுதின் அவையவை போலுமே<br />
தோட்டார் கதுப்பினாள் தோள்.</p>
<p>மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.</p>
<p><strong>குறள் 1106:</strong></p>
<p>உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு<br />
அமிழ்தின் இயன்றன தோள்.</p>
<p>பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 1107:</strong></p>
<p>தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்<br />
அம்மா அரிவை முயக்கு.</p>
<p>அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.</p>
<p><strong>குறள் 1108:</strong></p>
<p>வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை<br />
போழப் படாஅ முயக்கு.</p>
<p>காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.</p>
<p><strong>குறள் 1109:</strong></p>
<p>ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்<br />
கூடியார் பெற்ற பயன்.</p>
<p>ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.</p>
<p><strong>குறள் 1110:</strong></p>
<p>அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்<br />
செறிதோறும் சேயிழை மாட்டு.</p>
<p>செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.</p>
<h3 style="text-align: center;">நலம்புனைந்துரைத்தல்</h3>
<p><strong>குறள் 1111:</strong></p>
<p>நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்<br />
மென்னீரள் யாம்வீழ் பவள்.</p>
<p>அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.</p>
<p><strong>குறள் 1112:</strong></p>
<p>மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்<br />
பலர்காணும் பூவொக்கும் என்று.</p>
<p>நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.</p>
<p><strong>குறள் 1113:</strong></p>
<p>முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்<br />
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.</p>
<p>மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.</p>
<p><strong>குறள் 1114:</strong></p>
<p>காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்<br />
மாணிழை கண்ணொவ்வேம் என்று.</p>
<p>குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.</p>
<p><strong>குறள் 1115:</strong></p>
<p>அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு<br />
நல்ல படாஅ பறை.</p>
<p>அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.</p>
<p><strong>குறள் 1116:</strong></p>
<p>மதியும் மடந்தை முகனும் அறியா<br />
பதியின் கலங்கிய மீன்.</p>
<p>விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.</p>
<p><strong>குறள் 1117:</strong></p>
<p>அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல<br />
மறுவுண்டோ மாதர் முகத்து.</p>
<p>குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.</p>
<p><strong>குறள் 1118:</strong></p>
<p>மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்<br />
காதலை வாழி மதி.</p>
<p>திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.</p>
<p><strong>குறள் 1119:</strong></p>
<p>மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்<br />
பலர்காணத் தோன்றல் மதி.</p>
<p>திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.</p>
<p><strong>குறள் 1120:</strong></p>
<p>அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்<br />
அடிக்கு நெருஞ்சிப் பழம்.</p>
<p>அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.</p>
<h3 style="text-align: center;">காதற்சிறப்புரைத்தல்</h3>
<p><strong>குறள் 1121:</strong></p>
<p>பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி<br />
வாலெயிறு ஊறிய நீர்.</p>
<p>மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.</p>
<p><strong>குறள் 1122:</strong></p>
<p>உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன<br />
மடந்தையொடு எம்மிடை நட்பு.</p>
<p>இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.</p>
<p><strong>குறள் 1123:</strong></p>
<p>கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்<br />
திருநுதற்கு இல்லை இடம்.</p>
<p>என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!.</p>
<p><strong>குறள் 1124:</strong></p>
<p>வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்<br />
அதற்கன்னள் நீங்கும் இடத்து.</p>
<p>ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.</p>
<p><strong>குறள் 1125:</strong></p>
<p>உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்<br />
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.</p>
<p>போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே!.</p>
<p><strong>குறள் 1126:</strong></p>
<p>கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா<br />
நுண்ணியர்எம் காத லவர்.</p>
<p>எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.</p>
<p><strong>குறள் 1127:</strong></p>
<p>கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்<br />
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.</p>
<p>எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.</p>
<p><strong>குறள் 1128:</strong></p>
<p>நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்<br />
அஞ்சுதும் வேபாக் கறிந்து.</p>
<p>எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.</p>
<p><strong>குறள் 1129:</strong></p>
<p>இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே<br />
ஏதிலர் என்னும்இவ் வூர்.</p>
<p>கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.</p>
<p><strong>குறள் 1130:</strong></p>
<p>உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்<br />
ஏதிலர் என்னும்இவ் வூர்.</p>
<p>காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.</p>
<h3 style="text-align: center;">நாணுத்துறவுரைத்தல்</h3>
<p><strong>குறள் 1131:</strong></p>
<p>காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்<br />
மடலல்லது இல்லை வலி.</p>
<p>காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.</p>
<p><strong>குறள் 1132:</strong></p>
<p>நோனா உடம்பும் உயிரும் மடலேறும்<br />
நாணினை நீக்கி நிறுத்து.</p>
<p>(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.</p>
<p><strong>குறள் 1133:</strong></p>
<p>நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்<br />
காமுற்றார் ஏறும் மடல்.</p>
<p>நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.</p>
<p><strong>குறள் 1134:</strong></p>
<p>காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு<br />
நல்லாண்மை என்னும் புணை.</p>
<p>நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.</p>
<p><strong>குறள் 1135:</strong></p>
<p>தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு<br />
மாலை உழக்கும் துயர்.</p>
<p>மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.</p>
<p><strong>குறள் 1136:</strong></p>
<p>மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற<br />
படல்ஒல்லா பேதைக்கென் கண்.</p>
<p>மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.</p>
<p><strong>குறள் 1137:</strong></p>
<p>கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்<br />
பெண்ணின் பெருந்தக்க தில்.</p>
<p>கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.</p>
<p><strong>குறள் 1138:</strong></p>
<p>நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்<br />
மறையிறந்து மன்று படும்.</p>
<p>இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே!.</p>
<p><strong>குறள் 1139:</strong></p>
<p>அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்<br />
மறுகின் மறுகும் மருண்டு.</p>
<p>அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.</p>
<p><strong>குறள் 1140:</strong></p>
<p>யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்<br />
யாம்பட்ட தாம்படா ஆறு.</p>
<p>யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.</p>
<h3 style="text-align: center;">அலரறிவுறுத்தல்</h3>
<p><strong>குறள் 1141:</strong></p>
<p>அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்<br />
பலரறியார் பாக்கியத் தால்.</p>
<p>(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.</p>
<p><strong>குறள் 1142:</strong></p>
<p>மலரன்ன கண்ணாள் அருமை அறியாது<br />
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.</p>
<p>மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.</p>
<p><strong>குறள் 1143:</strong></p>
<p>உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்<br />
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.</p>
<p>ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.</p>
<p><strong>குறள் 1144:</strong></p>
<p>கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்<br />
தவ்வென்னும் தன்மை இழந்து.</p>
<p>எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.</p>
<p><strong>குறள் 1145:</strong></p>
<p>களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்<br />
வெளிப்படுந் தோறும் இனிது.</p>
<p>காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.</p>
<p><strong>குறள் 1146:</strong></p>
<p>கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்<br />
திங்களைப் பாம்புகொண் டற்று.</p>
<p>காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.</p>
<p><strong>குறள் 1147:</strong></p>
<p>ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்<br />
நீராக நீளும்இந் நோய்.</p>
<p>இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.</p>
<p><strong>குறள் 1148:</strong></p>
<p>நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்<br />
காமம் நுதுப்பேம் எனல்.</p>
<p>அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.</p>
<p><strong>குறள் 1149:</strong></p>
<p>அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்<br />
பலர்நாண நீத்தக் கடை.</p>
<p>அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?</p>
<p><strong>குறள் 1150:</strong></p>
<p>தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்<br />
கெளவை எடுக்கும்இவ் வூர்.</p>
<p>யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.</p>
<p style="text-align: center;"><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம்  சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் களவியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் நட்பியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Tue, 26 Dec 2017 07:17:46 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1201</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் நட்பியல் நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன? குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் நட்பியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் நட்பியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் நட்பியல்</p>
<h3 style="text-align: center;">நட்பு</h3>
<p><strong>குறள் 781:</strong></p>
<p>செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்<br />
வினைக்கரிய யாவுள காப்பு.</p>
<p>நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?</p>
<p><strong>குறள் 782:</strong></p>
<p>நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்<br />
பின்னீர பேதையார் நட்பு.</p>
<p>அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.</p>
<p><strong>குறள் 783:</strong></p>
<p>நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்<br />
பண்புடை யாளர் தொடர்பு.</p>
<p>பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.</p>
<p><strong>குறள் 784:</strong></p>
<p>நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்<br />
மேற்செனறு இடித்தற் பொருட்டு.</p>
<p>நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.</p>
<p><strong>குறள் 785:</strong></p>
<p>புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்<br />
நட்பாங் கிழமை தரும்.</p>
<p>நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 786:</strong></p>
<p>முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து<br />
அகநக நட்பது நட்பு.</p>
<p>முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.</p>
<p><strong>குறள் 787:</strong></p>
<p>அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்<br />
அல்லல் உழப்பதாம் நட்பு.</p>
<p>அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.</p>
<p><strong>குறள் 788:</strong></p>
<p>உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே<br />
இடுக்கண் களைவதாம் நட்பு.</p>
<p>உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.</p>
<p><strong>குறள் 789:</strong></p>
<p>நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி<br />
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.</p>
<p>நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.</p>
<p><strong>குறள் 790:</strong></p>
<p>இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று<br />
புனையினும் புல்லென்னும் நட்பு.</p>
<p>`இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையுடையேம்` என்று புனைந்துரைத்தாலும் நட்புச் சிறப்பிழந்துவிடும்.</p>
<h3 style="text-align: center;">நட்பாராய்தல்</h3>
<p><strong>குறள் 791:</strong></p>
<p>நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்<br />
வீடில்லை நட்பாள் பவர்க்கு.</p>
<p>நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.</p>
<p><strong>குறள் 792:</strong></p>
<p>ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை<br />
தான்சாம் துயரம் தரும்.</p>
<p>ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.</p>
<p><strong>குறள் 793:</strong></p>
<p>குணமும் குடிமையும் குற்றமும் குன்றா<br />
இனனும் அறிந்தியாக்க நட்பு.</p>
<p>ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.</p>
<p><strong>குறள் 794:</strong></p>
<p>குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்<br />
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.</p>
<p>உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.</p>
<p><strong>குறள் 795:</strong></p>
<p>அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய<br />
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.</p>
<p>நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்.</p>
<p><strong>குறள் 796:</strong></p>
<p>கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை<br />
நீட்டி அளப்பதோர் கோல்.</p>
<p>கேடு வந்தபோதும் ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்.</p>
<p><strong>குறள் 797:</strong></p>
<p>ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்<br />
கேண்மை ஒரீஇ விடல்.</p>
<p>ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.</p>
<p><strong>குறள் 798:</strong></p>
<p>உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க<br />
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.</p>
<p>ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 799:</strong></p>
<p>கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை<br />
உள்ளினும் உள்ளஞ் சுடும்.</p>
<p>கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.</p>
<p><strong>குறள் 800:</strong></p>
<p>மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்<br />
ஒருவுக ஒப்பிலார் நட்பு.</p>
<p>குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.</p>
<h3 style="text-align: center;">பழைமை</h3>
<p><strong>குறள் 801:</strong></p>
<p>பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்<br />
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.</p>
<p>பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.</p>
<p><strong>குறள் 802:</strong></p>
<p>நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு<br />
உப்பாதல் சான்றோர் கடன்.</p>
<p>நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.</p>
<p><strong>குறள் 803:</strong></p>
<p>பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை<br />
செய்தாங்கு அமையாக் கடை.</p>
<p>பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?</p>
<p><strong>குறள் 804:</strong></p>
<p>விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்<br />
கேளாது நட்டார் செயின்.</p>
<p>உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.</p>
<p><strong>குறள் 805:</strong></p>
<p>பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க<br />
நோதக்க நட்டார் செயின்.</p>
<p>வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.</p>
<p><strong>குறள் 806:</strong></p>
<p>எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்<br />
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.</p>
<p>உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்.</p>
<p><strong>குறள் 807:</strong></p>
<p>அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்<br />
வழிவந்த கேண்மை யவர்.</p>
<p>அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பார்.</p>
<p><strong>குறள் 808:</strong></p>
<p>கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு<br />
நாளிழுக்கம் நட்டார் செயின்.</p>
<p>பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.</p>
<p><strong>குறள் 809:</strong></p>
<p>கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை<br />
விடாஅர் விழையும் உலகு.</p>
<p>உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.</p>
<p><strong>குறள் 810:</strong></p>
<p>விழையார் விழையப் படுப பழையார்கண்<br />
பண்பின் தலைப்பிரியா தார்.</p>
<p>(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப் பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய சிறப்பை அடைவர்.</p>
<h3 style="text-align: center;">தீ நட்பு</h3>
<p><strong>குறள் 811:</strong></p>
<p>பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை<br />
பெருகலிற் குன்றல் இனிது.</p>
<p>அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது.</p>
<p><strong>குறள் 812:</strong></p>
<p>உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை<br />
பெறினும் இழப்பினும் என்.</p>
<p>தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?</p>
<p><strong>குறள் 813:</strong></p>
<p>உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது<br />
கொள்வாரும் கள்வரும் நேர்.</p>
<p>கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.</p>
<p><strong>குறள் 814:</strong></p>
<p>அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்<br />
தமரின் தனிமை தலை.</p>
<p>போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.</p>
<p><strong>குறள் 815:</strong></p>
<p>செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை<br />
எய்தலின் எய்தாமை நன்று.</p>
<p>காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.</p>
<p><strong>குறள் 816:</strong></p>
<p>பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்<br />
ஏதின்மை கோடி உறும்.</p>
<p>அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.</p>
<p><strong>குறள் 817:</strong></p>
<p>நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்<br />
பத்தடுத்த கோடி உறும்.</p>
<p>(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.</p>
<p><strong>குறள் 818:</strong></p>
<p>ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை<br />
சொல்லாடார் சோர விடல்.</p>
<p>முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.</p>
<p><strong>குறள் 819:</strong></p>
<p>கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு<br />
சொல்வேறு பட்டார் தொடர்பு.</p>
<p>செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.</p>
<p><strong>குறள் 820:</strong></p>
<p>எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ<br />
மன்றில் பழிப்பார் தொடர்பு.</p>
<p>தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.</p>
<h3 style="text-align: center;">கூடாநட்பு</h3>
<p><strong>குறள் 821:</strong></p>
<p>சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை<br />
நேரா நிரந்தவர் நட்பு.</p>
<p>அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும்.</p>
<p><strong>குறள் 822:</strong></p>
<p>இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்<br />
மனம்போல வேறு படும்.</p>
<p>இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.</p>
<p><strong>குறள் 823:</strong></p>
<p>பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்<br />
ஆகுதல் மாணார்க் கரிது.</p>
<p>பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.</p>
<p><strong>குறள் 824:</strong></p>
<p>முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா<br />
வஞ்சரை அஞ்சப் படும்.</p>
<p>முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.</p>
<p><strong>குறள் 825:</strong></p>
<p>மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்<br />
சொல்லினால் தேறற்பாற்று அன்று.</p>
<p>மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.</p>
<p><strong>குறள் 826:</strong></p>
<p>நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்<br />
ஒல்லை உணரப் படும்.</p>
<p>நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரையில் உணரப்படும்.</p>
<p><strong>குறள் 827:</strong></p>
<p>சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்<br />
தீங்கு குறித்தமை யான்.</p>
<p>வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது.</p>
<p><strong>குறள் 828:</strong></p>
<p>தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்<br />
அழுதகண் ணீரும் அனைத்து.</p>
<p>பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.</p>
<p><strong>குறள் 829:</strong></p>
<p>மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து<br />
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.</p>
<p>புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத், தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்.</p>
<p><strong>குறள் 830:</strong></p>
<p>பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு<br />
அகநட்பு ஒரீஇ விடல்.</p>
<p>பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக்கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது அதையும் விடவேண்டும்.</p>
<h3 style="text-align: center;">பேதைமை</h3>
<p><strong>குறள் 831:</strong></p>
<p>பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு<br />
ஊதியம் போக விடல்.</p>
<p>பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.</p>
<p><strong>குறள் 832:</strong></p>
<p>பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை<br />
கையல்ல தன்கட் செயல்.</p>
<p>ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தைச் செலுத்துதலாகும்.</p>
<p><strong>குறள் 833:</strong></p>
<p>நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்<br />
பேணாமை பேதை தொழில்.</p>
<p>தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை அகியவை பேதையின் தொழில்கள்.</p>
<p><strong>குறள் 834:</strong></p>
<p>ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்<br />
பேதையின் பேதையார் இல்.</p>
<p>நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.</p>
<p><strong>குறள் 835:</strong></p>
<p>ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்<br />
தான்புக் கழுந்தும் அளறு.</p>
<p>எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.</p>
<p><strong>குறள் 836:</strong></p>
<p>பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்<br />
பேதை வினைமேற் கொளின்.</p>
<p>ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற் கொண்டால் (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்; அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.</p>
<p><strong>குறள் 837:</strong></p>
<p>ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை<br />
பெருஞ்செல்வம் உற்றக் கடை.</p>
<p>பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற. அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.</p>
<p><strong>குறள் 838:</strong></p>
<p>மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்<br />
கையொன்று உடைமை பெறின்.</p>
<p>பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும்.</p>
<p><strong>குறள் 839:</strong></p>
<p>பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்<br />
பீழை தருவதொன் றில்.</p>
<p>பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.</p>
<p><strong>குறள் 840:</strong></p>
<p>கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்<br />
குழாஅத்துப் பேதை புகல்.</p>
<p>சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.</p>
<h3 style="text-align: center;">புல்லறிவாண்மை</h3>
<p><strong>குறள் 841:</strong></p>
<p>அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை<br />
இன்மையா வையா துலகு.</p>
<p>அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.</p>
<p><strong>குறள் 842:</strong></p>
<p>அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்<br />
இல்லை பெறுவான் தவம்.</p>
<p>அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.</p>
<p><strong>குறள் 843:</strong></p>
<p>அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை<br />
செறுவார்க்கும் செய்தல் அரிது.</p>
<p>அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.</p>
<p><strong>குறள் 844:</strong></p>
<p>வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை<br />
உடையம்யாம் என்னும் செருக்கு.</p>
<p>புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், `யாம் அறிவுடையேம்` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.</p>
<p><strong>குறள் 845:</strong></p>
<p>கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற<br />
வல்லதூஉம் ஐயம் தரும்.</p>
<p>அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.</p>
<p><strong>குறள் 846:</strong></p>
<p>அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்<br />
குற்றம் மறையா வழி.</p>
<p>தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.</p>
<p><strong>குறள் 847:</strong></p>
<p>அருமறை சோரும் அறிவிலான் செய்யும்<br />
பெருமிறை தானே தனக்கு.</p>
<p>அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.</p>
<p><strong>குறள் 848:</strong></p>
<p>ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்<br />
போஒம் அளவுமோர் நோய்.</p>
<p>தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.</p>
<p><strong>குறள் 849:</strong></p>
<p>காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்<br />
கண்டானாம் தான்கண்ட வாறு.</p>
<p>அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.</p>
<p><strong>குறள் 850:</strong></p>
<p>உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து<br />
அலகையா வைக்கப் படும்.</p>
<p>உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.</p>
<h3 style="text-align: center;">இகல்</h3>
<p><strong>குறள் 851:</strong></p>
<p>இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்<br />
பண்பின்மை பாரிக்கும் நோய்.</p>
<p>எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.</p>
<p><strong>குறள் 852:</strong></p>
<p>பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி<br />
இன்னாசெய் யாமை தலை.</p>
<p>ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் சிறந்தது.</p>
<p><strong>குறள் 853:</strong></p>
<p>இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்<br />
தாவில் விளக்கம் தரும்.</p>
<p>ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால். அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 854:</strong></p>
<p>இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்<br />
துன்பத்துள் துன்பங் கெடின்.</p>
<p>இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 855:</strong></p>
<p>இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே<br />
மிக்லூக்கும் தன்மை யவர்.</p>
<p>இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால். அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 856:</strong></p>
<p>இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை<br />
தவலும் கெடலும் நணித்து.</p>
<p>இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.</p>
<p><strong>குறள் 857:</strong></p>
<p>மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்<br />
இன்னா அறிவி னவர்.</p>
<p>இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.</p>
<p><strong>குறள் 858:</strong></p>
<p>இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை<br />
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.</p>
<p>இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.</p>
<p><strong>குறள் 859:</strong></p>
<p>இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை<br />
மிகல்காணும் கேடு தரற்கு.</p>
<p>ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.</p>
<p><strong>குறள் 860:</strong></p>
<p>இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்<br />
நன்னயம் என்னும் செருக்கு.</p>
<p>ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.</p>
<h3 style="text-align: center;">பகைமாட்சி</h3>
<p><strong>குறள் 861:</strong></p>
<p>வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா<br />
மெலியார்மேல் மேக பகை.</p>
<p>தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 862:</strong></p>
<p>அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்<br />
என்பரியும் ஏதிலான் துப்பு.</p>
<p>ஒருவன் அன்புஇல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?</p>
<p><strong>குறள் 863:</strong></p>
<p>அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்<br />
தஞ்சம் எளியன் பகைக்கு.</p>
<p>ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.</p>
<p><strong>குறள் 864:</strong></p>
<p>நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்<br />
யாங்கணும் யார்க்கும் எளிது.</p>
<p>ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.</p>
<p><strong>குறள் 865:</strong></p>
<p>வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்<br />
பண்பிலன் பற்றார்க்கு இனிது.</p>
<p>ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான்.</p>
<p><strong>குறள் 866:</strong></p>
<p>காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்<br />
பேணாமை பேணப் படும்.</p>
<p>ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.</p>
<p><strong>குறள் 867:</strong></p>
<p>கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து<br />
மாணாத செய்வான் பகை.</p>
<p>தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 868:</strong></p>
<p>குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு<br />
இனனிலனாம் ஏமாப் புடைத்து.</p>
<p>ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.</p>
<p><strong>குறள் 869:</strong></p>
<p>செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா<br />
அஞ்சும் பகைவர்ப் பெறின்.</p>
<p>அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கன் தொலைவில் நீங்காமல் நிற்கும்.</p>
<p><strong>குறள் 870:</strong></p>
<p>கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்<br />
ஒல்லானை ஒல்லா தொளி.</p>
<p>கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.</p>
<h3 style="text-align: center;">பகைத்திறந்தெரிதல்</h3>
<p><strong>குறள் 871:</strong></p>
<p>பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்<br />
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.</p>
<p>பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.</p>
<p><strong>குறள் 872:</strong></p>
<p>வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க<br />
சொல்லேர் உழவர் பகை.</p>
<p>வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது.</p>
<p><strong>குறள் 873:</strong></p>
<p>ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்<br />
பல்லார் பகைகொள் பவன்.</p>
<p>தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.</p>
<p><strong>குறள் 874:</strong></p>
<p>பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்<br />
தகைமைக்கண் தங்கிற்று உலகு.</p>
<p>பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.</p>
<p><strong>குறள் 875:</strong></p>
<p>தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்<br />
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.</p>
<p>தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 876:</strong></p>
<p>தேறினும் தேறா விடினும் அழிவின்கண்<br />
தேறான் பகாஅன் விடல்.</p>
<p>இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத் தெரியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும்.</p>
<p><strong>குறள் 877:</strong></p>
<p>நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க<br />
மென்மை பகைவர் அகத்து.</p>
<p>துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது.</p>
<p>குறள் 878:</p>
<p>வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்<br />
பகைவர்கண் பட்ட செருக்கு.</p>
<p>செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாகவே அழியும்.</p>
<p><strong>குறள் 879:</strong></p>
<p>இளைதாக முள்மரம் கொல்க களையுநர்<br />
கைகொல்லும் காழ்த்த இடத்து.</p>
<p>முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.</p>
<p><strong>குறள் 880:</strong></p>
<p>உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்<br />
செம்மல் சிதைக்கலா தார்.</p>
<p>பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சுவிடும் அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.</p>
<h3 style="text-align: center;">உட்பகை</h3>
<p><strong>குறள் 881:</strong></p>
<p>நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்<br />
இன்னாவாம் இன்னா செயின்.</p>
<p>இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.</p>
<p><strong>குறள் 882:</strong></p>
<p>வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக<br />
கேள்போல் பகைவர் தொடர்பு.</p>
<p>வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.</p>
<p><strong>குறள் 883:</strong></p>
<p>உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து<br />
மட்பகையின் மாணத் தெறும்.</p>
<p>உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை அறுக்கும் கருவிபோல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.</p>
<p><strong>குறள் 884:</strong></p>
<p>மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா<br />
ஏதம் பலவும் தரும்.</p>
<p>மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.</p>
<p><strong>குறள் 885:</strong></p>
<p>உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்<br />
ஏதம் பலவும் தரும்.</p>
<p>உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 886:</strong></p>
<p>ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்<br />
பொன்றாமை ஒன்றல் அரிது.</p>
<p>ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.</p>
<p><strong>குறள் 887:</strong></p>
<p>செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே<br />
உட்பகை உற்ற குடி.</p>
<p>செப்பின் இணைப்பைப்போல் புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.</p>
<p><strong>குறள் 888:</strong></p>
<p>அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது<br />
உட்பகை உற்ற குடி.</p>
<p>உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.</p>
<p><strong>குறள் 889:</strong></p>
<p>எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்<br />
உட்பகை உள்ளதாங் கேடு.</p>
<p>எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.</p>
<p><strong>குறள் 890:</strong></p>
<p>உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்<br />
பாம்போடு உடனுறைந் தற்று.</p>
<p>அகத்தின் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.</p>
<h3 style="text-align: center;">பெரியாரைப் பிழையாமை</h3>
<p><strong>குறள் 891:</strong></p>
<p>ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்<br />
போற்றலுள் எல்லாம் தலை.</p>
<p>மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.</p>
<p><strong>குறள் 892:</strong></p>
<p>பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்<br />
பேரா இடும்பை தரும்.</p>
<p>ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.</p>
<p><strong>குறள் 893:</strong></p>
<p>கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்<br />
ஆற்று பவர்கண் இழுக்கு.</p>
<p>அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலே செய்யலாம்.</p>
<p><strong>குறள் 894:</strong></p>
<p>கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு<br />
ஆற்றாதார் இன்னா செயல்.</p>
<p>ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தால், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.</p>
<p><strong>குறள் 895:</strong></p>
<p>யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்<br />
வேந்து செறப்பட் டவர்.</p>
<p>மிக்க வலிமை உடைய அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.</p>
<p><strong>குறள் 896:</strong></p>
<p>எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்<br />
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.</p>
<p>தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர்பிழைத்து வாழ முடியும்; ஆற்றல் மிகுந்த பெரியாரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பிப் பிழைக்க முடியாது.</p>
<p><strong>குறள் 897:</strong></p>
<p>வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்<br />
தகைமாண்ட தக்கார் செறின்.</p>
<p>தகுதியால் சிறப்புற்ற பெரியார் ஒருவனை வெகுண்டால் அவனுக்குப் பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்?</p>
<p><strong>குறள் 898:</strong></p>
<p>குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு<br />
நின்றன்னார் மாய்வர் நிலத்து.</p>
<p>மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.</p>
<p><strong>குறள் 899:</strong></p>
<p>ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து<br />
வேந்தனும் வேந்து கெடும்.</p>
<p>உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்.</p>
<p><strong>குறள் 900:</strong></p>
<p>இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்<br />
சிறந்தமைந்த சீரார் செறின்.</p>
<p>மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால், அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.</p>
<h3 style="text-align: center;">பெண்வழிச்சேறல்</h3>
<p><strong>குறள் 901:</strong></p>
<p>மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்<br />
வேண்டாப் பொருளும் அது.</p>
<p>மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.</p>
<p><strong>குறள் 902:</strong></p>
<p>பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்<br />
நாணாக நாணுத் தரும்.</p>
<p>கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 903:</strong></p>
<p>இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்<br />
நல்லாருள் நாணுத் தரும்.</p>
<p>மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும்.</p>
<p><strong>குறள் 904:</strong></p>
<p>மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்<br />
வினையாண்மை வீறெய்த லின்று.</p>
<p>மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.</p>
<p><strong>குறள் 905:</strong></p>
<p>இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்<br />
நல்லார்க்கு நல்ல செயல்.</p>
<p>மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.</p>
<p><strong>குறள் 906:</strong></p>
<p>இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்<br />
அமையார்தோள் அஞ்சு பவர்.</p>
<p>மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.</p>
<p><strong>குறள் 907:</strong></p>
<p>பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்<br />
பெண்ணே பெருமை உடைத்து.</p>
<p>மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.</p>
<p><strong>குறள் 908:</strong></p>
<p>நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்<br />
பெட்டாங்கு ஒழுகு பவர்.</p>
<p>மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார்.</p>
<p><strong>குறள் 909:</strong></p>
<p>அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்<br />
பெண்ஏவல் செய்வார்கண் இல்.</p>
<p>அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.</p>
<p><strong>குறள் 910:</strong></p>
<p>எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்<br />
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.</p>
<p>நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.</p>
<h3 style="text-align: center;">வரைவின்மகளிர்</h3>
<p><strong>குறள் 911:</strong></p>
<p>அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்<br />
இன்சொல் இழுக்குத் தரும்.</p>
<p>அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல் ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 912:</strong></p>
<p>பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்<br />
நயன்தூக்கி நள்ளா விடல்.</p>
<p>கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விடவேண்டும்.</p>
<p><strong>குறள் 913:</strong></p>
<p>பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்<br />
ஏதில் பிணந்தழீஇ அற்று.</p>
<p>பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.</p>
<p><strong>குறள் 914:</strong></p>
<p>பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்<br />
ஆயும் அறிவி னவர்.</p>
<p>பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.</p>
<p><strong>குறள் 915:</strong></p>
<p>பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்<br />
மாண்ட அறிவி னவர்.</p>
<p>இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.</p>
<p><strong>குறள் 916:</strong></p>
<p>தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்<br />
புன்னலம் பாரிப்பார் தோள்.</p>
<p>அழகு முதலியவற்றால் செருக்குக் கொண்டு தம் புன்மையான நிலையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.</p>
<p><strong>குறள் 917:</strong></p>
<p>நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்<br />
பேணிப் புணர்பவர் தோள்.</p>
<p>நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக் கூடும் பொது மகளிரின் தோளைப் பொருந்துவர்.</p>
<p><strong>குறள் 918:</strong></p>
<p>ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப<br />
மாய மகளிர் முயக்கு.</p>
<p>வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 919:</strong></p>
<p>வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்<br />
பூரியர்கள் ஆழும் அளறு.</p>
<p>ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.</p>
<p><strong>குறள் 920:</strong></p>
<p>இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்<br />
திருநீக்கப் பட்டார் தொடர்பு.</p>
<p>இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.</p>
<h3 style="text-align: center;">கள்ளுண்ணாமை</h3>
<p><strong>குறள் 921:</strong></p>
<p>உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்<br />
கட்காதல் கொண்டொழுகு வார்.</p>
<p>கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவார்.</p>
<p><strong>குறள் 922:</strong></p>
<p>உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்<br />
எண்ணப் படவேண்டா தார்.</p>
<p>கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.</p>
<p><strong>குறள் 923:</strong></p>
<p>ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்<br />
சான்றோர் முகத்துக் களி.</p>
<p>பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும்; குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?</p>
<p><strong>குறள் 924:</strong></p>
<p>நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்<br />
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.</p>
<p>நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.</p>
<p><strong>குறள் 925:</strong></p>
<p>கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து<br />
மெய்யறி யாமை கொளல்.</p>
<p>விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.</p>
<p><strong>குறள் 926:</strong></p>
<p>துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்<br />
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.</p>
<p>உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.</p>
<p><strong>குறள் 927:</strong></p>
<p>அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்<br />
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.</p>
<p>கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர்.</p>
<p><strong>குறள் 928:</strong></p>
<p>களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து<br />
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.</p>
<p>கள்ளுண்பவன் `யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்&#8217; என்று சொல்லுவதை விடவேண்டும்: நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.</p>
<p><strong>குறள் 929:</strong></p>
<p>களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்<br />
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.</p>
<p>கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.</p>
<p><strong>குறள் 930:</strong></p>
<p>கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்<br />
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.</p>
<p>ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?</p>
<h3>சூது</h3>
<p><strong>குறள் 931:</strong></p>
<p>வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்<br />
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.</p>
<p>வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.</p>
<p><strong>குறள் 932:</strong></p>
<p>ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்<br />
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.</p>
<p>ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?</p>
<p><strong>குறள் 933:</strong></p>
<p>உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்<br />
போஒய்ப் புறமே படும்.</p>
<p>ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.</p>
<p><strong>குறள் 934:</strong></p>
<p>சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்<br />
வறுமை தருவதொன்று இல்.</p>
<p>ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.</p>
<p><strong>குறள் 935:</strong></p>
<p>கவறும் கழகமும் கையும் தருக்கி<br />
இவறியார் இல்லாகி யார்.</p>
<p>சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவார்.</p>
<p><strong>குறள் 936:</strong></p>
<p>அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்<br />
முகடியான் மூடப்பட் டார்.</p>
<p>சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.</p>
<p><strong>குறள் 937:</strong></p>
<p>பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்<br />
கழகத்துக் காலை புகின்.</p>
<p>சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.</p>
<p><strong>குறள் 938:</strong></p>
<p>பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து<br />
அல்லல் உழப்பிக்கும் சூது.</p>
<p>சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.</p>
<p><strong>குறள் 939:</strong></p>
<p>உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்<br />
அடையாவாம் ஆயங் கொளின்.</p>
<p>சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.</p>
<p>குறள் 940:</p>
<p>இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்<br />
உழத்தொறூஉம் காதற்று உயிர்.</p>
<p>பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.</p>
<h3 style="text-align: center;">மருந்து</h3>
<p><strong>குறள் 941:</strong></p>
<p>மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்<br />
வளிமுதலா எண்ணிய மூன்று.</p>
<p>மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.</p>
<p><strong>குறள் 942:</strong></p>
<p>மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது<br />
அற்றது போற்றி உணின்.</p>
<p>முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.</p>
<p><strong>குறள் 943:</strong></p>
<p>அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு<br />
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.</p>
<p>முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.</p>
<p><strong>குறள் 944:</strong></p>
<p>அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல<br />
துய்க்க துவரப் பசித்து.</p>
<p>முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ணவேண்டும்.</p>
<p><strong>குறள் 945:</strong></p>
<p>மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்<br />
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.</p>
<p>மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.</p>
<p><strong>குறள் 946:</strong></p>
<p>இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்<br />
கழிபேர் இரையான்கண் நோய்.</p>
<p>குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை நிற்பது போல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.</p>
<p><strong>குறள் 947:</strong></p>
<p>தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்<br />
நோயள வின்றிப் படும்.</p>
<p>பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.</p>
<p><strong>குறள் 948:</strong></p>
<p>நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்<br />
வாய்நாடி வாய்ப்பச் செயல்.</p>
<p>நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாகச் செய்யவேண்டும்.</p>
<p><strong>குறள் 949:</strong></p>
<p>உற்றான் அளவும் பிணியளவும் காலமும்<br />
கற்றான் கருதிச் செயல்.</p>
<p>மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்யவேண்டும்.</p>
<p><strong>குறள் 950:</strong></p>
<p>உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று<br />
அப்பால் நாற்கூற்றே மருந்து.</p>
<p>நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் நட்பியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் படையியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Dec 2017 11:34:28 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1187</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் படையியல் படைமாட்சி குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் படையியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் படையியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் படையியல்</p>
<h5>படைமாட்சி</h5>
<p><strong>குறள் 761:</strong></p>
<p>உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்<br />
வெறுக்கையுள் எல்லாம் தலை.</p>
<p>எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.</p>
<p><strong>குறள் 762:</strong></p>
<p>உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்<br />
தொல்படைக் கல்லால் அரிது.</p>
<p>போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.</p>
<p><strong>குறள் 763:</strong></p>
<p>ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை<br />
நாகம் உயிர்ப்பக் கெடும்.</p>
<p>எலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.</p>
<p><strong>குறள் 764:</strong></p>
<p>அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த<br />
வன்க ணதுவே படை.</p>
<p>(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.</p>
<p><strong>குறள் 765:</strong></p>
<p>கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்<br />
ஆற்ற லதுவே படை.</p>
<p>எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.</p>
<p><strong>குறள் 766:</strong></p>
<p>மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்<br />
எனநான்கே ஏமம் படைக்கு.</p>
<p>வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.</p>
<p><strong>குறள் 767:</strong></p>
<p>தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த<br />
போர்தாங்கும் தன்மை அறிந்து.</p>
<p>தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.</p>
<p><strong>குறள் 768:</strong></p>
<p>அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை<br />
படைத்தகையால் பாடு பெறும்.</p>
<p>போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.</p>
<p><strong>குறள் 769:</strong></p>
<p>சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்<br />
இல்லாயின் வெல்லும் படை.</p>
<p>தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.</p>
<p><strong>குறள் 770:</strong></p>
<p>நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை<br />
தலைமக்கள் இல்வழி இல்.</p>
<p>நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.</p>
<h5>படைச்செருக்கு</h5>
<p><strong>குறள் 771:</strong></p>
<p>என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை<br />
முன்நின்று கல்நின் றவர்.</p>
<p>பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.</p>
<p><strong>குறள் 772:</strong></p>
<p>கான முயலெய்த அம்பினில் யானை<br />
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.</p>
<p>காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.</p>
<p><strong>குறள் 773:</strong></p>
<p>பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்<br />
ஊராண்மை மற்றதன் எஃகு.</p>
<p>பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 774:</strong></p>
<p>கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்<br />
மெய்வேல் பறியா நகும்.</p>
<p>கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.</p>
<p><strong>குறள் 775:</strong></p>
<p>விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்<br />
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.</p>
<p>பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?</p>
<p><strong>குறள் 776:</strong></p>
<p>விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்<br />
வைக்கும்தன் நாளை எடுத்து.</p>
<p>வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.</p>
<p><strong>குறள் 777:</strong></p>
<p>சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்<br />
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.</p>
<p>பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.</p>
<p><strong>குறள் 778:</strong></p>
<p>உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்<br />
செறினும் சீர்குன்றல் இலர்.</p>
<p>போர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.</p>
<p><strong>குறள் 779:</strong></p>
<p>இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே<br />
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.</p>
<p>தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?</p>
<p><strong>குறள் 780:</strong></p>
<p>புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு<br />
இரந்துகோள் தக்கது உடைத்து.</p>
<p>தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் படையியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் கூழியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Dec 2017 10:24:42 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1176</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் கூழியல் பொருள்செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை. குறள் 752: இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் கூழியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் கூழியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் கூழியல்</p>
<h5 style="text-align: center;">பொருள்செயல்வகை</h5>
<p><strong>குறள் 751:</strong></p>
<p>பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்<br />
பொருளல்லது இல்லை பொருள்.</p>
<p>ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை.</p>
<p><strong>குறள் 752:</strong></p>
<p>இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை<br />
எல்லாரும் செய்வர் சிறப்பு.</p>
<p>பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.</p>
<p><strong>குறள் 753:</strong></p>
<p>பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்<br />
எண்ணிய தேயத்துச் சென்று.</p>
<p>பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.</p>
<p><strong>குறள் 754:</strong></p>
<p>அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து<br />
தீதின்றி வந்த பொருள்.</p>
<p>சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப்பட்டு வந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 755:</strong></p>
<p>அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்<br />
புல்லார் புரள விடல்.</p>
<p>அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.</p>
<p><strong>குறள் 756:</strong></p>
<p>உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்<br />
தெறுபொருளும் வேந்தன் பொருள்.</p>
<p>இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.</p>
<p><strong>குறள் 757:</strong></p>
<p>அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்<br />
செல்வச் செவிலியால் உண்டு.</p>
<p>அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.</p>
<p><strong>குறள் 758:</strong></p>
<p>குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று<br />
உண்டாகச் செய்வான் வினை.</p>
<p>தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது.</p>
<p><strong>குறள் 759:</strong></p>
<p>செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்<br />
எஃகதனிற் கூரிய தில்.</p>
<p>ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.</p>
<p><strong>குறள் 760:</strong></p>
<p>ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்<br />
ஏனை இரண்டும் ஒருங்கு.</p>
<p>சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய பொருளாகும்.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் கூழியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் அரணியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Dec 2017 10:07:51 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1172</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>நாடு திருக்குறள் அரணியல் குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். குறள் 732: பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் அரணியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் அரணியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<h5 style="text-align: center;">நாடு</h5>
<p>திருக்குறள் அரணியல்</p>
<p><strong>குறள் 731:</strong></p>
<p>தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்<br />
செல்வரும் சேர்வது நாடு.</p>
<p>குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.</p>
<p><strong>குறள் 732:</strong></p>
<p>பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்<br />
ஆற்ற விளைவது நாடு.</p>
<p>மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.</p>
<p><strong>குறள் 733:</strong></p>
<p>பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு<br />
இறையொருங்கு நேர்வது நாடு.</p>
<p>(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.</p>
<p><strong>குறள் 734:</strong></p>
<p>உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்<br />
சேரா தியல்வது நாடு.</p>
<p>மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்துவந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.</p>
<p><strong>குறள் 735:</strong></p>
<p>பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்<br />
கொல்குறும்பும் இல்லத நாடு.</p>
<p>பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.</p>
<p><strong>குறள் 736:</strong></p>
<p>கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா<br />
நாடென்ப நாட்டின் தலை.</p>
<p>பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 737:</strong></p>
<p>இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்<br />
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.</p>
<p>ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.</p>
<p><strong>குறள் 738:</strong></p>
<p>பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்<br />
அணியென்ப நாட்டிவ் வைந்து.</p>
<p>நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 739:</strong></p>
<p>நாடென்ப நாடா வளத்தன நாடல்ல<br />
நாட வளந்தரு நாடு.</p>
<p>முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.</p>
<p><strong>குறள் 740:</strong></p>
<p>ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே<br />
வேந்தமை வில்லாத நாடு.</p>
<p>நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.</p>
<h5 style="text-align: center;">அரண்</h5>
<p><strong>குறள் 741:</strong></p>
<p>ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்<br />
போற்று பவர்க்கும் பொருள்.</p>
<p>(படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.</p>
<p><strong>குறள் 742:</strong></p>
<p>மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்<br />
காடும் உடைய தரண்.</p>
<p>மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.</p>
<p><strong>குறள் 743:</strong></p>
<p>உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்<br />
அமைவரண் என்றுரைக்கும் நூல்.</p>
<p>உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.</p>
<p><strong>குறள் 744:</strong></p>
<p>சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை<br />
ஊக்கம் அழிப்ப தரண்.</p>
<p>காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்கவல்லது அரண் ஆகும்.</p>
<p><strong>குறள் 745:</strong></p>
<p>கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்<br />
நிலைக்கெளிதாம் நீரது அரண்.</p>
<p>பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளியதாகிய தன்மை உடையது அரண்.</p>
<p><strong>குறள் 746:</strong></p>
<p>எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்<br />
நல்லாள் உடையது அரண்.</p>
<p>தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.</p>
<p><strong>குறள் 747:</strong></p>
<p>முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்<br />
பற்றற் கரியது அரண்.</p>
<p>முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.</p>
<p><strong>குறள் 748:</strong></p>
<p>முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்<br />
பற்றியார் வெல்வது அரண்.</p>
<p>முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.</p>
<p><strong>குறள் 749:</strong></p>
<p>முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து<br />
வீறெய்தி மாண்ட தரண்.</p>
<p>போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.</p>
<p><strong>குறள் 750:</strong></p>
<p>எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி<br />
இல்லார்கண் இல்லது அரண்.</p>
<p>எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் அரணியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் அமைச்சியல்</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Dec 2017 16:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1156</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் அமைச்சியல் அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். குறள் 632: வன்கண் குடிகாத்தல் <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/" title="திருக்குறள் அமைச்சியல்">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் அமைச்சியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>திருக்குறள் அமைச்சியல்</p>
<h5 style="text-align: center;">அமைச்சு</h5>
<p><strong>குறள் 631:</strong></p>
<p>கருவியும் காலமும் செய்கையும் செய்யும்<br />
அருவினையும் மாண்டது அமைச்சு.</p>
<p>செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.</p>
<p><strong>குறள் 632:</strong></p>
<p>வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு<br />
ஐந்துடன் மாண்டது அமைச்சு.</p>
<p>அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும், முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப் பெற்றவன் அமைச்சன்.</p>
<p><strong>குறள் 633:</strong></p>
<p>பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்<br />
பொருத்தலும் வல்ல தமைச்சு.</p>
<p>பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.</p>
<p><strong>குறள் 634:</strong></p>
<p>தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்<br />
சொல்லலும் வல்லது அமைச்சு.</p>
<p>(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.</p>
<p><strong>குறள் 635:</strong></p>
<p>அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்<br />
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.</p>
<p>அறத்தை அறிந்தவனாய் அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.</p>
<p><strong>குறள் 636:</strong></p>
<p>மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்<br />
யாவுள முன்நிற் பவை.</p>
<p>இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?</p>
<p><strong>குறள் 637:</strong></p>
<p>செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து<br />
இயற்கை அறிந்து செயல்.</p>
<p>நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.</p>
<p><strong>குறள் 638:</strong></p>
<p>அறிகொன்று அறியான் எனினும் உறுதி<br />
உழையிருந்தான் கூறல் கடன்.</p>
<p>அறிவுறுத்துவாரின் அறிவையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறுதல் கடமையாகும்.</p>
<p><strong>குறள் 639:</strong></p>
<p>பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்<br />
எழுபது கோடி உறும்.</p>
<p>தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.</p>
<p><strong>குறள் 640:</strong></p>
<p>முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்<br />
திறப்பாடு இலாஅ தவர்.</p>
<p>(செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்.</p>
<h5 style="text-align: center;">சொல்வன்மை</h5>
<p><strong>குறள் 641:</strong></p>
<p>நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்<br />
யாநலத்து உள்ளதூஉம் அன்று.</p>
<p>நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.</p>
<p><strong>குறள் 642:</strong></p>
<p>ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்<br />
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.</p>
<p>ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 643:</strong></p>
<p>கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்<br />
வேட்ப மொழிவதாம் சொல்.</p>
<p>சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.</p>
<p><strong>குறள் 644:</strong></p>
<p>திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்<br />
பொருளும் அதனினூஉங்கு இல்.</p>
<p>சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.</p>
<p><strong>குறள் 645:</strong></p>
<p>சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை<br />
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.</p>
<p>வேறொரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக் கருதியதைச் சொல்லவேண்டும்.</p>
<p><strong>குறள் 646:</strong></p>
<p>வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்<br />
மாட்சியின் மாசற்றார் கோள்.</p>
<p>பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.</p>
<p><strong>குறள் 647:</strong></p>
<p>சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை<br />
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.</p>
<p>தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய், சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.</p>
<p><strong>குறள் 648:</strong></p>
<p>விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது<br />
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.</p>
<p>கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.</p>
<p><strong>குறள் 649:</strong></p>
<p>பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற<br />
சிலசொல்லல் தேற்றா தவர்.</p>
<p>குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.</p>
<p><strong>குறள் 650:</strong></p>
<p>இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது<br />
உணர விரித்துரையா தார்.</p>
<p>தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.</p>
<h5 style="text-align: center;">வினைத்தூய்மை</h5>
<p><strong>குறள் 651:</strong></p>
<p>துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்<br />
வேண்டிய எல்லாந் தரும்.</p>
<p>ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 652:</strong></p>
<p>என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு<br />
நன்றி பயவா வினை.</p>
<p>புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 653:</strong></p>
<p>ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை<br />
ஆஅதும் என்னு மவர்.</p>
<p>மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடவேண்டும்.</p>
<p><strong>குறள் 654:</strong></p>
<p>இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்<br />
நடுக்கற்ற காட்சி யவர்.</p>
<p>அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.</p>
<p><strong>குறள் 655:</strong></p>
<p>எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்<br />
மற்றன்ன செய்யாமை நன்று.</p>
<p>பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.</p>
<p><strong>குறள் 656:</strong></p>
<p>ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க<br />
சான்றோர் பழிக்கும் வினை.</p>
<p>பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.</p>
<p><strong>குறள் 657:</strong></p>
<p>பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்<br />
கழிநல் குரவே தலை.</p>
<p>பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.</p>
<p><strong>குறள் 658:</strong></p>
<p>கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்<br />
முடிந்தாலும் பீழை தரும்.</p>
<p>ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 659:</strong></p>
<p>அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்<br />
பிற்பயக்கும் நற்பா லவை.</p>
<p>பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.</p>
<p><strong>குறள் 660:</strong></p>
<p>சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்<br />
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.</p>
<p>வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.</p>
<h5 style="text-align: center;">வினைத்திட்பம்</h5>
<p><strong>குறள் 661:</strong></p>
<p>வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்<br />
மற்றைய எல்லாம் பிற.</p>
<p>ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை.</p>
<p><strong>குறள் 662:</strong></p>
<p>ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்<br />
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.</p>
<p>இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.</p>
<p><strong>குறள் 663:</strong></p>
<p>கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்<br />
எற்றா விழுமந் தரும்.</p>
<p>செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 664:</strong></p>
<p>சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்<br />
சொல்லிய வண்ணம் செயல்.</p>
<p>&#8216;இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்&#8217; என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம் ; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.</p>
<p><strong>குறள் 665:</strong></p>
<p>வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்<br />
ஊறெய்தி உள்ளப் படும்.</p>
<p>செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.</p>
<p><strong>குறள் 666:</strong></p>
<p>எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்<br />
திண்ணியர் ஆகப் பெறின்.</p>
<p>எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.</p>
<p><strong>குறள் 667:</strong></p>
<p>உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு<br />
அச்சாணி அன்னார் உடைத்து.</p>
<p>உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது.</p>
<p><strong>குறள் 668:</strong></p>
<p>கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது<br />
தூக்கங் கடிந்து செயல்.</p>
<p>மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 669:</strong></p>
<p>துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி<br />
இன்பம் பயக்கும் வினை.</p>
<p>(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்தபோதிலும் துணிவு மேற் கொண்டு செய்து முடிக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 670:</strong></p>
<p>எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்<br />
வேண்டாரை வேண்டாது உலகு.</p>
<p>வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.</p>
<h5 style="text-align: center;">வினைசெயல்வகை</h5>
<p><strong>குறள் 671:</strong></p>
<p>சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு<br />
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.</p>
<p>ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.</p>
<p><strong>குறள் 672:</strong></p>
<p>தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க<br />
தூங்காது செய்யும் வினை.</p>
<p>காலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.</p>
<p><strong>குறள் 673:</strong></p>
<p>ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்<br />
செல்லும்வாய் நோக்கிச் செயல்.</p>
<p>இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.</p>
<p><strong>குறள் 674:</strong></p>
<p>வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்<br />
தீயெச்சம் போலத் தெறும்.</p>
<p>செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.</p>
<p><strong>குறள் 675:</strong></p>
<p>பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்<br />
இருள்தீர எண்ணிச் செயல்.</p>
<p>வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.</p>
<p><strong>குறள் 676:</strong></p>
<p>முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்<br />
படுபயனும் பார்த்துச் செயல்.</p>
<p>செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.</p>
<p><strong>குறள் 677:</strong></p>
<p>செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை<br />
உள்ளறிவான் உள்ளம் கொளல்.</p>
<p>செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.</p>
<p><strong>குறள் 678:</strong></p>
<p>வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்<br />
யானையால் யானையாத் தற்று.</p>
<p>ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.</p>
<p><strong>குறள் 679:</strong></p>
<p>நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே<br />
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.</p>
<p>பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.</p>
<p><strong>குறள் 680:</strong></p>
<p>உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்<br />
கொள்வர் பெரியார்ப் பணிந்து.</p>
<p>வலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.</p>
<h5 style="text-align: center;">தூது</h5>
<p><strong>குறள் 681:</strong></p>
<p>அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்<br />
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.</p>
<p>அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.</p>
<p><strong>குறள் 682:</strong></p>
<p>அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு<br />
இன்றி யமையாத மூன்று.</p>
<p>அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.</p>
<p><strong>குறள் 683:</strong></p>
<p>நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்<br />
வென்றி வினையுரைப்பான் பண்பு.</p>
<p>அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.</p>
<p><strong>குறள் 684:</strong></p>
<p>அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்<br />
செறிவுடையான் செல்க வினைக்கு.</p>
<p>இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ச்சி உடைய கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.</p>
<p><strong>குறள் 685:</strong></p>
<p>தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி<br />
நன்றி பயப்பதாந் தூது.</p>
<p>பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.</p>
<p><strong>குறள் 686:</strong></p>
<p>கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்<br />
தக்கது அறிவதாம் தூது.</p>
<p>கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.</p>
<p><strong>குறள் 687:</strong></p>
<p>கடனறிந்து காலங் கருதி இடனறிந்து<br />
எண்ணி உரைப்பான் தலை.</p>
<p>தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.</p>
<p><strong>குறள் 688:</strong></p>
<p>தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்<br />
வாய்மை வழியுரைப்பான் பண்பு.</p>
<p>தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.</p>
<p><strong>குறள் 689:</strong></p>
<p>விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்<br />
வாய்சேரா வன்கணவன்.</p>
<p>குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.</p>
<p><strong>குறள் 690:</strong></p>
<p>இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு<br />
உறுதி பயப்பதாம் தூது.</p>
<p>தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.</p>
<h5 style="text-align: center;">மன்னரைச் சேர்ந்தொழுதல்</h5>
<p><strong>குறள் 691:</strong></p>
<p>அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க<br />
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.</p>
<p>அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 692:</strong></p>
<p>மன்னர் விழைப விழையாமை மன்னரால்<br />
மன்னிய ஆக்கந் தரும்.</p>
<p>அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.</p>
<p><strong>குறள் 693:</strong></p>
<p>போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்<br />
தேற்றுதல் யார்க்கும் அரிது.</p>
<p>(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.</p>
<p><strong>குறள் 694:</strong></p>
<p>செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்<br />
ஆன்ற பெரியா ரகத்து.</p>
<p>வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.</p>
<p><strong>குறள் 695:</strong></p>
<p>எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை<br />
விட்டக்கால் கேட்க மறை.</p>
<p>(அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.</p>
<p><strong>குறள் 696:</strong></p>
<p>குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில<br />
வேண்டுப வேட்பச் சொலல்.</p>
<p>அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.</p>
<p><strong>குறள் 697:</strong></p>
<p>வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்<br />
கேட்பினும் சொல்லா விடல்.</p>
<p>அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.</p>
<p><strong>குறள் 698:</strong></p>
<p>இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற<br />
ஒளியோடு ஒழுகப் படும்.</p>
<p>(அரசனை) &#8220;எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்&#8221; என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 699:</strong></p>
<p>கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்<br />
துளக்கற்ற காட்சி யவர்.</p>
<p>அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.</p>
<p><strong>குறள் 700:</strong></p>
<p>பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்<br />
கெழுதகைமை கேடு தரும்.</p>
<p>யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.</p>
<h5 style="text-align: center;">குறிப்பறிதல்</h5>
<p><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7429414083307866" crossorigin="anonymous"></script><br />
<ins class="adsbygoogle" style="display: block; text-align: center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-7429414083307866" data-ad-slot="7843100268"></ins><br />
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script><br />
<strong>குறள் 701:</strong></p>
<p>கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்<br />
மாறாநீர் வையக் கணி.</p>
<p>ஒருவர் சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்கு ஓர் அணிகலன் ஆவான்.</p>
<p><strong>குறள் 702:</strong></p>
<p>ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்<br />
தெய்வத்தோ டொப்பக் கொளல்.</p>
<p>ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.</p>
<p>குறள் 703:</p>
<p>குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்<br />
யாது கொடுத்தும் கொளல்.</p>
<p>(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 704:</strong></p>
<p>குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை<br />
உறுப்போ ரனையரால் வேறு.</p>
<p>ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.</p>
<p><strong>குறள் 705:</strong></p>
<p>குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்<br />
என்ன பயத்தவோ கண்.</p>
<p>(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?</p>
<p><strong>குறள் 706:</strong></p>
<p>அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்<br />
கடுத்தது காட்டும் முகம்.</p>
<p>தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல். ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.</p>
<p><strong>குறள் 707:</strong></p>
<p>முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்<br />
காயினும் தான்முந் துறும்.</p>
<p>ஒருவன் விருப்பம் கொண்டாலும் வெறுப்புக் கொண்டாலும், அவனுடைய முகம் முற்பட்டு அதைத் தெரிவிக்கும்; அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?</p>
<p><strong>குறள் 708:</strong></p>
<p>முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி<br />
உற்ற துணர்வார்ப் பெறின்.</p>
<p>உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால்,(அவரிடம் எதையும் கூறாமல்) அவருடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.</p>
<p><strong>குறள் 709:</strong></p>
<p>பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்<br />
வகைமை உணர்வார்ப் பெறின்.</p>
<p>கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால், (ஒருவனுடைய மனத்தில் உள்ள) பகையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லிவிடும்.</p>
<p><strong>குறள் 710:</strong></p>
<p>நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்<br />
கண்ணல்லது இல்லை பிற.</p>
<p>யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவருடைய கண்களே அல்லாமல் வேறு இல்லை.</p>
<h5 style="text-align: center;">அவையறிதல்</h5>
<p><strong>குறள் 711:</strong></p>
<p>அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்<br />
தொகையறிந்த தூய்மை யவர்.</p>
<p>சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.</p>
<p><strong>குறள் 712:</strong></p>
<p>இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்<br />
நடைதெரிந்த நன்மை யவர்.</p>
<p>சொற்களின் நடையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.</p>
<p><strong>குறள் 713:</strong></p>
<p>அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்<br />
வகையறியார் வல்லதூஉம் இல்.</p>
<p>அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே; அவர் சொல்லவல்லதும் இல்லை.</p>
<p><strong>குறள் 714:</strong></p>
<p>ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்<br />
வான்சுதை வண்ணம் கொளல்.</p>
<p>அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேச வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம்போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 715:</strong></p>
<p>நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்<br />
முந்து கிளவாச் செறிவு.</p>
<p>அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும் நல்லது.</p>
<p><strong>குறள் 716:</strong></p>
<p>ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்<br />
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.</p>
<p>விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.</p>
<p><strong>குறள் 717:</strong></p>
<p>கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்<br />
சொல்தெரிதல் வல்லார் அகத்து.</p>
<p>குற்றமறச் செயல்களை ஆராய்வதில் வல்ல அறிஞரிடத்தில், பல நூல்களையும் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும்.</p>
<p><strong>குறள் 718:</strong></p>
<p>உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்<br />
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.</p>
<p>தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.</p>
<p><strong>குறள் 719:</strong></p>
<p>புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்<br />
நன்குசலச் சொல்லு வார்.</p>
<p>நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.</p>
<p><strong>குறள் 720:</strong></p>
<p>அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்<br />
அல்லார்முன் கோட்டி கொளல்.</p>
<p>தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.</p>
<h5 style="text-align: center;">அவையஞ்சாமை</h5>
<p><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7429414083307866" crossorigin="anonymous"></script><br />
<ins class="adsbygoogle" style="display: block; text-align: center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-7429414083307866" data-ad-slot="7843100268"></ins><br />
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script><br />
<strong>குறள் 721:</strong></p>
<p>வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்<br />
தொகையறிந்த தூய்மை யவர்.</p>
<p>சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.</p>
<p><strong>குறள் 722:</strong></p>
<p>கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்<br />
கற்ற செலச்சொல்லு வார்.</p>
<p>கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.</p>
<p><strong>குறள் 723:</strong></p>
<p>பகையகத்துச் சாவார் எளியர் அரியர்<br />
அவையகத்து அஞ்சா தவர்.</p>
<p>பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக் களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே.</p>
<p><strong>குறள் 724:</strong></p>
<p>கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற<br />
மிக்காருள் மிக்க கொளல்.</p>
<p>கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 725:</strong></p>
<p>ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா<br />
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.</p>
<p>அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 726:</strong></p>
<p>வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்<br />
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.</p>
<p>அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு?</p>
<p><strong>குறள் 727:</strong></p>
<p>பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து<br />
அஞ்சு மவன்கற்ற நூல்.</p>
<p>அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது.</p>
<p><strong>குறள் 728:</strong></p>
<p>பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்<br />
நன்கு செலச்சொல்லா தார்.</p>
<p>நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.</p>
<p><strong>குறள் 729:</strong></p>
<p>கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்<br />
நல்லா ரவையஞ்சு வார்.</p>
<p>நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.</p>
<p><strong>குறள் 730:</strong></p>
<p>உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்<br />
கற்ற செலச்சொல்லா தார்.</p>
<p>அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளை (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/">திருக்குறள் அமைச்சியல்</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருக்குறள் அரசியல் பகுதி 2</title>
		<link>https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81-2/</link>
		
		<dc:creator><![CDATA[Rajendran Selvaraj]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Dec 2017 05:27:01 +0000</pubDate>
				<category><![CDATA[கலை மற்றும் கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[பொதுத் தமிழ் தகவல்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://www.tamizhdb.com/?p=1126</guid>

					<description><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<p>தெரிந்துவினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. <a class="mh-excerpt-more" href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81-2/" title="திருக்குறள் அரசியல் பகுதி 2">More</a></p>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81-2/">திருக்குறள் அரசியல் பகுதி 2</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a></p>
<h5 style="text-align: center;">தெரிந்துவினையாடல்</h5>
<p><strong>குறள் 511:</strong></p>
<p>நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த<br />
தன்மையான் ஆளப் படும்.</p>
<p>நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.</p>
<p><strong>குறள் 512:</strong></p>
<p>வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை<br />
ஆராய்வான் செய்க வினை.</p>
<p>பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.</p>
<p><strong>குறள் 513:</strong></p>
<p>அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்<br />
நன்குடையான் கட்டே தெளிவு.</p>
<p>அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.</p>
<p><strong>குறள் 514:</strong></p>
<p>எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்<br />
வேறாகும் மாந்தர் பலர்.</p>
<p>எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.</p>
<p><strong>குறள் 515:</strong></p>
<p>அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்<br />
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.</p>
<p>(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.</p>
<p><strong>குறள் 516:</strong></p>
<p>செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு<br />
எய்த உணர்ந்து செயல்.</p>
<p>செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 517:</strong></p>
<p>இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து<br />
அதனை அவன்கண் விடல்.</p>
<p>இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 518:</strong></p>
<p>வினைக்குரிமை நாடிய பின்றை அவனை<br />
அதற்குரிய னாகச் செயல்.</p>
<p>ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.</p>
<p><strong>குறள் 519:</strong></p>
<p>வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக<br />
நினைப்பானை நீங்கும் திரு.</p>
<p>மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.</p>
<p><strong>குறள் 520:</strong></p>
<p>நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்<br />
கோடாமை கோடா துலகு.</p>
<p>தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.</p>
<h5 style="text-align: center;">சுற்றந்தழால்</h5>
<p><strong>குறள் 521:</strong></p>
<p>பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்<br />
சுற்றத்தார் கண்ணே உள.</p>
<p>ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.</p>
<p><strong>குறள் 522:</strong></p>
<p>விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா<br />
ஆக்கம் பலவும் தரும்.</p>
<p>அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 523:</strong></p>
<p>அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்<br />
கோடின்றி நீர்நிறைந் தற்று.</p>
<p>சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.</p>
<p><strong>குறள் 524:</strong></p>
<p>சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்<br />
பெற்றத்தால் பெற்ற பயன்.</p>
<p>சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.</p>
<p><strong>குறள் 525:</strong></p>
<p>கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய<br />
சுற்றத்தால் சுற்றப் படும்.</p>
<p>பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.</p>
<p><strong>குறள் 526:</strong></p>
<p>பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்<br />
மருங்குடையார் மாநிலத்து இல்.</p>
<p>பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.</p>
<p><strong>குறள் 527:</strong></p>
<p>காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்<br />
அன்னநீ ரார்க்கே உள.</p>
<p>காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.</p>
<p><strong>குறள் 528:</strong></p>
<p>பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்<br />
அதுநோக்கி வாழ்வார் பலர்.</p>
<p>அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால, அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.</p>
<p><strong>குறள் 529:</strong></p>
<p>தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்<br />
காரணம் இன்றி வரும்.</p>
<p>முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.</p>
<p><strong>குறள் 530:</strong></p>
<p>உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்<br />
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.</p>
<p>தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்.</p>
<h5 style="text-align: center;">பொச்சாவாமை</h5>
<p><strong>குறள் 531:</strong></p>
<p>இறந்த வெகுளியின் தீதே சிறந்த<br />
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.</p>
<p>பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.</p>
<p><strong>குறள் 532:</strong></p>
<p>பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை<br />
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.</p>
<p>நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.</p>
<p><strong>குறள் 533:</strong></p>
<p>பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து<br />
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.</p>
<p>மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.</p>
<p><strong>குறள் 534:</strong></p>
<p>அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை<br />
பொச்சாப் புடையார்க்கு நன்கு.</p>
<p>உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.</p>
<p><strong>குறள் 535:</strong></p>
<p>முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை<br />
பின்னூறு இரங்கி விடும்.</p>
<p>வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.</p>
<p><strong>குறள் 536:</strong></p>
<p>இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை<br />
வாயின் அதுவொப்பது இல்.</p>
<p>யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.</p>
<p><strong>குறள் 537:</strong></p>
<p>அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்<br />
கருவியால் போற்றிச் செயின்.</p>
<p>மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.</p>
<p><strong>குறள் 538:</strong></p>
<p>புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது<br />
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.</p>
<p>சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.</p>
<p><strong>குறள் 539:</strong></p>
<p>இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்<br />
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.</p>
<p>தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.</p>
<p><strong>குறள் 540:</strong></p>
<p>உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்<br />
உள்ளியது உள்ளப் பெறின்.</p>
<p>ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.</p>
<h5 style="text-align: center;">செங்கோன்மை</h5>
<p><strong>குறள் 541:</strong></p>
<p>ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்<br />
தேர்ந்துசெய் வஃதே முறை.</p>
<p>யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.</p>
<p><strong>குறள் 542:</strong></p>
<p>வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்<br />
கோல்நோக்கி வாழுங் குடி.</p>
<p>உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.</p>
<p><strong>குறள் 543:</strong></p>
<p>அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்<br />
நின்றது மன்னவன் கோல்.</p>
<p>அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.</p>
<p><strong>குறள் 544:</strong></p>
<p>குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்<br />
அடிதழீஇ நிற்கும் உலகு.</p>
<p>குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.</p>
<p><strong>குறள் 545:</strong></p>
<p>இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட<br />
பெயலும் விளையுளும் தொக்கு.</p>
<p>நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.</p>
<p><strong>குறள் 546:</strong></p>
<p>வேலன்று வென்றி தருவது மன்னவன்<br />
கோலதூஉங் கோடா தெனின்.</p>
<p>ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.</p>
<p><strong>குறள் 547:</strong></p>
<p>இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை<br />
முறைகாக்கும் முட்டாச் செயின்.</p>
<p>உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.</p>
<p><strong>குறள் 548:</strong></p>
<p>எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்<br />
தண்பதத்தான் தானே கெடும்.</p>
<p>எளிய செல்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.</p>
<p><strong>குறள் 549:</strong></p>
<p>குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்<br />
வடுவன்று வேந்தன் தொழில்.</p>
<p>குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.</p>
<p><strong>குறள் 550:</strong></p>
<p>கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்<br />
களைகட் டதனொடு நேர்.</p>
<p>கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.</p>
<h5 style="text-align: center;">கொடுங்கோன்மை</h5>
<p><strong>குறள் 551:</strong></p>
<p>கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு<br />
அல்லவை செய்தொழுகும் வேந்து.</p>
<p>குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.</p>
<p><strong>குறள் 552:</strong></p>
<p>வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்<br />
கோலொடு நின்றான் இரவு.</p>
<p>ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் &#8216;கொடு&#8217; என்று கேட்பதைப் போன்றது.</p>
<p><strong>குறள் 553:</strong></p>
<p>நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்<br />
நாடொறும் நாடு கெடும்.</p>
<p>நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.</p>
<p><strong>குறள் 554:</strong></p>
<p>கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்<br />
சூழாது செய்யும் அரசு.</p>
<p>( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.</p>
<p><strong>குறள் 555:</strong></p>
<p>அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே<br />
செல்வத்தைத் தேய்க்கும் படை.</p>
<p>( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?</p>
<p><strong>குறள் 556:</strong></p>
<p>மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்<br />
மன்னாவாம் மன்னர்க் கொளி.</p>
<p>அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.</p>
<p><strong>குறள் 557:</strong></p>
<p>துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்<br />
அளியின்மை வாழும் உயிர்க்கு.</p>
<p>மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.</p>
<p><strong>குறள் 558:</strong></p>
<p>இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா<br />
மன்னவன் கோற்கீழ்ப் படின்.</p>
<p>முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.</p>
<p><strong>குறள் 559:</strong></p>
<p>முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி<br />
ஒல்லாது வானம் பெயல்.</p>
<p>அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.</p>
<p><strong>குறள் 560:</strong></p>
<p>ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்<br />
காவலன் காவான் எனின்.</p>
<p>நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.</p>
<h5 style="text-align: center;">வெருவந்தசெய்யாமை</h5>
<p><strong>குறள் 561:</strong></p>
<p>தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்<br />
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.</p>
<p>செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.</p>
<p><strong>குறள் 562:</strong></p>
<p>கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்<br />
நீங்காமை வேண்டு பவர்.</p>
<p>ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.</p>
<p><strong>குறள் 563:</strong></p>
<p>வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்<br />
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.</p>
<p>குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.</p>
<p><strong>குறள் 564:</strong></p>
<p>இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்<br />
உறைகடுகி ஒல்லைக் கெடும்.</p>
<p>&#8216;நம் அரசன் கடுமையானவன்&#8217; என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.</p>
<p><strong>குறள் 565:</strong></p>
<p>அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்<br />
பேஎய்கண் டன்னது உடைத்து.</p>
<p>எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.</p>
<p><strong>குறள் 566:</strong></p>
<p>கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்<br />
நீடின்றி ஆங்கே கெடும்.</p>
<p>கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.</p>
<p><strong>குறள் 567:</strong></p>
<p>கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்<br />
அடுமுரண் தேய்க்கும் அரம்.</p>
<p>கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.</p>
<p><strong>குறள் 568:</strong></p>
<p>இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்<br />
சீறிற் சிறுகும் திரு.</p>
<p>அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.</p>
<p><strong>குறள் 569:</strong></p>
<p>செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்<br />
வெருவந்து வெய்து கெடும்.</p>
<p>முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.</p>
<p><strong>குறள் 570:</strong></p>
<p>கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது<br />
இல்லை நிலக்குப் பொறை.</p>
<p>கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.</p>
<h5 style="text-align: center;">கண்ணோட்டம்</h5>
<p><strong>குறள் 571:</strong></p>
<p>கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை<br />
உண்மையான் உண்டிவ் வுலகு.</p>
<p>கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.</p>
<p><strong>குறள் 572:</strong></p>
<p>கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்<br />
உண்மை நிலக்குப் பொறை.</p>
<p>கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.</p>
<p><strong>குறள் 573:</strong></p>
<p>பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்<br />
கண்ணோட்டம் இல்லாத கண்.</p>
<p>பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?</p>
<p><strong>குறள் 574:</strong></p>
<p>உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்<br />
கண்ணோட்டம் இல்லாத கண்.</p>
<p>தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்?</p>
<p><strong>குறள் 575:</strong></p>
<p>கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்<br />
புண்ணென்று உணரப் படும்.</p>
<p>ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.</p>
<p><strong>குறள் 576:</strong></p>
<p>மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ<br />
டியைந்துகண் ணோடா தவர்.</p>
<p>கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.</p>
<p><strong>குறள் 577:</strong></p>
<p>கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்<br />
கண்ணோட்டம் இன்மையும் இல்.</p>
<p>கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.</p>
<p><strong>குறள் 578:</strong></p>
<p>கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு<br />
உரிமை உடைத்திவ் வுலகு.</p>
<p>தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.</p>
<p><strong>குறள் 579:</strong></p>
<p>ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்<br />
பொறுத்தாற்றும் பண்பே தலை.</p>
<p>தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.</p>
<p><strong>குறள் 580:</strong></p>
<p>பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க<br />
நாகரிகம் வேண்டு பவர்.</p>
<p>யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.</p>
<h5 style="text-align: center;">ஒற்றாடல்</h5>
<p><strong>குறள் 581:</strong></p>
<p>ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்<br />
தெற்றென்க மன்னவன் கண்.</p>
<p>ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.</p>
<p><strong>குறள் 582:</strong></p>
<p>எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்<br />
வல்லறிதல் வேந்தன் தொழில்.</p>
<p>எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும்(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.</p>
<p><strong>குறள் 583:</strong></p>
<p>ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்<br />
கொற்றங் கொளக்கிடந்தது இல்.</p>
<p>ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.</p>
<p><strong>குறள் 584:</strong></p>
<p>வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு<br />
அனைவரையும் ஆராய்வது ஒற்று.</p>
<p>தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.</p>
<p><strong>குறள் 585:</strong></p>
<p>கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்<br />
உகாஅமை வல்லதே ஒற்று.</p>
<p>ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.</p>
<p><strong>குறள் 586:</strong></p>
<p>துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து<br />
என்செயினும் சோர்விலது ஒற்று.</p>
<p>துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.</p>
<p><strong>குறள் 587:</strong></p>
<p>மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை<br />
ஐயப்பாடு இல்லதே ஒற்று.</p>
<p>மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.</p>
<p><strong>குறள் 588:</strong></p>
<p>ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்<br />
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.</p>
<p>ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும்.</p>
<p><strong>குறள் 589:</strong></p>
<p>ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்<br />
சொற்றொக்க தேறப் படும்.</p>
<p>ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.</p>
<p><strong>குறள் 590:</strong></p>
<p>சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்<br />
புறப்படுத்தான் ஆகும் மறை.</p>
<p>ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால் மறைப்பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.</p>
<h5 style="text-align: center;">ஊக்கமுடைமை</h5>
<p><strong>குறள் 591:</strong></p>
<p>உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்<br />
உடையது உடையரோ மற்று.</p>
<p>ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ?</p>
<p><strong>குறள் 592:</strong></p>
<p>உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை<br />
நில்லாது நீங்கி விடும்.</p>
<p>ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.</p>
<p><strong>குறள் 593:</strong></p>
<p>ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்<br />
ஒருவந்தம் கைத்துடை யார்.</p>
<p>ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.</p>
<p><strong>குறள் 594:</strong></p>
<p>ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா<br />
ஊக்க முடையா னுழை.</p>
<p>சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.</p>
<p><strong>குறள் 595:</strong></p>
<p>வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்<br />
உள்ளத் தனையது உயர்வு.</p>
<p>நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.</p>
<p><strong>குறள் 596:</strong></p>
<p>உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது<br />
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.</p>
<p>எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.</p>
<p><strong>குறள் 597:</strong></p>
<p>சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்<br />
பட்டுப்பா டூன்றுங் களிறு.</p>
<p>உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.</p>
<p><strong>குறள் 598:</strong></p>
<p>உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து<br />
வள்ளியம் என்னுஞ் செருக்கு.</p>
<p>ஊக்கம் இல்லாதவர், &#8216;இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் &#8216; என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.</p>
<p><strong>குறள் 599:</strong></p>
<p>பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை<br />
வெரூஉம் புலிதாக் குறின்.</p>
<p>யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.</p>
<p><strong>குறள் 600:</strong></p>
<p>உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்<br />
மரம்மக்க ளாதலே வேறு.</p>
<p>ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.</p>
<h5 style="text-align: center;">மடியின்மை</h5>
<p><script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-7429414083307866" crossorigin="anonymous"></script><br />
<ins class="adsbygoogle" style="display: block; text-align: center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-7429414083307866" data-ad-slot="7843100268"></ins><br />
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script><br />
<strong>குறள் 601:</strong></p>
<p>குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்<br />
மாசூர மாய்ந்து கெடும்.</p>
<p>ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.</p>
<p><strong>குறள் 602:</strong></p>
<p>மடியை மடியா ஒழுகல் குடியைக்<br />
குடியாக வேண்டு பவர்.</p>
<p>தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.</p>
<p><strong>குறள் 603:</strong></p>
<p>மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த<br />
குடிமடியும் தன்னினும் முந்து.</p>
<p>அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.</p>
<p><strong>குறள் 604:</strong></p>
<p>குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து<br />
மாண்ட உஞற்றி லவர்க்கு.</p>
<p>சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.</p>
<p><strong>குறள் 605:</strong></p>
<p>நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்<br />
கெடுநீரார் காமக் கலன்.</p>
<p>காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.</p>
<p><strong>குறள் 606:</strong></p>
<p>படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்<br />
மாண்பயன் எய்தல் அரிது.</p>
<p>நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.</p>
<p><strong>குறள் 607:</strong></p>
<p>இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து<br />
மாண்ட உஞற்றி லவர்.</p>
<p>சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.</p>
<p><strong>குறள் 608:</strong></p>
<p>மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு<br />
அடிமை புகுத்தி விடும்.</p>
<p>சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.</p>
<p><strong>குறள் 609:</strong></p>
<p>குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்<br />
மடியாண்மை மாற்றக் கெடும்.</p>
<p>ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.</p>
<p><strong>குறள் 610:</strong></p>
<p>மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்<br />
தாஅய தெல்லாம் ஒருங்கு.</p>
<p>அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.</p>
<h5 style="text-align: center;">ஆள்வினையுடைமை</h5>
<p><strong>குறள் 611:</strong></p>
<p>அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்<br />
பெருமை முயற்சி தரும்.</p>
<p>இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.</p>
<p><strong>குறள் 612:</strong></p>
<p>வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை<br />
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.</p>
<p>தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.</p>
<p><strong>குறள் 613:</strong></p>
<p>தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே<br />
வேளாண்மை என்னுஞ் செருக்கு.</p>
<p>பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.</p>
<p><strong>குறள் 614:</strong></p>
<p>தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை<br />
வாளாண்மை போலக் கெடும்.</p>
<p>முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.</p>
<p><strong>குறள் 615:</strong></p>
<p>இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்<br />
துன்பம் துடைத்தூன்றும் தூண்.</p>
<p>தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.</p>
<p><strong>குறள் 616:</strong></p>
<p>முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை<br />
இன்மை புகுத்தி விடும்.</p>
<p>முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.</p>
<p><strong>குறள் 617:</strong></p>
<p>மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்<br />
தாளுளான் தாமரையி னாள்.</p>
<p>ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.</p>
<p><strong>குறள் 618:</strong></p>
<p>பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து<br />
ஆள்வினை இன்மை பழி.</p>
<p>நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.</p>
<p><strong>குறள் 619:</strong></p>
<p>தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்<br />
மெய்வருத்தக் கூலி தரும்.</p>
<p>ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.</p>
<p><strong>குறள் 620:</strong></p>
<p>ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்<br />
தாழாது உஞற்று பவர்.</p>
<p>சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.</p>
<h5 style="text-align: center;">இடுக்கணழியாமை</h5>
<p><strong>குறள் 621:</strong></p>
<p>இடுக்கண் வருங்கால் நகுக அதனை<br />
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.</p>
<p>துன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.</p>
<p><strong>குறள் 622:</strong></p>
<p>வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்<br />
உள்ளத்தின் உள்ளக் கெடும்.</p>
<p>வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.</p>
<p><strong>குறள் 623:</strong></p>
<p>இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு<br />
இடும்பை படாஅ தவர்.</p>
<p>துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.</p>
<p><strong>குறள் 624:</strong></p>
<p>மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற<br />
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.</p>
<p>தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.</p>
<p><strong>குறள் 625:</strong></p>
<p>அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற<br />
இடுக்கண் இடுக்கட் படும்.</p>
<p>விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.</p>
<p><strong>குறள் 626:</strong></p>
<p>அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று<br />
ஓம்புதல் தேற்றா தவர்.</p>
<p>செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ?</p>
<p><strong>குறள் 627:</strong></p>
<p>இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்<br />
கையாறாக் கொள்ளாதாம் மேல்.</p>
<p>மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.</p>
<p><strong>குறள் 628:</strong></p>
<p>இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்<br />
துன்பம் உறுதல் இலன்.</p>
<p>இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.</p>
<p><strong>குறள் 629:</strong></p>
<p>இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்<br />
துன்பம் உறுதல் இலன்.</p>
<p>இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.</p>
<p><strong>குறள் 630:</strong></p>
<p>இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்<br />
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.</p>
<p>ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.</p>
<p><em>நன்றி! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!</em></p>
<ul>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-children-short-stories-tamil/" target="_blank" rel="noopener">குடும்ப கதைகள் தமிழ் – Children Short stories Tamil</a></li>
<li><a href="https://www.tamizhdb.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-kids-short-stories-tamil/" target="_blank" rel="noopener">சிறுவர் கதைகள் தமிழ் – Kids Short stories Tamil</a></li>
<li><a class="row-title" href="https://www.tamizhdb.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/" target="_blank" rel="noopener" aria-label="“பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்” (Edit)">பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்</a></li>
</ul>
<p>The post <a href="https://www.tamizhdb.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81-2/">திருக்குறள் அரசியல் பகுதி 2</a> appeared first on <a href="https://www.tamizhdb.com">தமிழ் களஞ்சியம்</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
